அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள்

அந்தமானில் இருந்து சாவர்க்கரின் கடிதங்கள், தமிழில்: வி. வி. பாலா, தடம் பதிப்பகம், பக்.120, விலை ரூ.100, லண்டனிலிருந்து ஆயுதங்கள் வாங்கி அதனை இந்தியாவில் விநியோகித்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போர் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சாவர்க்கர் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார். நாசிக் சதி வழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனையும் பெற்ற சாவர்க்கர், அந்தமான் சிறைக்கு மாற்றப்படுகிறார். அந்தமான் சிறைக் கைதிகள் வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே உறவினர்களுக்கு கடிதம் எழுத முடியும் என்ற கடுமையான விதி அமலில் இருந்தது. […]

Read more

தலைத் தாமிரபரணி

தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக்.1040, விலை ரூ.1000. தென்காசி, தூத்துக்குடியை உள்ளடக்கி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை புராண விளக்கங்கள், வரலாற்றுத் தரவுகளுடன் மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியின் உற்பத்தி குறித்து மிக விரிவாக பதிவு செய்திருப்பதோடு மட்டுமல்லாது அது கடலில் கலக்கும் புன்னக்காயல் வரையிலான அணைகள், சிற்றாறுகள், கால்வாய்கள், கோயில்கள், மூலிகைகள் உள்ளிட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவருக்கு எட்டையபுரத்தில் தர்கா உள்ளது. இந்த தர்காவை […]

Read more

அகநானூற்றின் அமைப்பும் சிறப்பும்

அகநானூற்றின் அமைப்பும் சிறப்பும், சோ.ந. கந்தசாமி, மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.175. அகநானூறை எழுவகை நோக்கில் ஆராயும் முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது. முதல் இயலில் அகநானூறு பற்றிய அடிப்படைத் தகவல்கள் உள்ளன. இரண்டாவது இயல், பாடிய புலவர்களின் பாடல்களை தொகை வகை செய்துள்ளது. தமக்குரிய ஊரின் பெயரையும், பெற்றோரின் பெயரையும் முன்னொட்டாகக் கொண்ட புலவர்கள், பாடியோர் வரிசையில் அரசரும், பெண்பாற் புலவர்களும் என இவ்வியல் அமைந்துள்ளது. “அகநானூற்று அக மாந்தர்’ எனும் மூன்றாவது இயலில் முதன்மை மாந்தர்கள், துணை மாந்தர்கள் ஆகியோர் நாடகப்பாங்கில் […]

Read more

ஆறங்கம்

ஆறங்கம் (அரசியல் நாவல்), ஆர். நடராஜன், ஆதாரம்வெளியீடு, பக்.208, விலை குறிப்பிடப்படவில்லை; அரசியல் உலகில் ஜாம்பவான்களாக வலம் வந்த ஒவ்வொருவரும், அரசியல் – அரசியல்வாதிகள் குறித்த அவர்களின் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல சாமானியர்களும் நகைச்சுவையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவையெல்லாம் இந்நூலுக்கு வலு சேர்த்திருக்கின்றன. நாட்டை ஆளும் தலைவனுக்கு (அரசர்) தேவையான ஆறு உறுப்புகள் என்று சொல்லக்கூடிய படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவற்றையும், ஆறு வேதாங்கங்களையும் சுற்றி நூல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இந்நூலுக்கு ஆறங்கம் என்று பெயர் சூட்டியிருக்கிறார் […]

Read more

பாரதி பாடிய மணக்குள விநாயகர்

பாரதி பாடிய மணக்குள விநாயகர், சொ. சேதுபதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. மகாகவி பாரதியார் எல்லாத் தெய்வங்களையும் பாடியிருந்தாலும், அவர் முழுமுதல் பரம்பொருள் நிலையில் வைத்துப் போற்றியது விநாயகக் கடவுளையே என்பதை அவர் பாடிய “விநாயகர் நான்மணி மாலை’ நூல் தெற்றென உணர்த்துகிறது. பாரதியாரின் புகழ்பெற்ற சொற்றொடர்களான “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன்’, “தவமே புரியும் வகையறியேன்’, “அச்சமில்லை அமுங்குதலில்லை’ “நமக்குத் தொழில் கவிதை’, “பேசாப் பொருளை பேசநான் துணிந்தேன்’, “அன்பிற் சிறந்த தவமில்லை’, “கவலைப் படுதலே கருநரகு’ போன்றவை […]

