முப்பத்தி நாலாவது கதவு

முப்பத்தி நாலாவது கதவு, தமிழில் புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. அழகாக மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மற்றும் அயல்நாட்டு எழுத்தாளர்களின் 13 சிறுகதைகளின் தொகுப்பு. இதில் இரு பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் உலகத் தரமானவை. முதலாவதாக, மலையாள எழுத்தாளர் சீதா இரண்யனின், திருக்கச்சூர் எக்ஸ்பிரஸில் இடாலோ கால்வினோ. வேலையில்லாத, மணமாகாத, கனவுலகவாசி பேருந்தில் செல்லும்போது, அவன் அருகே அமரும் இளம் பெண் அவன் மீது தூங்கி விழுவதை அவன் உடன்பாடாகக் கருதி எல்லை மீறுவதும், தப்பியோடுவதும் கதை. மிகை இல்லாமல், […]

Read more

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி

கலை இலக்கிய வரலாற்று மஞ்சரி, மு. ஸ்ரீனிவாஸன், சேகர் பதிப்பகம், பக். 440, விலை 350ரூ. மூத்த தமிழ் எழுத்தாளரான மு. ஸ்ரீனிவாஸன், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதி வருபவர். இவருடைய கட்டுரைகள், கதைகள், கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ள இந்த மஞ்சரி, பிறர் கவனத்துக்கு வராத பல அம்சங்களை எளிய நடையில் வாசகர்களிடம் சேர்க்கிறது. அறிவியல் தமிழ் எழுத்தாளரான பெ.நா. அப்புசுவாமியின் கடிதங்கள் குறித்த கட்டுரையில் அவரது மேதைமையும் தன்னடக்கமும் வெளிப்படுகின்றன. சிறையில் தவம் என்ற கட்டுரை, பர்மாவின் மாண்டலே சிறையில் […]

Read more

நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்

நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், தனி நாயக அடிகள், தமிழில் க. பூரணச்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 204, விலை 150ரூ. ஓர் இன மக்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் நிர்ணயிப்பதில் நிலவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த மண்ணில் தோன்றுகின்ற கவிதை உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் அந்த மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன. இதற்கு தமிழ் மண்ணும் தமிழ்க் கவிதைகளும் விதிவிலக்கல்ல. எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகியவை தமிழ் மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை மட்டுமின்றி, அன்றைய சுற்றுச்சுசூழல் […]

Read more

செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உரைகள்

செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள், உரைகள், பதிப்பாசிரியர் இராம. குருநாதன், முதல் தொகுதி பக். 416, விலை 275ரூ., இரண்டாம் தொகுதி விழிகள் பதிப்பகம், பக். 416, விலை 275ரூ. தருமை ஆதினத்தினத்தின் மூலம் செந்தமிழ் காவலர் என்ற பட்டம் பெற்ற சிதம்பரநாத செட்டியார், மாணவர் பருவத்திலேயே தான் பயின்ற கல்லூரியில், ஆகிலத்திலேயே எழுதப்பட்டு வந்த அறிக்கைகளைக் கண்டித்து, பல எதிர்ப்புகளையும் தாண்டி தமிழில் எழுதி, மாணவர்களிடையே தமிழ் உணர்வை வளர்த்தவர். பிராங்க்ளின் கெல், ஜி.யு.போப், நினைவு தங்கப் பதக்கங்களைப் […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், சென்னை, பக். 256, விலை 220ரூ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 65 திரைப்படங்களை இயக்கி வெற்றிகரமான திரை ஆளுமையாளகத் திகழ்ந்தவர் ஏ.சி. திருலோகசந்தர். அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளவாறு பதிவு செய்துள்ள புத்தகமே நெஞ்சம் நிறைந்த நினைவுகள். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.சி. திருலோகசந்தர் இந்தப் புத்தகத்தையும் அவருடைய படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போன்றே அழகுற ஆவணப்படுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், ஏவி. […]

