மகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும்

மகாகவி பாரதியாரும் மாமேதை இராமானுஜனும் – முதல் ஒப்புமை நூல் – வி.ச.வாசுதேவன், அமிர்தவல்லி பிரசுரம், பக்.144, விலை ரூ.100. மகாகவி பாரதியாரையும், கணிதமேதை இராமானுஜத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நூல். 1882 இல் பாரதியார் பிறந்தார். 1887 இல் இராமானுஜன் பிறந்தார். சமகாலத்தவர்களான அவர்களின் இளமைக் காலம் தொடங்கி இறுதி வரை நிகழ்ந்த நிகழ்வுகளை கால வரிசைப் படி இந்நூல் தொகுத்து வழங்குகிறது. சிறுவயதில் பாரதியார் தேய மீதெவரோ சொலும் சொல்லினைச் செம்மை என்று மனத்திடைக் கொள்ளும் தீய பக்தியியற்கை இல்லாதவராக (பிறர் சொல்வதை அப்படியே […]

Read more

சுடர்கள் ஏற்றும் சுடர்

சுடர்கள் ஏற்றும் சுடர்,  பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.190, விலை ரூ.160. தமிழிலக்கிய ஆராய்ச்சி, முற்போக்கு இலக்கிய விமர்சனம், நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுக்கும் முயற்சி என்று பல தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர் பேராசிரியர் நா.வானமாமலை. 1969 -இல் தமிழ் இலக்கிய, தமிழக வரலாற்று ஆராய்ச்சிக்காக அவர் தொடங்கி நடத்திய ஆராய்ச்சி இதழின் பங்களிப்பை யாரும் மறந்துவிட முடியாது. இந்நூலாசிரியர் பொன்னீலன், தனது இளமைப் பருவத்தில் இருந்தே நா.வானமாமலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து பல இயக்கங்களில், […]

Read more

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்,  ஓஷோ, தமிழில்: சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.414, விலைரூ.300. சமூகத்தையோ உலகத்தையோ மாற்றும் அபிப்ராயம் கிடையாது. காரணம் சமூகம் என்பது மாயை என்ற அடிப்படையில் தனிமனிதனை மையமாக வைத்து அவனை மாற்றுவதற்கான ஓஷோவின் கருத்துகளின் தொகுப்பே இந்நூல். தனிமனிதர்கள் இந்து, முகமதியர், கிறிஸ்தவர், பொதுவுடைமைவாதி என எந்தச் சார்புடனும் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் மனிதர்கள் முன் கூட்டியே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாதையில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவார்கள். எங்கெங்கும் தவறான அபிப்ராயங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. சமூகம், அரசியல், […]

Read more

பெரியநாயகம் பிள்ளை வரலாறு

பெரியநாயகம் பிள்ளை வரலாறு, தொகுப்பாசிரியர்: ஜே.சந்திரபால், மதுரை சென்டர் ஆப் சோஷியல் அண்டு கல்ச்சுரல் டிரஸ்ட், பக்.238, விலை ரூ.150; . மதுரை அமெரிக்க மிசன் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியவர் பெரியநாயகம் பிள்ளை (1846 – 1923). அவர் தனது கைப்பட எழுதிய வாழ்கைக் குறிப்புகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தனி மனிதரின் ஒருவரின் வாழ்க்கைக் குறிப்புகள் என்பதைத் தாண்டி, 19 ஆம் நூற்றாண்டின் தமிழக மக்களின் வாழ்க்கையை மிக அற்புதமாக இந்நூல் சித்திரிக்கிறது. போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து திருநெல்வேலி வரை பெரியநாயகம் […]

Read more

சேய்த் தொண்டர்கள்

சேய்த் தொண்டர்கள், பனையபுரம் அதியமான், வானதி பதிப்பகம், பக்.446, விலை ரூ.350. ஐந்து வயது வரை பேச்சு வராதிருந்த குமரகுருபரர் முருகன் அருளால் பேசும் ஆற்றல் பெற்று முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் பாடினார். ஒருவரை நாகம் தீண்டினால் அவரைக் காப்பாற்ற மருத்துவரிடம் செல்வது வழக்கம். ஆனால் "சேயூர் முருகன் உலா நூலை எழுதிய சேறைக் கவிராயர் வெண்பா பாடினாலே விஷம் இறங்கிவிடுமாம். முருகனடியாராக விளங்கிய செல்லப்பருக்கு தீராத வயிற்று வலி. கோயிலுக்கு வந்த அவர் அங்கேயே உறங்கிவிட, அவர் இருப்பதை அறியாமல் கோயில் கதவுகளைத் தாழிட்டு […]

