வாய்மையே வெல்லும்: என் மாற்றுப் பார்வை

வாய்மையே வெல்லும்: என் மாற்றுப் பார்வை,  ப.சிதம்பரம், தமிழில்: ஆர். வெங்கடேஷ், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.300. ஜனநாயகத்தில் விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது. அந்தவகையில் தற்போதைய இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை, பிரச்னைகளை, கொள்கைகளை விமர்சித்து எழுதி வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பொருளாதார ஆளுமையுமான ப. சிதம்பரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 2017-இல் வாரந்தோறும் எழுதிய 53 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி ஜி.எஸ்டி வரை மத்திய பாஜக அரசின் நடவடிக்கை எவ்வளவு தவறானது;அது தனி […]

Read more

பாவை சந்திரனின் நல்ல நிலம் விமர்சனம்

பாவை சந்திரனின் நல்ல நிலம் விமர்சனம்,  கார்த்திகா வாசுதேவன், இந்த நாவலில் பல ஆண்கள் இருக்கிறார்கள், ஆனால், ஆளுமைத் திறன் மிக்கவர்களாகக் காட்டப்படுவது முற்று முழுதாக பெண்கள் மட்டுமே! ஆம், நல்ல நிலத்தை பெண்களே தம் இஷ்டப்படி அவரவர் இயல்புக்கு ஏற்ற வகையில் ஆள்கிறார்கள். அவர்களில் காமு நாயகி என்ற போதும் பிற கதாபாத்திரங்களையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அவரவர் கோணத்தில், அவரவர் நியாயங்களுடன் நாவலுக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றனர்/ கீழைத்தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்துப் பெண் காமாட்சி, அவளுக்கு வரன் தேடி […]

Read more

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு, க. திருத்தணிகாசலம், ரத்னா பதிப்பகம், பக். 576, விலை ரூ. 599. இந்த நூல் 67 கட்டுரைகளைக் கொண்டது. தமிழர் வரலாற்றின் தொடக்கமாக 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பூம்புகாரில் தொடங்கி, 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துசமவெளி, 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிச்சநல்லூர், அண்மையில் அகழாய்வு செய்யப்பட்ட கீழடி வரை ஏராளமான தகவல்களைக் கொட்டியிருக்கிறார் நூலாசிரியர். தகடூர் நாட்டை (தற்போதைய தருமபுரி மாவட்டம்) ஆண்ட அதியமான் மற்றும் அவரது மகன் எழினி ஆகியோரின் பெயர்கள், இங்கிருந்து சென்ற […]

Read more

இரையாகும் இறையாண்மை

இரையாகும் இறையாண்மை (இந்திய – அமெரிக்க ராணுவ உறவுகள் 2014- 2017),  சு.அழகேஸ்வரன், வாஸ்வியா, பக்.56, விலை ரூ.40. நரசிம்மராவ் காலத்திலிருந்து அமெரிக்காவுடனான இந்திய ராணுவ உறவுகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கும் நூல். 1995 இல் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்குப் பின்னர் பா.ஜ.க. அரசு 2001 ஆம் ஆண்டில் போர்த்தந்திரக் கூட்டாளிகள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2005 இல் மன்மோகன் சிங் அரசாங்கம் இந்திய – அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2014 இல் இருந்து நவீன ஆயுத தளவாடங்களை அமெரிக்காவும், […]

Read more

உலோகம் உரைக்கும் கதைகள்

உலோகம் உரைக்கும் கதைகள்,  ஜெ.ஜெயசிம்மன்,டிஸ்கவரி புக் பேலஸ், பக்.160, விலை ரூ.150. சோவியத் ரஷியாவைச் சேர்ந்த வெனெட்ஸ்கி என்பவர் எழுதிய டேல்ஸ் எபவுட் மெட்டல் என்கிற நூலின் தமிழாக்கம் இது. நமது அன்றாட வாழ்வில் பயன்பாட்டில் இருக்கக் கூடிய பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற உலோகங்கள் பற்றியும், நாம் அதிகம் அறிந்திராத இலிதியம், பெரிலியம், நையோபியம், ஜிர்க்கானியம் போன்ற உலோகங்கள் பற்றியும் விரிவாகவும், சுவையாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. பொன்னைப் பற்றிக் கூறும்போது, பொன்னாசையால் பெரும் துன்பத்துக்கு ஆளான மைதாஸ் (மிடாஸ்) கதையைக் […]

