கற்றது விசில் அளவு

கற்றது விசில் அளவு, ஆர்.பாண்டியராஜன், கற்பகம் புத்தகாலயம், பக்.128, விலை ரூ.100. ஒரு திரைப்பட இயக்குநரின் நுட்பம், வாழ்க்கையை அவதானிப்பதுதான். அதை எழுத்திலும் காட்டியுள்ளார் ஆர். பாண்டியராஜன். ஒரு கலைஞன் எப்படி அவரது ரத்த உறவுகளுடன் நம்மையும் சேர்த்துக்கொண்டு நடத்திச் செல்வாரோ, அத்தகைய தமிழ் நடை எல்லாப் பக்கங்களிலும் உள்ளன. சைதாப்பேட்டையில் எளிய குடும்பத்தில் பேருந்து ஓட்டுநரின் மகனாகப் பிறந்து, சிறு வயது முதல் இளமைப் பருவம் வரை வறுமையை, அதனால் வரும் துன்பத்தை இன்பத்தோடு அனுபவித்ததை இவர் சொல்லும் பாங்கு அலாதியானது. பல்வேறு […]

Read more

அப்படியா(ஆன்மிகக் கேள்வி-பதில்)

அப்படியா(ஆன்மிகக் கேள்வி-பதில்),  ஈச நேசன் மகஸ்ரீ, மணிவாசகர் பதிப்பகம், பக்.96, விலை ரூ.75. ஓர் ஆன்மிக மாத இதழில் மாதம்தோறும் வெளியான கேள்வி – பதில்கள் (200) இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சிவன் கோயிலில் சண்டீஸ்வரர் சந்நிதியில் கை தட்டுவது ஏன்? எலும்பிச்சை விளக்கு ஏற்றுவதன் ஐதீகம் என்ன? தெய்வத்தை தினமும் பூஜை செய்தாலும் சோதனை ஏற்படுவது ஏன்? ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா? பூஜைக்குரிய பாத்திரங்களை எந்தெந்த நாள்களில் துலக்க வேண்டும்? ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து […]

Read more

மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்

மரியா மாண்டிசோரியின் மனிதன் உருவாகிறான்,  தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன், முல்லை பதிப்பகம், பக்.136, விலை ரூ.100. மாண்டிசோரி பள்ளிகள் என்றால் நமக்கு சிறுகுழந்தைகளுக்கான பள்ளிகளே நினைவுக்கு வரும். ஆனால் வெளிநாடுகளில் மாண்டிசோரி கல்விமுறையைப் பின்பற்றுகிற கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஹாலந்தில் 5 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பாரிஸில் தனியார் மாண்டிசோரி கல்லூரி உள்ளது. இந்த நூல் மாண்டிசோரி கல்விமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி கற்கும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சொல்லும் இந்நூல், வெறும் வேலைக்கான கல்வி என்பதில் இருந்து […]

Read more

விதுர நீதியில் நிர்வாகம்

விதுர நீதியில் நிர்வாகம்,  நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க் பதிப்பகம், பக்.400, விலை ரூ.325. ஸனாதன தர்மம் அல்லது அறத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்வே உயரியது என்பதை பல்வேறு சூத்திரங்கள் மூலம் எடுத்துரைத்தனர் நம் முன்னோர். இராமாயணமும், மகாபாரதமும் நமக்கு அறவழியை எடுத்துரைக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் சிறப்படைய இவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும். இந்த நூல்களில் கூறப்பட்டிருக்கும் அறிவுரைகளும் கருத்துகளும் காலத்தால் பழைமையான போதிலும் என்றைக்கும் பொருந்தும் என்பதே இதன் சிறப்பு. பழமொழிகளில் நிர்வாகம், நீதி நூல்களில் நிர்வாகம், ஆத்திசூடியில் நிர்வாகம், […]

