தமிழர் நாகரிகமும் பண்பாடும்

தமிழர் நாகரிகமும் பண்பாடும், அ.தட்சிணாமூர்த்தி, ஐந்திணை பதிப்பகம்,  பக்.576, விலை ரூ.350. தமிழர்களின் பண்பாடும் நாகரிகமும் மிகவும் தொன்மையானது. பன்னெடுங்காலத்திற்கு முன்பே அவர்கள் அகப்புற வாழ்வில் சிறந்தோங்கி இருந்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள நம் பண்டைத் தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தெள்ளத் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. தொன்மைக் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, அரசியல் மற்றும் இசை, கூத்து, ஓவியம், சிற்பம் முதலிய கலைகள்; பல்லவர், சோழர், நாயக்கர் முதலியோர் காலத்தில் நிலவிய அரசியல்; பெளத்தம், சமணம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய சமயங்களின் […]

Read more

திரை இசைத் திலகங்கள்

திரை இசைத் திலகங்கள், வி.ராமமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.224. விலை ரூ.180. இசையமைப்பாளர்கள் ஜி.ராமநாதன் முதல் இளையராஜா வரையிலான ஐம்பத்திரண்டு இசைக்கலைஞர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர்களின் பங்களிப்புகள்; அனுபவங்கள் குறித்து விவரிக்கும் நூல். இசையமைப்பாளர்கள் தவிர, பாடி நடித்த நடிகர்- நடிகைகள் மற்றும் பிரபல பின்னணி பாடகர்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா, என்.சி.வசந்தகோகிலம், எம்.எல்.வசந்தகுமாரி, பி.ஜெயச்சந்திரன் முதலானவர்கள் குறித்த தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சி.ஆர் சுப்பராமனின் திடீர் மறைவுக்குப் பின் அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி தனித்து இசையமைக்கத் தொடங்கியது, எம்.ஜி.ஆர். படத்துக்கு […]

Read more

இல்லுமினாட்டி- உலகையே நோட்டமிடும் கண்கள்

இல்லுமினாட்டி- உலகையே நோட்டமிடும் கண்கள் – கார்த்திக் ஸ்ரீநிவாஸ், வானவில் புத்தகாலயம்,  பக்.176, விலை ரூ.133. அண்மைக்காலமாக முகநூல், சுட்டுரைகளில் மிகவும் பரபரப்பாகச் சுட்டப்படும் சொல் இல்லுமினாட்டி. ஒளிபொருந்தியவர்கள், ஞானிகள் என இச்சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டாலும், நவீன யுகத்தில் சர்ச்சைக்குரிய குழுக்கள், உலகத்தின் மூளைகள் என்பார்களாம். காசேதான் கடவுளடா, கடவுள் பாதி மிருகம் மீதி… என விறுவிறுப்பைக் கூட்டும் தலைப்புகளோடு 15 அத்தியாயங்கள். இந்தக் கிரகத்தையே ஆள்வதுதான் இல்லுமினாட்டிகளின் நோக்கம். மிக்கி மெளஸ் நாயகன் வால்ட் டிஸ்னி, இல்லுமினாட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். மூளைச்சலவை […]

Read more

செவ்வியல் இலக்கியங்கள் பன்முகப் பார்வை

செவ்வியல் இலக்கியங்கள் பன்முகப் பார்வை; தலைமைப் பதிப்பாசிரியர்: ப.முருகன்; இணைப் பதிப்பாசிரியர்:ஆ.இரமேஷ்; தொகுதி-1, பக்.520, விலை ரூ.330; தொகுதி-2 பக்.552, விலைரூ.350; தொகுதி-3, பக்.504, விலை ரூ.330; தொகுதி-4, பக்.504, விலை ரூ.320. சென்னை அரும்பாக்கம், துவாரகதாஸ் கோவர்த்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை மற்றும் தமிழ் இலக்கியத் துறை இணைந்து மார்ச் மாதம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள், நான்கு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 290 ஆய்வுக் கட்டுரைகள். அவற்றுள் தெலுங்குக் கட்டுரை ஒன்றும், இந்திக் கட்டுரைகள் இரண்டும், பன்னிரண்டு ஆங்கிலக் […]

Read more

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும், செ. திவான், சுஹைனா பதிப்பகம்,  பக்.216, விலை 200ரூ. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றி தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியபோது அதை எதிர்த்து, தனி நபராகவோ, கூட்டாகவோ வன்முறை வழியில் போராட்டங்கள் நடத்தி, தியாகங்கள் பல புரிந்து தம் இன்னுயிரைத் துறந்தவர்கள் ஏராளம். அவர்களில் பலரையும், அவர்கள் நிகழ்த்திய போராட்டங்களையும் இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது. மக்களின் மன எழுச்சியினாலும், வரலாற்றின் மறுமலர்ச்சியாலும் புரட்சி இயக்கங்கள் பல தோன்றி வளரத் தொடங்கின. குறிப்பாக சாபேகர் சகோதரர்களிடம் காணப்பட்ட ஆர்வமும் […]