Read more

சங்க இலக்கியத்தில் சமூக அறம்

சங்க இலக்கியத்தில் சமூக அறம்,  நந்தினி பதிப்பகம், இரணியன், பக்.132, விலை ரூ.130. சங்க இலக்கியத்தில் சமூக அறம் கட்டுரை உள்ளிட்ட 12 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இயற்கை, வாழ்வியக்கம், சமூக வளர்ச்சி பற்றி இயங்கியல் நோக்கில் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளைச் சொல்லும் தமிழ்த் தொல்லிலக்கியப் பாடல்களில் இயங்கியல் கூறுகள் கட்டுரை, பகைவரை அழித்து நண்பர்களை உயர்வடையச் செய்ய வேண்டும், வலிமையானவருக்குத் தலைவணங்கி மெலிவானவரை தாழ்த்தக் கூடாது என்பன போன்ற கருத்துகள் சங்க இலக்கியத்தில் உள்ளதை எடுத்துக் காட்டும் சங்க இலக்கியத்தில் சமூக […]

Read more

அல்லல் தீர்க்கும் அமிராமி

அல்லல் தீர்க்கும் அமிராமி, க. துரியானந்தம், கங்கை புத்தக நிலையம், பக்.340, விலை ரூ.225. சக்தி வழிபாட்டில் பாராயணம் செய்ய, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், செளந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. மிகவும் மந்திரசக்தி வாய்ந்த இவற்றைப் பாராயணம் செய்வதன் மூலம் அம்பிகையின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறமுடியும். அம்பிகையின் அருள்பெற்ற அருளாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் அபிராமி பட்டர். இவர், முன்செய் தவத்தாலும், அன்னை அபிராமியின் பெருங்கருணையாலும் ஆட்கொள்ளப்பட்டு, இப்பாமாலையை அருளிச் செய்துள்ளார். 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி. காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியே முதல் […]

Read more

இந்துத் தத்துவ இயல்

இந்துத் தத்துவ இயல்,  பக்.128, விலை ரூ.105,  பெளத்தத் தத்துவ இயல் – பக்.200; ரூ.165; ஐரோப்பியத் தத்துவ இயல் – பக்.124; ரூ.105; இஸ்லாமியத் தத்துவ இயல் – பக்.206; ரூ.170; விஞ்ஞான லோகாயத வாதம் – பக்.164; ரூ.135; ஐந்து நூல்களையும் எழுதியவர்: ராகுல் சாங்கிருத்யாயன்; அனைத்து நூல்களும் தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, பெளத்தத் தத்துவ இயல் – தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு, ஆர்.பார்த்தசாரதி; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., வரலாறு, தத்துவம், அரசியல் என பலதளங்களிலும் புகழ்பெற்ற நூலாசிரியர், உலக […]

Read more

ஸ்ரீ ராமானுஜர் – 1000 ஆண்டுகள்

ஸ்ரீ ராமானுஜர் – 1000 ஆண்டுகள், எஸ்.சுந்தரேசன், சாந்தி பப்ளிகேஷன்ஸ், பக்.240, விலை ரூ.200. அனைத்து எதிர்ப்புகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு விசிஷ்டாத்வைதக் கொள்கையை நாடெங்கிலும் ஆழமாய் வேரூன்றச் செய்து இந்து சமயத்தை நிலைநிறுத்தியவர் ராமானுஜர். அவர் வாழ்ந்த 120 ஆண்டு காலத்தில் வைணவத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள், படைத்த சாதனைகள் ஆகியவற்றை இந்த நூல் விளக்குகிறது. அவர் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறிப்பாக அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுதல், அதை தக்க சமயத்தில் அவருக்குத் தெரிவித்து அவரைக் காப்பாற்றுதல் என அவரின் வாழ்க்கைச் சம்பவங்களை […]

Read more

மறைந்து வரும் மரங்கள்

மறைந்து வரும் மரங்கள், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.116, விலை ரூ.100. உலக அளவில் வெப்பநிலை உயர்வதற்கான காரணங்களில் ஒன்று, மரங்களை வெட்டுவதும். நமதுநாட்டில் பல பாரம்பரிய மரங்கள் பல அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் மரங்களில் இலுப்பை, இலந்தை, மாவிலங்கம், சந்தன வேங்கை, தான்றி, மகிழம், கோங்கு, விளா, சரக்கொன்றை, கடுக்காய், மகாவில்வம், திருவோடு, பூவரசு, வெட்டிவேர், சந்தனம், நாவல், உருத்திராட்சம் உள்ளிட்ட 30 மரங்களைப் பற்றி நாம் அறியாத பல செய்திகள் இந்நூலில் இடம் […]

Read more
1 73 74 75 76 77 180