பேச்சில்லாக் கிராமம்,

பேச்சில்லாக் கிராமம், ம.பெ.சீனிவாசன்; சந்தியா பதிப்பகம், பக்.216; விலை ரூ.215. நூலாசிரியர் வைணவத் தமிழில் மட்டுமல்ல, சங்கத் தமிழிலும், சைவத் தமிழிலும் கூட ஆழங்காற்பட்டவர். அவரது ஆழ்ந்த, அகண்ட, நுண்ணிய ஆராய்ச்சிப் பார்வை, ஐம்பது கட்டுரைகளாகியிருக்கின்றன.<br>அவற்றுள் வைணவத் தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் “தாயைக் குடல் விளக்கம் செய்த’, “இரண்டு கன்றினுக்கு இரங்கும் -ஆ’, “ஓடக்காரனுக்கு நட்டாற்றில் கூலி’, ” தமராக்கி – ஒரு கிராமத்தின் பெயர்’, “கொள்கொம்பா? கொழுகொம்பா?’, “நிலவின் நிழலோ உன் வதனம்’, “இந்திரனின் விருந்தாளி’, “நாணி நின்றன பிடியும் களிறும்’, “நீ […]

Read more

ஆலய வழிபாடு

ஆலய வழிபாடு, தொகுப்பாசிரியர்: சத்யவதனா; சத்யா பதிப்பகம், பக். 198; விலை ரூ.150. ஆலயங்களின் சிறப்பம்சங்கள், விளக்கேற்றுதல், விரதம் இருத்தல், தானம் அளித்தல், வழிபாட்டு முறைகள், மந்திர மகிமை போன்றவை குறித்து விளக்கமாக எழுதப்பட்டிருக்கும் நூல். முதல் சிவபக்தன், விளக்கேற்றும் ரகசியம், சென்னையில் பஞ்சபூதக் கோயில்கள், கேதார கெளரி விரதம், புரட்டாசி விரதம், நவராத்திரி, மகாளய அமாவாசை என்பன உள்ளிட்ட 30 தலைப்புகளில் ஆன்மிக கட்டுரைகளும், 6 ஆன்மிக சிறுகதைகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. சிதம்பரம், காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகியவை பஞ்ச பூதத்தலங்களாக […]

Read more

ஞான விசாரணை

ஞான விசாரணை (ஆன்மிகக் கட்டுரைகள்)-கெளதம நீலாம்பரன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.364, விலை ரூ.350. மறைந்த பத்திரிகையாளர் கெளதம நீலாம்பரன் “ஞானபூமி’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், எளிய நடையும் செறிவான கருத்துகளும் கொண்டதாக உள்ளது. பக்தர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும், நாத்திகர்களின் அவதூறுகளுக்கும் பல கட்டுரைகளில் தெளிவான விளக்கம் அளிக்கிறார் நூலாசிரியர். நரகாசுர சதுர்த்தியா, நரக சதுர்த்தியா? ஐயப்பன் வரலாறு, சிவ வழிபாடு, உதங்க மகரிஷிக்கு மானுட சமத்துவத்தைக் காட்ட கண்ணன் நிகழ்த்திய திருவிளையாடல் (ஸ்ரீகிருஷ்ண தரிசனம்) உள்ளிட்ட […]

Read more

பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,  பதிப்பாசிரியர்: ப.முருகன், வெளியீடு: தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, பக்.644, விலை ரூ.300. “தமிழ் இலக்கிய வரலாறு’ குறித்து இதுவரை 90க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தொடர்ந்து “தமிழ் இலக்கிய வரலாறு’ எழுதப்பட்டு வருகிறது. கா.சு.பிள்ளைதான் முதன்முறையாக தமிழ் இலக்கிய வரலாற்றை முழுவதும் எழுதினார் (1930). இவருக்குப் பின்னர் மு.வரதராசனார், சி.பாலசுப்பிரமணியன், பூவண்ணன், மது.ச.விமலானந்தம், மு.அருணாசலமும் போன்றோர் எழுதியுள்ளனர். இவர்கள் தவிர, “புதிய நோக்கில்’ தமிழண்ணலும், “வகைமை’ நோக்கில் பாக்கியமேரியும், “வினா-விடை’ நோக்கில் இரா.விஜயனும், “எளிய முறையில்’ […]

Read more

ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப் பெயராய்வு

ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்ட ஊர்ப் பெயராய்வு,  அரங்க. இராமலிங்கம், சிவகுரு பதிப்பகம், பக்: 336;  விலை ரூ.250. தொண்டை நாட்டின் பெருமைக்குரிய மண்ணில் வள்ளிமலையில் பிறந்து திருவண்ணாமலையில் முத்தி பெற்றவர் திருப்புகழ் அருளிய அருணகிரி நாதர். அருள்மொழியரசு திருமுருக கிருபானந்த வாரியார், அடைய பலம் கிராமத்தில் பிறந்த அப்பய தீட்சிதர் போன்ற பல அருளாளர்கள், சமயச்சான்றோர் தோன்றிய மண் வடார்க்காடு. இம் மாவட்டத்தில் 4,059 ஊர்கள் இருந்தன. இவற்றுக்கான பெயர்களைப் பகுத்துக் காணுங்கால் அவை காரண காரியங்களால் உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. ஆர் என்னும் ஆத்தி […]

