பெண் கல்விப் போராளி மலாலா

பெண் கல்விப் போராளி மலாலா, ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக்.208, விலை ரூ.180. மலாலா யூசப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரைச் சேர்ந்தவர். பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று தாலிபான் விதித்த தடையை மீறி பள்ளிக்குச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்யும் கொடூரச் செயல்களை குல்மகை என்ற புனைபெயரில் பிபிசியின் உருது வலைப்பதிவில் துணிச்சலாக எழுதினார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதினார். பள்ளிகளை தாலிபான்கள் தடை செய்த போதிலும், பள்ளி மாணவிகளை நச்சுப்புகையால் தாலிபான்கள் கொல்ல […]

Read more

பிசி டாக்டர்

பிசி டாக்டர், தே.ஜீவநேசன், கண்ணதாசன் பதிப்பகம்,  பக்.208, விலை ரூ.130. கணினி இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்டது. இந்நூல் கணினியின் வரலாறு, அவற்றில் உள்ள பல வகைகள், கணினியின் இன்றைய வளர்ச்சி நிலை பற்றி கூறுகிறது. நாம் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் கணினி சார்ந்த பல சொற்களைப் பற்றிய விளக்கங்கள் இந்நூலில் கிடைக்கின்றன. மதர்போர்ட், சிப்செட், போர்ட்ஸ், புராசெசர், ஹார்ட் டிஸ்ஸ் டிரைவ், சிடி, டிவிடி, ஃபிளாப்பி டிஸ்க் டிரைவ், RAM, இன்புட் டிவைஸஸ், யுபிஎஸ், லைட் பென் என கணினியில் உள்ள பல பாகங்களைப் […]

Read more

தமிழ் யாப்பியல் – பன்முக வாசிப்பு

தமிழ் யாப்பியல் – பன்முக வாசிப்பு, சந்தியா பதிப்பகம், மு.கஸ்தூரி, பக்.200, விலை ரூ.180. சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பிற்கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் எனப் பலவற்றிலும் யாப்பியல் தொடர்பான பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன- மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. அவ்வரிசையில் இந்நூலையும் சேர்க்கலாம். இதிலுள்ள ஒன்பது கட்டுரைகளும் யாப்பியல் தொடர்பானவை. செய்யுளில் அமைந்த ஓசை நயத்துக்கு யாப்பமைப்பு எந்த விதத்தில் உதவுகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது இந்நூல். தமிழில் உள்ள இலக்கியங்களின் யாப்பியலை ஆராய்வதன் மூலம் அந்தந்த கால யாப்பியல் வளர்ச்சிகளை வரலாற்று நோக்கில் […]

Read more

இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம், சசிதரூர்; தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்; கிழக்கு பதிப்பகம், பக்.384; விலை ரூ.350/ முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சமஸ்தானங்களாகச் சிதறுண்டு கிடந்த பல பகுதிகளை பிரிட்டிஷார் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய பகுதிகளின் பொருளாதாரத்தைச் சுரண்டி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்தினர். இந்திய பருத்தியைக் கைப்பற்றிக் கொண்டு சென்று, முழுமை அடைந்த உடைகளாகத் திரும்பவும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தனர்'. ரயில் போக்குவரத்து வந்த பிறகு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இருந்த உபரிகள் சுரண்டப்பட்டன. நகர்ப்புற பெரும் வணிகர்கள், ஏற்றுமதியாளர்களுடன் இந்திய […]

Read more

மார்க்ஸ் எப்படி இருப்பார்?

மார்க்ஸ் எப்படி இருப்பார்?, எஸ்.தோதாத்ரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.140, விலை ரூ.120. 2013 இலிருந்து 2016 வரை மூன்றாண்டுகளில் நூலாசிரியர் எழுதிய 27 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். எல்லாக் கட்டுரைகளும் காரல் மார்க்ஸுடனும், மார்க்சியத்துடனும் தொடர்புடையவை. மார்க்ஸ் என்ற மனிதரின் தோற்றம், உழைப்பு, பழக்க, வழக்கங்கள், பண்புகள், அவருக்குப் பிடித்தமான நூல்கள், அவருடைய மனைவி ஜென்னியிடம் அவர் கொண்டிருந்த ஆழமான காதல் என முதல் நான்கு கட்டுரைகள் மார்க்ஸ் என்ற மனிதரைப் பற்றியவையாக உள்ளன. மார்க்ஸ் காலத்தில் வாழ்ந்த அவருடைய […]

