நானும் சினிமாவும்

நானும் சினிமாவும், ஏவி.எம். சரவணன், தினத்தந்தி பதிப்பகம், பக்.416, விலை ரூ.250. திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணனின் 60 ஆண்டு கால திரையுலக அனுபவங்களுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு மகா விருட்சம் அதன் ஆணிவேரிலிருந்து தொடங்குவதைப் போல், தன் தந்தையார் ஏவி.மெய்யப்பனின் குழந்தைப் பருவத்திலிருந்து இந்த நூலைத் தொடங்கியிருப்பது சிறப்பு. திரையுலகில் சகாப்தம் படைத்த ஏவி.எம். நிறுவனம் உதயமானது முதல், அந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஒவ்வொரு படத்திலும் கிடைத்த விதவிதமான அனுபவங்களின் தொகுப்பு, விறுவிறுப்பானதொரு நாவலைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் […]

Read more

கழகத் தமிழ் இலக்கணம்

கழகத் தமிழ் இலக்கணம், கழகப் புலவர் குழு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்., பக்.352. விலை ரூ.265. மொழியின் தன்மையை வரையறுத்துக் கூறுவது இலக்கணம் ஆகும். ஒரு மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் இலக்கணம் பயில்வது அவசியமாகும். அந்த வகையில் இந்நூல் தமிழ் மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் உதவும்விதத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து பயிலும் மாணவர்கள் கூட இலக்கணம் என்றாலே சிறிது தயக்கம் கொள்வர். இந்நூலில் எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி ஆகிய ஐந்து இலக்கணங்களும் இன்றைய தலைமுறை மாணவர்கள் புரிந்துகொள்ளும் […]

Read more

சிறுகதையும் திரைக்கதையும்

சிறுகதையும் திரைக்கதையும், ஜெயகாந்தன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.172, விலை ரூ.160.  ஜெயகாந்தன் அறுபதுகளில் எழுதிய சிறுகதைகள் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை. மனித வாழ்வின் சாராம்சத்தை உயிர்ப்பு மிக்க அனுபவங்களினூடே பிழிந்து தருபவை. அந்த வரிசையில் இந்நூலில் இடம் பெற்றுள்ள ‘நான் இருக்கிறேன்’ சிறுகதையையும் சொல்லலாம். தொழுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரர், வாழ்க்கையில் ஆழ்ந்த பிடிப்புடன் இருக்கிறார். கால்களில்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய முயலும்போது அவரைத் தடுத்து மீட்கிற பிச்சைக்காரர், வாழ்க்கையின் மீது நம்பிக்கையை மாற்றுத்திறனாளிக்கு உருவாக்குகிறார். ஆனால் […]

Read more

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், ஆலடி அருணா, விகடன் பிரசுரம், பக்.400, விலை ரூ.250. 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் கூட்டாட்சி பற்றியும் எழுதப்பட்ட இந்நூல், இன்றைய அரசியல் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள உதவுவதாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிர்வாகம், நிதி, நீதி, மொழிக் கொள்கை உட்பட பலவிஷயங்களில் எவ்வாறு மத்திய அரசின் அதிகாரத்தை வலுப்படுத்தும் பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதை நூல் விளக்குகிறது. மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக ஆளுநர் விளங்குகிறார். தன்னிடம் உள்ளநிர்வாகத்தை நேரடியாக அல்லது தமக்குக் கீழ் பணிபுரியும் […]

Read more

காந்தியச் சுவடுகள்

காந்தியச் சுவடுகள், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.144, விலை ரூ.135. தினமணியில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. காந்தியின் கொள்கைகளைப் புரிந்து கொள்ளவும், அவரின் தியாக வாழ்கையைத் தெரிந்து கொள்ளவும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் உதவுகின்றன. காந்தியுடன் இணைந்து செயல்பட்ட நேரு, பட்டேல், ராஜாஜி ஆகியோருக்கும் காந்திக்கும் இருந்த உறவு, முரண்பாடுகள் என அனைத்து விஷயங்களையும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் பேசுகின்றன. காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், சுதந்திரப் போராட்ட வீரர் சோமயாஜுலு, ஓமந்தூரார், அபுல்கலாம் ஆசாத், அம்பேத்கர் ஆகியோர் குறித்த பல […]

