இதிகாசங்களில் போர்க்களங்கள்

இதிகாசங்களில் போர்க்களங்கள், எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, பக். 304, விலை 250ரூ. இராமாயண, மகாபாரத போர்க்களக் காட்சிகளை கம்பனுடைய பாடல்களிலிருந்தும், வில்லிப்புத்தூர் ஆழ்வாரின் பாடல்களிலிருந்தும் மிகவும் சுவைபட வர்ணித்திருக்கிறார் நூலாசிரியர். இராமனுடன் 70 வெள்ளம், ராவணனுடன் ஆயிரம் வெள்ளம் படையும் இருந்தது என்று கூறி வெள்ளத்தின் எண்ணிக்கையை விவரிக்கும் போது உண்மையிலேயே மூச்சு முட்டுகிறது. இந்திரஜித் நிகும்பலை யாகம் செய்யும் இடத்துக்குள் லட்சுமணன் செல்வதைச் சொல்லும் பாடலில் மாவாளிகள் என்ற சொல்லை வெவ்வேறு பொருள்பட 4 இடங்களில் கம்பர் பயன்படுத்தியிருப்பது […]

Read more

நெப்போலியன்

நெப்போலியன் சாமானியன் சக்கரவர்த்தியான சாதனைச் சரித்திரம், எஸ்.எல். வி. மூர்த்தி, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 416, விலை 300ரூ. நெப்போலியனைப் பற்றிய ஏராளமான புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும், அவருடைய முழு பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வருவதாக அமைந்துள்ளது இந்நூல். பிரான்ஸின் காலனியான கார்ஸிகா என்னும் குட்டித் தீவில் பிறந்து, வறுமைச் சூழலில் அரசு நிதியுதவியோடு ராணுவப் பள்ளியில் சேர்ந்து, இரண்டு ஆண்டு படிப்பை ஓராண்டிலேயே படித்து முடித்து, 16ஆவது வயதில் லெஃடினெட், 24ஆவது வயதில் ராணுவப் படைத்தளபதி, பிரிகேடியர் ஜெனரல் என தனது கடின […]

Read more

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே, திருநாவுக்கரசு, அட்சரா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 140ரூ. வாழ்க்கை என்பது வரம். அதை நாம் அனுபவித்து வாழவேண்டுமே தவிர, ஒரு சில தோல்விகள் காரணமாக நாம் அதை இழந்துவிடக் கூடாது. முக்கியமாக தற்கொலை எண்ணம் கூடவே கூடாது என ஆணித்தரமாக நூலாசிரியர் விளக்குகிறார். ஒவ்வொர் வயதையும் நாம் கடக்கும்போது நம் மனதும் உடலும் பல்வேறு உளவியல் சிக்கல்களையும், மாறுதல்களையும் கையோடு கொண்டுவரும். அப்போது ஏற்படும் மன மாற்றங்களின் காரணமாக ஒரு சிலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். […]

Read more

பொலிவியன் டைரி

பொலிவியன் டைரி, எர்னெஸ்டோ சே குவாரா, தமிழில் என். ராமச்சந்திரன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 350, விலை 220ரூ. லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் மக்களை அடிமைத்தளையில் இருந்து மீட்க எர்னெஸ்டோ சே குவாராவும், அவரது தோழர்களும் புரட்சிப் போராட்டம் நடத்தினர். புரட்சிப் போராட்டக் களத்தின் தினசரி நிகழ்வுகளை சே குவாரா பதிவு செய்துள்ளார். அது நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சே குவாரா என்ற தனியொரு மனதின் மறைந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இன்றும் உலகம் முழுவதும் இளைய தலைமுறையினர் மத்தியில் […]

Read more

உன்னால் கடக்க முடியும்

உன்னால் கடக்க முடியும், ஓஷோ, தமிழில் வனமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 376, விலை 200ரூ. இருபதாம் நூற்றாண்டு சிந்தனையாளர்களுள் ஓஷோ ரஜனீஷுக்கு முக்கியமான இடம் உண்டு. பாரத ஞானப் பின்புலத்தில் மேற்கத்திய நாடுகளில் அவர் நிகழ்த்திய பிரசங்கங்கள் பல இப்போது தொடர்ந்து நூல் வடிவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு பக்தர்களிடையே ஓஷோ உரையாடியதன் சில பகுதிகள் தொகுக்கப்பட்டு ஏற்கெனவே விஸ்டம் ஆப் தி சேண்ட் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தது. அதுவே எளிய நடையில் மொழி பெயர்க்கப்பட்டு உன்னால் கடக்க […]

