தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்

தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள், பின்னலூர் மு.விவேகானந்தன், நர்மதா பதிப்பகம், பக். 304, விலை 150ரூ. வழக்குரைஞர்களாகவும், நீதிபதிகளாகவும் பணியாற்றிய சிலர், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் ஏற்றம் தந்திருக்கிறார்கள். அந்த வகையில், இலக்கிய தமிழ், இலக்கணத்தமிழ், சங்கத்தமிழ், சமயத்தமிழ், அறிவியல் தமிழ், சட்டத்தமிழ், வரலாற்றுத் தமிழ், மொழிபெயர்ப்புத் தமிழ், பதிப்புத் தமிழ், ஆய்வுத் தமிழ் மொழியியல் ஆட்சித் தமிழ் முதலிய பல்வேறு தளங்களில் தமிழ் வளர அரும்பாடுபட்டவர்கள். அவர்களுள் 34 பேரைப் பற்றியும், அவர்கள் செய்த தமிழ்த்தொண்டுகளைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. சிறுகதையின் […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா. கணேசன், விகடன் பிரசுரம், பக். 216, விலை 160ரூ. இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல். கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் […]

Read more

லீ குவான்யூ, பெருந்தலைவன்

லீ குவான்யூ, பெருந்தலைவன். பி.எல். ராஜகோபாலன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 200ரூ. எதுவுமே இல்லை என்ற நிலையிலிருந்து எல்லாமே சாத்தியம் என்பதை சாதித்துக் காட்டியவர் லீ குவான்யூ. அவருடைய வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நூல். நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை கீழே வைக்க முடியாத அளவுக்கு எளிமையும், சுவையும் ஈர்ப்பும் கொண்டதாக இருக்கிறது இந்நூல். 1959-இல் அவர் பிரதமராகப் பதவியேற்றபோது எதிர்கொண்ட சவால்கள், சூதாட்ட விடுதிகளை தொடங்க அனுமதி மறுத்தது, பொது இடங்களில் எச்சில் […]

Read more

பாரில் அதிசயம் பாரதி

பாரில் அதிசயம் பாரதி. சீனி.விசுவநாதன், பக்.288.  விலை ரூ.200. தமிழில் ஒரு கவிஞரைப் பற்றி அதிக நூல்கள் வெளிவந்திருக்கிறது என்றால், அது பாரதியாரைப் பற்றித்தான் இருக்கும். ஆயினும், ஒவ்வொரு நூலிலும் அவரைப் பற்றி அறியப்படாத செய்திகள் ஒரு சிலவாவது இடம் பெற்றுக் கொண்டே இருப்பது வியப்பானதுதான். இந்த நூலில் “அறிதொறும் அறியாமை’ சற்று அதிகமாகவே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்நூலை எழுதியிருப்பவர் அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து பாரதி ஆய்வில் ஈடுபட்டுவரும் சீனி.விசுவநாதன் என்பதுதான் (பாரதியின் எழுத்துகள் அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து 16 தொகுதிகளாக […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா.கணேசன், விகடன் பிரசுரம், பக்.216, விலை .ரூ.160; இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல். கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியது, […]

Read more

தினமணியின் தமிழ்ப்பணி

தினமணியின் தமிழ்ப்பணி, பதிப்பாசிரியர்: கு.வெங்கடேசன், டுடே பப்ளிகேஷன்ஸ், பக்.122, விலை ரூ.100. தினமணியின் தமிழ்ப் பணி என்பது நூலின் தலைப்பாக இருந்தாலும், தினமணி நாளிதழ் மற்றும் இணைப்புகளில் வெளிவரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது. பதிப்பாசிரியர் கு.வெங்கடேசன் உட்பட எழுவர் எழுதிய 13 கட்டுரைகளின் தொகுப்பு இது. தற்கால தமிழ் இலக்கணக் கட்டமைப்புக்கு தினமணி எவ்வாறு உதவுகிறது? தமிழ்மணியின் சொல்தேடலும், சொல்புதிதும் புதிய தமிழ்ச்சொற்களை உருவாக்கியவிதம், தமிழ்மணியில் இடம் பெற்ற பழந்தமிழிலக்கியம் தொடர்பான கட்டுரைகளின் சிறப்பு என தினமணியின் தமிழ்ப்பணியை விரிவாக இந்நூல் […]

