தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ

தமிழ்நாட்டில் சர் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக்.336, விலை ரூ.275. கி.பி.1780- இல் இங்கிலாந்திலிருந்து சென்னைக்கு வந்து 47 ஆண்டுகள் இங்கு வாழ்ந்தவர் தாமஸ் மன்றோ. அவர் சேலத்தில் கலெக்டராக இருந்த ரீடு என்பவருக்கு உதவியாளராக – உதவி கலெக்டராக பணிபுரிந்திருக்கிறார். அவர் தனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எழுதிய கடிதங்களில் அக்காலத் தமிழ்நாட்டைப் பற்றிய பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. தாமஸ் மன்றோ தனது தந்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் அக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த பெண்களின் நிலையைத் தெரிந்து […]

Read more

தமிழருவி மணியன் சிறுகதைகள்

தமிழருவி மணியன் சிறுகதைகள், தமிழருவிமணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.144, விலை ரூ.130. நூலாசிரியரின் ஆறு சிறுகதைகள் அடங்கிய முதல் சிறுகதைத் தொகுப்பு. “ஒற்றைச் சிறகு’ சிறுகதையின் நாயகன் குமரேசன், சரியோ தவறோ கொடுப்பவனாகவே இறுதிவரை இருக்க வேண்டும் என்று பிடிவாதம் கொண்டவர். “தவறான வாழ்க்கைப் புரிதலோடு ஒடுங்கிப் போய்விட்டான்’ என்று அவருடைய மரணத்தின்போது வேதனைப்படுகிறார் அவருடைய ஆப்த நண்பர் ஆனந்தமூர்த்தி. கைம்மாறு கருதாத அன்பு இந்த உலகத்தில் உண்டா என்ற கேள்விக்கு விடை காண முயலும் படைப்பு. மதுவினால் குலைந்துபோகும் குடும்பத்தைக் கண்முன் நிறுத்துகிறது, […]

Read more

திருமூலர் அருளிய திருமந்திர விளக்கம்

திருமூலர் அருளிய திருமந்திர விளக்கம், ம.கணபதி, மணிவாசகர் பதிப்பகம், பக்.232, விலை ரூ.300. தேவாரம், திருவாசகத்தை விரும்பிப் படிக்கும் பலரும் திருமந்திரத்தைப் படிப்பதில்லை. ஏனெனில் அதன் பொருள் எளிதில் விளங்காது என்று அவர்கள் கருதுவதாலேயே. அவர்கள் அவ்வாறு கருதுவது ஒருவகையில் சரியானதே. பெரும்பாலான திருமந்திர உரைகள் கற்பதற்கு கடினமாகவே உள்ளன. அக்குறையைப் போக்கியிருக்கிறது இந்நூல். மூவாயிரம் பாடல்கள் அடங்கிய திருமந்திரத்தின் (மூலம் உரைசெய்த மூவாயிரம் தமிழ்) ஒன்பது உட்பிரிவுகளிலிருந்தும் (தந்திரங்கள்) முக்கியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு எளிய நடையில் உரையும் வழங்கியுள்ளார் இந்நூலாசிரியர். உயரிய […]

Read more

திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்

திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.344, விலை ரூ.375. பண்டைய புத்தகங்கள், வரலாற்று மாந்தர்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் திருக்குறள், அதன் ஆசிரியர் வள்ளுவர் தொடர்பான ஆராய்ச்சி விஷயத்தில் ஒரு பிரத்தியேக சிறப்பும் சர்ச்சையும் உண்டு. குறள் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும், தங்களது உயர்வு நவிற்சியால், வள்ளுவனையும் குறளையும் தம்முடையதாக மட்டுமே ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் காரணமாகிவிடுகிறது. அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் […]

Read more

விண்ணும் மண்ணும்

விண்ணும் மண்ணும்,  மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு, முரண்களரி படைப்பகம், பக்.128, விலை ரூ.150. இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையும், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவும் எழுதிய கட்டுரைகள் மற்றும் மயில்சாமி அண்ணாதுரையின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு இந்நூல். உலகில் பல நாடுகள் நிலா குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோதிலும், நிலாவில் தண்ணீர் உள்ளது என்பதைக் கண்டறிந்து சாதனை படைத்தது சந்திரயான் -1. அது கண்டறிந்ததை உறுதிப்படுத்த மேற்கொண்ட அடுத்த பயணம்தான் சந்திரயான் -2. அதன் பயணத்தின் இறுதியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. இவற்றை […]

