தில்லை என்னும் திருத்தலம்

தில்லை என்னும் திருத்தலம், சந்திரிகா சுப்ரமண்யன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 110ரூ. நடராஜரின் திருவுருவம் மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கியது என்பார்கள். நடராஜ பெருமானுக்கு முக்கியத்தும் தரும் தில்லை திருக்கோயில் வெளிப்படுத்தும் தத்துவமே சிதம்பர ரகசியம். பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை, காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி, நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயங்கள், ஒரே நேர்கோட்டில் சரியாக,  79 பாகை, 41 கலை கிழக்கில் தீர்க்க ரேகையில் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டி, இது பொறியியல், புவியியல், வானவியலின் உச்சகட்ட அதிசயம் என்று எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். […]

Read more

நிஜமாகா நிழல்கள்

நிஜமாகா நிழல்கள், கோ. சந்திரசேகரன், தரணிஷ் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ. நூலாசிரியர் சந்தித்த மனிதர்கள், நண்பர்கள், உறவினர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டும் அவர்தம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக் கருவாகக் கொண்டும், எழுதிய பத்துக் கதைகளின் தொகுப்பே இந்நூல். இந்தப் பத்துக்கதைகளும் முத்து முத்தான வெவ்வேறு கதைக் கருக்களைக் கொண்டிருப்பது இனிமையான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொள்ள வேண்டும் என்ற சாமானிய மனிதனின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் நிஜமாகா நிழல்கள். எதிலுமே […]

Read more

யுரேகா கோர்ட்

யுரேகா கோர்ட், இரா. நடராசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 158, விலை 150ரூ. 2014ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் இலக்கியத்துக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இரா. நடராசனின் சிறந்த படைப்பு. தொழில்நுட்ப வசதிகள் பெருகியதால் குழந்தைகளுக்கும் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில், அவர்களைப் படிக்க வைப்பதற்காக அறிவியலையும், செயல்விளக்கங்களையும் பயன்படுத்தியிருக்கும் உத்தி மிகவும் பிரமாதம். அவர்களைப் புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதாக அமைந்துள்ள எழுத்து நடை, இந்நூலின் தனிச்சிறப்பு. கதைகளின் ஊடே அறிவியல் தகவல்களைப் […]

Read more

தொட்டிக் கட்டி வீடு

தொட்டிக் கட்டி வீடு, இரா. வடிவேலன், கௌதம் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 95ரூ. கொங்குநாடு என்றழைக்கப்படும் தமிழகத்தின் மேற்குப் பகுதியான கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கிராம மக்களின் கலாசாரம், பண்பாடு, உறவுமுறை, சமுதாய அமைப்பு போன்றவற்றை கதையின் களமாக வைத்து இந்த நாவலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். ஈரோடு அருகே உள்ள கவுண்டம்பாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் கவுண்டர் இன மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது இந்த நாவல். கொங்கு வட்டார வழக்கில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் வசிக்கும் வீடுகளின் […]

Read more

பஞ்ச நாராயண கோட்டம்

பஞ்ச நாராயண கோட்டம், காலச்சக்கரம் நரசிம்மா, வானதி பதிப்பகம், பக். 720, விலை 300ரூ. சமண சமயத்தின் கேந்திரமான ஹொய்சாள சாம்ராஜ்யம், வைணவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, அங்கு அழகு வாய்ந்த பஞ்ச நாராயண கோட்டங்கள் உருவாக்கப்பட்டதை கோவையாகச் சித்திரிக்கிறது இந்த நாவல். குலோத்துங்க சோழனின் சைவ வேட்கைக்கு அடிபணியாது, வைணவ ஆச்சார்யார் ராமானுஜர், திருவரங்கத்திலிருந்து ஹொய்சாளத்தில் அடைக்கலம் புகுந்தார். அங்கு சமண மன்னரான பிட்டி தேவனின் மகளான வசந்திகாவைப் பிடித்திருந்த பேயை விரட்டி நோயை விரட்டியதால், வைணவத்தைத் தழுவினான் பிட்டிதேவன். தனது பெயரையும் விஷ்ணுவர்த்தனன் என […]

