உறவே உதவும்

உறவே உதவும், ரவணசமுத்திரம் நல்லபெருமாள்,ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை: ரூ.150. சந்தக் கவிதைகள் பள்ளி ஆசிரியராகவும் கல்வித் துறை பயிற்சியாளராகவும் பல்வேறுபட்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர் நல்லபெருமாள். 80 வயதில் தனது கவிதை முயற்சிகளுக்கு நூல்வடிவம் கொடுத்திருக்கிறார். விநாயகர், முருகன், கண்ணன் துதிப் பாடல்கள்; வாழ்வின் நிலையாமையைப் பேசும் தத்துவப் பாடல்கள்; தமிழையும் தமிழ்க் கவிஞர்களையும் போற்றும் கவிதைகள்; குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனுபவப் பதிவுகள், பள்ளிக் குழந்தைகளுக்குப் பயன்படும் சந்தப் பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பு இது. பல பாடல்கள் மரபுக் கவிதைகளை வாசிக்கும் […]

Read more

புன்னகைக்கும் பிரபஞ்சம்

புன்னகைக்கும் பிரபஞ்சம், கபீர், தமிழில்: செங்கதிர், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ 200. எரிக்காத வெளிச்சத்தின் கவிதைகள் கைவிளக்கைத் தொலையவிட்டும், அவ்வப்போது கைவிளக்கின் எண்ணெய் தீரும்படியாகவும் விதிக்கப்பட்ட கவிஞன், யுகம் யுகமாக இருட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவன் தேடிய வெளிச்சம் கடவுள். அவன் வெளிச்சத்தில் பார்ப்பது மட்டுமல்ல, இருட்டில் பார்த்த பொருட்களும் இயற்கையும் சேர்ந்தே அவனது கவிதைகளுக்கு எழில் சேர்க்கின்றன. கவிஞன் வாழ்ந்த காலத்தின் கோலங்கள், புழங்கு பொருட்களைக் கவிதைகளில் மின்னவைப்பது என்பது அவனது கவித்துவம் அடைந்த ஊட்டச்சத்தைப் பொறுத்தது. நெசவாளியும் ஞானியும் […]

Read more

எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க!

எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க!, ஜி.செல்வா, வாசகசாலை வெளியீடு, விலை: ரூ130 ஒரு போராளியின் பார்வை விவசாயத்தைக் கைவிட்டு, கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களின் உழைப்பால் உருப்பெற்ற பெருநகரம் சென்னை. இயற்கைப் பேரிடர்களைச் சந்திப்பதற்குத் தயார்நிலையில் இல்லாத அரசு, ஆற்றங்கரைக் குடிசைகளை அகற்றி நகருக்கு வெளியே அவர்களை அப்புறப்படுத்திவிட்டது. ஆனால், சென்னைக்குள் ஓடும் ஆறுகளின் கரையோரங்களையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமிக்கும் பெருநிறுவனங்கள் சட்டபூர்வமான அனுமதியோடு இயங்கிவருகின்றன. குடிசைப்பகுதிகளை அகற்றுவதை எதிர்த்துப் போராட்டக்களத்தில் நிற்கும் ஜி.செல்வா, நகர்மயமாதலில் குடிசைவாசிகளின் பங்களிப்பை ஆதாரங்களோடு முன்வைத்து ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை […]

Read more

சபாஷ் சாணக்கியா

சபாஷ் சாணக்கியா, சோம வீரப்பன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160 வணிக வீதி’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. திருக்குறளின் மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்து சோம வீரப்பன் எழுதிய ‘குறள் இனிது- சிங்கத்துடன் நடப்பது எப்படி?’ வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, அர்த்தசாஸ்திரம் இயற்றிய சாணக்கியரின் மேலாண்மைக் கருத்துகளை இன்றைய வணிகச் சூழலில் பின்பற்றுவது எப்படி என்று தனக்கே உரிய தனிச்சுவை நடையில் ‘சபாஷ் சாணக்கியா’ தொடரை எழுதிக்கொண்டிருக்கிறார் சோம வீரப்பன். அத்தொடரில் வெளியான முதல் 50 கட்டுரைகளின் […]

Read more

இராகவம் தொகுதி 2

இராகவம் தொகுதி 2, தொகுப்பும் பதிப்பும் கா.அய்யப்பன், காவ்யா வெளியீடு, விலை 900ரூ. உவேசா வழித்தடத்தில் நாட்டுடமையான தமிழறிஞர்களின் படைப்புகளை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டுவரும் காவ்யா பதிப்பகம், ரா.இராகவையங்காரின் படைப்புகளை ‘இராகவம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. சங்கத் தமிழ் ஆய்வின் முன்னோடிகளான உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப் பிள்ளை இருவராலும் பாராட்டப்பட்டவர் ரா.இராகவையங்கார். ‘இராகவம்’ இரண்டாம் பாகத்தில் அவர் எழுதிய குறுந்தொகை உரைவிளக்கமும் பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆராய்ச்சி உரைகளும் இடம்பெற்றுள்ளன. 1946-1951 காலகட்டத்தில் வெளியான முதல் பதிப்புகளின் அடிப்படையில் இத்தொகுப்பைத் தொகுத்திருக்கிறார் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப […]

