தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி, மாணிக்கவாசகர் பதிப்பகம், விலை 75ரூ. இயல், இசை, நாடகம் என மொழியையே மூன்றாகப் பகுத்து வளர்த்த பண்டைத் தமிழகத்தில், வளர்ச்சி பெற்றிருந்த கலைகள் ஏராளம். நமது கலை உன்னதங்கள் பலவற்றை இழந்துவிட்டோம், இப்போதும் இழந்துவருகிறோம். புகழ்பெற்ற தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய இந்த நூல் நமது கலைச் செழுமையின் முக்கியத்துவம், பின்னணி பற்றி எடுத்துரைக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000017806.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சிறுவர் நாடோடிக் கதைகள்

சிறுவர் நாடோடிக் கதைகள், கி. ராஜநாராயணன், அன்னம்-அகரம், கரிசல் பகுதி எழுத்துக்கு அடையாளம் தந்த மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என அழைக்கப்படும் கி.ரா., மக்களின் சொல்வழக்கில் இருந்த பல கதைகளை ஆவணப்படுத்தியுள்ளார். அவர் தொகுத்து எழுதிய சிறார் நாடோடிக் கதைகளின் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிள்ளை பாடிய தந்தை தமிழ்

பிள்ளை பாடிய தந்தை தமிழ், ஐயா (எ) 95 வயது குழந்தை, வடிவரசு, விஜயா பதிப்பகம், விலை: ரூ.80 கிராமத்து வெள்ளந்தி மனிதரான தனது தந்தையின் 94-வது பிறந்த நாளில், தனது தகப்பனையும் தாயையும் சென்னையிலிருந்து கோவைக்கு அவர்களின் வாழ்நாளில் முதன்முறையாக விமானத்தில் அழைத்துவந்த நினைவின் பதிவும் தொடர்ச்சியும்தான் இந்நூல். வடிவரசு சின்னப் பிள்ளையாக இருந்தபோது, ஒருவர் வீட்டில் டிவி பார்க்கப்போய் அங்கேயே தூங்கிவிட, அந்த வீட்டுக்காரர் இவரைத் தூக்கிவந்து தெருவில் படுக்க வைத்துவிட்டுப் போய்விட்டாராம். மறுநாளே சில ஆடுகளை விற்று டிவி வாங்கிவந்து வைத்துவிட்டு, […]

Read more

அலர்ஜி

அலர்ஜி, கு.கணேசன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.140 ‘சூரியனுக்குக் கீழ் உள்ள எந்தப் பொருளும், எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் அலர்ஜி ஆகலாம்’ என்பது பொதுவான மருத்துவ விதி. ஆனால், நடைமுறையில் எவற்றால், எப்போது, எப்படி அலர்ஜி ஆகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், முன்னெச்சரிக்கையுடன் பெரும்பாலான நோய்களைக் கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் முடியும். அலர்ஜி நோய்களின் கொடிய முகத்தை அவற்றை அனுபவித்தவர்கள்தான் அறிவார்கள். குறிப்பாக, பனியிலும் குளிரிலும் மழையிலும் ஆஸ்துமா வந்து அலறுபவர்கள் அநேகம் பேர். ‘எக்சீமா’ எனும் தோல் அழற்சி நோயால் உடலெங்கும் அரிப்பு எடுக்கத் தொடங்கினால் […]

Read more

இச்சா

இச்சா, ஷோபா சக்தி, கருப்புப் பிரதிகள், விலை 270ரூ. துயரம், இழப்பு, மரணம், சித்ரவதைகள், ரத்தக் கோரங்கள் நிகழ்ந்த பிறகு சொல்லப்படுகையில் அவை எத்தனை கொடூரமானதாக இருந்திருந்தாலும் அவை கதையாய், காவியத்தின் சுவையாய் ஆகிவிடுகின்றன. காலத்தின் தொலைவில் நினைவெல்லாம் துய்க்கும் பொருளாகிறது. தீவிரமும் அதேவேளையில், சுவாரசியமும் பொதுத்தன்மையும் கொண்ட சர்வதேசக் கதையாக தமிழ் நவீன இலக்கியம் மாறுவதற்கு இனப் படுகொலையும் யுத்தமும் தேவையாக இருந்திருக்கிறது. அந்தக் கதையாடலின் நட்சத்திரமாக எழுந்த கதைசொல்லி ஷோபா சக்தி. தமிழ் நவீன இலக்கியத்தில் அவலத்தின் அத்தனை லட்சணங்களையும் கொண்டு […]

Read more

தித்திக்கும் விருந்து

தித்திக்கும் விருந்து, மருதன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.80 தாகூர், சாவித்ரிபாய் புலே, மொஸார்ட், நியூட்டன், ஐன்ஸ்டைன், மக்சீம் கார்க்கி, புத்தர், பாரதி, லூயி பிரெயில் என்று இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழிநடையில், அழகான சொற்களைக் கோத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் மருதன். நன்றி: தமிழ் இந்து, 23/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

