திருப்பல்லாண்டு வ்யாக்யானம்

பரமகாருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த ‘திருப்பல்லாண்டு வ்யாக்யானம்‘, தொகுப்பாசிரியர் அ. கிருஷ்ணமாச்சார்யர், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 155. நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு பெரியவாச் சான்பிள்ளை வியாக்யானம் அருளிச் செய்துள்ளார். அதில் உள்ள திருப்பல்லாண்டுக்கான வ்யாக்யானம் மட்டும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்’ என்று, முதல்பாட்டு தொடங்குகிறது. இப்பாடலுக்கு பதவுரை, அவதாரிகை, வ்யாக்யானம் என ஒவ்வொன்றும் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை. உச்சரிக்கும் சொல்லுக்குள்ள அர்த்தபேதங்களையும் (பொருள் வேறுபாடு) தனியாக எடுத்துரைக்கின்றார். இப்படியாக பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம்… […]

Read more

பாரதிதாசன் காதல் ஓவியங்கள்

பாரதிதாசன் காதல் ஓவியங்கள், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 100ரூ. உலகில் ஒவ்வோர் உயிரும் காதலின்றி வாழ்வதில்லை. காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடவில்லை என்றால் அவன் கவிஞனே இல்லை” என்பார்கள். ‘காதல் என்பது உயிர் இயற்கை’ என்று கூறும் பாவேந்தர் பாரதிதாசன், தனிப்பாடல்களிலும், கதைப்பாடல்களிலும், காப்பியங்களிலும் ஆண்-பெண்களிடையே இருந்து வரும் தூய அன்பை-காதலை பல கோணங்களில் வர்ணிக்கிறார். புரட்சிக் கவிஞர் என்ற பெயரை பெற்ற அவர், காதலிலும் புரட்சி செய்தவர். விதவையர் காதலுக்கும், சாதி மதம் கடந்த […]

Read more

சமயாதீதம்

சமயாதீதம்(அறு சமய விளக்க உரை), ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 80ரூ. இந்தியாவில் கன்னியாகுமரி முதல் இமயம் வரை பரந்து விரிந்துள்ள சமயங்கள் சைவமும் வைணவமும் ஆகும். மனித இன சிந்தனையும் வாழ்க்கை அமைப்பு முறையும் வளர வளர இவ்விரண்டு சமயங்கள் அறுவகைசமயங்களாக விரிந்து விளங்கலாயிற்று. அதைப் பற்றிய விளக்கமே இந்நூல். சவுரம், சைவம், சாந்தேயம், வைணவம், காணபத்திய, கவுமாரம் ஆகியவை ஆறு சமயங்களாகும். சவுர சமயம் சூரியனையும், சைவ சமயம் சிவபிரானையும், சாந்தேய சமயம் சக்தியையும், காணபத்திய சமயம் கணபதியையும், கவுமார சமயம் […]

Read more

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள்

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள், எஸ். ஜெகத் ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 200, விலை 130ரூ. தேசியக் கவிஞர் தாகூரின் சிந்தனைகளில் இருந்து மணிமணியானவற்றை பொறுக்கி எடுத்து தொகுத்துள்ள நூல். படிக்க சுவாரஸ்யம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- நமது சங்கீத வித்துவான்கள், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. எம்.எஸ். சுப்புலட்சுமி, ஜி.என். பாலசுப்பிரமணியம், டி.கே. பட்டம்மாள், அரியகுடி ராமானுஜ அய்யங்கார், வீணை எஸ். பாலசந்தர், என்.சி. வசந்தகோகிலம், எம்.எம். தண்டபாணி தேசிகர் உள்பட 17 சங்கீத வித்துவான்கள் […]

Read more

தாயுமான சுவாமிகள் பாடல் உரை

தாயுமான சுவாமிகள் பாடல் உரை, பதிப்பாசிரியர் சு. இலம்போதரன், முல்லை நிலையம், விலை 450ரூ. இந்திய தத்துவ ஞான மரபில் தாயுமான சுவாமிகளுக்கென்று தனியிடம் உண்டு. தாயுமானவர் ஒரு ஞானக்கடல். அதில் தத்துவ முத்துக்களும், தரங்குறையா பவழங்களும் நிரம்ப உண்டு. அத்தகைய தாயுமான சுவாமிகளின் பாடல்களை அரிய பழைய உரையுடன் க. இலம்போதரன் தொகுத்துள்ளார். “கல் எறியப் பாசி கலைந்து நன்னீர் காணும், நல்லோர் சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே” என்று எளிய உவமையைக் கூறி தாயுமானவர் நம்மைத் தெளிவுபடுத்துகிறார். மலரின் […]