Read more

இதழாளர் பாரதி

இதழாளர் பாரதி,பா.இறையரசன், யாழிசைப் பதிப்பகம், பக்.326, விலை ரூ.300. பாரதியை பலரும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த நிலையில் இந்த நூலில் ஐந்து தலைப்புகளில் பாரதியை பத்திரிகையாளராக முன்னிலைப்படுத்தி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர். பாரதியாரின் இதழியல் நடை எனும் கட்டுரையில், பாரதி கூற்றாக, கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த ஒரு விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை, அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது என்று குறிப்பிட்டு […]

Read more

வெளிச்சத்தை நோக்கி

வெளிச்சத்தை நோக்கி, உதயை மு.வீரையன்,மேன்மை வெளியீடு, பக்.160, விலை ரூ.140. மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட பார்வையுடன் நம்நாட்டிலும், உலக அளவிலும் உள்ள பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்து நூலாசிரியர் எழுதிய 30 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது என்கிற பெயரில் மக்களை வெளியேற்றுவது, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, பெட்ரோல் விலையை அதிகப்படுத்திக் கொண்டே போவது, நிலம் கையகப்படுத்தும் சட்டம், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது உள்ளிட்ட பல […]

Read more

மாடர்ன் தியேட்டர்ஸ்,

மாடர்ன் தியேட்டர்ஸ், ரா.வேங்கடசாமி, விஜயா பப்ளிகேஷன்ஸ், பக்.160, விலை ரூ.120. தமிழ்த் திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த 118 திரைப்படங்கள் குறித்தும், அதன் நிறுவனர், இயக்குநர் டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு குறித்தும் அறிந்து கொள்ள உதவும் நூல். எம்.ஜி.ஆரின் நடிப்பில் உருவான ‘வீரவாள்‘ என்ற திரைப்படத்தின் பெயர் ‘சர்வாதிகாரி‘ என மாற்றப்பட்டது எப்படி? ‘மந்திரிகுமாரி‘, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்‘ படத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர். மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களில் நடிக்காதது ஏன்? என்பதற்கான காரணங்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, […]

Read more

பாரதி  யார்?

பாரதி  யார்?, தொகுப்பாசிரியர்: டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், பக்.320, விலை ரூ.80. பாரதி – யார்? என்ற இந்தப் புத்தகம் ஓர் அரிய புத்தகம் என்றால் அது மிகையே அல்ல. பாரதி பற்றி அவருடன் மிக நெருக்கமாகப் பழகியவர்கள் முதல், அவருடைய சம காலத்தவர், பிற்கால அறிஞர்கள், நண்பர்கள், பாரதி அன்பர்கள், மகாகவி பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பாரதியை நேரில் அறிந்தவர்களின் கூற்றுகளும், அவரது எழுத்து வாயிலாக தரிசித்தோரின் உணர்ச்சியும் எழுச்சியும் அளிக்கத் தக்க […]

Read more

அங்கீகாரம் (எனது வாழ்க்கை வரலாறு)

அங்கீகாரம் (எனது வாழ்க்கை வரலாறு), பி.ஆர்.துரை, சந்திரிகா பதிப்பகம், பக்-240, விலை ரூ.150. ஏழை பிராமணக் குடும்பத்தில் 12-ஆவது குழந்தையாகப் பிறந்து, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, ஒன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி, 7-ஆம் வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, தன் குரல் வளம், நகைச்சுவைத் திறன், கடின உழைப்பு ஆகியவற்றால் வாழ்வில் உயர்ந்த நாடகக் கலைஞரான நூலாசிரியரின் வாழ்க்கை வரலாற்று நூல் இது. இந்நூலின் மூலம், இவரது வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி, 60 ஆண்டுகளுக்கு முன் ஊர் ஊராகச் சென்று நாடகங்கள் நடத்திய […]

Read more
1 71 72 73 74 75 180