எங்கெங்கு காணினும் அறிவியல்

எங்கெங்கு காணினும் அறிவியல், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 128, விலை 60ரூ. நாற்பது அறிவியல் தகவல்களை உள்ளடக்கிய தொகுப்பு இந்நூல். புதுப்புது அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள், சுவாரசியமான தகவல்கள். ஜாவாத் துவில் கி.பி. 1891 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய இனத்தை அடையாளம் காட்டுகிறதாம். இதனை பித்திக்காந்த்ரோப்பஸ் எரக்டஸ் என்கின்றனர் மானிடவியலாளர். ஜாவா மனிதனும், பீப்கிங் மனிதனும் ஒரே மரபுடையவர்கள். இவ்வினத்தினை இன்றைய மங்கோலாய்டு என்று கூறலாம் என்ற தகவல்களை இந்திய […]

Read more

கிரவுஞ்சப் பட்சிகள்

கிரவுஞ்சப் பட்சிகள், கன்னட மூலம் வைதேகி, தமிழில் ஜெயந்தி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 136, விலை 110ரூ. புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான வைதேகி எழுதிய 10 சிறுகதைகளின் தொகுப்பு.இச்சிறுகதைகள் எல்லாவற்றிலும் விதவிதமான மனிதர்களைச் சந்திக்க முடிகிறது. வாழ்க்கை மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிட்டிருக்கிறது, எத்தகைய மனோபாவங்களுடன் அலைய விட்டிருக்கிறது என்பதை இத்தொகுப்பில்  உள்ள சிறுகதைகளைப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம். பல ஆண்டுகள் வாழந்து ஒருவர் பெறும் வாழ்க்கை அனுபவங்களை இக்கதைகளைப் படிப்பதன் மூலம் ஒருவர் பெற முடியும். உட்கார இடம் கிடைக்குமா? என்று கேட்கும் […]

Read more

எழில் மரம்

எழில் மரம், ஜேம்ஸ் டூலி, தமிழில் லியோ ஜோசப், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, பக். 414, விலை 360ரூ. இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் கல்வி தனியார்மயமாகி வரும் வேளையில் அதை நியாயப்படுத்தும் விதமாக வெளிவந்திருக்கும் நூல். உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகளைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட நூலாசிரியர், ஏழைக் குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பான கல்வியைக் கற்றுத் தருகின்றன என்கிறார். ஏழை மக்கள் தங்களுடைய முன்னேற்றத்துக்கு அரசாங்கத்தைச் சாந்திராமல், சுய உதவியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். சுய உதவிப் […]

Read more

தாயுமான சுவாமிகள் பாடல் அரிய பழைய உரை

தாயுமான சுவாமிகள் பாடல் அரிய பழைய உரை, பதிப்பாசிரியர் சு. இலம்போதரன், முல்லை நிலையம், சென்னை, பக். 656, விலை 450ரூ. தாயுமானவரை ஒரு தத்துவ ஞானி, தத்துவ வித்து, ஞானக்கடல், சித்தர் என்றெல்லாம் கூறுவர். அந்த அளவிற்கு அவருடைய பாடல்களில் தத்தவம், சைவ சித்தாந்தம், சித்தர் இலக்கியம் போன்றவை ஆழமாகப் பதிவாகியுள்ளன. அவர் விராலிமலைச் சித்தர்களுடன் நெருங்கிப் பழகியவர். இல்லறத்தானாக இருந்து பின்னர் துறவறம் பூண்டவர். திருவருள் விலாசப் பரசிவ வணக்கம், பொருள் வணக்கம், கருணாகரக் கடவுள், பரிபூரணானந்தம், சின்மயானந்த குரு பதிகம், […]

Read more

கௌடலீயம் பொருணூல்

கௌடலீயம் பொருணூல் (அர்த்த சாஸ்திரம் முதல் பகுதி), மொழிபெயர்ப்பாளர் மு. கதிரேசச் செட்டியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 664, விலை 400ரூ. ஆட்சியியல் என்ற மையக் கருத்தின் அடிப்படையில், ராஜதந்திரி என்று அழைக்கப்படும் கௌடில்யரால் உருவாக்கப்பட்ட இந்நூல், அன்றைய இந்தியாவிலிருந்து பலதுறைசார் அறிவியலையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அன்றைய இந்தியாவின் சிறந்த பகுதிகளை மட்டுமன்றி இருண்ட பக்கங்களையும் அறிய உதவுகிறது. அர்த்த சாஸ்திரத்தின் முதல் பகுதியான இந்நூலில் அரசியல், தொழிற்தலைவர் செயன்முறை, ஒற்றாடல், உழவிலா நிலத்தைப் பயனுற அமைத்தல், கடன் கோடல், தண்டக் […]