Read more

திரௌபதி

திரௌபதி, யார்லகட்ட லக்ஷ்மிபிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி, பக். 368, விலை 200ரூ. பாரதத்தின் மாபெரும் இதிகாசமான மகாபாரதம் வெறும் கதையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்வையும், அப்போது நிலவிய அதிகாரப் போட்டியையும் வெளிப்படுத்தும் ஆவணம். மகாபாரதம், காலந்தோறும் புதிய வடிவில் மீள்பார்வைக்கும் மறுவாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வெளியாகியுள்ள புதினமே இந்நூல். நூலாசிரியர் யார்லகட்ட லக்ஷ்மிப்ரசாத் மகாபாரக் கதையின் மைய நாயகியான திரௌபதியை ஆதார விசையாகக் கொண்டு இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார். திரௌபதியின் […]

Read more

கதை கதையாம் காரணமாம்

கதை கதையாம் காரணமாம், பவளசங்கர், மெட்ராஸ் பழனியப்பா பிரதர்ஸ், பக். 144, விலை 105ரூ. உணவு சேகரிக்கும் வேலையைச் செய்ய மறுத்தது ஓர் எறும்புக்கூட்டம். வேலை செய்யும் நாள்களுக்கு மட்டுமே உணவு என்று சட்டமேற்படுத்தியது ராணி எறும்பு. குளிர்காலம மழைக்காலம வந்து வெளியில் செல்ல முடியாமல் எறும்புகளை முடக்கிப் போட்டது. வேலை செய்ய மறுத்த எறும்புக்கூட்டம் பசியால் வாட்டமுற்றது. சேமிப்பின் அவசியத்தை உணர்த்தி மன்பிபையும் அளித்த ராணி எறும்பின் தலைமைப் பண்பு சிறு துளி பெரு வெள்ளம் கதையின் அற்புதமான சாராம்சமாகும். கண்தானம் பற்றிய […]

Read more

ஆமுக்த மால்யத

ஆமுக்த மால்யத (சூடிக்கொடுத்தவள்), தமிழில் எளிய உரை எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம் வெளியீடு, சென்னை, பக். 352, விலை 200ரூ. தெலுங்கு மொழியின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான ஆமுக்த மால்யத கிருஷ்ணதேவராயரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது. விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரும் யமுனாச்சாரியரான ஆளவந்தாரும் விஷ்ணுவே பரம்பொருள் என்று உலகிற்கு உணர்த்தி வாழ்ந்துகாட்டியவர்கள். அவ்விருவரது வாழ்க்கையின் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள், கோதையாகிய ஆண்டாளின் பிறப்பும் ஸ்ரீமந் நாராயணனுடன் இணைந்த அவைளது வாழ்வு, மற்றும் கிளைக்கதைகளுடன் சுவைபடச் சொல்லியிருக்கிறார் கிருஷ்ண தேவராயர். இந்தக் காப்பியத்தை […]

Read more

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே, வி. நடராஜன், சாந்தா பப்ளிஷிர்ஸ், சென்னை, பக். 336, விலை 200ரூ. குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை எப்படி வளர்க்க வேண்டும்? என்று வழிகாட்டும் நூல். குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்கு அவர்களுக்கு சிறந்த சூழ்நிலை அமைய வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் பெற்றோரே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வளரும் காலத்தில் தன்னுடன் பிறந்தவர்களுடன் குழந்தைகள் சண்டை போடுவார்கள். சாப்பிட மாட்டார்கள். எந்தப் பொருளையும் உடைத்துவிடுவார்கள். சில குழந்தைகள் பிற குழந்தைகளுடன் நன்றாகப் பழக மாட்டார்கள். பெரியவர்களின் கவனத்தைத் […]

Read more

மதுரா

மதுரா, சின்மயன், வைஷ்ணவி பதிப்பகம், சென்னை, பக். 332, விலை 200ரூ. கராத்தே உடலையும் உள்ளத்தையும் தூண்மைப்படுத்தும் உத்தமமான கலை என்பதை இந்தக் கதையின் கதாநாயகன் கண்ணன் என்ற கதாபாத்திரம் மூலம் அற்புதமாக விவரித்துள்ளார் நூலாசிரியர். நாட்டியத் தாரகை மதுரா, கராத்தே வீரர் கண்ணன் இடையே உருவாகும் நட்பை, காமம் கலக்காத காதலுடன்… மிகவும் கண்ணியமான முறையில் நகர்த்தும் விதம் சிறப்பு. மதுராவுக்கு பரத நாட்டியம் பெரும் புகழை ஈட்டித் தரும் அதே வேளையில், ஆபத்தையும் அதே அளவுக்கு வாரி வழங்குகிறது. மதுராவை வில்லன்கள் […]

Read more
1 120 121 122 123 124 180