ஐந்தாம் வேதம்

ஐந்தாம் வேதம், என் மண் சார்ந்த காதலும் கலாச்சாரமும் (குறுங்காவியம்), மணவை பொன் மாணிக்கம்;, கற்பகம் புத்தகாலயம், பக்.160, விலை ரூ.150.   உலகில் மனிதர்கள் தோன்றிய நாளிலிருந்து காதலும் இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் காதலின் தன்மையும் காதலிப்பவர்களின் தன்மையும் மாறிக் கொண்டே வந்தாலும், காதல் எப்போதும் நிலைத்திருக்கிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள 12 கதைகளில் நம் அன்றாட வாழ்வில் பார்க்கிற பல காதலர்களைச் சந்திக்கலாம். நம்மோடு பழகுகிறவர்களை அவர்களில் உணரலாம். ஆனால் அவர்கள் நம்மிடம் அம்பிகாபதி – அமராவதி, பிருதிவிராஜ் – […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள், பெ.பெரியார்மன்னன், விவேகா பதிப்பகம், பக்.118, விலை  ரூ.145. சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பல்வேறுவிதமான வழிபடும் முறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் அமைந்துள்ள பழனியாபுரம் கிராம எல்லை வனப்பகுதியில் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே வழிபடுகிறார்கள். இரவு நேரத்தில் காவல்தெய்வமான “முனி’ உலாவுவதால் இக்கோவிலுக்குப் பெண்கள் செல்வதில்லை. குமாரபாளையம் கிராமத்தின் நுழைவு வாயிலில் வெள்ளாற்றின் வலது கரையில் அமைந்துள்ளது “சாராய’ முனியப்பன் கோவில். முனியப்ப […]

Read more

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு,  தொகுப்பாசிரியர்: எம்.எஸ்.செல்வராஜ் , பாரதி புத்தகாலயம், பக்.96, விலை  ரூ.100. 1815- ஆம் ஆண்டு இலங்கையை பிரிட்டிஷார் கைப்பற்றினர். அங்கு அவர்கள் கட்டுமானப் பணிகளைச் செய்ய தமிழகத்திலிருந்து பலரை அழைத்துச் சென்றனர். பிரிட்டிஷ் முதலாளிகள் காப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்களை இலங்கையில் ஏற்படுத்தி, அவற்றில் வேலை செய்யவும் தமிழ்நாட்டிலிருந்து மக்களை அழைத்துச் சென்றனர். தமிழகத்தில் இருந்து சென்றவர்களால், இலங்கையின் பொருளாதாரம் மேம்பட்டது என்றாலும் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. அவர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நிலையை […]

Read more

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்,  பெரும்பற்றப்புலியூர் நம்பி, உரையாசிரியர்: மு. அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.808, விலை ரூ.990.  “பாண்டிப் பதியே பழம்பதி’ என்று கூறுவர். பாண்டிய நாட்டின் தலைநகராம் மதுரையில் திருவாதவூரருக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்திக்காட்டினார் சொக்கநாதப் பெருமான். இறைவனின் திருவிளையாடல்களை ஓரிரு புலவர்கள் அவ்வப்போது பாடியிருந்தாலும் அவற்றை நிரல்படத் தொகுத்தளித்தவர் பெரும்பற்றப்புலியூர் நம்பியே. உ.வே.சா.இந்நூலை இருமுறை பதிப்பித்துள்ளார். அப்பதிப்புகளில் அவர் பொழிப்புரை தரவில்லையாயினும் அரிய செய்திகளைக் குறிப்புரையாகத் தந்துள்ளார். அக்குறிப்புரைகளை ஆதாரமாகக் கொண்டு இந்நூலாசிரியர் பொழிப்புரை வழங்கியுள்ளார். இந்நூல் மதுரையைப் […]

Read more

செத்தை

செத்தை,  வீரபாண்டியன், எழுத்து, பக்.144,  விலை ரூ.110.  சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்வையும் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.  தனிப்பட்ட தேர்ந்த களங்களை, இதுவரை யாராலும் பதிவுசெய்யப்படாத அடித்தட்டு மக்களை கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மக்களின் அடிமனதின் அடுக்குகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும், அவர்களின் கையறு நிலையையும் காட்சிப்படுத்துகிறது “செத்தை’.  மிக்கி மவுஸ், ரேபிட் போன்று பொம்மை உடைகளை அணிந்துகொண்டு, கொண்டாட்ட நிகழ்வுகளில் விருந்தினர்களை மகிழ்விக்கும் வேலையை பகுதி நேரமாகப் பார்க்கும் கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலையும், […]