Read more

ஆமுக்த மால்யத

சூடிக்கொடுத்தவள் (ஆமுக்த மால்யத), டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், விலை 200ரூ. தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் இருப்பதைப் போன்று தெலுங்கிலும் ஐம்பெரும் காப்பியங்கள் இருக்கின்றன. மனுசரித்ரம், வசுசரித்ரம், ஆமுக்த மால்யத, பாரிஜாதாபகர்ணம், ச்ருங்கார நைஷதம் ஆகிய ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ‘ஆமுக்த மால்யத.’ இந்த நூல், ஆண்டாளின் அவதாரத்தை மட்டும் சொல்லவில்லை. இப்பெருமாட்டியை வளர்த்த விஷ்ணுசித்தர் எனப்படும் பெரியாழ்வாரின் சரித்திரத்தைத் தெளிவாகச் சொல்வதும் ஆகும். அதனால் விஷ்ணுசித்தீயம், ஆமுக்த மால்யத ஆகிய இரு காப்பியங்கள் இணைந்த பெருங்காப்பியம் என்று இதனைக் குறிப்பிடலாம். […]

Read more

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள்

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 130ரூ. எக்காலத்தும் தனிப்பெருமையுடன் மேலோங்கி நிற்கும் இலக்கிய சிற்பிகளில் முதன்மையாக நிற்பவர் ரவிந்திரநாத் தாகூர். அவர்தம் படைப்புகள் ஓராயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சமயம், கல்வி, அரசியல், இலக்கியம் பற்றிய கட்டுரைகள் ஏராளம். அவற்றிலிருந்து தெரிந்து எடுக்கப்பட்ட சிந்தனை வரிகளின் தொகுப்பு நூல். தாகூரின்பால் ஈடுபாடு கொண்ட டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவரது படைப்புகள் ஒவ்வொன்றையும் படித்து இன்புற்றார். அவ்வாறு படித்ததில் பிடித்த முத்தான சத்தான வரிகளை அவ்வப்போது […]

Read more

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!, எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, பக். 264, விலை 200ரூ. புதுவை கம்பன் கழன பொன்விழா கருத்தரங்கில் நூலாசிரியர் பேசியதன் தொகுப்பே இந்நூல். கம்பரின் இராமாவதாரக் காவியத்தின் சிறப்புக்குக் காரணம், அவர்தொட்ட இடமெல்லாம் ஆழ்வார் அமுதப் பாசுரங்களையும் மிக நேர்த்தியாக காவியத்தில் கலந்துகொடுத்ததால்தான் என்பதை நிறுவும் நூல். ஆழ்வார்கள் தேனும் பாலும் நெய்யும் அமுதமும் கலந்து பாடிய அருட்பாசுரங்களை இராமாவதாரக் காவியத்துள் கலந்து கவிச்சக்கரவர்த்தி பாடியிருப்பதால்தான் அமுதத்தைவிட பன்மடங்கு சுவையாக இராமாயணக் காவியம் தித்திக்கிறது என்பது நூலாசிரியரின் […]

Read more

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்

கம்பரின் நூலகம் ஆழ்வார்கள், நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 200ரூ. வால்மீகி எழுதிய ராமாயணத்தில், ராமனை ஒரு மாவீரனாகத்தான் சித்தரிக்கிறார். திருமாலின் அவதாரம் என்று கூறவில்லை. ராமனை திருமாலின் அவதாரம் என்று எழுதியவர் கம்பர்தான். கம்பராமாயணத்தில், பலஇடங்களில் அடியெடுத்துக் கொடுத்தவர்கள் ஆழ்வார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்கூறுகிறார் நயவுரைநம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சன். கம்பராமாயணத்தின் சுவையான பல பகுதிகளை எடுத்துக்கூறி, அவற்றுக்கு அழகிய நடையில் பொருள் கூறுகிறார் ஜெகத்ரட்சகன். எனவே நூலைப் படித்து முடிக்கும்போது, கம்பராமாயணத்தையே படித்து முடித்த […]

Read more

சமயாதீதம்

சமயாதீதம் (அறுசமய விளக்க உரை), எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 120, விலை 80ரூ. ஆதிசங்கரரின் ஆறு சமயங்களை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விரிவாக, பாக்களாக பாடியுள்ளார். அந்த பாக்கள் சிலவற்றின் விளக்க உரையாக இந்த நூல் வெளிவந்துள்ளது. சவுரம் உள்ளிட்ட ஆறு சமயங்களுடன், குருவை சேர்த்து, சமயாதீதம் காண்கிறார் சுவாமிகள். நாகப்பாம்பின் குட்டிகள் முதலில் சூரியனிடமிருந்தே விஷம் பெறுகின்றன என்றும் (பக். 21), உருத்திரன் தேவர்கள் பட்ட துயரம் சகியாமல் கண்ணீர் விட்டதாகவும், அந்நீர் மண்ணில் விழுந்து, மரமாகி, காயாக, […]

Read more
1 2