ராமாநுஜர்

ராமாநுஜர், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், பக்.176, விலை ரூ.160. ராமாநுஜரின் வாழ்க்கை, சிந்தனை, ஆற்றிய அரும் பணிகள் ஆகியவற்றை எளிமையான முறையில் மக்களுக்குக் கொண்டு செல்லும்வகையில் நாடக வடிவத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை போன்று, தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் எப்படி நமக்குச் சம காலத்தவராய் ;இருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்நாடகத்தின் நோக்கமாகஇருக்கிறது. ராமாநுஜர் ஜாதி வேறுபாட்டை ஒழிக்கும் வகையில், வைணவம் அனைவருக்கும் உரித்தானது என்று அறிவித்தார். சமூக விளிம்பிலிருந்த பஞ்சமர்களையும் வைணவர்களாக்கி அவர்களைத் திருக்குலத்தார் என்றழைத்தார் என்று முன்னுரையில் […]

Read more

ஒழுக்கம்

ஒழுக்கம், அரங்க.இராமலிங்கம், வானதி பதிப்பகம், பக்.192, விலை ரூ.120. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றியவர் நூலாசிரியர். தமிழிலக்கியங்கள் குறித்து அவர் எழுதிய ‘ஒழுக்கம்‘ தமிழ் கற்பித்தலில் ஆசிரியர் பங்கு ‘ஒளவையார்‘ ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி‘ உள்ளிட்ட எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழிலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளாக இவை இருப்பினும், பழந்தமிழ் இலக்கிய கருத்துகளை சம கால சிந்தனையுடன் பொருத்திப் பார்ப்பது வியக்க வைக்கிறது. உதாரணமாக, பழங்காலத்தில் ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் தொடர்பற்று இருந்ததால், அந்தந்தப் பகுதிக்கேயுரிய ஒழுக்கநெறிமுறைகள் இருந்தன. இன்று உலக மக்கள் அனைவரும்வாழ்க்கைத் தேவை […]

Read more

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

வீழ்வேன் என்று நினைத்தாயோ?, மாலன், கவிதா பப்ளிகேஷன், பக்.128, விலை ரூ.100. பத்திரிகையாளர், விமர்சகர், இலக்கியவாதி என பன்முகத் தன்மை கொண்ட மாலன் "தினமணிகதிரில் தொடராக எழுதியபோதே பெருவாரியான வாசகர்களால் மிகவும் ;நேசித்து வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற மாலன் சிங்கப்பூரில் தங்கியிருந்து இந்தநூலை எழுதியதாக நூலின் முகப்புரையில் குறிப்பிட்டிருந்தாலும், அவருக்கும் சிங்கப்பூருக்குமான தொடர்பு என்பது இதயத்திலிருந்து எழுத்து வழியாகவே வெளிப்பட்டிருப்பதை நூல் வெளிப்படுத்துகிறது/ நூலில் இடம் பெற்ற 20 கட்டுரைகளும், தலைப்பு முதல் […]

Read more

தமிழக வரலாற்றில் பெரம்பலூர்

தமிழக வரலாற்றில் பெரம்பலூர்,  ஜெயபால் இரத்தினம், விச்சி பதிப்பகம், பக்.572, விலை ரூ.700.  255, பெரம்பலூர் வட்டாரத்தின் வரலாற்றைச் சொல்லும் இந்நூலில், முதலில் பெரம்பலூர் பகுதியின் நிலவியலமைப்பு விவரிக்கப்படுகிறது. பழைய கற்காலத்திலேயே பெரம்பலூர் வட்டாரத்தில் மக்கள் பரவி வாழத் தொடங்கிவிட்டதையும், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்படைக் காலங்களில் ஊர்கள் உருவாகிவிட்டதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. சங்க காலத்தில் இவ்வட்டார நிலப்பரப்பில் விச்சி, கண்டீரம் மற்றும் பிடவூர் ஆகிய மூன்று குறுநில அரசுகள் அமைந்திருந்தன, எஞ்சியுள்ள பகுதிகள் மலையநாட்டின் ஒரு பகுதியாகவும், சோழ நாட்டின் ஒரு […]

Read more

ஆப்பிளுக்கு முன்

ஆப்பிளுக்கு முன், சி.சரவணகார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், பக்.168, விலை ரூ.170, பிரம்மச்சரியம் பற்றிய காந்தியின் சிந்தனைகள் வித்தியாசமானவை. அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பிறகும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாதவை. காந்தி தனது பிரம்மச்சரியத்தைப் பரிசோதிப்பதற்காக இரவில் தூங்கும்போது பெண்களுடன் நிர்வாணமாகப் படுத்திருந்தார் என்பதன் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. காந்தியின் இறுதிக் காலத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் பேத்தி முறையுள்ள மநு என்கிற இளம் பெண். காந்தி தனது பிரம்மச்சரியப் பரிசோதனையை அவரை வைத்துத் தொடர்ந்தபோது, காந்தியின் ஆசிரமத்தில் இதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. காந்தியின் […]