Read more

தூக்கு மர நிழலில்

தூக்கு மர நிழலில், சி.ஏ. பாலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 156, விலை 120ரூ. பொதுவுடமை சித்தாந்தத்தை உடல், பொருள், ஆவியாகக் கருதிய உண்மையான கம்பூனிஸத் தோழர்களில் சி.ஏ. பாலனும் ஒருவர். மக்கள் நலனுக்காக 15 ஆண்டு, 9 மாதம், 21 நாள்கள் சிறைக் கொட்டடியில் தன் வாழ்நாளைக் கழித்து, மரணத்தின் வாசல் வரை சென்று உயிரோடு மீண்டு வந்த அவரின் நீண்ட, நெடிய மிகக்கொடுமையான சிறை அனுபவமே தூக்கு மர நிழலில். இது 1976இல் புத்தகமாக வெளியானது. […]

Read more

என் வழி தனி வழி சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை

என் வழி தனி வழி சச்சின் டெண்டுகல் சுயசரிதை, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 545, விலை 495ரூ. உலகின் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் 22 கெஜ நீள ஆடுகளத்தில் 24 ஆண்டுகளாக கோலோச்சிய சச்சினைப் பற்றி, ரசிகர்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவை எல்லாம் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் சின்னப் பயலே வீட்டிற்குச் சென்று பால் குடித்து விட்டு வா என்று சியால்கோட் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஏந்தியிருந்த வாசகம் உண்டாக்கிய அசௌகரியம், ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் […]

Read more

இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும்

இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 328, விலை 245ரூ. இந்திய மாநிலங்கள், மக்கள் இறை நம்பிக்கை, வணங்கப்படும் தெய்வங்கள், விரதங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், மாறுபட்ட வழிமுறைகள், மாநில வாரியாகக் கொண்டாடப்படும் விழாக்கள் அவற்றின் தாத்பரியங்களை அழகாக விளக்குகிறது இந்நூல். பொதுவாக காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை, அந்தந்த மாநிலங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த விழாக்களுக்கான புராண நிகழ்வுகளும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராஜஸ்தான் மேவாரில் கொண்டாடப்படும் டீஜ் விழா, பார்வதி தேவிக்கானது. இதைத் திருமணமான பெண்கள் […]

Read more

உள்ளத்திறப்பு

உள்ளத்திறப்பு, பெரணமல்லூர் சேகரன், பக். 154, விலை 100ரூ. 22 சிறுகதைகளடங்கிய சிறுகதைத் தொகுப்பு. அரசியல் களத்தில் மக்களை முட்டாளாக்க நினைக்கு அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும் ஓட்டு, வாசகர்கள் மனதில் சிகரமாக உயர்ந்து நிற்கும் எழுத்தாளரின் நிஜத்தை அறிந்தபோது மண்குதிரை ஆகிப்போன மாயமும், கடனை வாங்கி அல்லல்பட்டு வீட்டைக் கட்டினால் இல்லத்திறப்பு விழாவுக்கு வரும் சொந்த பந்தங்கள் சுலபமாக விமர்சனம் செய்துவிட்டு போகும் உள்ளத்திறப்பு, பெண்களின் நிலையையும், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்களையும், வலிகளையும் சொல்லும் மீறல், கிணற்றுத் தவளைகளை வானத்துப் […]

Read more

மக்கள் கண்ட மகான்கள்

மக்கள் கண்ட மகான்கள், எம்.எஸ். பிந்துமாதவன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. பாரதத்தில் தோன்றிய வேத மகரிஷிகள், தெய்விக புருஷர்கள், மகான்கள், சாதுக்கள் போன்றோரின் வாழ்க்கை நெறி, இறைவனிடம் மகான்கள் கொண்ட பக்தியின் பெருமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது இந்நூல். இதில் கபீர் தாசர், துளசி தாசர், புரந்தர தாசர், ஸ்ரீ ராகவேந்திரர், மீரா பாய், சக்கு பாய் ஆகிய 31 மகான்களின் ஆன்மிக சரித்திரம் அடங்கியுள்ளது. பத்து வயது சிறுமியான சக்கு பாய் தோழியருடன் மணல் வீடு கட்டி விளையாடுகிறாள். […]

Read more
1 122 123 124 125 126 180