சத்யஜித் ரே

சத்யஜித் ரே, திரைமொழியும் கதைக்களமும், பிரக்ஞை பதிப்பகம், சென்னை, விலை 225ரூ. அறிந்துகொள்ளலாம் சத்யஜித் ரேயை இந்திய எதார்த்தத்தை முதல்முறையாக செல்லுலாய்டில் பிடித்த திரைக்கலைஞர் சத்யஜித் ரே. வணிக சினிமாவுக்கு மாற்றாகத் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து நடக்கும் திரைப்பட முயற்சிகளுக்குத் தூண்டுதலைத் தருபவராக மறைந்த பிறகும் சத்யஜித் ரேயின் படைப்புகள் இருந்துவருகின்றன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வாழ்ந்து மறைந்த நடன ஆளுமை பால சரஸ்வதி குறித்துக் கலாபூர்வமான ஆவணப்படத்தை எடுத்தவர் என்ற வகையில் தமிழகத்தோடும் தொடர்புகொண்டவர் ரே. சத்யஜித் ரே என்னும் […]

Read more

எழுத்து இதழ்த் தொகுப்பு

எழுத்து இதழ்த் தொகுப்பு, சி.சு.செல்லப்பா படைப்புகள், தொகுப்பு கி.அ. சச்சிதானந்தன், சந்தியா பதிப்பகம், சென்னை. முன்னோடியின் முகம் தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் சி.சு.செல்லப்பா. தன் வாழ்நாள் முழுவதையும், இலக்கியத்துக்காகச் செலவிட்டார். அவர் நடத்தி வந்த எழுத்து இதழைச் சிற்றிதழ்களின் முன்னோடி எனச் சொல்லலாம். எழுத்து இதழைத் தொடர்ந்து தான் அதன் மூலம் அறிமுகமானவர்களால், நடை, பிரக்ஞை, கசடதபற, யாத்ரா போன்ற இதழ்கள் தமிழ் இலக்கியத்துக்காக மலர்ந்தன. க.நா. சுப்ரமண்யத்தின் சமகாலத்தவரும் அவரின் நேர் எதிர் இலக்கியக் கோட்பாட்டாளராகவும் சி.சு.செ. இருந்தார். க.நா.சு-வும் […]

Read more

நாடாளுமன்றம் 2014

நாடாளுமன்றம் 2014, இரா. பாஸ்கர், ஸரிகமபதநி, சென்னை, விலை 100ரூ. முடிவுகள் சொல்லும் கணக்கு நாடாளுமன்றத் தேர்வு முடிந்து ஏழு மாதங்கள் உருண்டோடிவிட்டன. உங்கள் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் பெற்ற வாக்குகளைக்கூட நீங்கள் அறிந்துகொள்ள முடியும். உங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் முன்னிலை பெற்ற கட்சி எது என்று உங்களுக்குத் தெரியுமா? அந்தத் தகவல்களை அவ்வளவு சுலபமாகத் திரட்டிவிட முடியாது. ஆனால் இரா. பாஸ்கர் தொகுத்து வழங்கியுள்ள நாடாளுமன்றம் […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ. To buy this Tamil book : https://www.nhm.in/shop/100-00-0002-278-0.html ராமாயணத்தில் சட்டம் கம்பன் கழகத்தின் பிரபல பேச்சாளரும், நாளிதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருபவருமான நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன் கடந்த முப்பது ஆண்டகளாக நீதித்துறையில் முழுமூச்சாகச் செயல்பட்டு வருகிறார். ராமாயணம் என்னும் கதைக் களத்தின் வெளியில் நின்று விமர்சிக்காமல் உள்ளே நின்று, இடம் சுட்டிப் பொருள் விளக்க முயன்றுள்ளார் நூலாசிரியர். முதல் கேள்வி சட்டம் […]

Read more

மண்ணுக்கேற்ற மார்க்சியம்

மண்ணுக்கேற்ற மார்க்சியம், அருணன், வசந்தம் வெளியீட்டகம், மதுரை, பக். 752, விலை 400ரூ. அருணனி எழுத்து வலிமையான தர்க்க முறைகளைக் கொண்டது. இந்தத் தொகுப்பின் முதல் பார்வையிலேயே அதை உணர முடியும். இலக்கியம், அரசியல், சமூகம், பொருளாதாரம் என எண்ணற்ற விவாதங்களை அவர் இத்தொகுதியில் நிகழ்த்துகிறார். 750 பக்கங்களுக்கு விரிவ9டகின்ற இந்நூல் 103 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. சோவித் யூனியன் சரிந்து விழுந்த பின்னரும் மார்க்சீயம் சார்ந்த தன்னுடைய உறுதியை அது வெல்லும் என்ற நம்பிக்கையை அருணன் தொடர்ந்து எழுதிவருகிறார். மார்க்சியம் வெறும் தத்துவமாக மட்டுமில்லாது […]