Read more

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும்

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும், க. சிவாஜி, அலைகள் வெளியீட்டகம், பக். 312, விலை 200ரூ. நாட்டின் கிராமப்புற முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றி வரும் கூட்டுறவு இயக்கம் குறித்தும், தமிழ்நாட்டில் அவ்வியகத்தின் முன்னோடிகளான பிட்டி தியாகராயர், எல்.கே. துளசிராம், டி.ஏ. இராமலிங்கம் செட்டியார், பி.டி.இராசன், வே.வ. இராமசாமி, மேடை தளவாய் குமாரசாமி முதலியார் பி.எஸ். குமாரசாமி ராஜா, டாக்டர் பி. நடேசன், கே.ஏ. நாச்சியப்ப கவுண்டர், எம்.பி. நாச்சிமுத்து, பி.எஸ். இராஜகோபால் நாயுடு, கே.எஸ். சுப்ரமணியக் கவுண்டர் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்பு, பணிகளை […]

Read more

ஆசிரியர்களே அச்சாணிகள்

ஆசிரியர்களே அச்சாணிகள், தொகுப்பாசிரியர் சுவாமி வி. மூர்த்தானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக். 216, விலை 75ரூ. நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவர்கள் மாணவர்கள். அந்த மாணவர்களை உருவாக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள். சிறந்த மாணவர்களை உருவாக்க ஆசிரியர் என்ன செய்ய வேண்டும் என்பதை மிக எளிமையாகக் கூறும் நூல். உண்மையான கல்வி எது? என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. கல்வி – சமூகம் – ஆசிரியர் – மாணவர் தொடர்பான 36 கட்டுரைகளை பல்துறை அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர். பிள்ளைகளை எவ்வளவு வேண்டுமானாலும் கண்டிக்கலாம், ஆனால் தண்டிக்கவே கூடாது. […]

Read more

விமர்சனப் புயல்

விமர்சனப் புயல், க. நா. சு. இராம. இலக்குவன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 272, விலை 200ரூ. நூலாசிரியர் முனைவர் பட்டம் பெற க.நா.க.வின் திறனாய்வுப் பணிகள் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்வே இந்த நூல். வணிக, கலை இகழ் படைப்பாளிகளின் உள்ளங்களை அசைத்தும், அதிரவும் வைத்த க.நா.சு. தரமான புதினங்கள் இவை என சுட்டிக்காட்டியதுடன் தரமற்றவற்றைக் கடுமையாக விமர்சித்து உலகத் தரம் நோக்கி நம் எழுத்தாளர்கள் கவனம் செல்ல வேண்டும் என்றும் உரைத்தவர். சிறந்த முதல் தரச் சிறுகதையாளர் […]

Read more

சமுதாய வரலாற்றுச் சுருக்கம்

சமுதாய வரலாற்றுச் சுருக்கம், தி.கே. மித்ரோபோல்ஸ்கி, தமிழில் கார்த்தி, ப. விருத்தகிரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 518, விலை 350ரூ. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற மரபீனீ அறிவியலில் தொடங்கி, மனதின் எவ்வாறு குழுக்களாகச் செயல்பட்டான், எவ்வாறு மனிதனை மனிதன் அடிமையாக்கினான், உழைப்புச் சுரண்டல், நிலப்பிரபுத்துவமுறை, தொழில்புரட்சி, முதலாளித்துவம் என பன்முகத் தன்மை கொண்ட சமூக வளர்ச்சியை கால வரிசைப்படி விளக்கிச் செல்கிறது இந்நூல். இது முழுக்க முழுக்க பொதுவுடைமைவாதியின் பார்வையில் முன் வைக்கப்படும் வரலாறு என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. […]

Read more

வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள்

வினைகள் அகற்றும் விசேஷ தலங்கள், எடையூர் சிவமதி, வானவில் புத்தகாலயம், சென்னை, பக். 304, விலை 222ரூ. புகழ்பெற்ற திருக்கோயில்கள் பற்றி அவற்றின் தொன்மை, ஆன்மிகச் சிறப்பு, வரலாறு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆன்மிகக் களஞ்சியமாக அமைந்துள்ளது இந்த நூல். சித்தர்களின் ராஜ்யமான சதுரகிரி மலையின் தெய்வங்கள், கல்விக் கடவுளான கூத்தனூர் சரஸ்வதி ஆலய தரிசனம், துவாரகையில் உள்ள கிருஷ்ணன் கோயில், பேட் துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணர் தம் மனைவியரோடு வசித்த வீடுகள் பற்றிய செய்திகள் அபூர்வமானவை. அமெரிக்கா, பிட்ஸ்பெர்க் நகரில் அமைந்துள்ள […]

Read more
1 121 122 123 124 125 180