1232 கி.மீ.

1232 கி.மீ., வினோத் காப்ரி; தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.282; விலை ரூ.350. கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் பொருட்டு மார்ச் 24, 2020 இல் இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சொந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வேலை பார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பெரும் அவதிக்குள்ளாகினர். அவர்களில் பெரும்பாலோர் நடந்தே தத்தமது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். அப்படி உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்திலிருந்து 1232 கி.மீ. தொலைவில் உள்ள பிகார் மாநிலம் சகர்ஸு மாவட்டத்திலுள்ள தங்களது […]

Read more

வழிகாட்டும் விவேக சிந்தாமணி

வழிகாட்டும் விவேக சிந்தாமணி, நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெயின் பேங்க், பக்.112, விலை ரூ. 100. விவேக சிந்தாமணி இரு பாகங்கள் கொண்டது. அதில் இடம்பெறும் செய்யுள்களின் எண்ணிக்கை 245. அதில் 98 செய்யுள்களைத் தேர்ந்தெடுத்து நூலாசிரியர் விளக்க உரை அளித்திருக்கிறார். “விவேகம்’ என்றால் நல்லது எது கெட்டது எதுவென்று பகுத்துணரும் அறிவு. “சிந்தாமணி’ என்றால் ரத்தினக்கல் – விலைமதிப்பற்றது என்று விளக்கமும் கூறுகிறார் நூலாசிரியர். “கூடா நட்பு’ , “அற்பரின் நட்பு கூடாது’, “வேண்டாம் நட்பு’, “நட்பின் உயர்வு’, “சான்றோர் நட்பு’- இவையெல்லாம் […]

Read more

அந்த நிருபரின் பேனா…

அந்த நிருபரின் பேனா…, ஆர்.நடராஜன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.195, விலை ரூ.175. நூலாசிரியர் தனது பத்திரிகை உலக அனுபவங்களை மூன்றாம் நபர் சொல்வது போல் எழுதியிருக்கிறார். “ஹிந்து’ ஆங்கில நாளிதழின் தென்னாற்காடு நிருபராகவும், பின்னர் உதவி ஆசிரியராகவும் நூலாசிரியர் பணியாற்றியுள்ளார். புதிதாக நிருபர் பணி ஏற்பவர்களை செய்தி சேகரிக்க அப்போதெல்லாம் பொது மருத்துவமனைக்குத்தான் அனுப்புவார்கள். நூலாசிரியர் நிருபர் பணியும் சென்னை பொது மருத்துவமனையின் பிணவறையில்தான் தொடங்கியிருக்கிறது. இறந்தவரைப் பற்றிய தகவலைத் திரட்டியது முதல் செய்தியானது. சாரணர் இயக்கத்தின் இலட்சிய வாசகம் “தயாராக இரு’. நிருபர்களுக்கும் […]

Read more

தெ.பொ.மீ. தமிழ்மொழி வரலாறு

தெ.பொ.மீ. தமிழ்மொழி வரலாறு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், தொகுப்பாசிரியர்கள்: சு.சண்முகசுந்தரம், பல்லடம் மாணிக்கம், காமாட்சி சண்முகம்; காவ்யா, பக்.396, விலை ரூ.400; கடந்த நூற்றாண்டில் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய சான்றோருள் குறிப்பிடத்தக்கவர் தெ.பொ.மீ. எனப்படும் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஆவார். அவர் இந்நூலில், தமிழ்மொழியின் வரலாற்றைச்சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். தமிழ்மொழி வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளைப் பட்டியலிடும் முதல் கட்டுரையில் தொடங்கி, “மூலத் திராவிட மொழி’, “தென் திராவிட மொழிகளும் தமிழும்’, “தொல்காப்பியத் தமிழ்’, “சங்ககாலத் தமிழ்’, “பல்லவர் சோழர் நாயக்கர் காலத் தமிழ்’ உள்ளிட்ட பத்து தலைப்புகளில் தமிழ்மொழியை […]

Read more

கலைஞர்: இலக்கியத்தடம்

கலைஞர்: இலக்கியத்தடம், சு.சண்முக சுந்தரம், காவ்யா, பக். 352, விலை ரூ.350. கலைஞர் மு.கருணாநிதியை இன்றைய தலைமுறைக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் நோக்கில் இந்நூலை எழுதியிருக்கிறேன் – என்று கூறும் நூலாசிரியர் கலைஞரின் பன்முக ஆளுமைகளை இந்நூலில் பட்டியலிட்டிருக்கிறார். கருணாநிதியின் தமிழ்ப்பணி குறித்து கூறும்போது, நாடகங்களான “தூக்குமேடை’ தொடங்கி “மணிமகுடம்’ வரையிலும், சிறுகதை என்றால் “குப்பைத்தொட்டி’ தொடங்கி திடுக்கிட வைக்கும் சிறுகதைகள் வரையிலும், நாவல் என்றால் “புதையல்’ தொடங்கி “பொன்னர் சங்கர்’ வரையிலும் எந்தெந்த காலத்தில் – எந்தெந்த பத்திரிகைகளில் அவை […]