Read more

நக்சல் பாரி முன்பும் பின்பும்

 நக்சல் பாரி முன்பும் பின்பும், ஆங்கில மூலம் சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன் விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர். ஒரு கம்யூனிஸ்ட் வாக்குமூலம் இந்திய மக்களுக்கு இன்னமும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் துர்த்துக் கொள்வதற்காக அவர்கள் பல்வேறு வண்ணங்களில் அரசியல் இயக்கங்களைச் சமுதாயத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் நக்சல் பாரி இயக்கமும் ஒன்று. அதன் முக்கிய பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுனிதிகுமார் கோஷ். சில மாதங்களுக்கு முன்புதான்96 வயதில் அவர் காலமானார். அவர் தனது இறுதிக் காலத்தில் […]

Read more

மொழியியல் தொடக்கநிலையினருக்கு

மொழியியல் தொடக்கநிலையினருக்கு, டெரன்ஸ் கோர்டொன், தமிழில் நாகேஸ்வரி அண்ணாமலை, விளக்கப்படம் சூசன் வில்மார்த், அடையாளம் பதிப்பகம், திருச்சி, விலை160ரூ. மொழியியல் ஓர் அறிமுகம் தமிழுக்கு மொழியியல் தேவை இல்லை என்பது போன்ற கருத்துகள் இங்கு உண்டு. இந்தப் பார்வைகளைப் புரட்டிப்போடுகிறது அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மொழியியல் தொடக்கநிலையினருக்கு புத்தகம். டெரன்ஸ் கோர்டொனின் நூலைத் தமிழிச் சூழலுக்கு ஏற்ப, குறிப்பாக இளைய தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் மொழியியலை எளிமைப்படுத்தித் தந்திருக்கிறார் நாகேஸ்வரி அண்ணாமலை. மொழிகள் செயல்படும் விதத்தில் தொடங்கி, மனிதர்கள் தங்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும் விதம், […]

Read more

அதிகாரத்தின் மூலக்கூறுகள்

அதிகாரத்தின் மூலக்கூறுகள், எலியா கனெட்டி, தமிழில் ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-344-2.html 1905ல் பல்கேரியாவில் பிறந்த எலியா கனெட்டி, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெகுமக்களின் கும்பல் மனோபாவத்துக்கும் அதிகாரம் செயல்பாடுவதற்கும் இடையிலான இவரது ஆய்வுகளுக்காகவே தற்போது அதிகம் அறியப்படுகிறார் என்று மொழிபெயர்ப்பாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். க்ரவுட்ஸ் அண்ட பவர் என்ற இவரது புகழ்பெற்ற நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறு கட்டுரைகள் கொண்ட தொகுதியாக அதிகாரத்தின் மூலக்கூறுகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனியாக இருக்கும்போது அத்தனை […]

Read more

குற்றப் பரம்பரை அரசியல்

குற்றப் பரம்பரை அரசியல், பெருங்காமநல்லுரை முன்வைத்து, தொகுப்பாசிரியர் முகில்நிலவன், தமிழாக்கம் சா. தேவதாஸ், பாலை வெளியீடு, மதுரை, விலை 300ரூ. ஆளும் வர்க்கத்தினர் சார்ந்தே எழுதப்பட்ட வரலாறுகள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன. மக்களின் நினைவுகளிலிருந்தும், வாய்மொழிக் கதைகளிலிருந்தும் எழுதப்பட்டவையும் வரலாறுதான் என்ற நம்பிக்கை இன்றைய காலகட்டத்தில் உறுதிப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்பகுதியில் ஒரு சமூகத்தையே குற்றப் பரம்பரையினர் என்று மத்திரை குத்தி, அவர்கள் வாழ்ந்த ஊரையே பிரிட்டிஷ் அரசாங்கம் சிறையாக்கிய கொடூரங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படவேயில்லை. 1930களில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் கைரேகைகள் பதியப்பட்டு, […]

Read more

சொற்றுணை வேதியர்

சொற்றுணை வேதியர், பேராசிரியர் எச். வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும், புலவர் தி.வே. விஜயலட்சுமி, மணிவாசகர் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-235-3.html நற்றிணையைப் பதிப்பித்த ஆசான் பேராசிரியர் எச். வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும் என்ற பெயரில் மணிவாசகர் பதிப்பகத்தில் வெளியாகியுள்ள 256 பக்க நினைவு மலரின் பின்னணியில் அவருடைய அன்பு மகள் தி.வே. விஜயலட்சுமியின் முயற்சியும் ஆர்வமும் ஈடுபாடும் ஒருங்கே தெரிகின்றன. தன் தந்தை என்ற பாசத்தில் அவர் செய்திருந்தாலும் நற்றிணையைப் […]

Read more
1 41 42 43 44