அறிந்த பாரதம் அறியாத கதைகள், ஒளி உண்போர் (பாகம் 1), வளர்த்த கடா (பாகம் 2)

அறிந்த பாரதம் அறியாத கதைகள், ஒளி உண்போர் (பாகம் 1), வளர்த்த கடா (பாகம் 2), ஸ்ரீ வ. ந. கோபால தேசிகாசாரியார், அட்சுரா பதிப்பகம், சென்னை, பக். 152, 144, விலை 130ரூ, 130ரூ. மகாபாரதம் பிரதான கதை பலரால் எழுதப்பட்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆனால் மகாபாரதத்துடன் தொடர்புடைய ஏராளமான கிளைக் கதைகள் அதிக அளவு வெளிவரவில்லை. அத்தகைய பல்வேறு கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தௌம்பயர்- ஆருணி, தௌம்யர் – உபமன்யு சம்பவங்கள் குருபக்திக்கான உதாரணமாக விளங்குகின்றன. பொறாமை கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக […]

Read more

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும்

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும் (நெய்தல் – 2014), பதிப்பாசிரியர்கள் சு. சதாசிவம், க. கௌசல்யாதேவி, மு. இராசேந்திரன், ஞா. சுஜாதா, க. பூபதி, இல. தங்கராஜ், செம்மூதாய் பதிப்பகம், பக். 556, விலை 400ரூ. பன்னாட்டுக் கருத்தரங்கம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பல ஊர்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் ஆய்வு மாணவர்களும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் கலந்துகொண்டு, தமிழிலக்கியவகைமைகள் தொடர்பான வாழ்வியல் சிந்தனைகளை வழங்கியுள்ளனர். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் எதைச் சொல்வது? எதை விடுவது? பா. சம்பத்குமாரின் ‘பெண்மையைப் போற்றும் சங்க இலக்கியம்’ தொடங்கி, க. சதாசிவத்தின் […]

Read more

சிந்தனைக் களஞ்சியம்

சிந்தனைக் களஞ்சியம், உ. நீலன், அருள் பதிப்பகம், பக். 248, விலை 130ரூ. தான் படித்து, பார்த்து, பழகிய செய்திகளை எல்லாம் தொகுத்து இந்த நூலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். நம் நாட்டுத் தலைவர்கள் மகாத்மா காந்தியடிகள் முதல் எம்.ஜி.ஆர். வரையும், வெளிநாட்டு சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி, உலகின் தலைசிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன், உலகப் புகழ் பெற்ற தத்துவஞானி ஓஷோ வரை அனைவரைப் பற்றியும் நாம் அறிந்திராத பல விஷயங்களை இந்நூலின் மூலம் நாம் அறியலாம். உதாரணமாக, சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவரான முகமது அலி […]

Read more

துளு நாட்டு வரலாறு

துளு நாட்டு வரலாறு, மயிலை சீனி. வேங்கடசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 108, விலை 75ரூ. பண்டைய தமிழக வரலாற்றைப் போலவே துளு நாட்டு வரலாறும் சங்க இலக்கியங்கள் மூலம் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. தற்போதைய தென் கன்னடத்தை துளு நாடாகக் காட்ட நூலாசிரியர் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியப் பாடல்களின் சான்றுகள் இப்போதும் மிகவும் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன. துளு நாட்டின் பெயரை மாமூலனார் தனது பாடலில் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டும் நூலாசிரியர், அதைப் பல பாடல்களின் மூலம் உறுதிப்படுத்துகிறார். […]

Read more

மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108

மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108, ந. சண்முகம், நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 208, விலை 100ரூ. காந்தியடிகளின் வாழ்க்கை சம்பவங்களை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவும் நூல். கல்கி இதழில் இதுவரை மகாத்மா காந்தி தவிர, எந்த மனிதரது இறப்பின் புகைப்படமும் பிரசுரமாகவில்லை. கல்கியில் காந்தியின் மரணப்புகைப்படம் மட்டும் ஏன் அச்சிடப்பட்டது என்பதற்கான காரணம் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆவணச் செய்தி. ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் புத்தகத்தைப் படித்தது, காந்தியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சென்னையில் காந்திஜியின் முதல் […]

