மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்,

மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்,  மறை.தி.தாயுமானவன், மறைமலையடிகள் பதிப்பகம், பக்.272, விலை ரூ.350. நூலாசிரியர் மறைமலையடிகளின் பெயரன். மறைமலையடிகளின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் சுருக்கமாகவும் தெளிவாகும் நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளன. அதற்கு அடுத்து, மறைமலையடிகள் 1898 முதல் 1950 வரை எழுதிய நாட்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. நலமாக வாழ்வதற்கு எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மறைமலையடிகள் வலியுறுத்தினார் என்பது அடுத்ததாக விளக்கப்பட்டுள்ளது. தனித்தமிழ் இயக்கத்தின் வளர்ச்சி, தமிழைக் காக்க மறைமலையடிகள் நிகழ்த்திய போராட்டங்கள் என நூல் விரிகிறது. 29.2.1912 இல் மறைமலையடிகள் எழுதிய நாட்குறிப்பில், ‘மூட்டைப்பூச்சி, கொசுத் […]

Read more

ஒரே கல்லில் 13 மாங்காய்,

ஒரே கல்லில் 13 மாங்காய், க.விஜயகார்த்தி கேயன் ஐ.ஏ.எஸ்., விஜயா பதிப் பகம், பக்.144, விலை ரூ. 120. தலைப்பை வித்தியாசமாக வைத்திருப்பதன் காரணம் இந்த எண் ராசியில்லை என பலராலும் கூறப்படுவதைத் தடுக்கவே என ஆரம்பித்து, 14 அத்தியாயங்களாகப் பிரித்து சுவையான நடையில் இந்நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர். தனது அடிப்படைத் தொழிலான மருத்துவத்துறையையும் மறக்காமல் அவ்வப்போது இடையிடையே பல தகவல்களைப் பேச்சு வழக்கில் நகைச்சுவையுடன் அளித்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. கணக்கு-வழக்கு பார்த்து வாழ்க்கை நடத்துவது தேவை என ஆரம்பித்து இன்றைய வாழ்க்கை கணினிமயமாகிவிட்டது வரை […]

Read more

கடித இலக்கியம்

கடித இலக்கியம், இரா.காமராசு, சாகித்திய அகாதெமி, பக்.320, விலை ரூ.200. செல்லிட பேசி அதிக அளவில் புழக்கத்தில் வந்த பிறகு உறவினர்களுக்கு, நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவது அடியோடு நின்றுபோய்விட்டது. கடிதம் எழுதுவதில் உள்ள சுகம், கடிதம் எப்போது வரும் என்ற காத்திருப்பு, கடிதம் வந்தபின் எழும் பல்வேறு உணர்வுகள் என இந்தத் தலைமுறையினரும், வருங்காலத் தலைமுறையினரும் இழந்த அனுபவங்கள், உணர்வுகள் அதிகம். அந்த அனுபவங்களை, உணர்வுகளை இந்நூல் தொட்டுக் காட்டுகிறது . பாரதியார் தன் மனைவிக்கு, பரலி சு.நெல்லையப்ப பிள்ளைக்கு, தம்பி சி.விசுவநாதனுக்கு எழுதிய […]

Read more

திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள்

திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள்,  தொகுதி -3, பொன்.செல்லமுத்து,  மணிவாசகர் பதிப்பகம், பக்.320, விலை ரூ.250. ‘சினிமா எக்ஸ்பிரஸ்‘ இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் நூல் வடிவம். ஏற்கெனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. இந்த மூன்றாம் தொகுதியில் 1979 இல் இருந்து 2001 வரை பாடல்கள் எழுதத் தொடங்கிய கவிஞர்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு திரையிசைக் கவிஞர் எத்தனை படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது ஆண்டு வரிசைப்படியும் அகரவரிசைப் படியும் கூறப்பட்டுள்ளது. கவிஞரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு, அவர் எழுதிய குறிப்பிடத்தக்க […]

Read more

மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மனிதனை இயக்குவது மனமா மூளையா?, ஏ.வி.ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி மோகன்,  நலம், பக்.128, விலை ரூ.125. மனிதனுக்கு வெளியே நிகழ்கிற ஒவ்வொன்றும் மனிதனின் மூளையில் ஏற்படுத்துகின்ற மாற்றங்களையும் , மூளையில் ஏற்படுகின்ற மாற்றங்களால் உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களையும் இந்நூல் அறிவியல் அடிப்படையில் விளக்குகிறது. யோகாசனம், தியானம், இசை கேட்பது, வழிபடுவது ஆகியவை மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் அவை நமது செயல்களில் மாற்றங்களை ஏற்படுத்த தூண்டுகோலாக இருப்பதையும் நூலாசிரியர்கள் விளக்கியிருக்கின்றனர். ஆண் மூளை, பெண் மூளை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள், தனித்தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. […]

