உலகப் புகழ்பெற்ற நாவல்கள்

உலகப் புகழ்பெற்ற நாவல்கள்,  உலகப் புகழ்பெற்ற ஆறு நாவல்களின் சுருக்கம்,  தமிழில்  முல்லை பிஎல் முத்தையா,  பக்.736, விலை ரூ. 700. மாக்ஸிம் கார்க்கியின் “அம்மா’, லியோ டால்ஸ் டாயின் “அன்னா கரினினா’, டாஸ்டாவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்’, “வாடாமல்லிகை’ என்ற தலைப்பில் அலெக்ஸாண்டர் டூமாஸ் ஜூனியரின் “கேமிலி’, எமிலி ஜோலாவின் “நாநா’, “ஐந்து சகோதரிகள்’ என்ற பெயரில் ஜேன் ஆஸ்டினுடைய “பிரைட் அன்ட் பிரிஜுடீஸ்’ நாவல்களைத் தமிழில் தந்திருக்கிறார் பிஎல். முத்தையா. 1905-இல் ரஷியாவில் நிகழ்ந்த விவசாயிகள் புரட்சியின் தோல்விக்குப் பிறகு, மக்களின் மத்தியில் […]

Read more

கரிசலில் உதித்த செஞ்சூரியன்

கரிசலில் உதித்த செஞ்சூரியன், (சோ.அழகர் சாமியின் வாழ்க்கைத் தடம்),  எஸ்.காசிவிஸ்வநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.366,  விலை ரூ.335. எட்டயபுரத்துக்கு அருகில் உள்ள ராமனூத்து என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் சோ. அழகர்சாமி. தனது 14 வயதிலேயே நாட்டுப்பற்று உடையவராகத் திகழ்ந்த அவர் காங்கிரஸ், சோசலிஸ்ட் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு இருந்திருக்கிறார். ஜெயபிரகாஷ் நாராயண் உள்ளிட்ட பல புகழ்பெற்ற அரசியல் தலைவர்களை எட்டயபுரத்துக்கு வரவழைத்து அரசியல்மாநாடுகள் நடத்தியிருக்கிறார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். 1948 – இல் கம்யூனிஸ்ட் […]

Read more

சைவமும் சன்மார்க்கமும்

சைவமும் சன்மார்க்கமும்,  செந்நெறி பா.தண்டபாணி, விஜயா பதிப்பகம், பக். 200, விலை ரூ.180. உலகம் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த வாழ்வியல் முறைகளை நமக்கு வழங்கியவர் வடலூர் வள்ளல் பெருமான். அவரது சிறப்புகளும் சன்மார்க்க கோட்பாடுகளும் எளிய முறையில் தொகுத்து இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.  பதினெட்டு அத்தியாயங்களில் வள்ளலார் பற்றியும் அவரது மரணமில்லாப் பெருவாழ்வு குறித்த சிந்தனைகளும் தரப்பட்டுள்ளன. “சைவ சித்தாந்தமும் சன்மார்க்கமும் வேறு வேறு அல்ல; சன்மார்க்கம் என்பது சைவத்தின் உச்சநிலை’ என்கிறார் நூலாசிரியர். “உருவராகியும் அருவினராகியும் உருஅருவினராயும் ஒருவரே உளார் கடவுள் […]

Read more

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா

ஏர் இந்தியாவின் தந்தை ஜேஆர்டி டாட்டா, ஆர். நடராஜன், மணிவாசகர் பதிப்பகம், பக்.176,  விலை ரூ.150. இந்தியாவில் இரும்பு, எஃகு ஆலை, மின்சார ஆலை உள்ளிட்ட இன்றைய முக்கியத் தொழில் துறைகள் அனைத்துக்கும் அன்றே அடித்தளமிட்டவர் ஜாம்ஷெட்ஜி டாட்டா. ஜாம்ஷெட்ஜியின் டாட்டா குழுமம் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்த போதிலும், அவரது பெயரன் ஜே.ஆர்.டி. டாட்டாவுக்கு விமானத்துறை மீது தணியாத ஆர்வம் இருந்தது. விமானம் ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்று இந்தியாவின் முதல் விமானியானது மட்டுமல்லாது, அன்றைய ஆங்கில அரசின் அனுமதியுடன் முதல்முதலில் கராச்சி – […]

Read more

கடோபநிஷத்

கடோபநிஷத்,க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 264, விலை ரூ. 350. உபநிஷத்துகளில் தனிச்சிறப்பு கொண்டது கடோபநிஷத். பெரியதும்கூட. 119 மந்திரங்களைக் கொண்டது. கடோபநிஷத்துக்குத் தமிழில் நிறைய உரைகள் வந்திருக்கின்றன. எல்லாரும் படித்து எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது இந்த விளக்கவுரை. விச்வஜித் யாகத்தில் அதிருப்தியுற்று எழுப்பும் கேள்வியால் ஆத்திரமுற்று, எமனுக்கே தானமாகத் தருவேன் என்று தந்தையால் கூறப்படுகிறான் அல்லது சபிக்கப்படுகிறான் மகன் நசிகேதஸ். மூன்று இரவுகள் காத்திருந்து தன்னைச் சந்திக்கும் நசிகேதஸுக்கு மூன்று வரங்கள் அருளுவதாகக் கூறுகிறார் எமதர்மன். தந்தை கோபம் நீங்கியவராகத் தன்னை […]

