ஒவ்வொரு கணமும்

ஒவ்வொரு கணமும், சுகதேவ், நோஷன் பிரஸ்,விலை: ரூ.170 மூத்த பத்திரிகையாளரும் தூதரக ஊடக ஆலோசகருமான சுகதேவின் முதல் கவிதைத் தொகுப்பு. எளிமையான சொற்களில் ஆழமான கருத்தை நிறுவ முடியும் என்ற அவரது நம்பிக்கை, கட்டுரைகளைப் போலவே கவிதைகளிலும் சாத்தியப்பட்டிருக்கிறது. பொழுதுகள் மாறிக் கிடக்கும் நவீன வாழ்க்கைக்கு இரவில் கரையும் காகங்களை உருவகமாக்கியிருப்பது சிறப்பு. ‘வரலாறு என்பது உண்மையில் யாருக்கும் தெரியாத ரகசியம்’ என்பது போன்ற ஒற்றை வரித் தெறிப்புகள் நிறைய எதிர்ப்படுகின்றன. சமகாலக் கவிதை, கவிஞர்கள் குறித்த ஆழமான விமர்சனமாக அமைந்திருக்கிறது இத்தொகுப்பின் முன்னுரை. […]

Read more

யாசகம்

யாசகம், எம்.எம்.தீன், ஜீவா படைப்பகம், விலை: ரூ.200. ஓயாத யாசகக் குரல்கள் ஒவ்வொரு யாசகரின் வாழ்வும் எதிர்பாராத திருப்பத்தில் திசைமாறி, குடும்பம் விட்டு விலகி, தனிமையில் ஒண்டி, கடைசியில் எல்லோரும் ஒரே முகத்துக்கு மாறிவிடுகிறார்கள் என்று சொல்லும் எழுத்தாளர் தீன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சுற்றுப்புறத்தில் உள்ள யாசகர்களின் வாழ்வை இந்நாவலில் நுட்பமாகப் பதிவுசெய்திருக்கிறார். யாசகர்கள் உணவுக்காகப் பல தூரம் நடக்கிறார்கள். எல்லா நாட்களிலும் சாப்பாட்டுக்கு உத்தரவாதம் இல்லை. பல நாட்கள் கொலைப்பட்டினியாகவும் இருக்க நேரிடுகிறது. யாரோ ஒருவர் தனக்கான உணவுப் பொட்டணத்தைக் கொண்டுவந்து தருவார்கள் […]

Read more

மேக்சிமம் சிட்டி

மேக்சிமம் சிட்டி: பாம்பே லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட், சுகேது மேத்தா, பெங்க்வின் புக்ஸ் இந்தியா, விலை: ரூ.399 இந்தியப் பொருளாதாரத்தின் தலைநகரமான மும்பை இன்றைய ஆஸ்திரேலியாவைவிட அதிகமான மக்கள் வசிக்கும் ஒரு பெருநகரமும்கூட. பலதரப்பட்ட மக்கள் பின்னிப் பிணைந்து வாழும் நகரம். அத்தகைய நகரத்தில் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, பின்னர் பதின்பருவத்தில் அங்கிருந்து வெளியேறி உலகின் தலைசிறந்த நகரங்கள் பலவற்றிலும் வாழ்ந்து 21 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிவந்த ஓர் இளைஞனின் பார்வையில், மும்பை நகரமும் அதன் உயிரோட்டமும் எவ்வித […]

Read more

சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா

சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா, செ.திவான், அட்சரம் பதிப்பகம், விலை: ரூ.130, கந்தர்வ கான கிட்டப்பா கிராமபோன் இசைத்தட்டுகள் வெளிவந்த காலத்தில் இசை ரசிகர்களிடம் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் கிட்டப்பா. சங்கரதாஸ் சுவாமிகளிடம் இசைப் பயிற்சி பெற்று இசைநாடக மேடைகளில் கதாநாயகனாக உலாவந்தவர், உச்ச ஸ்தாயியில் பாடுவதில் வல்லவர், கதர் உடுத்தி தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாளை இசையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு. நெல்லையைச் சேர்ந்த வரலாற்றறிஞர் செ.திவான், தன் மண்ணில் பிறந்த மாபெரும் இசைக்கலைஞருக்குச் […]

Read more

க.நா.சு. கவிதைகள்

க.நா.சு. கவிதைகள், பதிப்பாசிரியர்: இளையபாரதி, விலை: ரூ.165 புதுக்கவிதையின் தந்தையாக ந.பிச்சமூர்த்தி பொதுவில் அறியப்படுகிறார்; பாரதிக்குப் பிறகு வசனகவிதையை முயன்ற கு.ப.ராவும் புதுமைப்பித்தனும் முன்னோடிகள். ஆனால், புதுக்கவிதை என்ற பெயரை அந்த வடிவத்துக்குப் புனைந்ததோடு மட்டுமின்றி புதுக்கவிதைக்கு, இருபதாம் நூற்றாண்டு இந்திய, தமிழ் வாழ்க்கையின் நவீனத்தையும் லட்சணங்களையும் அழகியலையும் ஏற்றியவர் க.நா.சுப்ரமணியம். புதுக்கவிதை தன்னை நிறுவிக்கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பெற்ற உருவம் புதுக்கவிதை. ஒரு உயிர் […]