Read more

இஸ்மத் சுக்தாய் கதைகள்

இஸ்மத் சுக்தாய் கதைகள்,-தமிழில்: ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக்.496, விலை ரூ.500. உருது இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை விதைத்த பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் படைப்பில் வெளியான 24 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். வறுமையை மட்டுமே வாழ்க்கையில் சொத்தாகக் கிடைக்கப் பெற்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சில பெண்களின் வலிகளும், வேதனைகளும்தான் பெரும்பாலான கதைகளின் கருப்பொருள். முகத்தை திரையிட்டு மறைத்து வாழும் எத்தனையோ பெண்களின் அகத்துக்குள் நடக்கும் அக்னி பிரவேசங்களை எழுத்தினூடே அழுத்தமாகக் கூறியிருக்கிறார் சுக்தாய். போர்வை என்றொரு கதையில், கணவரின் அன்பும், தாம்பத்யமும் […]

Read more

வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி, ராணிமைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.152, விலை ரூ.120. கல்வியறிவில்லாத ஒருவர் விவசாயிகளுக்கான முதல் பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது. புதுச்சேரிக்கு அருகே உள்ள கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதிதான் அந்த விவசாயி. கல்வியறிவில்லாத அவர் இளமைக்காலத்தில் வாழ்வில் முன்னேறக் கூடிய எந்தவித அறிகுறிகளும் இல்லாதவராகவே இருந்திருக்கிறார். பின்னர் கனகாம்பர செடி வளர்ப்பதில் அவருக்கு ஆர்வம் வந்திருக்கிறது. புதுவிதமான கனகாம்பர நாற்றுகளைப் பதியம் போட்டு வளர்த்திருக்கிறார். வேளாண்துறையிலிருந்து ஒரு லட்சம் […]

Read more

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும், வலியும்,  ஈழபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக்.72, விலை ரூ.80. இலங்கையின் இனப் பிரச்னை காரணமாக தமிழர்கள்அந்நாட்டை விட்டு புலம் பெயரும் நிகழ்ச்சி நீண்டகாலமாக நடந்து வருகிறது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இடம் பெயர்ந்த மக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை. தமிழக அகதி முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குடியமர்த்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் படும் சிரமங்களை இந்நூல் விவரிக்கிறது. அகதி முகாம்களில் உள்ள […]

Read more

இடம், பொருள், மனிதர்கள்

இடம், பொருள், மனிதர்கள், மாதவ பூவராக மூர்த்தி, விருட்சம் வெளியீடு, பக்.156, விலை ரூ.130. சிந்தனை வெளிப்பாட்டின் சிறு குறிப்புகளாகத் தொடங்கிய பேஸ்புக் பக்கம் இன்று நீண்ட பதிவுகளுக்கு இடம் கொடுக்கிறது. இந்த மின்னூடகப் பதிவுகள் மீண்டும் அச்சு உருப்பெற்று, புதிய வாசக வட்டத்தைக் கவர்வதும் இப்போது இயல்பாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு நூல்தான் இது. இருபத்தாறு தலைப்புகளில் மாதவ பூவராக மூர்த்தியின் பேஸ்புக் பதிவுகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. சிந்தனை வெளிப்பாடுகள் என்ற நிலையைத் தாண்டி, ஏறத்தாழ சிறுகதைகள் என்றே குறிப்பிடும் அளவுக்கு சில […]

Read more

இவனன்றோ என் நண்பன்

இவனன்றோ என் நண்பன், சூ.குழந்தைசாமி, காந்தி அமைதி நிறுவனம், பக்.72, விலை ரூ.20. காந்திய நெறி பரப்பும் பணியில் தனது இளமைக்காலம் முதல் ஈடுபட்டு வரும் நூலாசிரியர், தனது வாழ்வில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். சிறுவயதில் ஒன்றுக்கும் உதவாதவராக இருந்த அவர் 21 வயதில் ஒரு 52 வயது நண்பரைச் சந்திக்கிறார். அவர் டி.டி.திருமலை. அவரைச் சந்தித்த நாள் முதல் அவரின் வழிகாட்டலில் தனது வாழ்க்கை எவ்வாறு நல்லவிதமாக மலர்ந்தது என்பதை பல நிகழ்வுகள் மூலம் மிகவும் சுவையாக […]

Read more
1 65 66 67 68 69 180