Read more

தமிழகம்

தமிழகம் – கி.பி. முதல் நூற்றாண்டு,ந.சி.கந்தையா பிள்ளை, அழகு பதிப்பகம், பக்.25, விலை  ரூ.250. தமிழகம் தொன்மை மிக்க நாடு. இதன் வரலாற்றை பல்வேறு அறிஞர்களும் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ளனர். அவற்றையெல்லாம் ஆய்ந்து, ஏற்புடையனவற்றைத் தொகுத்து அவற்றோடு தனது முடிவுகளையும் இணைத்து நூலாக்கியிருக்கிறார் ஆசிரியர். அற்றை நாளில் தமிழ்நாட்டின் எல்லைகள், தமிழ்நாட்டில் பயின்ற மொழிகள், பின்னர் தமிழினின்றும் கிளைத்த வழிமொழிகள், தமிழில் முத்தமிழ் வளர்ந்த விதம், தமிழர் நாகரிகம், நம்பிக்கை, பொழுதுபோக்கு ஆகியவற்றையும், தமிழர், ஓவியம், சிற்பம், வணிகம், சோதிடம், வானவியல் போன்ற துறைகளில் […]

Read more

ஆத்திசூடிக் கதைகள்

ஆத்திசூடிக் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.200. ஒளவையாரின் ஆத்தி சூடியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்களுக்கு சின்னஞ் சிறு கதைகள் மூலம் நீதி போதிக்கும் சிறுகதைத் தொகுப்பு. இந்நூலில் ஆத்திசூடியின் கருத்துகளோடு, பல்வேறு கதை மாந்தர்களையும், விலங்குகளையும் வைத்து எளிய நடையில் கதைகள் புனையப்பட்டுள்ளன. இவை படிக்க சுவையாக இருப்பதுடன், சிந்தனைக்கும் விருந்தாக அமைந்துள்ளன. “ஊக்கமது கைவிடேல்’ என்பதற்கு சிலந்தியின் விடாமுயற்சியைக் கண்டு ஊக்கம் பெற்ற ராபர்ட் புரூஸின் வாழ்க்கைச் சம்பவம் ஓர் உதாரணம். “நேரிலும் பார்க்காத… நல்லதும் அல்லாத, யாருக்கும் ஒரு […]

Read more

முரசொலி சில நினைவுகள்

முரசொலி சில நினைவுகள், முரசொலி செல்வம், சீதை பதிப்பகம், பக்.526, விலை ரூ.300. முரசொலி பதிப்பாளரும் ஆசிரியருமான முரசொலி செல்வம், இளம் தலைமுறை வாசகர்களுக்காக எழுதிய 100 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கிறது. விலைவாசிப் போராட்டம்(1962), ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் (1965) எமர்ஜென்சி (1975) அதன் அடக்குமுறைகள் – சோதனைகள் – சென்சார் கெடுபிடி, எம்.ஜி.ஆர். காலத்திய ஆட்சிமுறை, அதில் எழுந்த பிரபலமான குற்றச்சாட்டுகளான திருச்செந்தூர் கோயில் உண்டியல் திறப்பின்போது அறங்காவலர் சுப்பிரமணியப்பிள்ளை கொலை, அதனை வெளிக்கொணர போடப்பட்ட பால் கமிஷன், அதன் அறிக்கையை […]

Read more

மணிமேகலை- உரையுடன் (இரு பாகங்கள்)

மணிமேகலை- உரையுடன் (இரு பாகங்கள்) , உரையாசிரியர்: கரு.முத்தய்யா, முதல் பாகம், பக்.384,  விலை ரூ.300, இரண்டாம் பாகம்,  பக்.384, விலை ரூ.300. தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று போற்றப்படுபனவற்றில் சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய மூன்று நூல்கள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. மணிமேகலை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் உ.வே.சா. அவரைத் தொடர்ந்து வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப்பிள்ளை போன்றோரும் உரையெழுதிப் பதிப்பித்தனர். அந்த வகையில் மணிமேகலைக்கு செறிவாகவும், எளிமையாகவும் எழுதப்பட்ட உரையுடன் வெளிவந்துள்ள நூல் இது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட சிறந்த சீர்திருத்த நூல் […]

Read more

திருக்குறள் சிறப்புரை

திருக்குறள் சிறப்புரை, இரெ.குமரன், மின் கவி, பக்.864, விலை ரூ.800. திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இருந்து இந்நூல் வேறுபட்டுக் காட்சி அளிக்கிறது. எளிமையாகப் புரிந்து கொள்ளும்வகையில் ஒவ்வொரு குறளுக்கும்நூலாசிரியர் எழுதிய தெளிவான உரை இடம் பெற்றிருக்கிறது.அதுமட்டுமல்ல,அதோடு இரு வரிக் குறளின் பொருள் – அதன் சாராம்சம் – ஒரு வரியில் கூறப்பட்டிருக்கிறது.எடுத்துக்காட்டாக, “தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’ என்ற குறளுக்கு அதற்குரிய விரிவான உரையோடு, ” நாவடக்கம் இல்லான் சொல்லால் கொல்வான்’ என்று ஒரு வரியில் […]

Read more
1 10 11 12 13 14 180