நூலிலிருந்து… – நாகா

நூலிலிருந்து… – நாகா, ஸ்ருதி பதிப்பகம், பக்.288, விலை 200ரூ. நூல்களுடன் நட்புக் கொண்டு அவற்றுடன் நீண்டகாலமாக பழகிவரும் நாகா என்ற நாகசந்திரன், தனது அனுபவங்களையும், தான் படித்த நூல்களையும் பற்றியும், தன்னைக் கவர்ந்த ஆளுமைகள் குறித்தும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொண்டவற்றின் தொகுப்புதான் இந்நூல். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டவுடன் களமிறங்கி போக்குவரத்தைச் சீர்படுத்திய தொழிலதிபரைச் சந்தித்த அனுபவம், விபத்தில் சிக்கியவர்களை உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது, சிக்னல் நெரிசலில் தானம் செய்வதைப் பற்றிய நூலாசிரியரின் கருத்து, அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்று சாலை விதிகளை […]

Read more

மூளை என்னும் மூலவர்

மூளை என்னும் மூலவர்,  பக்கவாதத்தையும் வெல்லலாம், அ.வேணி, சிவாவேணி பதிப்பகம், பக்.224, விலை ரூ.220. பக்கவாதம் என்றால் என்ன? அந்நோய் வருவதற்கான காரணங்கள் எவை? பக்கவாத நோய்க்கான அறிகுறிகள் எவை? பக்கவாத நோய் வராமல் தடுக்க, எதை உண்ண வேண்டும்? என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? குழந்தைகளுக்குப் பக்கவாதம் வருமா? பெண்கள் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பது ஏன்? சுவாசிக்கும் காற்று, சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகள் ஆகியவற்றால் பக்கவாதம் வருமா? பாரம்பரியத்தால் பக்கவாதம் வருமா? குடிப்பழக்கத்திற்கும், புகைப்பழக்கத்திற்கும் பக்கவாதத்திற்கும் தொடர்புகள் உள்ளதா? பக்கவாதம் வந்துவிட்டால் […]

Read more

மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்

மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள், தமிழில்: என்.ஸ்ரீநிவாசன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.216, விலை ரூ.180. கி.பி.121 இல் ரோமாபுரியில் பிறந்தவர் மார்கஸ் அரேலியஸ். கி.பி.161 – இல் மன்னரானார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் ராஜாஜியால் ஆத்ம சிந்தனைகள் என்ற பெயரிலும், பொ.திரிகூடசுந்தரத்தால் இதய உணர்ச்சி என்கிற பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஏற்கெனவே வெளி வந்திருக்கிறது. உலக வாழ்க்கை, மனித சிந்தனை, பிரபஞ்ச இயக்கம் ஆகியவை குறித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர் வெளியிட்ட கருத்துகள் பல, […]

Read more

பெளத்தத்தின் மூவர் நெறி

பெளத்தத்தின் மூவர் நெறி,  வெ.வேதவல்லி, பூம்புகார் பதிப்பகம்,  பக்.508, விலை ரூ.390. ஆசிய ஜோதியாக விளங்கிய புத்த பெருமானையும், அசோக சக்கரவர்த்தியையும் , மணிமேகலையையும் அணிசேர்க்கும்விதமாக எளிய நடையில் ஆசிரியரால் இயற்றப்பட்டுள்ள நூல் இது. பெளத்த மதத்தின் கொள்கைகளையும், போதனைகளையும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் புத்தபெருமானின் அருள் சிறப்பும், அசோகரின் வரலாற்றுப் பெருமைகளும், மணிமேகலையின் தூய வாழ்க்கைச் சிறப்பும் நயமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கதைநாயகனும், அருள் நெறியருமான புத்தபெருமானின் வாழ்க்கையில் தொடங்கி, அவர்தம் அறநெறி கருத்துகளையும், கொள்கைகளையும் எளிய நடையில் விரிவாக ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். […]

Read more

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்

மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்,  இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலைரூ.125. சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மணிவாசகரின் திருக்கோவையாரில் இடம் பெற்ற மீண்டாரென உவந்தேன் என்ற பாடலையும், அதன் பொருளையும் விளக்கும் தூண்டா விளக்கனையாய் என்ற கட்டுரையில் தொடங்கி, இறைவனின் இன்பமான இடபத்தை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் பெருமையைக் கூறும் இன்ப ஊர்தி என்ற கட்டுரை ஈறாக இருபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நூலாசிரியர் மேடையில் பேசியவை, தினமணியிலும் வேறு சிறப்பு மலர்களிலும் எழுதியவைகட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் சைவத்தின் […]