Read more

இனிப்பு தேசம்

இனிப்பு தேசம், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.110. ஒருகாலத்தில் முதியவர்களுக்கு வரும் நோயாக அறியப்பட்ட நீரிழிவு இன்று மத்திய வயதினர், இளம் வயதினரையும் பாதிக்கிறது. நீரிழிவு குறித்த பொது நம்பிக்கைகள் சரியா, தவறா என்று ‘இனிப்பு தேசம்’ நூலில் பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு.சிவராமன் விளக்கியுள்ளார். காலத்துக்கு அவசியமான இந்நூல் உங்கள் ஆரோக்கியம் காப்பதில் துணைநிற்கும். நன்றி: தமிழ் இந்து, 30/3/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000028045.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

மாபெரும் தமிழ்க் கனவு

மாபெரும் தமிழ்க் கனவு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 500ரூ. உலகில் வாழும் தமிழர்களெல்லாம் தங்கள் இதயங்களையே அரியாசனமாக்கி அமர்த்தி அழகுபார்க்கும் அறிவு ஆசான். சாமானியர்களின் எழுச்சிக்கு வித்திட்ட சரித்திர நாயகன். தமிழ்நாடும், தமிழ்ச் சமுதாயமும் தழைக்க வழிவகுத்துத் தந்த தள நாயகன் எங்கள் அண்ணா! – மு.கருணாநிதி கடவுள் என்றால் யார்? அறிவைக் கொடுப்பவர் கடவுள். அன்பை வழங்குபவர் கடவுள். அறிஞர் அண்ணா இந்த நாட்டுக்கே அறிவை வழங்குகிறார். மக்களுக்கெல்லாம் அன்பை ஊட்டுகிறார். எனவே, அறிஞர் அண்ணாவைக் கடவுள் என்றால் மிகையாகாது. […]

Read more

பேரன்பின் பூக்கள்

பேரன்பின் பூக்கள், சுமங்களா, தமிழில் யூமா வாசுகி, சித்திரச் செவ்வானம், புக்ஸ் ஃபார் சில்ரன்,  விலை 350ரூ. அண்டை மாநிலமான கேரளம் இலக்கியத்திலும் சமூக உணர்விலும் நம்மைவிட மேம்பட்ட நிலையிலேயே பல நேரம் இருந்து வந்திருக்கிறது. அதற்கான அழுத்தமான அடையாளங்களில் ஒன்று மலையாளச் சிறார் இலக்கியம். தற்கால மலையாள மொழியின் சொத்துகளைக் கணக்கெடுத்தால், அதில் சிறார் இலக்கியத்துக்குத் தனி இடம் உண்டு. இதற்குப் பல்வேறு சமூக வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. தமிழில் கடந்த 15 ஆண்டுகளில் வெளியான நேரடிச் சிறார் இலக்கியத்தைவிடவும், மொழிபெயர்ப்பின்வழி தமிழுக்கு […]

Read more

அன்புள்ள ஏவாளுக்கு

அன்புள்ள ஏவாளுக்கு, ஆலிஸ் வாக்கர், தமிழில் ஷஹிதா, எதிர் வெளியீடு, விலை 350ரூ. எண்பதுகளில் இங்கே விளிம்புநிலை மனிதர்களும் அவர்களது வாழ்க்கையும் இலக்கியமாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் கதையை ‘தி கலர் பர்ப்பிள்’ (தமிழ் மொழிபெயர்ப்பின் தலைப்பு: ‘அன்புள்ள ஏவாளுக்கு’) என்ற பெயரில் நாவலாக்குகிறார் ஆலிஸ் வாக்கர். அந்நாவல் வெளியாகிய அடுத்த ஆண்டே ஆலிஸ் வாக்கருக்கு ‘புலிட்சர் விருது’ கிடைக்கிறது. ஆலிஸ் வாக்கர்தான் புலிட்சர் விருதுபெற்ற முதல் கறுப்பினப் பெண். நாவல் வெளியாகி அடுத்த மூன்று ஆண்டுகளில் ஸ்டீவன் […]

Read more

திருக்கார்த்தியல்

திருக்கார்த்தியல்,ராம் தங்கம், வம்சி புக்ஸ், விலை: ரூ.170. குரலற்றவர்களின் பெருங்குரலாய்! என் தலைமுறையின் பலரும் கடந்துவந்த பாதைதான் ‘திருக்கார்த்தியல்’ செந்தமிழுக்கானதும். கேவும் ஆன்மாவைத் தவிர்த்துக் கடக்க முடியவில்லை. பொருளாதார, அரசியல் அரங்குகளில் பலமாய் வியாபித்திருக்கும் சமூகங்களின் அக வேர்களில் நடத்திய விசாரணையே இ்த்தொகுப்பிலுள்ள கதைகள். சமூக அவலங்களை அதன் அக, புறக் கூறுபாடுகளோடுடனான உணர்வுகளாய்க் கொட்டுகிறது. ராம், அடிப்படையில் ஆய்வாளராய் இருப்பதால் அடித்தள மக்களின் வாழ்வு அதன் ஆணிவேரான தொன்மங்களோடு கதைகளில் தெறிக்கிறது. – ஜோ டி குருஸ் நன்றி: தமிழ் இந்து, 30/3/19. […]

Read more
1 37 38 39 40 41 44