எங்கள் தாத்தா அறவாணர் அருள்மொழிகள்

எங்கள் தாத்தா அறவாணர் அருள்மொழிகள், அருணன் அறவாணன், தமிழ்க்கோட்டம், விலை 90ரூ. இலக்கியவாதிகளின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவரும், நேர்மையின் சிகரமாக வாழ்ந்தவருமான, அறவாணரை நினைவு கூரும் வகையில் பெயரர், பெயர்த்தியர் இந்நுாலை உருவாக்கியுள்ளனர். எங்கள் தாத்தா அறவாணரின் அறமொழி சிந்தனைகள், அமுத யாழினி வாஞ்சையுடன் அழைத்த, ‘தொப்பி’ தாத்தா, அறவாணரின் அயல்நாட்டு பயணங்கள், அறவாணரின் வாழ்வியல், பேராசிரியரின் அரிய பொக்கிஷங்களாகிய நுால்கள் இன்று வரை, அறவாணர் சாதனை விருது பெற்ற சான்றோர்கள், மனைவி தாயம்மாளின், ‘அவர் அன்றி அவள் இல்லை’ உள்ளிட்ட செய்திகள் […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்,  தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம்,  பக்.693, விலை ரூ.600. அவ்வையார் என்ற பெயரில் எட்டு அவ்வையார்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதியதாக இதுவரை 17 நூல்கள் நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அந்த நூல்களைப் பற்றியும் அவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. சங்ககாலத்தில் வாழ்ந்த அவ்வையாரின் பாடல்கள் அகநானூறு, புறநானூறில் இடம் பெற்றிக்கின்றன. அதற்குப் பிறகு அவ்வையாரின் தனிப்பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, பெட்டகம், அவ்வை நிகண்டு, விநாயகர் அகவல், உள்ளிட்ட பல […]

Read more

கூவாய் குறளே

கூவாய் குறளே, உரை தமிழறிஞர் க.ப.அறவாணன், தமிழ்க்கோட்டம், விலை 120ரூ. திருக்குறள் அதிகார எண் 71 முதல் 80 வரை வானொலியில் தமிழறிஞர் க.ப.அறவாணன் உரை நிகழ்த்தினார். அந்த உரையே “கூவாய் குறளே” என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. திருக்குறளின் சிறப்பையும், திருக்குறள் காட்டும் பாதையை விட்டு விலகிச் சென்ற மக்களின் போக்கையும் அறவாணன் சுட்டிக்காட்டுகிறார். திருக்குறளை நுட்பமாக ஆராய்ந்து, அவர் எபதியுள்ள உரையைப் படிக்கும்போது, திருவள்ளுவரே நேரில் நின்று பேசுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

தமிழ் மக்கள் வரலாறு இக்காலம்

தமிழ் மக்கள் வரலாறு இக்காலம், தமிழ்க்கோட்டம், விலை 140ரூ. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன், தமிழ் மக்கள் வரலாற்றை இதுவரை 8 புத்தகங்களாக எழுதியுள்ளார். கடைசிப்பகுதியான 9வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. காலமாறுபாட்டால் தமிழர்களின் வாழ்விலும், பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை இதில் விவரிக்கிறார். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பெருந்தடையாக இருப்பது சாதிப்பிரிவினையே என்று கூறுகிறார். “இன்றைக்கும் தன்னை வழி நடத்தக்கூடிய தமிழனை சினிமாத் துறையிலேயே தமிழன் தேடுகிறான்” என்று சுட்டிக்காட்டுகிறார். தமிழரிடம் காணப்படும் குறைபாடுகளை, குட்டவும் செய்கிறார், தன் மோதிரக் கையால்! […]

Read more

இலட்சியப் பெண்டிர்

இலட்சியப் பெண்டிர், தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், பக். 160, விலை 125ரூ. பெண்களுக்கு மகுடம் சூட்டும் நூல்! சங்க காலத்தில், 45 பெண் புலவர்கள் இருந்தனர். இடைக்காலத்தில், காரைக்கால் அம்மையார், ஆண்டாளுக்குப் பிறகு, பெண்களுக்குக் கல்வி ஏன் மறுக்கப்பட்டது? இதை விரிவாக ஆய்வு செய்து, சாதனை செய்த ஒன்பது பெண்களின் சரித்திரத்தை அழகாகவும், ஆழமாகவும் இந்த நூலில் தந்துள்ளார் நூலாசிரியர், பாராட்டத்தக்கவர். அந்தண விதவைப் பெண்கள், ஆவுடையக்காள், துளசி அம்மாள், சுப்புலட்சுமி அம்மாள், லட்சுமி அம்மாள், செல்வம்மாள் போன்ற, 40க்கும் மேற்பட்ட கவிதாயினிகளை, கலங்கரை […]

