இந்தக் கணத்தில் வாழுங்கள்

இந்தக் கணத்தில் வாழுங்கள், கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், பக். 144, விலை 90ரூ. எதையாவது உபதேசிப்பதற்காகவோ, ஏதாவது ஒன்றை உங்களுக்குள் திணிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. உங்களை நீங்களே உணர்ந்துகொள்வதற்கு ஒரு கண்ணாடியாக உதவுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/7/2017.   —-   இட்டாரிச் சீமை, தீபிகா முத்து, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. ‘கடிகாரங்களின் துடிப்புகள் பொதுநலம் காண்கிறது. மனிதர்களின் துடிப்புகள் சயநலம் காண்கிறது’ என்ற கவிதை வரி, நிதானமற்ற மானுட சமுதாயத்தின் இன்றைய நிலையைக் கூறுகிறது. நன்றி: […]

Read more

புதிரா புனிதமா

புதிரா புனிதமா, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ. பாலியல் (செக்ஸ்) பற்றிய சந்தேகங்களுக்கு தொலைக்காட்சியில் பதில் அளித்து பரபரபப்பு உண்டாக்கியவர் டாக்டர் மாத்ருபூதம். அவர் அளித்த பதில்கள் நூல் வடிவம் பெற்றுள்ளது. புதுமண மக்களுக்கு பரிசளிக்க ஏற்ற நூல். நன்றி: தினத்தந்தி, 25/5/2017.   —-   பதினெண் சித்தர்களின் ஞான பாடல்கள், யோக சித்தர் மானோஸ், மணி புத்தக நிலையம், விலை 150ரூ. கருத்துச் சுரங்கமான சித்தர் பாடல்களை ஒரு முறை படிக்கும்போதும் புதிய புதிய கருத்துக்களைத் தோற்றுவிக்கும் தெய்வீக சுரங்கம். இதனை […]

Read more

பெரிய புராணம் எளிய நடையில்

பெரிய புராணம் எளிய நடையில், பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ. சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம். சேக்கிழார், காவிய வடிவில் இந்தப் பெருநூலைப் பாடித் தந்தார். அதை எளிய உரைநடையில் தரும் முயற்சி நீண்ட காலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு உரைநடையில் பெரியபுராணத்தை வழங்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது இந்நூல். எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியச் சுவையுடன் இதை எழுதியுள்ள பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

பெரிய புராணம் எளிய நடையில்

பெரிய புராணம் எளிய நடையில், பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ. சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம். சேக்கிழார், காவிய வடிவில் இந்தப் பெருநூலைப் பாடித் தந்தார். அதை எளிய உரைநடையில் தரும் முயற்சி நீண்ட காலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு உரைநடையில் பெரியபுராணத்தை வழங்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது இந்நூல். எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியச் சுவையுடன் இதை எழுதியுள்ள பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள்

என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள், இயக்குநர் பேரரசு, கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.110. கவிஞர் வைரமுத்து எழுதிய ‘;இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்39’ நூலை நினைவூட்டி, நம் கண்களை ஈரமாக்குகிறது இயக்குநர் பேரரசு எழுதியிருக்கும் இந்த நூல். நாட்டரசன் கோட்டையில் பிறந்த பேரரசுவுக்கு, சினிமாவில் உதவி இயக்குநராக வேண்டும் என்று ஆசை. அவரின் தந்தை கூறுகிறார்: ‘ஓராண்டு காலம் முயற்சி செய். வாய்ப்பு கிடைக்காவிட்டால் திரும்பி வந்துவிடு, வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப பாஸ்போர்ட் எடுத்து வைச்சிருக்கேன 39;39’ என்கிறார். இப்படியொரு நிபந்தனையோடு சென்னைக்கு வந்த பேரரசு, […]

Read more

காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், ராதா நடராஜன், கற்பகம் புத்தகாலயம், விலை 150ரூ. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோர் வரலாற்றில் நடந்த அதிசய நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது பின்னணியில் தான் திருமுறைகள் அமைந்துள்ளன. அந்த வகையில் திருமுறைகளில் உள்ள சில வரிகளை மட்டும் விளக்கி எப்படி திருமுறைகள் நால்வர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக, சாட்சியாக அமைந்துள்ளன என்பதை இந்த நூலில் ராதா நடராஜன் அழகுற எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.‘