Read more

பாரதியின் செல்லம்மாள்

பாரதியின் செல்லம்மாள்,சி.வெய்கை முத்து, கற்பகம் புத்தகாலயம், பக்.176, விலை ரூ.150. செல்லம்மாள் பிறந்த கடையத்தில் ஆசிரியராகப் பணியாற்றியபோது கிடைத்த அனுபவம், அங்குள்ள சான்றோர்களிடம் கேட்டறிந்த தகவல் மூலம் இந்தப் படைப்பைத் தந்துள்ளார் நூலாசிரியர். மகாகவியின் வாழ்க்கையில் ஆதார சுருதியாக இருந்தவர் செல்லம்மாள். ஏறத்தாழ 24 ஆண்டுகளே அவர்களுடைய மணவாழ்க்கை. அதிலும் அவர்கள் சில சூழ்நிலை காரணமாக அவ்வப்போது பிரிந்திருந்தார்கள். அவர்கள் சேர்ந்திருந்த காலத்தின் செம்மை பற்றியும், பாரதியின் வாழ்வில் செல்லம்மாள் ஆற்றிய முக்கியமான பங்கை பற்றியும் நூலாசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார். பாரதியின் ஒரு பழக்கம் எப்படி […]

Read more

வள்ளுவப் பொருளியல்

வள்ளுவப் பொருளியல், டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய இலக்கியச் சங்கம், பக். 384, விலை ரூ.200. திருக்குறளைப் பல்வேறு கோணங்களில் அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்நூலிலுள்ள 23 கட்டுரைகளும் வள்ளுவர் கூறும் பொருளியலின் ஆழத்தையும் அகலத்தையும் விரித்துரைக்கிறது. பொருட்பால், அமைச்சியல், நட்பியல், குடியியல், ஆகியவற்றுள் வருகின்ற பல அதிகாரங்கள் அனைவருக்கும் பொதுவானவையாகும். மேலும், புறவாழ்விற்குத் தேவையான பல கருத்துகள் பொருட்பாலில் உள்ளன. உலகப் பொருளியல் வல்லுநரான கார்ல்மார்க்சின் பொருளியல் கோட்பாடுகளோடு திருவள்ளுவரின் பொருளியல் கோட்பாடுகளை ஒப்பீட்டு முறையில் காட்டியிருக்கிறார். திருவள்ளுவர் காலச் சூழலும் […]

Read more

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை,  தொகுப்பு நூல், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, கடந்த ஆண்டின் மிகப் பெரிய சூழலியல் பிரச்சினையாகவும், சமூகப் பிரச்சினையாகவும் தொடங்கி, தற்போதுவரை நீடித்துக்கொண்டிருக்கிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை. இந்த ஆலை குறித்தும் அதன் பின்னணி குறித்தும் விரிவாக அலசுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 —

Read more

இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், சி. மஞ்சுளா , என்.சி.பி.எச். வெளியீடு, விலை 150ரூ. பழங்குடியினரையும் இயற்கை குறித்த அறிவையும் பிரித்துப் பார்க்க முடியாது. தாவரவியல் அறிவை மருத்துவ அறிவாகப் பரிணமிக்கச் செய்த இருளர்களைப் பற்றி ஆய்வுபூர்வமாகப் பேசுகிறது இந்த நூல். சமவெளி இருளர்கள் பற்றி மிகக் குறைவான பதிவுகளே இருக்கும் நிலையில், இப்புத்தகம் முக்கியமானது. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027061.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

தமிழினத்தின் துருவ நட்சத்திரம்

தமிழினத்தின் துருவ நட்சத்திரம், ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 100ரூ. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி பதவியில் ஒவ்வொரு நிலையாக எப்படி கடந்து வந்தார் என்று விவரமாக தரப்பட்டுள்ளது. அத்துடன் அவர், சென்னை மாநகர மேயராகவும்,தமிழகத்தின் துணை முதல்வராகவும் இருந்த சமயங்களில் ஆற்றிய ஆக்கப்பூர்வமான பணிகள் பற்றிய விவரமும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027643.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 […]

Read more

96 தனிப்பெருங்காதல்

96 தனிப்பெருங்காதல், சி.சரவணகார்த்திகேயன், உயிர்மை “ராமாக, ஜானுவாக இருக்க முடியவில்லையே என்ற பெருவலி தான் அதன் செல்வாக்குக்குக் காரணம்…”விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் – 96. சமீபத்தின் வெளியான இந்தப் படம் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் எழுத்தாளர் சி. சரவண கார்த்திகேயன். ராம்களும் ஜானுக்களும் இங்கே இருப்பதால் தான் இப்படம் பெருவெற்றி. அல்லது ராமாக, ஜானுவாக இருக்க முடியவில்லையே என்ற பெருவலி தான் அதன் செல்வாக்குக்குக் காரணம். […]

Read more
1 54 55 56 57 58 180