உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழனிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. யாருக்கு பிடிக்காது மழை? மழைக்கு பிடிக்காதவர்கள் யார்? காதல் மழை, காதல் கவிதைகள் படிப்பது சுவாரசியமானது. மாலை நேர மெல்லிய மழையில் நனைவதற்கு இணையானது. பழனிபாரதியின் இந்த கவிதை தொகுப்பும் அதுபோன்றதே. தொகுப்பு முழுக்க காதல் கவிதைகள் மட்டுமே இருந்தாலும் உள்ளங்கையில் பொத்தி வைத்திருந்த மின்மினிப் பூச்சி, நம்மை அறியாமல் விரல் இடுக்குகளில் இருந்து நழுவுவதைப்போல், படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக அபூர்வா, உயிர்த்துளை, உன்னதம், உச்சிப்பூக்கள், இரவு, அதன்பிறகு, […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 80ரூ. வாழ்வில் ஒருமுறையாவது ஒரு கவிதையாவது ஒரு மனிதன் எழுதிவிட வேண்டும். அப்போதுதான் அசலான மனிதனாக அவன் அவனை உணரும் தருணம் வரும் என்பார் கவிஞர் கந்தர்வன். அவர் சொன்ன அந்த அபூர்வ கணங்களை, உன் மீதமர்ந்த பறவை என்ற தமது கவிதைத் தொகுப்பில் காட்சியாகவும் சாட்சியாகவும் மாற்றியுள்ளார் கவிஞர் பழநிபாரதி. முன்னுரை என்பது ஒரு கோபுரத்தின் நுழைவாயிலைப் போன்றது. அது வசீகரிக்க வேண்டும். பிரம்மாண்டத்தின் ஒரு துளி ருசியை […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-0.html கவிஞனின் ஆழ்மன அனுபவங்கள் சொற்களாக மாறும்போது கவிதைகள் பிறக்கின்றன. அவை அனுபவத்தை தொடர, உணர, பழநிபாதியின் இந்த கவிதைத் தொகுப்பை படிப்போர் உணரலாம். தொடர முடியாத நிழலைத் தொட வைக்கிறார். பார்க்க முடியாத உயிரைப் பார்க்க வைக்கிறார். வாசம் நுகர முடிகிற கவிதையின் ஆழத்திற்குள் செல்ல உவமை, படிமம் என்ற துணையை அனுப்புகிறார். பெண் என்ற கண்ணாடியைப் பார்த்து […]

Read more

உன் மீதமர்ந்த பறவை

உன் மீதமர்ந்த பறவை, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. பறவைகளாக்கும் கவிதைகள் பழநிபாரதியின் கவிதைகளும் பாடல்களும் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. உன் மீதமர்ந்த பறவை என்னும் அவரது இந்தத் தொகுப்பில் இயற்கையும் காதலும் இயற்கை மீதான காதலும்  வாஞ்சையுடன் வெளிப்பட்டு கவிதை அனுபவத்தை அர்த்தப்படுத்துகின்றன. மென்மையான உணர்வுகளைச் சொற்களின் வார்ப்பிலிட்டுக் கவிதைகளாய்க் கவனப்படுத்தியுள்ளார் பழநிபாரதி. ஏ.பி. ஸ்ரீதரின் ஓவியங்களும் பழநிபாரதியின் கவிதைகளும் கொண்ட இந்தத் தொகுப்பு மெல்லிய காதலை விரும்புபவர்களுக்கும் இயற்கை நேசர்களுக்கும் விருந்தளிப்பவை. இளம் வெயில், கூந்தல், கூழாங்கற்கள், […]

Read more