Read more

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள்

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 204, விலை 175ரூ. ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் போன்ற சமயாச்சாரியார்களில் தொடங்கி, தேவார மூவர், மணிவாசகர், பன்னிரு ஆழ்வார்கள், தியாகராஜர் முதலான மும்மூர்த்திகள், தமிழிசை மூவர், தாயுமானவர், அருணகிரிநாதர், பட்டினத்தார், திருமூலர் போன்ற 43 அருளாளர்கள் பிறந்த காலம், அவர்களின் தீவிரமான தெய்வ பக்தி, வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், சுருக்கமான வரலாறு, அவர்கள் இயற்றிய நூல்கள் போன்றவை இந்நூலில் சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றோடு நின்றுவிடாமல், அவர்கள் இயற்றிய […]

Read more

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், சேவியர், தோழமை வெளியீடு, சென்னை, பக். 184, விலை 150ரூ. மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் பிறந்ததிலிருந்து கல்வி கற்றது, நாடக உலகில் புகுந்தது, திரையுலகில் சாதித்தது என அவரது வரலாறு சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது. பாலசந்தர் எடுத்த குறிபிடத்தக்க திருப்புமுனைத் திரைப்படங்கள், அவர் அறிமுகப்படுத்தி உயரத்துக்குச் சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த், நாசர், சரத்பாபு, சரிதா, விவேக் போன்ற நட்சத்திரங்கள், அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி சாதனைகள் புரிந்த வசந்த், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி, செல்வராகவன் […]

Read more

திருவெம்பாவை திருப்பாவை உரையும் ஓவியங்களும்

திருவெம்பாவை திருப்பாவை உரையும் ஓவியங்களும், குமாரதேவர் பதிப்பகம், கோயம்புத்தூர், பக். 120, விலை 200ரூ. சங்க இலக்கியத்தில், கன்னிப் பெண்கள் நீர்த்துறையில் நீராடி, நமக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டி இறைவனைக் குறித்து நோன்பு நோற்று வழிபாடு நடத்தியதை தை நீராடல், மார்கழி நீராடல், பாவை நோன்பு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன. இதை பரிபாடல் கலித்தொகை, ஐங்குறுநூறு முதலிய சங்க நூல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. சங்ககாலம் தொட்டு இன்றுவரை இப்பாவை நோன்பு பலராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாணிக்கவாசகரும் ஆண்டாள் நாச்சியாரும் அருளிச்செய்த திருவெம்பாவை, திருப்பாவை ஆகிய […]

Read more

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும்

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும், சாந்தா வரதராஜன், சாந்தா வரதராஜன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 250ரூ. விநாயகர் அவதார மகிமை, பிள்ளையார் புராணம் பற்றிய தகவல்கள், விநாயகர் உருவம் உணர்த்தும் தத்துவம், தோப்புகரணம், தலையில் குட்டிக்கொள்ளலின் அர்த்தங்கள் ஆகியவை இந்நூலில் விவரமாகத் தரப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சதுர்த்தி விரதம் மற்றும் விநாயகர் விரதங்களின் பலன்கள், விநாயகர் விரும்பும் வன்னி இலை மற்றும் அறுகம்புல்லின் மகத்துவம், விநாயகரை அர்ச்சிக்க உதவும் இலைகளின் பெயர்கள், காணாபத்யம் எனப்படும் கணபதி வழிபாட்டில் செய்யப்படும் ஹோமங்கள், […]

Read more

கற்றாழை

கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 438, விலை 335ரூ. மதுப்பழக்கத்தினால் வாழ்க்கை சீரழிந்த ஒரு பெண், தன்னுடைய மகளுக்கும் அதுபோன்ற வாழ்க்கை அமைந்துவிடக்கூடாது என்று போராடுவதே இந்நாவல். படிக்க விரும்பியும் படிக்க இயலாமல் போன ஒரு பெண்ணின் ஆதங்கத்தையும், இளம் பருவத்தில் அவளுக்கு நேர்ந்த கொடுமைகளையும் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதன் மூலம் பெண் சுதந்திரத்திற்கான போராட்டங்களுக்குதோள் கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர். எந்தவிதமான வறட்சியிலும் துவண்டு போகாமல் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வாழும் கற்றாழை போன்றதுதான் பெண்களின் […]

Read more
1 126 127 128 129 130 180