Read more

காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், ராதா நடராஜன்,  கற்பகம் புத்தகாலயம், பக்.224,  விலை ரூ.150. சைவர்கள் தமிழ் வேதமாகக் கருதுவது அருளாளர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளை. திருமுறைப் பாடல்கள் பாடிய அருளாளர்களின் வரலாற்றில் நிகழ்ந்த – இறைவன் நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சியின் பின்னணியிலேயே திருமுறைப் பாடல்கள் அமைந்துள்ளன என்பதை இந்நூல் விவரிக்கிறது. சமயக் குரவர்களான நால்வர் பெருமக்களின் (திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர்) வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்ச்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, இறைவன் நிகழ்த்திய அற்புதம், திருமுறைகளின் மாண்பு, சில நாயன்மார்களின் சிவத்தொண்டு, திருத்தலப் […]

Read more

காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், (ஆன்மிகக் கட்டுரைகள்), கற்பகம் புத்தகாலயம், விலை 150ரூ. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக, சாட்சியாக திருமுறைகள் விளங்குகின்றன என்பதை இந்த நூலின் ஆசிரியர் ராதா நடராஜன் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 15/3/2017.   —-   சித்தர்களின் சித்தமெல்லாம் சிவமயமே, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. அகஸ்தியர், திருமூலர், போகர், பத்ரகிரியார் உள்ளிட்ட 11 சித்தர்கள் பற்றிய விவரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அம்மணி அம்மாள் என்ற பெண் சித்தர் பற்றியும் […]

Read more

பெரிய புராணத்தில் வாழ்வியல்

பெரிய புராணத்தில் வாழ்வியல், பேராசிரியர் சாமி.தியாகராஜன், கற்பகம் புத்தகாலயம், பக். 280, விலை 190ரூ. எதிர்கால இளைஞர்கள் பெரியபுராணத்தைப் படிக்கவும், கேட்கவும், பேசவும், பின்பற்றவும் ஏற்ற வகையில், மிகவும் ஆழ்ந்த சிந்தனையில், ஆய்வு நோக்கில் இந்த நூல் உள்ளது. பக்தியும் தொண்டும் வாழ்வை எவ்வாறு உயர்த்தும் என்பதை இந்த நூலில் மிகவும் அழகாக அறிஞர் சாமி.தியாகராஜன் எழுதியுள்ளார். பதினொன்றாம் திருமுறைகள் என்னும் அருள் பெட்டகத்தைத் திறக்கும் தங்கச் சாவியாக, 12ம் திருமுறை ஆகிய பெரிய புராணம் உள்ளதை மிக அழகாக விளக்கியுள்ளார். ‘தொண்டின் தூய்மை’யில் […]

Read more

சித்தர்களின் சாகாக் கலை

சித்தர்களின் சாகாக் கலை, சுவாமி அகமுகநாதர், கற்பகம் புத்தகாலயம், பக். 392, விலை 275ரூ. உலகத்தில் மனித இனம் தோன்றிய வரலாறு, விழுப்புரத்தில் கிடைத்த, 1,80,000 ஆண்டுகள் பழக்கமுள்ள மண்டை ஓடு, முதலான பிரமிப்பான தகவல்களுடன் நூல் துவங்குகிறது. கண்டங்களின் தோற்றம், சுனாமி என்னும் ஆழிப் பேரலை, எரிமலை வெடிப்புகளின் தாக்கம், அதனால் ஏற்படும் பேரொலி முதலான, அரிய தகவல்களை தருகிறது இந்த நூல். உலகத்தில், மக்கள் தோற்றத்தை, ஏழாயிரம்… எட்டாயிரம்… ஆண்டுகளுக்கு முன் என, சில சமயவாதிகள் வரையறை செய்து கொண்டிருக்கும்போது, நம் […]

Read more
1 2 3 4 5 6 7