Read more

உலகக் காப்பியங்கள்

உலகக் காப்பியங்கள், இரா. காசிராசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 484, விலை 360ரூ. கற்பனை வளம், சிந்தனைத் திறன், சுவை உணர்வு, இலக்கிய நயம் ஆகியவை மிக்க ஓர் உன்னதப் படைப்புதான் காப்பியம். மனித சமுதாயமும், மனித வாழ்க்கையுமே இதன் அடிப்படை. உலக மொழிகளில் இலக்கியப் படைப்பு எவ்வாறு வளம் பெற்றுப் பொலிந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டும் நோக்கில் இந்நூல் அமைந்துள்ளது. தமிழ்க் காப்பிய ஆய்வாளர்களுக்கு ஒப்பீட்டு முறையில், உலகக் காப்பியங்களைத் தொகுத்து அளிக்கும் முயற்சியாக இந்நூல் உள்ளது. காப்பியத்தின் […]

Read more

காசி இராமேசுவரம்

காசி இராமேசுவரம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 599, விலை 420ரூ. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் மிகப்பெரிய பாலமான காசியும் இராமேசுவரமும் மிகப் பழமையான புண்ணிய திருத்தலங்கள் மட்டுமல்ல, அவை நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாகவும் திகழ்பவை. இவருடைய படைப்புகளின் வியக்கவைக்கும் தனித்தன்மை என்னவென்றால், அவர் எழுத எடுத்துக்கொள்ளும் பொருளின் மேல் அவருக்கிருக்கும் ஆதிக்கம். அவரது பரந்த விரிந்த அறிவு வேட்கை நூல்களின் தலைப்புகளைப் பார்த்தாலே பிரமிக்க வைத்துவிடும். எடுத்தது எப்பொருளாயினும் அப்பொருளின் நுணுக்கங்களையும் விழுமியங்களையும், ஒன்றுவிடாது ஆழ்ந்து ஆராய்ந்து தக்க […]

Read more

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, (அடித்தட்டுக் கண்ணோட்டத்தில் சமய நல்லுறவு உரையாடல்), ஆங்கில மூலம் ஆ. அலங்காரம், தமிழில் அ. அந்தோனி குருசு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  சென்னை, விலை 180ரூ. அனைத்து சமயங்களிலும் உள்ள சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வுகளை கொடுமைகளைப் போக்க சமயங்களின் மூலமாகவே என்ன செய்ய வேண்டும்? என்று ஆராயும் நூல். விவேகானந்தர் தன்னுடைய சீடர்களிடம், ஏழைகளுக்கும் துன்புறுவோர்களுக்கும் பணி செய்வதே உங்கள் தொழில். அதில் சாதி அல்லது நிறவேறுபாடு பார்க்கவும் கூடாது என்று கூறியிருப்பது […]

Read more

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும், இரா. பன்னிருகை வடிவேலன், தமிழாய்வு மன்றம், பக். 104, விலை 100ரூ. பழந்தமிழ் இலக்கிய, இலக்கண, நிகண்டு நூல்கள், அவை தொடர்பான ஆய்வுகள் போன்றவை தற்போது பெருமளவில் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவுகிறதோ இல்லையோ, பழந்தமிழ் நூல்கள் அழிந்துவிடாமல் அவற்றைப் புதுப்பொலிவுடன் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும் உதவுகின்றன என்பது முற்றிலும் உண்மை. அந்த வரிசையில் பலரும் அறியாத ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, நிரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு ஆகிய நிகண்டு நூல்கள் […]

Read more

இந்தியாவும் ஈழத்தமிழரும்

இந்தியாவும் ஈழத்தமிழரும் (அவலங்களின் அத்தியாயங்கள்), நிராஜ் டேவிட், தோழமை வெளியீடு, சென்னை, பக். 320, விலை 250ரூ. இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையை முடிவுக்குக் கொண்டு வரவும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தனி நாடு கோரும் அமைப்பினரை ஒடுக்கவும் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டதுதான் இந்திய அமைதிப் படை (ஐ.பி.கே.எஃப்.). இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 1987 முதல் 1990 வரை இந்திய அமைதிப் படை இலங்கையில் தங்கியிருக்க வேண்டும் என இந்தியா, இலங்கையிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளை அடக்கி, […]

Read more
1 124 125 126 127 128 180