Read more

பெரியாழ்வார்

பெரியாழ்வார், ம.பெ.சீனிவாசன், சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ.50. தமிழ் மொழியில் தோன்றியது போல் வேறு எந்த மொழியிலும் இவ்வளவு அதிகமான பக்தி இலக்கியங்கள் படைக்கப்படவில்லை. பக்தி இலக்கியத்தின் தொடக்கம் சங்ககாலத்திலேயே அறியப்பட்டாலும் நாயன்மார், ஆழ்வார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது. அதிலும் பன்னிரு ஆழ்வார்களின் படைப்புகள் திருமாலின் பெருமையைப் பாடிச் செல்வதால் ஆழ்வார்களை மால் உகந்த ஆசிரியர் என்று அழைப்பர். அவர்களுள் பெரியாழ்வாரின் படைப்புகளையும் அதன் தனிச் சிறப்புகளையும் பற்றிப் பேசுவதுதான் இந்நூல். அறிமுகம் , வாழ்க்கையும் படைப்பும், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் […]

Read more

ஸ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனையின் வழிமுறைகள்

ஸ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனையின் வழிமுறைகள், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், பக்.320, விலை ரூ.190. சங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவர் நாதபிரம்மமான தியாகராஜர். இவர் ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை உருவாக்கி இருக்கிறார். இக்கீர்த்தனைகள் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை. தியாகய்யாவின் நாதோபாசனையானது தம்பூராவை மீட்டி கைத்தாளம் போட்டு இக்கீர்த்தனை, இந்த ராகம், அந்த தாளம் என்று பகுப்பாய்வு செய்து பாடும் முறையன்று. மாறாக, தெய்வீக கீர்த்தனைகள் மூலம் பஞ்ச பூதங்களும் மற்றும் பிராகிருதியின் செயல்களை அடக்கி வைக்கும் முறையே நாதோபாசனை ஆகும். இந்த நாதோபாசனை முறையில் இறைவனை வழிபட்டவரே […]

Read more

திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், மூன்று காண்டங்கள்: மதுரைக்காண்டம், பக்.668, கூடற்காண்டம், பக்.560, திருவாலவாய்க் காண்டம், பக்.528, (மூலமும் உரையும்), உரையாசிரியர்: பழ.முத்தப்பன், சகுந்தலை நிலையம், மூன்று காண்டங்களும் சேர்த்து விலைரூ.1200. திருவிளையாடற் புராணம், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய மூன்றும் சைவ சமயத்தின் மூன்று கண்களாகத் திகழ்பவை. நான்கு திருவிளையாடற் புராணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் புலியூர் நம்பியும், பரஞ்சோதி முனிவரும் இயற்றியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பரஞ்சோதியாருடையது கூடுதல் சிறப்புடையது. மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கும் இந்நூல்கள் மதுரைக்காண்டம் (18 படலங்கள்), கூடற்காண்டம் (30 படலங்கள்), […]

Read more

மனித யந்திரம்

மனித யந்திரம், சின்னப்ப பாரதி, கோரல், பக். 119, விலை ரூ.100. சமூகத்தின் விளிம்புகளில் வாழ்ந்து வருவோர் குறித்து தொடர்ந்து எழுதி பரவலான வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. ஊரில் எல்லாருடைய இழுப்புக்கும் இசைந்து கொடுக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளி வீரன் முதல், வாழ்க்கைப்பட்ட வீட்டில் அனைவருக்கும் இசைந்து கொடுக்கும் இல்லத்தரசி, ஒரு காவல் நிலையத்தையே தனது இல்லமாக்கிக் கொண்டு அங்கு நடைபெறும் அநீதிகளின் ஏக நேரடி சாட்சியான போதிலும், அந்த அநீதிகளுக்கு இசைந்து […]

Read more

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை….

தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை…., சி.இளங்கோ, அலைகள் வெளியீட்டகம், பக்.112,  விலை ரூ.80. தமிழக வரலாற்றைத் தெரிந்து கொள்ள தொல்லியல் ஆய்வுகள் உதவுகின்றன. இந்நூல் அத்தகைய ஆய்வுகளைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. சென்னை பல்லாவரம் செம்மண் மேட்டுப் பகுதி, திருவள்ளூர் மாவட்டம் கொற்றலையாற்றுப் படுகை, அத்திரம்பாக்கம் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் கிடைத்த பல்வேறு கல் ஆயுதங்கள், கற்கால மனிதர்கள் தங்கியிருந்த குகைகள், கைக்கோடரிகள், தென்னார்க்காடு, வடஆர்க்காடு, தர்மபுரி, நீலகிரி மலைத்தொடர், தேனி மாவட்டப் பகுதிகள், மதுரை அருகேயுள்ள குன்றுகளில் வரையப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் போன்ற […]

Read more
1 74 75 76 77 78 180