Read more

தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்றுகள்

தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்றுகள், கி.ஸ்ரீதரன், நாம் தமிழர் பதிப்பகம், பக்152, விலை ரூ.160. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றிய நூலாசிரியர், கல்வெட்டுகள், அரிய சிற்பங்கள், நினைவு கற்கள், மைல்கல், கோயில்கள், செப்பேடுகள் ஆகிய வரலாற்று ஆதாரங்கள் கூறும் அரிய தகவல்களை இந்நூலின் மூலம் நமக்கு தொகுத்து அளித்துள்ளார். மதுரை – திண்டுக்கல் சாலையில் உள்ள வடுகபட்டி என்ற ஊரில் உதயசந்திரன் என்பவருடைய குடும்ப நிலத்தில் கிடைத்த கல்வெட்டு தொடர்பான தகவலுடன் தொடங்கும் இந்நூல், திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி […]

Read more

சிறகுகள் விரித்திடு

சிறகுகள் விரித்திடு (கவிதையும் கதையும்), அ.அமல்ராஜ், விஜயா பதிப்பகம், பக்.248, விலை ரூ.200. ஒருவரின் ஆளுமை, அறிவாற்றலை மேம்படுத்துவதில் கதைகளின் பங்களிப்பு இன்றியமையாதது. அதேபோன்று சமூகப் பொறுப்பு மிக்க கவிதைகள் படிப்பவரின் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எளிமையாகப் புனையப்பட்ட நூறு இனிய கதைகளையும், அதைச் சார்ந்த அர்த்தமுள்ள நூறு கதைகளையும் சுமந்து வந்திருக்கிறது “சிறகுகள் விரித்திடு’ நூல். இதில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதைகளும் மற்றும் கவிதைகளும் நம்மை புதிய பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றன. குறிப்பாக, “முடியும் என்றால் முடியும்’, […]

Read more

பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி

பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி, கு.அன்பழகன், காவ்யா, பக்.368, விலை ரூ.370. அடிமை இந்தியாவில், ஒற்றுமையின்றி பல்வேறு பாளையங்களாகச் சிதறிக்கிடந்த நெல்லைச் சீமையில், பூலித்தேவன் அரசாண்ட நெல்கட்டும் செவ்வல் மட்டுமே கப்பம் கட்டாமல் ஆங்கிலேயரை துணிவுடன் எதிர்த்தன. பூலித்தேவனின் படைக்குத் தலைமைத் தளபதியாக விளங்கியதோடு மட்டுமல்லாது, அவருக்கு வலது கரமாகவும் விளங்கிய வெண்ணிக் காலாடியின் வீர தீரத்தையும் அவர்தம் அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்றையும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. சாதிய உணர்வுகள் தலைதூக்காமல், தாய்நாட்டின் விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு, பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்கள் வெண்ணிக் காலாடியின் […]

Read more

நூறு புராணங்களின் வாசல்

நூறு புராணங்களின் வாசல், முபீன் சாதிகா, நன்னூல் பதிப்பகம், பக்.128, விலை ரூ.130. நூலாசிரியர் தனது முகநூலில் அவ்வப்போது எழுதி வந்த குறுங்கதைகளின் தொகுப்பு இந்த நூல். மொத்தம் நூறு கதைகள் உள்ளன. ஃபிளாஷ் ஃபிக்ஷன் அல்லது மைக்ரோ ஃபிக்ஷன் என்று கூறப்படும் வகையைச் சார்ந்தவை. ஈசாப்பின் நீதிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஜென் கதைகள் போன்ற வடிவத்தில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகளில் யதார்த்தம் போன்ற அம்சங்களுடன் அதீத கற்பனையும் கலந்து தரப்பட்டிருக்கிறது. உதாரணமாக, 3333-ஆம் ஆண்டில் நவீன மனிதர்கள் தனி கிரகத்தில் […]

Read more

கடவுளின் நாற்காலி

கடவுளின் நாற்காலி, அதியமான் கார்த்திக், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.200, விலை ரூ.220.   இயற்கையுடன் முரண்பட்டு பூமிப் பந்தின் வளங்களை சுய லாபத்துக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது, வேற்று கிரகங்களையும் ஆளத்துடிக்கும் பெருங்கோ பாண்டியன் என்பவரைத் தடுத்து நிறுத்தி, பாரம்பரியத்தையும் இயற்கை வளங்களையும் கேசவன் என்பவர் காப்பாற்றுகிறார். தமிழகத்தின் குக்கிராமத்தில் தொடங்கி நாகாலாந்து வழியே தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரம் வரை பயணிக்கிறது “கடவுளின் நாற்காலி’. வருடந்தோறும் சைபீரியாவிலிருந்து லட்சக்கணக்கில் நாகாலாந்துக்கு வலசை வரும் ஆமூர் பால்கன் பறவைகளை அங்குள்ள நாகா பழங்குடிகள், கிராமவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும் […]

Read more
1 5 6 7 8 9 180