ஆண்பிரதியும் பெண் பிரதியும்

ஆண்பிரதியும் பெண் பிரதியும்,  சமயவேல், மணல்வீடு இலக்கிய வட்டம், பக்.160, விலை ரூ.150. பல்வேறு சிற்றிதழ்களில், இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளும், கரீபியக் கவிஞர் டெரெக் வால்காட் பற்றியும், தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன் பற்றியும் எழுதப்பட்ட அஞ்சலிக்குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ந.முத்துசாமி, எஸ்.இராமகிருஷ்ணன், சோ.தர்மன், அய்யப்ப மாதவன், சி.மோகன், லீனா மணிமேகலை, சந்திரா, பெருந்தேவி என தமிழ் இலக்கிய வாசகர்களால் நன்கறியப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றியும், யுகியோ […]

Read more

பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து

பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து, சாந்தகுமாரி சிவகடாட்சம்,சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், பக்.298, விலை ரூ.350. சுவிட்சர்லாந்து சென்றுவிட்ட வந்த ஒருவர் நம்மிடம் பேசுவதைப் போல, தனது சுவிட்சர்லாந்து பயண அனுபவத்தை இந்நூலில் நூலாசிரியர் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற பல இடங்களை நமக்குச் சுற்றிக்காட்டுகிறார். ஆல்ப்ஸ் மலைகளில் ஒன்றான மிக உயரமான (3,454 மீட்டர்) ஜீங்புருமலை, 4 கி.மீ.தொலைவு உள்ள இகர் மற்றும் மான்க் மலைகளின் ஊடே உள்ள குகைப்பாதை, ஜெனீவாவில் உள்ள ஜெட் டி யு நீருற்று என பல இடங்களுக்கு நாம் செல்கிறோம். […]

Read more

ஈடேற்றும் சமத்துவம்

ஈடேற்றும் சமத்துவம்,  பிரபா ஸ்ரீதேவன், தமிழில்: ஸ்ரீ.சம்பத்,நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேசன், பக்.174, விலை ரூ.200. நூலாசிரியர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்தது. அந்நூலில் உள்ள கட்டுரைகளின் தமிழாக்கமும், நூலாசிரியர் ஆற்றிய உரைகளும், தினமணியில் வெளிவந்த கட்டுரைகளும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சமத்துவம் தேவை என்கிற அடிப்படையில் நம் சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டவர்களான மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், சாதிரீதியாக மலக்கழிவுகளை அள்ளும் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோரின் மனித உரிமைகள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படுகின்றன; அவர்களுடைய மனித உரிமைகளை அவர்களுக்கு எவ்விதம் […]

Read more

ஈடேற்றும் சமத்துவம்

ஈடேற்றும் சமத்துவம்,  பிரபா ஸ்ரீதேவன், தமிழில்: ஸ்ரீ.சம்பத்,நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேசன், பக்.174, விலை ரூ.200. நூலாசிரியர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக  அந்நூலில் உள்ள கட்டுரைகளின் தமிழாக்கமும், நூலாசிரியர் ஆற்றிய உரைகளும், தினமணியில் வெளிவந்த கட்டுரைகளும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சமத்துவம் தேவை என்கிற அடிப்படையில் நம் சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டவர்களான மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், சாதிரீதியாக மலக்கழிவுகளை அள்ளும் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோரின் மனித உரிமைகள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படுகின்றன; அவர்களுடைய மனித உரிமைகளை அவர்களுக்கு எவ்விதம் மீட்டெடுத்துக் கொடுப்பது என்று […]

Read more

சிதறு தேங்காய்

சிதறு தேங்காய்,  வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், பக்.112, விலை ரூ.80. ‘குமுதம்‘ வார இதழில் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய குறுங்கதைகளின் தொகுப்புதான் ‘சிதறு தேங்காய்‘. மனிதர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனக்கசப்புகளுக்கு கதைகள் மூலம் தீர்வு வழங்குகிறது இந்த நூல். கதைகள் யாவும் இதுவரை அதிகம் கேள்விப்படாதவை என்பதுதான் சிறப்பு. சில கதைகள் நூலாசிரியரின் அனுபவ கதைகள் என்பதால் சுவாரஸ்யம் கூடுகிறது. சொல்லப்படாத சில கதைகளில் ஒன்று, ராமாயணத்தில் சீதை மட்டும் தீக்குளிக்கவில்லை;கற்பை நிரூபிக்க லட்சுமணனும் தீக்குளித்தான் என்பதுதான். மராத்திய ராமாயணமான பவர்த் ராமாயணத்தில் […]