Read more

மனச்சிறையில் சில மர்மங்கள்

மனச்சிறையில் சில மர்மங்கள், ஷாலினி, விகடன் பிரசுரம், பக்.96, விலை ரூ.90. சென்னை-2. வெளியே பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத உடல், மனநலப் பிரச்னைகள் உள்ளவர்கள், அதைப் பற்றிக் கூறப்படும் பல்வேறு தவறான கருத்துகளின் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். மருத்துவ வியாபாரிகள் மனிதர்களின் இம்மாதிரியான அந்தரங்கமான பிரச்னைகளைப் பற்றி தவறாகப் பிரசாரம் செய்து, மக்களிடம் இருந்து பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தவறான கருத்துகளுக்கு மாற்றாக சரியான கருத்துகளை உளநலவியல் நிபுணரான நூலாசிரியர், இந்நூலில் முன் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். தோலில் பரு, […]

Read more

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு (அறிவியல் சிறு கதைகள்), க.மண, அபயம் பதிப்பகம், பக்.177, விலை ரூ.120. “மனித உணர்ச்சிகளுக்கு இடமில்லாத அறிவியல் தொழில்நுட்பத் தகவல்கள், காய்ந்த ரொட்டிகள் 39” என்று நூலின் முன்னுரையில் கூறும் நூலாசிரியர், இந்நூலில் உள்ள சிறுகதைகளை காய்ந்த ரொட்டித் தகவல்களாக உருவாக்காமல், சுவை மிக்கதாக உருவாக்கியிருக்கிறார். கடந்தகாலத்துக்குச் சென்று, விருப்பப்பட்ட மிருகத்தை வேட்டையாடலாம் என்று சென்ற ஏகாம்பரம், கடந்த காலத்துக்குச் சென்ற பின்பு, “அதில் எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அந்தக் கடந்த காலத்துக்குப் பின்பு, பலதலைமுறைகளில் ஏற்கெனவே […]

Read more

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்

புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.184, விலை ரூ.140. தமிழ் இலக்கியத் திறனாய்வுகள், திறனாய்வு செய்பவரின் வாழ்க்கைப் பார்வையிலிருந்து பலவிதமாக வெளிவந்திருக்கின்றன. இலக்கியத்தை ரசனை அடிப்படையில் விமர்சிப்பவர்களும், இலக்கியத்தின் வெளிப்பாட்டு அம்சத்தைப் பிரதானப்படுத்தி அழகியல் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும், இலக்கியம் எந்தக் கருத்தைச் சொல்கிறது என்ற அடிப்படையில் சமூகக் கண்ணோட்டத்துடன் விமர்சிப்பவர்களும் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்களே. ஆனால் இந்நூலின் விமர்சனப் பார்வை சற்றே வித்தியாசமானது. உளவியல் அறிஞர்களான ஃப்ராய்ட், யூங், லக்கான் ஆகியோரின் உளவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான […]

Read more

டேவிட்டும் கோலியாத்தும்

டேவிட்டும் கோலியாத்தும், மால்கம் கிளாட்வெல், தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 352 , விலைரூ.300. பின்தங்கியவர்கள், பொருந்தாதவர்கள் எனக் கருதப்படுவோர் – பேராற்றல் வாய்ந்தவர்களாகக் கருதப்படுவோரை, தங்களது போராட்டத்தின் மூலம் எதிர்கொண்டு, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்றுவிடுகிறார்கள் என்ற கருத்தை பல்வேறு உண்மை நிகழ்வுகளை உதாரணம் காட்டி இந்நூல் விளக்குகிறது . முதலாம் உலகப் போரின் முடிவில், அரேபியாவை ஆக்கிரமித்திருந்த துருக்கியின் வலிமையான ராணுவத்தை, முறையான போர் உத்திகளை அறியாத பழங்குடியின மக்களைக் கொண்டு வீழ்த்திக் காட்டிய டி.இ.லாரன்ஸ், டிஸ்லெக்சியாவால் […]

Read more

சார்த்தா

சார்த்தா, கன்னடம் எஸ்.எல். பைரப்பா, தமிழில் ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் பதிப்பகம், பக். 408, விலை 300ரூ. “சார்த்தா‘’ – இந்த நாவல் ஒரு கற்பனைதான் என்றாலும் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் சரித்திரப் பின்னணியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. வியாபாரம் செய்வதற்காக பொருள்களை ஏற்றிக்கொண்டு தொலைதூர நாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்வதை சார்த்தா என்று சொல்வார்கள். நீண்ட நெடிய சரித்திரத்தின் ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த அபூர்வமான சம்பவங்கள் உயிரோட்டமுள்ள நாவலாக மலர்ந்திருக்கிறது. கொள்ளை, வழிப்பறிகளுக்கு அஞ்சி அதற்கு தக்க காவல் மறவர்களின் துணையோடு வியாபாரம் […]

Read more
1 92 93 94 95 96 180