Read more

விந்தன் கதைகள்

விந்தன் கதைகள், தொகுப்பும் பதிப்பும் சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 1121; ரூ.1,100. அச்சுக் கோர்ப்புத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர், திரைக்கதை வசனகர்த்தா எனப் பன்முகத் திறமையாளராக தன்னை வெளிப்படுத்தியவர் விந்தன். 1939 முதல் சுமார் 25 வருடங்கள்அன்றைய பல்வேறு முன்னணி இதழ்களில் அவர் எழுதி வெளிவந்த சிறுகதைகள், குட்டிக்கதைகள், மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பே இந்நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் எளிய மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டவை. அவர்கள் அன்றாடம் சந்திக்கும் அடிப்படைப் […]

Read more

கவிதை மரபும் தொல்காப்பியமும்

கவிதை மரபும் தொல்காப்பியமும், இராம.குருநாதன், மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.150. “மரபென்பது காலந்தோறும், இடந்தோறும் வழக்குத் திரிந்தவற்றுக்கேற்ப வழுப்படாமற் செய்வதோர் முறைமை’ என்கிறார் நச்சினார்க்கினியர். “தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ்க் கவிதையியலுக்கான கட்டமைப்பைக் கொண்டது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டு இலக்கண நீர்மையைப் புலப்படுத்தினாலும், அவை கவிதை கோட்பாட்டிற்குரிய இயல்போடு அமைந்து, பொருளதிகாரம் உணர்த்தும் கவிதையியலுக்குத் துணை செய்வனவாய் உள்ளன’ என்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியக் கவிதையியல், சம்ஸ்கிருதத்தோடும், கிரேக்க கவிதையியலோடும் ஒப்பும் உறவும் கொண்டிருப்பதை இந்நூல் மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அதுமட்டுமல்ல, மேலைநாட்டுக் கலை, […]

Read more

சமூகவியல் பார்வையில் பாரதியார்

சமூகவியல் பார்வையில் பாரதியார், க.ப.அறவாணன், தமிழ்க் கோட்டம்,பக்.232,  விலை ரூ.200.  மகாகவி பாரதியின் கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றில் இருந்து அவர் காலத்திய சமூகம் தொடர்பான அவருடைய கருத்துகளை விளக்கிக் கூறும் நூல். பாரதியாரின் தமிழ் வழிக் கல்வி பற்றிய கருத்து, சாதி ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய அவருடைய பார்வை, பெண் சுதந்திரம், தேசப் பற்று குறித்த அவருடைய கருத்துகள், பாரதி விரும்பிய குடியாட்சிமுறை, பொதுவுடமை குறித்த அவருடைய எண்ணம், பிற மொழி இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வை என பல்வேறு பரிமாணங்களில் பாரதியை இந்நூல் […]

Read more

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் – 2005ம், பொதுத் தகவல் அலுவலரின் கடமைகளும், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.648; ரூ.550. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்தத் தகவலை வேண்டுமானாலும் அரசுத்துறைகளிடமிருந்து கேட்டுப் பெற முடியும் என்ற நம்பிக்கை பொதுவாக உள்ளது. ஆனால் உண்மையில் எல்லாத் தகவல்களையும் நாம் பெற முடியாது என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. தகவலைத் தரும் நிர்வாக அமைப்புகள் குறித்த விரிவான தகவல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. தகவல் பெறும் உரிமைச் சட்டம் தோன்றியதன் பின்னணி, அதன் வரலாறு, […]

Read more

என் கடமை – ஊழல் ஒழிக!

என் கடமை – ஊழல் ஒழிக!, நல்லம நாயுடு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்: 216; ரூ. 225. காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நல்லம நாயுடுவின் வாழ்க்கை வரலாறும், பணிக்காலத்தில் ஊழலுக்கு எதிராகவும், சமூகக் குற்றங்களுக்கு எதிராகவும் போராடி வென்ற அவரது அரிய அனுபவங்களும் இந்நூலில் இரண்டு பாகங்களாகத் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. தேனி மாவட்டம், குப்பிநாயக்கன்பட்டி என்கிற கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் நல்லம நாயுடு. மாணவப் பருவத்திலேயே விளையாட்டு வீரராக விளங்கினார். கூடைப்பந்து விளையாட்டில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றவர். […]

Read more
1 14 15 16 17 18 180