Read more

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6, ஈரோடு தமிழன்பன், தொகுப்பாசிரியர்: வ.ஜெயதேவன், பூம்புகார் பதிப்பகம், பக்.872, விலை ரூ.750. புகழ்பெற்ற தமிழ்க்கவிஞரான ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்து இருக்கின்றன. இது ஆறாவது தொகுதி. இத்தொகுதியில் கவிஞரின் 14 கவிதைத் தொகுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. கவிதையின் பேசு பொருள்களும், அவற்றின் வெளிப்பாடுகளும் ஒவ்வொரு கவிதையிலும் மாறுபட்டும், புதியனவாகவும் இருக்கின்றன. இப்போதுதான் புதிதாக எழுதத் தொடங்கும் இளைஞனைப் போல கவிஞர், ஒவ்வொரு கவிதையையும் புதுவிதமாக எழுதிப் பார்க்கிறாரோ என்று இதிலுள்ள கவிதைகள் நம்மை எண்ண […]

Read more

இன்றும் இனிக்கிறது நேற்று

இன்றும் இனிக்கிறது நேற்று,  கவிக்கோ ஞானச்செல்வன், வானதி பதிப்பகம், பக்.216. விலை ரூ.150. இஃது ஒரு தன் வரலாற்று நூல். நூலாசிரியரின் அறுபதாண்டு தமிழ்ப்பணியில் அவருக்கு நேரிட்ட சில நிகழ்வுகளைப் பற்றிய, அவர் சந்தித்த சில மனிதர்களைப் பற்றிய தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று எம்.ஜி.ஆர். கையால் இந்நூலாசிரியர் பொற்பதக்கம் பெற்ற நிகழ்வோடு தொடங்குகிறது இந்நூல். மதுக்கூர் என்ற சிற்றூரில் நடந்த நூலாசிரியரின் திருமணத்திற்கு ம.பொ.சி. நேரில் வந்து வாழ்த்திப் பேசியது, நூலாசிரியர் ஒரத்தநாடு […]

Read more

ஸ்டீவ் ஜாப்ஸ் – ஆப்பிள் பசி

ஸ்டீவ் ஜாப்ஸ் – ஆப்பிள் பசி,  பட்டுக்கோட்டை ராஜா, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்,  பக்.376. விலை ரூ.333. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் இம்மண்ணில் பிறக்கிறார்கள். ஆனால், அவர்களில் வெகு சிலர் மட்டுமே தங்களது அடையாளத்தை அழியாத் தடமாக இங்கு பதித்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களே சாதனையாளர்களாகவும் கொண்டாடப்படுகிறார்கள். அத்தகைய வெற்றியாளர்கள் வரிசையில் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற மனிதருக்கு தனியிடம் உண்டு. அவரைப் பற்றிய சரிதங்களும், வாழ்க்கை நிகழ்வுகளும் பல்வேறு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அதன் நீட்சியாக இப்புத்தகத்தை நூலாசிரியர் படைத்திருக்கிறார். பொதுவாகவே, சரிதங்களை […]

Read more

வையாபுரியாரின் கால ஆராய்ச்சி

வையாபுரியாரின் கால ஆராய்ச்சி, அ.கா.பெருமாள், காவ்யா, பக்.140, விலை ரூ.150. எஸ்.வி.என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆராய்ச்சி அறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆராய்ச்சி உலகில் பலருடைய விமர்சனங்களையும் எதிர்கொண்டவர். அவரைப் பலரும் விமர்சித்ததற்கு திருவள்ளுவர், மாணிக்கவாசகர் குறித்த கால ஆராய்ச்சியே முதன்மையான காரணம் என்றும் சொல்லப்படுகிறது. கண்மூடித்தனமாக முந்தைய மரபை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் தாம் கண்ட ஆராய்ச்சி முடிவுகளை – உண்மைகளைச் சொல்லத் தயங்காதவர் எஸ்.வி. எட்டுத்தொகை நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், நிகண்டுகள், புராணங்கள், இதிகாசங்கள் என எஸ்.வி. செய்த 50க்கும் மேற்பட்ட இலக்கியங்களின் கால […]

Read more

மறுக்கப்படும் மருத்துவம்

மறுக்கப்படும் மருத்துவம்,  தொகுப்பாசிரியர்: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பாரதி புத்தகாலயம், பக்.94, விலை ரூ.30. இந்திய மருத்துவ ஆணைய மசோதா (NMC BILL, 2017) நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கலாகியுள்ளது. 2018 குளிர்கால கூட்டத் தொடரில் இது நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், மருத்துவம் சார்ந்த மாநில அதிகாரங்கள் பறிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், மருத்துவத்தையும், மருத்துவக் கல்லூரியையும் சந்தையிடம் ஒப்படைக்க வழி ஏற்படும் என்றும் இந்நூல் எச்சரிக்கிறது. ஏற்கெனவே உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலின் இடத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதால் ஏற்படக் கூடிய […]

Read more
1 56 57 58 59 60 180