காலம் உன்னையும் உலகத்தையும் படைத்தது

காலம் உன்னையும் உலகத்தையும் படைத்தது, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.264, விலை ரூ.200. ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் தி ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் என்கிற நூலை முன்மாதிரியாகக் கொண்டு தமிழில் படைக்கப்பட்ட நூல் இது. சூரியனை மையமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட பல கோள்கள் சுற்றி வருகின்றன. இந்த அகிலத்தின் தோற்றம் எப்படி ஏற்பட்டது? அதன், தன்மை குறித்து கி.மு.340 காலத்தில் வாழ்ந்த அரிஸ்ட்டாட்டில், இந்திய விஞ்ஞானி பாஸ்கரா, தாலமி, நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ், கலிலியோ, கெப்ளர், நியூட்டன் , ஐன்ஸ்டீன், ஸ்டீஃபன் ஹாக்கிங் உள்ளிட்ட பல […]

Read more

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்.

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்., மணவை பொன்.மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம்,  பக். 376, விலை ரூ.270. எம்.ஜி.ஆரின் திரையுலக அனுபவங்களையும், அரசியல் அனுபவங்களையும் ஏராளமான தகவல்களுடன் அள்ளித் தந்திருக்கிறார் நூலாசிரியர். சிறுவயதில் நாடகத்துறையில் நுழைந்து நடிப்புப் பயிற்சியை காளி என். ரத்தினத்திடமும், நடனப் பயிற்சியை ஸ்ரீ ராமுலுவிடம் பெற்று ‘ராஜபார்ட்‘ ஆக உயர்வடைய எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள், திரைத்துறையில் நுழைவதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை, சிலம்பம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டும் கூட சிறு சிறு வேடங்களே கிடைக்க, தன்னை நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள அவர் பட்ட […]

Read more

ஆதிசைவர்கள் வரலாறு

ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ்.கார்த்திகேய சிவம், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ. சிவனோடு தொடர்புடையது சைவம். "சைவத்தின் மேல் சமயம் வேறில்லை' என்பது சைவர்களின் உறுதியான நம்பிக்கை. சிவனை வணங்கும் யாவரும் சைவர்களேயாயினும் இறைவன் திருமேனியை முப்போதும் தீண்டி பூஜை செய்து வழிபடுவோரை "ஆதிசைவர்' என அழைப்பது மரபு. ஆதிசைவர்கள், குருக்கள், பட்டர், நாயனார், சிவாச்சாரியார் என வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஆதிசைவர்களின் வரலாற்றை ஓரளவு விரிவாகவும் மிகத்தெளிவாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். திருக்கயிலாய மலையில் சிவபெருமான், பார்வதி […]

Read more

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்.

புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்., மணவை பொன்.மாணிக்கம், கற்பகம் புத்தகாலயம், பக். 376, விலை ரூ.270. எம்.ஜி.ஆரின் திரையுலக அனுபவங்களையும், அரசியல் அனுபவங்களையும் ஏராளமான தகவல்களுடன் அள்ளித் தந்திருக்கிறார் நூலாசிரியர். சிறுவயதில் நாடகத்துறையில் நுழைந்து நடிப்புப் பயிற்சியை காளி என். ரத்தினத்திடமும், நடனப் பயிற்சியை ஸ்ரீ ராமுலுவிடம் பெற்று ‘ராஜபார்ட்‘ ஆக உயர்வடைய எம்.ஜி.ஆர். பட்ட கஷ்டங்கள், திரைத்துறையில் நுழைவதற்காக குதிரையேற்றம், வாள் சண்டை, சிலம்பம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டும் கூட சிறு சிறு வேடங்களே கிடைக்க, தன்னை நாயகனாக நிலைநிறுத்திக் கொள்ள அவர் பட்ட […]

Read more

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல், இரெ.குமரன், காவ்யா, பக்.316, விலை ரூ.300. இன்று அறிவியல் வெகுவாக முன்னேறிவிட்டது. நாள்தோறும் புதுபுதுக் கண்டுபிடிப்புகளால் உலகம் நிரம்பி வழிகிறது. நமது பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைக்கும் பல கருத்துகள் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளோடு வியக்கத்தக்க வகையில் ஒத்துப் போவதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. சூரியக் குடும்பத்தைப் பற்றி இன்றைய அறிவயில் கூறும் கருத்துகளை உறையூர் முதுகண்ணன் சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல், "வாணிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு' என்ற சிறுபாணாற்றுப் படை பாடல்கள் கூறியிருப்பது வியப்பூட்டுகிறது. தாய்ப்பால் தருவதின் […]