Read more

பெண்ணியம் அகலமும் ஆழமும்

பெண்ணியம் அகலமும் ஆழமும், பேராசிரியர் இரா. பிரேமா, காவ்யா, விலை 1100ரூ. பெண்ணியம் என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம் சமுதாயத்தில் பரவலாக பரவி வருகிறது. பெண்களை அடிமைத் தளையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியின் மூலம் விழிப்புணர்வூட்டி, சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பைப் பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமாகும். அந்த வகையில் நீண்ட காலம் ஆய்வு செய்து இந்த நூலை பேராசிரியர் இரா. பிரேமா படைத்துள்ளார். எது பெண்ணியம்? வெளிநாட்டு மற்றும் இந்திய பெண்ணிய கோட்பாளர்கள் பற்றிய குறிப்புகள், இலக்கணம், இலக்கியம் மற்றும் […]

Read more

அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 500ரூ. தமிழ் இலக்கியத்தில், திருவள்ளுவரின் திருக்குறளுக்கு அடுத்தபடியாக சிறப்புக்கு உரியவை அவ்வையாரின் நீதி நூல்கள். ஆயினும், அவ்வையார் என்ற பெயருடன் பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் அவர்கள் பற்றியும், அவர்களுடைய படைப்புகள் பற்றியும் பல ஐயப்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அவ்வையார் பற்றி விரிவான ஆய்வுகள் செய்து, 683 பக்கங்கள் கொண்ட இந்த பெருநூலை எழுதியுள்ளார், முனைவர் தாயம்மாள் அறவாணன். எட்டு அவ்வையார்கள் இருந்ததாக, இவர் தமது ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார். சங்க கால அவ்வையாரின் வாழ்க்கை […]

Read more

இலட்சியப் பெண்டிர்

இலட்சியப் பெண்டிர், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 125ரூ. சங்க காலம் முதல் இன்று வரை இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய பெண்கள் ஏராளம். அது பற்றிய அரிய செய்திகள் பலவற்றை இந்த நூலில் கூறுகிறார் தாயம்மாள் அறவாணன். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்கள்தான். அதிலும் பெண்கள் 3 சதவீதம் பேர்களே கல்வி கற்றவர்கள். பெண்கள், பள்ளிக்கூடத்துக்கு சென்று படிக்கும் வழக்கம் வெள்ளையர்களின் வருகைக்குப்பின்னரே ஏற்பட்டது. கி.பி. 1657ல் ஹென்றிக் பாதிரியார், தூத்துக்குடிக்கு அருகில் உள்ள புன்னைக் […]

Read more

ஆசைக்கிளியே அழகிய ராணி

ஆசைக்கிளியே அழகிய ராணி, அனுராதாரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. 480க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 365க்கு மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர் அனுராதா ரமணன். கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, கதையை வேகமாகக் கொண்டு செல்வதில் வல்லவர். அதனால்தான் இவருடைய 4 நாவல்கள் தமிழிலும், ஒரு கதை தெலுங்கிலும், ஒரு கதை கன்னடத்திலும் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றிவாகை சூடின. ஆசைக்கிளியே அழகியராணி, உனக்காக உமா, குயில் வேட்டை ஆகிய மூன்று நாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. மூன்று கதைகளையும், முக்கனிகளுடன் ஒப்பிடலாம். வழக்கமான முத்திரையை இக்கதைகளில் ஆழமாகப் […]

Read more

மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம்

மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம், தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, பக். 704, விலை 300ரூ. கைம்பெண் நோன்பின் கடுமையை விட உடன்கட்டை ஏறுதல் உயர்ந்ததோ? சங்ககாலத்தில், கற்றவராகவும், கவிஞராகவும், காதல் சமத்துவம் உடையவராகவும் பெண்கள் இருந்தனர் என்பதை, பல அகச்சான்றுகளோடு நிறுவுகிறார், நூலாசிரியர் தாயம்மாள் அறவாணன். சங்ககால மகளிர், அனைத்து நிலையிலும் முன்னிலைப்படுத்தப்பட்டனர் என்பதற்கு, நூலின் தலைப்பே, கட்டியம் கூறுகிறது. பிற்காலத்து பெண்டிர் கல்வி கற்பது மறுக்கப்பட்ட சூழலில், சங்ககாலப் பெண்டிர், ஒரு தடையும் இல்லாமல், ஆணுயக்கு நிகராக கற்றிருந்தனர். பொருளாதார […]

Read more
1 2