பாதி நீதியும் நீதி ப{ா}தியும்

பாதி நீதியும் நீதி ப{ா}தியும், கே.சந்துரு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225 சட்டங்களை விதிகளாகவும் உட்பிரிவுகளாகவும் விவரிக்கும் நிபுணத்துவத்துக்கு மேலாக விரிவான சரித்திரப் பின்னணியோடும் சமூக எதார்த்தத்தோடும் அதைப் பகுப்பாராயும் மேனாள் நீதிபதி சந்துருவின் கட்டுரைகள் சட்டத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு. இத்தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பாலான கட்டுரைகள், ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியானபோது வழக்கறிஞர்கள், சட்டத் துறை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவை. இப்போது புத்தக வடிவம் பெறும் இக்கட்டுரைகள், விவாதிப்பதிலும் ஓர்ந்து கண்ணோடாத முறைமைக்கு ஒரு முன்னுதாரணம். நன்றி: தமிழ் இந்து, 23/11/19. […]

Read more

அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை

அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை, தொழிற்சங்க மாமேதை சக்கரை செட்டியார்,  கே.சுப்ரமணியன், வெளியீடு: ஏஐடியுசி, (சரோஜினி பதிப்பகம் மூலமாக), விலை: ரூ.80 கட்டற்ற வேலை நேரம், அன்றாட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் உழன்றுகொண்டிருந்த நேரத்தில்தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ 1918 ஏப்ரல் 27-ல் உருவானது. திரு.வி.க., சிங்காரவேலர், வ.உ.சி., பி.பி.வாடியா ஆகியோர் முன்முயற்சியில் சென்னையில் தொடங்கப்பட்டபோது, அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வழக்கறிஞரான சக்கரைச் செட்டியார். தன் வாழ்நாள் முழுவதையுமே தொழிலாளர் நலன் காக்க, தொழிற்சங்கங்களை உருவாக்கிச் செயல்படுத்தினார் அவர். பஞ்சாலை, மின்னுற்பத்தி – விநியோகம், மண்ணெண்ணெய் […]

Read more

கடவுள் சந்தை

கடவுள் சந்தை, மீரா நந்தா, தமிழாக்கம்: க.பூரணச்சந்திரன், அடையாளம் வெளியீடு, விலை ரூ.300 கலைஞர்கள், கவிஞர்கள் தொடங்கி மனிதரின் பேராசையால் சுரண்டப் பட்ட பூமியைப் பற்றிக் கவலைப்படும் சூழலியலாளர்கள் வரை புத்தர் அனைவரையும் இன்றும் ஈர்த்துக்கொண்டிருக்கிறார். ப்ளேட்டோவின் சமகாலத்தவராக புத்தரை வைத்து, உலகளவில் நவீன சிந்தனைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தில்இருந்து புத்தரின் வாழ்வையும் மரணத்தையும் சமகாலத்தில் நின்று பரிசீலிக்கும் நாவல் ‘தம்மம் தந்தவன்’. மராத்திய, ஆங்கில எழுத்தாளரான விலாஸ் சாரங், கவிஞரும்கூட. பிறந்த அரண்மனைக்கும் புகுந்த அரண்மனைக்கும் நடுவே நடுக்காட்டில் ஒரு சாலமரத்தின் மடியில் மரத்தைப் பிடித்தபடி தாய் மாயாதேவிக்குப் […]

Read more

தம்மம் தந்தவன்

தம்மம் தந்தவன், விலாஸ் சாரங், தமிழாக்கம்: காளிப்ரஸாத், நற்றிணைப் பதிப்பகம்,  விலை: ரூ.260 ‘எழுதுவதற்கு முன் எதுவுமில்லை நானுமில்லை, எழுதிய பின் எல்லாம் இருந்தன. நானும் இருந்தேன்’ என்கிற முகப்புக் கவிதையிலே புத்தகத்தின் சுவாரஸ்யப் பயணம் வேகமெடுக்க ஆரம்பித்துவிடுகிறது. சின்னச் சின்னக் கவிதைகள் மனதின் மேடுபள்ளங்களில் ஏறியும் இறங்கியும் வாசிப்பவரை யோசிக்க வைக்கின்றன. யாருமற்ற கடற்கரை உரையாடல் பாணியிலான கவிதைகள், மனதின் நிகழ்த்துக்கலையாக வடிவம்கொள்கின்றன. ‘அந்தரத்தில்/ ஆயிரம் சைத்தான்கள்/ அரங்கத்தில்/ தெய்வப் புன்னகை’ என்கிற கவிதை ஒரு சந்நிதானத்து மெல்லொளியாய்ச் சுடர்விடுகிறது. ராஜா சந்திரசேகர் தன் கவிதைகளில் அக […]

Read more
1 25 26 27 28 29 44