Read more

தமிழாய்வு: புதிய கோணங்கள்

தமிழாய்வு: புதிய கோணங்கள், அ.பாண்டுரங்கன், யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.240, விலை ரூ.200. தமிழாய்வுக்கென்று மரபு வழிப்பட்ட சில நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் இந்நூலிலுள்ள கட்டுரைகள், தமிழாய்வைப் புதிய கோணத்தில் பார்த்திருப்பதுடன், தமிழாய்வு குறித்து, மரபுவழிப் பேராசிரியர்கள் உருவாக்கியுள்ள பிம்பங்களை உடைத்திருக்கிறது. தமிழ் உரைநடை பாடத்திட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியம் பற்றிய சிந்தனைக்கு இடமில்லை. அது லிட்ரரி கிரிட்டிசிஸம் என்ற பெயரில் போதிக்கப்படுகிறது. அதைக் கற்பிக்கும் பேராசிரியர்கள் ஆங்கில நூல்களை அடியொற்றியே இலக்கியத் திறன், இலக்கிய மரபு என்னும் அடிப்படையில் கற்பிப்பதால், இலக்கிய விமரிசனம் […]

Read more

பகவான் புத்தர்

பகவான் புத்தர், தர்மானந்த கோஸம்பி, தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ, சாகித்திய அகாதெமி, பக்.334, விலை ரூ.270. பகவான் புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். தர்மானந்த கோஸம்பி எனும் பாலி மொழி அறிஞர் மராட்டி மொழியில் எழுதியதன் தமிழாக்கம்.பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் அந்தக் காலத்து அரசியல் நிலை, சமயநிலை, ஆன்மவாதம், கர்ம யோகம், சாதிப் பிரிவினை போன்ற தலைப்புகளில் அக்காலத்திய சமூகச் சூழல் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தர் குறித்து இதுவரை கூறப்பட்டு வரும் பல செய்திகள் தவறானவை என்பதை இந்நூலைப் படிக்கும்போது அறிய […]

Read more

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை,  தற்காலக் கன்னடச் சிறுகதைகள்

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை,  தற்காலக் கன்னடச் சிறுகதைகள், தொகுப்பும் மொழியாக்கமும்: கே.நல்லதம்பி, எதிர் வெளியீடு, பக்.200, விலை ரூ.200. கன்னடத்தில் வெளிவந்த 12 சமகாலச் சிறுகதைகளின் தொகுப்பு. உலகமயச் சூழலில் வாழ்க்கைமுறையில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை கலை இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன. அமெரிக்காவின் நேவடா மாநிலத்தில் பரத்தமைத் தொழில், நவீனத் தொழில்களுக்குரிய நிர்வாக உத்திகளுடன் நடைபெறுவதைச் சொல்கிறது தொழில் சிறுகதை. போனதலைமுறையில் குடும்பத்தில் தந்தை ஆழமாக உள்ளோடும் அன்போடும், இறுகிய வெளித்தோற்ற முகத்துடனும் அதிகாரம் செலுத்தியதைச் சித்திரிக்கிறது சிரத்தை சிறுகதை. அளவுக்கதிகமான காம உணர்வுடைய […]

Read more

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும்

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும், ச.இராமமூர்த்தி, லாவண்யா பதிப்பகம், பக்.160, விலை ரூ.150. பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழரின் வாழ்க்கை, சிந்தனை, இயற்கைச் சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றைப் பற்றிய அரிய விஷயங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அகநானூறு, நற்றிணை, பொருநராற்றுப்படை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் யாளி என்று கூறப்படுவது சிங்க முகம் கொண்ட கொடிய விலங்கு; 1800 ஆம் ஆண்டிற்குப் பிறகே அறிவியல் அணு பற்றிக் கூறத்தொடங்கியது. ஆனால் அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு […]

Read more

பாரதி உள்ளம்

பாரதி உள்ளம்,  வி.ச.வாசுதேவன், சந்தியா பதிப்பகம், பக். 144, விலை ரூ.135. தமிழின் மகாகவியான பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகளானாலும் அவரது படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் அவரது கவித்துவம் நிரம்பிய தூய உள்ளம். அவருடைய உள்ளத்தில் அன்பு, கடவுள் பக்தி, நகைச்சுவை உணர்வு, தாய்ப்பாசம் போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கியிருந்தன. அவற்றைப் பற்றி எழுதியுள்ளார் முதுபெரும் பாரதி அன்பரான வி.ச. வாசுதேவன். பாரதியாரைப் பற்றிய பல்வேறு தகவல்கள், அவரது குரு பரம்பரை, அவரது பழக்க வழக்கங்கள், நண்பர்கள் என்று பல விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறது […]

Read more
1 58 59 60 61 62 180