Read more

பல கோணங்களில் பசும்பொன் தேவர்

பல கோணங்களில் பசும்பொன் தேவர் (கட்டுரைகள்), தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக்.320, விலை ரூ.260. சாதித் தலைவரைப் போலவும் மதத் தலைவரைப் போலவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முன்னிறுத்தும் இன்றைய காலகட்டத்தில், அந்த கண்ணோட்டத்தை மறுக்கும்விதமாக வெளிவந்திருக்கிற இந்த நூல், தேவரின் ஆளுமையைப் பற்றிய எண்ணற்ற சித்திரங்களைக் கட்டுரைகளாகத் தருகிறது. சாதி வட்டத்துக்கு அப்பாற்பட்டவராகப் பசும்பொன் தேவர் திகழ்ந்தது பற்றியும் அவருடைய பல செயல்பாடுகள், நிகழ்வுகள் பற்றியும் மகரிஷி சுத்தானந்த பாரதியார் தொடங்கி, மா. இராசமாணிக்கனார் வரை 56 பேரின் சிந்தனைகள் […]

Read more

ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது

ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது, தொகுப்பாசிரியர்: ஆ.அறிவழகன், தமிழ்நாடு வ.உ.சி.ஆய்வு வட்டம், பக்.120, விலை  ரூ.100. சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி. வாழ்வின் பல்துறை சார்ந்த விஷயங்களைப் பற்றிய தெளிவான புரிதலும், கருத்துகளும் உடையவராக இருந்திருக்கிறார். கப்பல் ஓட்டிய தமிழராக, தொழில்முனைவோராக இருந்த அவரே, தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட பல தமிழ்நூல்களைக் கற்றுத் தேர்ந்தவராகவும் இருந்திருக்கிறார். வ.உ.சி.யின் பன்முகத் தன்மையை எடுத்துக் காட்டும்விதமாக பலரால் எழுதப்பட்ட 12 கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. திருமூலர் […]

Read more

சுய கர்மயோகம்

சுய கர்மயோகம், ஏகேஎம். லெப்பைக்கனி, காமா பப்ளிகேஷன்ஸ், பக்.96,  விலை குறிப்பிடப்படவில்லை. “சுய கர்ம யோகம்’ என்ற நூலின் தலைப்பைப் பார்த்தமாத்திரத்திலேயே இது ஒரு யோகாசனம் தொடர்பான நூல் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் நூலாசிரியரின் கருத்தோ வேறுவிதமாக இருக்கிறது. “சுய கர்மயோகம் என்றால், ஒரு மனிதன் செய்யும் காரியம் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன்படக் கூடிய சிறப்பான காரியமாக இருக்க வேண்டும் என்பதுதான்’ என்கிறார். மருத்துவரான நூலாசிரியர் ஆரோக்கியமான வாழ்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது. மருத்துவம் தொடர்பான […]

Read more

தமிழிலக்கணக் கோட்பாடுகள்

தமிழிலக்கணக் கோட்பாடுகள் (விரிவாக்கப் பதிப்பு), பொன்.கோதண்டராமன் (பொற்கோ), பூம்பொழில் வெளியீடு,  பக்.124, விலை ரூ.120. உலகிலேயே எழுத்து வடிவில் தோன்றிய முதல் இலக்கண நூல் என்கிற சிறப்பு தொல்காப்பியத்துக்கு இருப்பதைப் போலவே, தொல்காப்பியருக்கென்று ஒரு கொள்கையும் இருக்கிறது. அதுதான் தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கை. “அந்த இலக்கணக் கொள்கையைப் பின்னால் வந்த எந்த இலக்கணக்காரரும் புரிந்து கொண்டதாகத்தெரியவில்லை. தமிழர்கள் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டிய பொருள்தான் தொல்காப்பியர் உணர்த்தும் இலக்கணக் கொள்கை’ என்கிறார் நூலாசிரியர் பொற்கோ. கல்லூரி நிகழ்ச்சிகளில், கருத்தரங்குகளில் பேசிய உரையின் தொகுப்பாக அமைந்துள்ளது […]

Read more

திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள் ,  தேவகாந்தன், ஆதி பதிப்பகம், பக்.128, விலை ரூ.120. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த நூலாசிரியர்,1984முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது கனடா நாட்டில் வாழ்கிறார். என்றாலும் தான் பிறந்த மண்ணோடான அவருடைய அனுபவங்களை அவரால் மறக்க முடியவில்லை.அந்த நினைவுகளை இந்நூலில் பகிர்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கப்பட்டிருக்கும் கிடுகு வேலி கலாசாரத்துடன் தொடங்குகிறது நூல்.இந்தக் கிடுகுவேலிகள் மழைக்காலத்தில் மண்ணரிப்பைத் தடுப்பவையாக இருந்திருக்கின்றன. குறுகியமணல் பாதைகளின் திருப்பத்தில் செல்லும் வண்டிகள் கிடுகு வேலிகளில் மோதி, வேலி சேதமடையாமல் இருப்பதற்காக வேலியின் மூலையில் […]

Read more
1 7 8 9 10 11 180