Read more

சந்தித்ததும் சிந்தித்ததும்

சந்தித்ததும் சிந்தித்ததும், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், பக்.280, விலை ரூ.200. வாழ்வில் ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை நாம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது என்கிறார் இறையன்பு. ‘ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள் என்ற உண்மை நமக்குப் புரியும்‘ என்கிறார் நூலாசிரியர். தான் சந்தித்த அத்தகைய மனிதர்கள் குறித்த சிறு குறிப்புகளை இலகுவான வாசிப்புக்கு ஏற்ற நடையில், ஆங்கிலத்தில் இனிய மேற்கோள்களுடன் 50 கட்டுரைகளாக அவர் வடித்திருக்கிறார். அவற்றின் தொகுப்பே இந்நூல். […]

Read more

வழங்க வளரும் நேயங்கள்

வழங்க வளரும் நேயங்கள்,-ஸ்ரீதர்-சாமா,விருட்சம் வெளியீடு, பக்.161, விலை ரூ.120. தமிழ் இலக்கியத்தில் சிறுகதை என்பது சமூகத்தின் நிலையை சுருக்கமாக விளக்கும் தனி இலக்கியமாகவே இருந்துவருகிறது. இந்நூலாசிரியர் சமூகத்தின் நிலையை கண்ணாடி போல பிரதிபலிக்க தமது சிறுகதைகளைப் பயன்படுத்தியுள்ளார். நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளும் யதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. கதைக்களங்களில் நம்மை நிறுத்தி வைக்கின்றன. நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களையும், சடங்குகளாக நடைபெறும் பாராட்டு நிகழ்வுகளையும் தமது முதல் கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் நூலாசிரியர், வாக்கு எனும் கதையில் அம்மாவின் அரவணைப்புக்கு ஏங்கும் தேவியின் […]

Read more

வழங்க வளரும் நேயங்கள்

வழங்க வளரும் நேயங்கள்,  ஸ்ரீதர்-சாமா, விருட்சம் வெளியீடு, பக்.161, விலை ரூ.120. தமிழ் இலக்கியத்தில் சிறுகதை என்பது சமூகத்தின் நிலையை சுருக்கமாக விளக்கும் தனி இலக்கியமாகவே இருந்துவருகிறது. இந்நூலாசிரியர் சமூகத்தின் நிலையை கண்ணாடி போல பிரதிபலிக்க தமது சிறுகதைகளைப் பயன்படுத்தியுள்ளார். நூலில் இடம் பெற்றுள்ள அனைத்து கதைகளும் யதார்த்தமான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. கதைக்களங்களில் நம்மை நிறுத்தி வைக்கின்றன. நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களையும், சடங்குகளாக நடைபெறும் பாராட்டு நிகழ்வுகளையும் தமது முதல் கதையில் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் நூலாசிரியர், ‘வாக்கு‘ எனும் கதையில் அம்மாவின் அரவணைப்புக்கு […]

Read more

திருப்பா இலக்கியம்

திருப்பா இலக்கியம்,  ச. வனிதா, சபாபதி வெளியீடு, பக்.164, விலை ரூ. 120. தமிழும் சமயமும் பிரித்துப்பார்க்க முடியாதவை. சமயச் சான்றோர் பலரின் காலத்தை வென்ற படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்கு செழுமையும், பெருமையும் சேர்ப்பவையாக உள்ளன. அருணகிரிநாதர் படைத்த திருப்புகழ், வள்ளலார் படைத்த திருவருட்பா போன்ற நூல்களின் வரிசையில் வைத்து அழகுபார்க்கவும், வாய்மணக்கப் பாடிப்பார்க்கவும் தக்கது திருப்பா. அதைப் படைத்தவர் "பாம்பன் சுவாமிகள்' என அழைக்கப்படும் குமரகுருதாச சுவாமிகள். எத்தனையோ அற்புத நூல்களைப் படைத்திருந்தாலும் பாம்பன் சுவாமிகளின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கது திருப்பாதான். இவரது அனைத்து நூல்களும் […]

Read more

என்னை அடைத்(ந்)த அதிர்ஷ்டம்

என்னை அடைத்(ந்)த அதிர்ஷ்டம்,  எழுத்திலிருந்து எழுத்தாளரானது – ஆங்கிலத்தில்: ஆங்கிலத்தில் விஜய் சந்தானம், தமிழில் வாஷிங்டன் ஸ்ரீதர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக்.144, விலை ரூ.120. நூலாசிரியர் தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ – இன் பேரன். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி, நூலாசிரியருக்கு மூளைவாதத் தாக்குதல் ஏற்பட்டது. அதனால் மூளையின் இடது பக்கம் பாதிக்கப்பட்டு, வலது கை, கால் செயலற்றுப் போய்விடுகிறது. பேச முடியவில்லை. எண், எழுத்து எதுவும் நினைவிலில்லை. பிறந்த குழந்தையைப் போல புதிதாக எல்லாவற்றையும் […]

Read more
1 64 65 66 67 68 180