Read more

நானும் சினிமாவும்

நானும் சினிமாவும், ஏவி.எம். சரவணன், தினத்தந்தி பதிப்பகம், பக்.416, விலை ரூ.250. திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணனின் 60 ஆண்டு கால திரையுலக அனுபவங்களுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு மகா விருட்சம் அதன் ஆணிவேரிலிருந்து தொடங்குவதைப் போல், தன் தந்தையார் ஏவி.மெய்யப்பனின் குழந்தைப் பருவத்திலிருந்து இந்த நூலைத் தொடங்கியிருப்பது சிறப்பு. திரையுலகில் சகாப்தம் படைத்த ஏவி.எம். நிறுவனம் உதயமானது முதல், அந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒவ்வொரு படத்திலும் கிடைத்த விதவிதமான அனுபவங்களின் தொகுப்பு, விறுவிறுப்பானதொரு நாவலைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் […]

Read more

கழகத் தமிழ் இலக்கணம்

கழகத் தமிழ் இலக்கணம், கழகப் புலவர் குழு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்., பக்.352, விலை ரூ.265. ‘மொழியின் தன்மையை வரையறுத்துக் கூறுவது இலக்கணம் ஆகும். ஒரு மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் இலக்கணம் பயில்வது அவசியமாகும்‘. அந்த வகையில் இந்நூல் தமிழ் மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் உதவும்விதத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து பயிலும் மாணவர்கள் கூட இலக்கணம் என்றாலே சிறிது தயக்கம் கொள்வர். இந்நூலில் எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி ஆகிய ஐந்து இலக்கணங்களும் இன்றைய தலைமுறை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் […]

Read more

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், தொகுதி 1, பக்.416, தொகுதி 2, பக்.448, தொகுதி 3, பக்.288, தொகுதி 4, பக்.496, மொத்த பக். 1,648, நான்கு தொகுதிகளும் சேர்த்து விலை ரூ.1,200. ‘அடைவதற்கான வழியும், அடையப்பெறும் பொருளும் (சாதனம், சாத்தியம்) நானே‘ என்கிறார் (‘மாமேகம் சரணம் வ்ரஜ‘ – பகவத் கீதை) ஸ்ரீகிருஷ்ணர். இதை நன்கு உணர்ந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள். இவர்கள் வைணவத்தையும், தமிழையும் தழைத்தோங்கச் செய்ததுடன், பக்தி இலக்கியத்தையும்; அந்தாதி, மடல், தாண்டகம், எழுகூற்றிருக்கை, பாவை, பள்ளியெழுச்சி […]

Read more

சிறுகதையும் திரைக்கதையும்

சிறுகதையும் திரைக்கதையும்,  ஜெயகாந்தன்,  டிஸ்கவரி புக் பேலஸ், பக்.172, விலை ரூ.160. ஜெயகாந்தன் அறுபதுகளில் எழுதிய சிறுகதைகள் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை. மனித வாழ்வின் சாராம்சத்தை உயிர்ப்பு மிக்க அனுபவங்களினூடே பிழிந்து தருபவை. அந்த வரிசையில் இந்நூலில் இடம் பெற்றுள்ள ‘நான் இருக்கிறேன்‘ சிறுகதையையும் சொல்லலாம். தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரர், வாழ்க்கையில் ஆழ்ந்த பிடிப்புடன் இருக்கிறார். கால்களில்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய முயலும்போது அவரைத் தடுத்து மீட்கிற பிச்சைக்காரர், வாழ்க்கையின் மீது நம்பிக்கையை மாற்றுத்திறனாளிக்கு உருவாக்குகிறார். ஆனால் […]

Read more

ஸம்ஸ்கிருத முதற் புத்தகம்

ஸம்ஸ்கிருத முதற் புத்தகம், ஸர் ரா.கோ. பண்டார்கர், தமிழில்: பென்னாத்தூர் சு.ஜானகிராமையர்,சரஸ்வதி பதிப்பகம், பக்.300, விலை ரூ.150. எளிய முறையில் சம்ஸ்க்ருதம் பயில்வதற்காக, புகழ் பெற்ற சம்ஸ்க்ருத அறிஞரான ஆர்.ஜி.பண்டார்கர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல். இதன் முதல் பதிப்பு 1918-இல் வெளியானது. இதன் அடுத்த பதிப்பு குறித்து 1921-ஆம் ஆண்டில் சுதேசமித்திரனில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் இல்லாமல், எளிய முறையில், வீட்டில் இருந்தபடியே இந்தப் புத்தகத்தின் உதவியுடன் சம்ஸ்க்ருதம் பயிலலாம். சம்ஸ்க்ருத எழுத்துகள் தொடங்கி, எளிமையான இலக்கணங்கள் […]

Read more
1 69 70 71 72 73 180