Read more

விந்தை மிகு பூச்சியினம்

விந்தை மிகு பூச்சியினம், ரெ. வீரவேல், அனுதானா பப்ளிஷர்ஸ், பக்.384, விலை ரூ.900. உலகம் முழுவதும் காணப்படும் பூச்சி இனங்களைப் பற்றிய விரிவான நூல். “கலைக்கதிர்’ இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். “பூச்சிகளின் தோற்றம்’, “பூச்சிகளின் நெருங்கிய உறவினர்கள்’, “பாடும் வெட்டுக்கிளிகள்’, “பாயும் பாச்சான்கள்’, “தேனீக்களின் தேன் வாழ்க்கை’ என்பன உள்ளிட்ட 45 தலைப்புகளிலான கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. பூச்சிகளில் எண்ணற்ற வகைகள்; அவற்றின் பலம், பகுத்தறிவு, நுண்ணறிவு, செயலாற்றும் திறன் போன்றவற்றைப்பற்றி அறியும்போது நமக்கு வியப்பு மேலிடுகிறது. ஆண் பூச்சிகளின் உதவி […]

Read more

பழவேற்காடு வரலாறு

பழவேற்காடு வரலாறு, பழவை வீ.ராதாகிருஷ்ணன், வைகரி பால்டேனியல் பதிப்பகம், பக்.320, விலை ரூ.250. “பழவேற்காடு’ தொடர்பாக இதுவரை யாருமே சொல்லாத வரலாற்று உண்மைகளைப் பல்வேறு சான்றுகளோடு முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர். பழவேற்காடு ஒரு மீன்பிடித் துறைமுகம், கடற்பகுதி, ஏரி என்று மட்டும் நினைப்பவரின் எண்ணத்தைப் புரட்டிப் போட்டுவிடுகிறது இந்நூல். இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்பே புதுப்பொலிவு பெற்றன. தலைசிறந்த துறைமுகப்பட்டினங்களும் உருவாயின. அவற்றுள் பழவேற்காடும் ஒன்று. கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “எரிதேரியன் கடற்பயணக் குறிப்புகள்’ என்ற நூலில்தான் பழவேற்காடு ஏரியைப் […]

Read more

நேமிநாதம் காலத்தின் பிரதி

நேமிநாதம் காலத்தின் பிரதி, நா.அருள்முருகன், சந்தியா பதிப்பகம், பக்.232, விலை ரூ.230. தொல்காப்பியத்திற்குப் பிறகு இலக்கண நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று, சமணரான குணவீர பண்டிதரால் எழுதப்பட்ட நேமிநாதம். “நேமிநாதம் குறித்து ஓரிரு நூல்கள் வந்திருந்தாலும் அவை உள்ளடக்கம், ஒப்பீடு அளவிலேயே நின்றுவிட்டன. நேமிநாதத்தைத் தனியொரு பனுவலாகக் கொண்டு அதன் கொடுக்கல் வாங்கல் பற்றி முழுமையான சிந்தனை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை’ என்ற நூலாசிரியரின் மனக்குறை, இந்த ஆய்வின் மூலம் ஓரளவு தீர்ந்திருக்கிறது. நேமிநாதத்தின் இலக்கண வெளிப்பாடு, நேமிநாதத்துக்கும் வீரசோழியத்துக்கும் இடையேயான வேறுபாடுகள், நேமிநாதம் […]

Read more

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர்

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர், எஸ். சேகு ஜமாலுதீன், வானதி பதிப்பகம், பக்.160, விலை ரூ.175. இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகளில் 16 பேரை தேர்வு செய்து, அவர்களின் தலைசிறந்த தமிழ்ப் படைப்புகள் எவை? அவர்களின் அரிய கருத்துகள் எவை என்பதை சுவாரசியமாக விவரிக்கிறது இந்த நூல். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் “சீறாப்புராணம்’ என்ற காப்பியமாகப் படைத்த உமறுப்புலவர், ராமாயண ஆய்வு நூல்களைப் படைத்தளித்த நீதிபதி மு.மு. இஸ்மாயில், “அக்னிச் சிறகுகள்’, “எழுச்சி தீபங்கள்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த […]

Read more

ஓரெழுத்தில் ஆழ்வார்கள்

ஓரெழுத்தில் ஆழ்வார்கள், ப.ஜெயக்குமார், உமாதேவி பதிப்பகம், பக்.160, விலை ரூ.300. விதியை வென்று, முக்தியைஅடைய வழிகாட்டும் பன்னிரு ஆழ்வார்களின் பக்தி வரலாற்றை “ஓரெழுத்தில் ஆழ்வார்கள்’ என்ற நூல் வாயிலாக புதுக்காவியமாக செதுக்கி சிறப்பித்துள்ளார் நூலாசிரியர். சம்பவங்கள் விடுபடாமல், சமய நெறி குறைபடாமல், மொழியழகுடன் பிழையின்றி வைணவ வளம் காக்க ஆசிரியர் முயன்றுள்ளது மெச்சத் தகுந்தது. பன்னிருவர் வாழ்க்கையை ஓவியமாய், காவியமாய் பாடியுள்ளார். ஒவ்வோர் ஆழ்வாரின் பிறந்த மாதம், நட்சத்திரம், பிறந்த ஊர் – பெருமாளின் திருநாமம், திருமகளின் திருநாமம், தற்கால ஊரின் பெயர், தொடர்புக்கான […]

Read more
1 12 13 14 15 16 180