சங்கத்தமிழ் களஞ்சியம்

சங்கத்தமிழ் களஞ்சியம், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 316, விலை ரூ.200; தமிழின் தொன்மையை விளக்கும் ஆவணங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். சங்கத்தமிழ் நூல்களை தொல்காப்பியம் முதல் பக்தி இலக்கியம் வரை 21 கட்டுரைகளாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வு எப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது முதல் பக்தி இலக்கியங்களின் பண்பாட்டுக்கூறுகள் வரை தற்காலத் தமிழ் ஆர்வலர்களுக்குப் புரியும் வகையில் நூலில் கருத்துகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் பெண்பாற் புலவர்களின் முக்கியத்துவத்தை ஒளவையார் முதல் ஒக்கூர் மாசாத்தியார் உள்ளிட்டோர் வரை எந்தவகையில் […]

Read more

எங்கெங்கும் மாசுகளாய்…

எங்கெங்கும் மாசுகளாய்…, மண் முதல் விண் வரை (சூழலியல் கட்டுரைகள்), ப.திருமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை ரூ.110. சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது; ஆனால், மனிதர்கள் இதனை மறந்து இயற்கைக்கு எதிரான செயல்களில் கட்டுப்பாடின்றி ஈடுபடுவதால் கடுமையான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என அழுத்தமாக உரைக்கிறது நூல். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பாரீஸ் பருவநிலை மாநாட்டின் தீர்மானங்களை எத்தனை […]

Read more

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும்

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும், அ.சுபா, காவ்யா, பக்.212, விலை ரூ.220. சங்ககால இலக்கியங்களான பத்துப் பாட்டும், எட்டுத்தொகை நூல்களும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும்;சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நாலடியார் முதல் கைந்நிலை வரை உள்ள பதினெட்டு நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறப்படும். இவ்விரு தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த நூல்களும் உள்ளன. அவற்றுள் அகப்பாக்கள் மட்டும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை இலக்கண, இலக்கியச் சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்கம், சங்கம் மருவிய […]

Read more

விதையாக இரு

விதையாக இரு, முன்னோர்கள் சொன்ன முன்னேற்றச் சிந்தனைகளின் தொகுப்பு, த.இராமலிங்கம், விகடன் பிரசுரம், பக்.224, விலை ரூ.210. தமிழ் இலக்கியங்களில் நம் முன்னோர் கூறிச் சென்ற கருத்துகள் இன்றைய வாழ்வுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை விளக்கும் நூல்.தமிழின் அறநெறி நூல்களாகிய இன்னா நாற்பது, இனியவை நாற்பது, விவேகசிந்தாமணி, நீதி வெண்பா, திரிகடுகம், வெற்றி வேற்கை ஆகியவை மட்டுமல்ல, சங்க இலக்கிய நூலான புறநானூற்றிலும் கூறப்பட்டுள்ள வாழ்க்கைநெறிகள் நமது வாழ்வுக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது. முயற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கும் […]

Read more

அண்ணல் அம்பேத்கர்: உணர்வுகளின் உயிர்மம்

அண்ணல் அம்பேத்கர்: உணர்வுகளின் உயிர்மம், பசுபதி தனராஜ், கோரல் பப்ளிஷர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், பக்.336, விலை ரூ.300. அம்பேத்கரின் வாழ்க்கையை – சிந்தனைகளை- பணிகளை- சாதனைகளை அறிமுகப்படுத்தும் நூல். அம்பேத்கரின் இளமைப் பருவத்தில் அவர் சந்தித்த தீண்டாமைக் கொடுமைகள்,அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பள்ளிப் படிப்பை முடித்த அம்பேத்கரின் சிந்தனையை பரோடா மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட் எழுதிய “கெளதம புத்தர்’ என்ற புத்தகம் மாற்றி அமைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இண்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெற்ற அம்பேத்கர் மேல் படிப்பு படிக்க வசதியில்லாமல் […]

Read more

வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை)