Read more

உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன்

உமாபதி சிவாச்சாரியார் அருளிச் செய்த திருவருட்பயன், விளக்க உரை, சு. சிவபாதசுந்தரனார், சந்தியா பதிப்பகம்,  பக்.238,  விலை ரூ.225.   சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பது போலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்களுள் நான்காமவரான உமாபதி சிவாச்சாரியார், “மெய்கண்ட சாத்திரம்’ என்று கூறப்படும் பதினான்கு நூல்களுள் எட்டு நூல்களை இயற்றியுள்ளார். “சித்தாந்த அட்டகம்’ எனப்படும் அவற்றுள் ஒன்றுதான் “திருவருட்பயன்’. இந்நூலுக்கு சைவ அறிஞர் இலங்கை சு. சிவபாதசுந்தரனார் எழுதிய உரையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது திருக்குறளைப் போலவே குறள் வெண்பா […]

Read more

என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.352, விலை ரூ.300.  குடும்பத்தோடு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் நாம், நமக்காகப் பணி செய்வதாலேயே குடும்பத்தோடு தீபாவளியைக் கொண்டாட இயலாதநிலையில் இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களையும் நமது கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை கூறும் கட்டுரையில் தொடங்கி, ரஜினிகாந்த் இந்தியப் படவிழாவில் கெளரவிக்கப்பட்டது, தமிழ் நாளேடுகளில் இடம் பெறும் விளம்பரங்களில் தமிழ் சொற்றொடர்கள் ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது, தமிழ்ப் பெயர்களைத் தமிழ் உச்சரிப்பில் உள்ளவாறு ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எழுத வேண்டும் என்று மாநில […]

Read more

திருநெல்வேலி-நீர்-நிலம்-மனிதர்கள்

திருநெல்வேலி-நீர்-நிலம்-மனிதர்கள், இரா.நாறும்பூநாதன், சந்தியா பதிப்பகம், பக். 270, விலை ரூ.270. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மண்ணின் சிறப்புகள் பற்றிய 41 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு முதல் குற்றால குறவஞ்சி வரை தெரிந்த விஷயங்கள் பற்றிய தெரியாத விவரங்களை சுவாரசியமாகத் தந்திருப்பது சிறப்பு. தஞ்சையில் பிறந்து திருநெல்வேலிக்கு வந்து ஏழை, எளிய மக்களுக்கு கல்விக் கொடையளித்த கிளாரிந்தா, ஆசியாவிலேயே பெரிய கண் பார்வையற்றோர் பள்ளியை பாளையங்கோட்டையில் தொடங்கிய ஆஸ்க்வித் ஆகியோரின் வரலாறு, நெல்லைச் சீமையில் 19-ஆம் நூற்றாண்டில் பல்வேறு கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட […]

Read more

திருக்கோவையார்

திருக்கோவையார், பேரின்பப் பொருள் விளக்கம், எட்டாம் திருமுறை, இரண்டாம் பாகம்,  அ.ஜம்புலிங்கம், இந்துமதிபதிப்பகம், பக்.408,  விலை ரூ.600. பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் இடம்பெறும் திருவாசகம் பேசப்படும் அளவுக்குத் திருக்கோவையார் பேசப்படவில்லை என்பதற்குக் காரணம், அது ஐந்திணை ஒழுக்கம் பற்றிய சிற்றிலக்கிய நூல் என்ற தவறான கருத்து மக்களிடம் நிலவி வருவதால்தான். ஆனால், சிற்றிலக்கியத்தின் மூலம் மாணிக்கவாசகர் பேரின்ப- மெய்ஞ்ஞான தத்துவங்களையே சொல்லியிருக்கிறார், அது பேரின்பப் பெருநூலே என்று நுண்மாண்நுழைபுலம் கொண்டு அதை ஆய்ந்த சைவப் பேரறிஞர்களான யாழ்ப்பாணம் நவநீத கிருஷ்ண பாரதியார், கா.சு.பிள்ளை, […]

Read more

முடங்கலில் மலர்ந்த மலர்கள்

முடங்கலில் மலர்ந்த மலர்கள் (வாழ்வியல் கட்டுரைகள்), தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக்.208, விலை ரூ. 200. பொதுமுடக்க காலத்தில் எழுதப்பட்ட இருபத்தெட்டு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பிரபல ஆளுமைகள் குறித்து 13 கட்டுரைகளும், திருக்குறள், சைவம் – வைணவம் குறித்த பெருமைகளைவிளக்கி ஒரு கட்டுரையும், தனிப்பாடல்கள், தாய்மை, ரமலான் ஆகியவை குறித்த 5 கட்டுரைகளும் தவிர, மற்றவை சமூகம் சார்ந்தவை என்று, இந்நூலின் வாழ்த்துரையில் உச்சநீதிமன்ற நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் பட்டியலிட்டுள்ளார். இது தவிர, இக்கட்டுரைகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் நூலாசிரியர் உழைப்பு தெரிவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். […]

Read more
1 8 9 10 11 12 180