Read more

சலூன்

சலூன், க.வீரபாண்டியன், யாவரும் பதிப்பகம், விலை 140ரூ. முடி திருத்துவதற்காக வெளிநாடொன்றில் கடை தேடி அலைவதில் தொடங்கி பால்ய காலத்தில் சந்தித்த நாவிதர்களின் வாழ்க்கையைத் திரும்பிப்பார்ப்பதாக அமைந்திருக்கிறது க.வீரபாண்டியனின் ‘சலூன்’ நாவல். நான்கு வேறு வேறு இடங்களில் நாயகனுக்கு அறிமுகமான நாவிதர்கள், அவர்களின் கடந்தகால வாழ்க்கை, முடி திருத்துவதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நிபுணத்துவம், அன்றாடத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என விவரித்துச் செல்கிறது. நவீன நுகர்வுக் கலாச்சாரத்தில் பெரும் வியாபாரமாகிப்போன மாடர்ன் சலூன்களுக்கும், வாழ்க்கைப்பாட்டுக்காகத் தொழில் செய்பவர்களுக்கும் இடையேயான போட்டியும், சமூகக் கண்ணோட்டங்களும் நாவலில் […]

Read more

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர்

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர், நாகூர் ரூமி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 175ரூ. நமக்கு நாமே தடை தி இந்து குழுமத்தின் ‘காமதேனு’ இணையதளத்தில் வெளியான 30 கட்டுரைகளின் தொகுப்பு. வெற்றிக்கு மட்டுமல்ல; தோல்விக்கும்கூட மனமே காரணமாக இருக்கிறது. தாழ்வுணர்ச்சிகளால், தவறான அபிப்ராயங்களால் உருவாக்கிக்கொள்ளும் மனத் தடைகள் வெற்றிக்கு எப்படி தடைக்கற்களாக மாறுகின்றன? அந்தத் தடைகளை உடைத்து வெளியே வருவது எப்படி என்பதை சாதனையாளர்களின் சரித்திரங்களை உதாரணம்காட்டி நம்பிக்கையூட்டுகிறார் கவிஞரும் எழுத்தாளருமான நாகூர் ரூமி. நன்றி: தமிழ் இந்து,16/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

ஆயிரம் பூக்கள் கருகட்டும்

ஆயிரம் பூக்கள் கருகட்டும், ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், விலை 120ரூ. தமிழ் ஆய்வுலகம் ஏன் தூங்கிவழிகிறது? சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சூழலைப் பற்றி எழுதும் கட்டுரைகள் கல்விப்புலத்துக்குள்ளேயே கவனம்பெறுவதில்லை. இந்தச் சூழலில், அரசியல் தளத்தில் முழுநேரமாக இயங்கும் செயல்பாட்டாளரான ரவிக்குமார் அத்தகைய சில கட்டுரைகளின் மீது எழுப்பியிருக்கும் விவாதங்கள் இவை. டெல்லி பல்கலைக்கழகத்தால் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட ஏ.கே.ராமானுஜனின் ‘முந்நூறு ராமாயணங்கள்’ கட்டுரையைப் பற்றிய அறிமுகத்தோடு அதை எதிர்ப்பதற்குப் பின்னுள்ள அரசியலைக் குறித்தும் விவாதிக்கிறது முதல் கட்டுரை. ராமாயணத்தின் பல்வேறு பிரதிகளுக்கு […]

Read more

நாக்கை நீட்டு

நாக்கை நீட்டு, மா.ஜியான், தமிழில் எத்திராஜ் அகிலன், அடையாளம் பதிப்பகம், விலை 90ரூ. உலர்ந்த எலும்புகளின் கடைசி நினைவு தான் எழுதிய படைப்புகள் காரணமாக சீன அரசால் வேட்டையாடப்பட்டு தற்போது லண்டனில் வசிக்கும் 65 வயது எழுத்தாளர் மா ஜியானின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஓவியக் கலைஞருமான மா ஜியானின் ஓவியங்கள், 1983-ல் ஆன்மிக மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டு, கிழித்தெறியப்பட்டு அழிக்கப்பட்டதோடு அவர் சீன அரசால் கைதும் செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவரது தனிப்பட்ட வாழ்விலும் புயல் வீசியது. விவாகரத்துபெற்ற அவரது […]

Read more

கங்காபுரம்

கங்காபுரம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 450ரூ. மதுராந்தகனின் அகவுலகம் ஜோ டி குருஸ்ராஜராஜனுக்கு மகனாய்ப் பிறந்து, அவனது ஒவ்வொரு சிகரச் சாதனைகளுக்கும் காரணமாய் இருந்த மதுராந்தகன் பின்னாளில் தாமதமாகவே ராஜேந்திரன் என மகுடம் சூட்டப்பட்டான். கங்கையும், கடாரமும் கொண்ட இச்சோழ இளவல், தன் முன்னோர்கள் உருவாக்கிய சோழ அரசின் விரிவாக்கத்துக்கும் பாதுகாப்புக்கும் பாடுபட்டதோடு மட்டுமல்லாது, நிர்வாகத் திறத்தால் மக்கள் மனங்களிலும் நீங்கா இடம்பெற்றிருந்தான். சோழர்களின் நீர் மேலாண்மை இன்றும் வியக்கவைக்கிறதே! ராஜேந்திரனின் ஆட்சிக்காலமே தமிழர்களின் பொற்காலம் என்பது யாராலும் என்றும் அழித்துவிட முடியாத […]

Read more
1 38 39 40 41 42 44