Read more

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார்

தமிழ்க்கதிர் வ.சு.ப.மாணிக்கனார், இரா.மோகன், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 230, விலை 150ரூ. தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நூல் இது. ஒருவரது நூற்றாண்டு விழா எனில் அவரது வாழ்க்கை வரலாறு, படைப்புகள், விருதுகள் என தனிப்பெருமை போற்றும் வழக்கமான நிலையில், வ.சுப.மாணிக்கனாரின் தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக்கியிருக்கிறது. தொல்காப்பியத்தை மற்ற பேராசிரியர்களிலிருந்து வ.சுப.மாணிக்கனார் எப்படி வேறுபட்டு பார்க்கிறார் என்பது மிக நுட்பமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்துறை ஆராய்ச்சிக்கு உரியதாக வளர்ந்தாலும், யாப்பு குறித்த ஆய்வு […]

Read more

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் ஒரு தகவல் கோட்பாடு அணுகுமுறை

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் ஒரு தகவல் கோட்பாடு அணுகுமுறை, சு. சீனிவாசன், அறிவில் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, பக். 264, விலை 250ரூ. இன்றைய சூழலில் கணினி நம் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றது. ஆயினும் தமிழ்வழிக் கல்வி கற்ற ஒருவர் கணினிகளை எங்ஙனம் இயக்க இயலும் என்பதும், மொழி குறித்த ஆய்வுக்கு கணினி எவ்வகையில் துணைபுரியும் என்பதும் நீண்ட நாள்களாக நிலவிவரும் ஐயங்களாக இருக்கின்றன. இந்தப் பொருண்மையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே உள்ளன. தமிழில் மிக […]

Read more

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம், (தொல்லியல் நோக்கில் சங்ககால நில வரைபடம்), சி. இளங்கோ, அலைகள் வெளியீட்டகம், பக். 160, விலை 120ரூ. இன்று கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் வீடு இருக்கும் தெருவரை நில வரைபடத்தில் (ஙஅட) வந்துவிட்டது. மின்சாரமோ, போக்குவரத்து வசதியோ இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் நிலவரைபடம் இருப்பதற்கான சாத்தியம் அறவே இல்லை. எனினும், அக்காலத்தில் வணிகம் நடைபெற்றிருக்கிறது. ரோமிலிருந்து முசிறி துறைமுகம் வரை வந்து வணிகம் செய்திருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் நில வரைபடத்தை […]

Read more

நெஞ்சில் நிறைந்த ஏ.என்.

நெஞ்சில் நிறைந்த ஏ.என்., டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், பக். 272, விலை 160ரூ. சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் (ஏ.என்) அவர்களின் நட்பு வட்டம் எத்துணை பெரியது? எத்தகைய சான்றோர்களுடன் அவர் பழகி இருக்கிறார்? ஓர் உற்ற நண்பனாக, உடன் பிறவாச் சகோதரனாக, சரியான நேரத்தில் சரியான ஆலோசனை வழங்குபவராக, திறமைசாலிகளை இனம் கண்டு ஊக்குவிக்கும் ஆசானாக, எளியோர்களை வளர்த்துவிட்ட வழிகாட்டியாக என பல்வேறு ரூபங்களில், எண்ணற்ற இதயங்களில் வியாபித்திருக்கும் அவரின் வாழ்க்கைப் பயணத்தின் வரலாற்றுப் பதிவாக மலர்ந்திருக்கிறது […]

Read more
1 93 94 95 96 97 180