வைரமுத்து வரை தமிழ்த் திரைப்பாடல் வரலாறு (1931 முதல் 2020 வரை), சு.சண்முகசுந்தரம், காவ்யா,  பக்.1550, விலை ரூ.1600 தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (1931) படத்தில் பாடல் எழுதிய மதுரகவி பாஸ்கரதாஸில் தொடங்கி, கடந்த ஆண்டு வெளியான படங்களில் பாடல்கள் எழுதியுள்ளவர்கள் வரையிலான முந்நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் குறித்த செய்திகளும் அவர்கள் எழுதிய ஓரிரு பாடல் வரிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எல்லாமே அறிந்த பெயர்கள்; எல்லாமே அறியாத தகவல்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், […]

Read more

தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்

தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்,  டி.வி. ராதாகிருஷ்ணன், கங்கை புத்தக நிலையம், பக்.120, விலை ரூ.100. சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை பெண்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், ஆண் எழுத்தாளர்களை விட பெண் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு. இதற்கு பெண்களின் குடும்பச் சூழ்நிலை, சமூகத்துக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம், குடும்பத்தாரே எதிர்ப்பு தெரிவிப்பது, நேரமின்மை, சுதந்திரமின்மை முதலிய பல காரணங்களைக் கூறலாம். இத்தனையையும் தாண்டி அன்றைக்கு ஓரளவு படித்த பெண்கள் சிலர் சுதந்திரப் போராட்ட காலத்திற்கு முன்பிலிருந்தே எழுதியதோடல்லாமல், […]

Read more

மதாம்

மதாம், மு.ராஜேந்திரன், அகநி வெளியீடு, பக். 336, விலை ரூ.400. ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய நாள்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்று நாவல் இது. 1742 முதல் 1754 வரை புதுச்சேரி கவர்னராக இருந்த ஜோசப் துயூப்ளேவின் மனைவி ழான் சீமாட்டியை மையப்படுத்தி நிகழ்ந்த சம்பவங்களை வரிசைக் கிரமமாகத் தொகுத்து சுவாரஸ்யமான நாவலாக உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்திய வம்சாவளித் தாய்க்கும், ஐரோப்பிய தந்தைக்கும் மகளாக பிறந்தவர்தான் ழான். தனது 13-ஆவது வயதில் தன்னை விட வயதில் மிகவும் மூத்த வேன்சான் என்ற பிரெஞ்சு வணிகரை […]

Read more

நாழிக் கூழும்… மொளகாயும்

நாழிக் கூழும்… மொளகாயும், சி.அன்னக்கொடி, கோதை பதிப்பகம்,  பக்.140, விலை ரூ.140. முழுக்க முழுக்க வட்டாரப் பேச்சு வழக்கிலேயே அமைந்துள்ள 23 சிறுகதைகளின் தொகுப்பு. நாகரிக வளர்ச்சியில்பேச்சு வழக்கிலிருந்து மறைந்து போன பல வார்த்தைகள் சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ளன. கிராமத்து வாழ்வியல், அதிலும் எளிய பாமர மக்களின் வாழ்வியல் என்றாலே சோகம் மட்டுமே நிரம்பியிருக்கும் என்ற வழக்கமான பாணி இத்தொகுப்பில் உள்ள கதைகளில் இல்லை. தொகுப்பு முழுக்க வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்துடன் அமைந்து நம்மை வசியப்படுத்துகின்றனர். கிராமியக் கதைகள் என்பதால் சொலவடைகளுக்குப் […]

Read more

திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள்

திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள்: ஓர் ஆய்வு, அ.நிகமத்துல்லாஹ்,  அ.நிகமத்துல்லாஹ், பக்.368, விலை 350. நூலாசிரியர் தனது இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சமர்ப்பித்த ஆய்வேட்டின் நூல் வடிவம். திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் 1937 முதல் 2011 வரை 14 வெளிவந்துள்ளன. அவற்றில் 12 மொழிபெயர்ப்புகளை ஆய்வுக்காக நூலாசிரியர் தேர்ந்தெடுத்திருக்கிறார். திருக்குர்ஆன் திரும்பத் திரும்ப ஏன் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது? யாருக்காக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது? எந்தவிதமான நெறிமுறைகள், உத்திகளைப் பின்பற்றி மொழிபெயர்த்திருக்கிறார்கள்? மூலத்துக்கு மாற்றமின்றி இருத்தல், வடிவத்தைவிட கருத்துக்கு முன்னுரிமை தருதல் உள்ளிட்ட மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளனவா? தமிழில் […]

Read more
1 15 16 17 18 19 180