Read more

சுபமங்களா நேர்காணல்கள் – கலைஞர் முதல் கலாப்ரியா வரை

சுபமங்களா நேர்காணல்கள் – கலைஞர் முதல் கலாப்ரியா வரை, தொகுப்பாசிரியர்: இளையபாரதி, வ.உ.சி. நூலகம், பக்.624, விலை ரூ.600. ‘சுபமங்களா‘ இதழில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பான இந்நூலில் எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. கலைஞர் மு.கருணாநிதி நேர்காணல் தொடங்கி, மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், லா.ச.ராமாமிர்தம், சுந்தர ராமசாமி, தொ.மு.சி.ரகுநாதன், கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி, கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, வண்ணநிலவன், செ.யோகநாதன், கலாப்ரியா உள்ளிட்ட 38 பிரபலங்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. கலைஞரின் தந்தை முத்துவேலரே சிறந்த […]

Read more

காஞ்சி முனியெனும் கருணை நிதி

காஞ்சி முனியெனும் கருணை நிதி, ஸ்ரீதர், சாமா, விருட்சம், பக்.144, விலைரூ.100. காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் அறுபத்தெட்டாவது பீடாதிபதியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ‘பரமாச்சார்யா‘ என்றும் ‘மஹா பெரியவா‘ என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் சுவாமிகளின் வாழ்வில் நிகழ்ந்த பல அபூர்வ சம்பவங்கள், அவரது உபதேசங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். பிற துறவிகளைப் போல உலக நன்மைக்காக கடவுளை வழிபடுபவராக மட்டும் இல்லாமல், துன்பப்படுவோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதே உண்மையான இறைப்பணி என்று கூறி அப்படியே செயல்பட்டும் இருக்கிறார். குறிப்பாக, உயிருக்குப் போராடுபவர்களுக்கு […]

Read more

பிருந்தாவன் யாத்திரை

பிருந்தாவன் யாத்திரை,  சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக்.276, விலைரூ.200. நம்நாட்டில் தீர்த்த யாத்திரை செல்லும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அவற்றில் அயோத்தி, பிருந்தாவன் யாத்திரைகள் மிகவும் புனிதமானவை. அவை இரண்டும் கடவுள் வாழ்ந்த இடம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த புண்ணிய பூமிகளான பிருந்தாவனம், மதுரா, கோகுலம், நந்தகாம், பர்ஸானா, கோவர்த்தன் மலை ஆகிய ஆறு இடங்களும் சேர்த்தே ‘பிருந்தாவன்‘ அல்லது ‘விரஜ மண்டலம்‘ என்று அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிருந்தாவனுக்கு மூன்று முறை செல்லும் […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள்,  ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், பக்.688, விலை ரூ.450. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே‘ என்று சுட்டுகிறது தொல்காப்பியம். ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்து தோன்றும்போது, ஒரு சொல்லிலிருந்து மற்றொரு சொல் பிறக்க இடமுண்டாகிறது. கருத்து வேறுபடும்போது சொல்லும் வேறுபட வேண்டும். இல்லையெனில் பொருள் மயக்கம் உண்டாகும். மொழியும் வளர்ச்சியுறாது. இதுவே சொல்லாக்க நெறிமுறை. இந்த நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும் வேர்ச்சொல் ஆய்வில் மூழ்கிக் கிடந்த ஞா.தேவநேயப் பாவாணர் ‘செந்தமிழ்ச் செல்வி‘ என்னும் திங்களிதழில் தொடர்ந்து எழுதி […]

Read more

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1, தமிழில்: மதுமிதா,சாகித்திய அகாதெமி, பக்.496, விலை ரூ.365. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 34 தெலுங்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இச்சிறுகதைகளின் மாந்தர்களை நீங்கள் உங்கள் வீட்டருகே, தெருவில், கடைவீதியில், பொது இடங்களில் சந்திக்கலாம். ஆதரவற்றவர்கள், அனாதைக் குழந்தைகள், ஒருவேளை உணவு கிடைக்காமல் திண்டாடுபவர்கள், அவர்களின் உளவியல்ரீதியிலான சிக்கல்கள் எல்லாவற்றையும் மிகவும் அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். எனினும் இக்கதைகளின் ஊடே மனிதநேயமும், பிறருக்காக வாழ்தலும் பிரதானப்படுத்தப்படுகிறது. கிணறு தோண்டியவன் எப்போதோ இறந்து போயிருக்கலாம். ஆனால் அவன் இன்னும் தாகம் கொண்ட வழிப்போக்கர்களுக்கு உயிரளித்துக் […]

Read more
1 63 64 65 66 67 180