பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீ பாலகங்கா பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 90ரூ. பாரத நாடு பாருக்கெல்லாம் அளித்த ஞானக் கொடை பகவத் கீதை. உள்ளம் தெளிவுற உலகோர் கீதையை படிக்கின்றனர். கீழைக்கு ஆதிசங்கரர் முதல் பலரும் வடமொழியில் விளக்கம் எழுதியுள்ளனர். பகவத் கீதை வெண்பா, பாரதியார் விளக்கம், கண்ணதாசன் விளக்கம், சுவாமி சித்பவானந்தர் ஆராய்ச்சி விளக்கம் எனப் பல நூல்கள் கீதைக்கு தமிழாக்கமாக வந்துள்ளன. இந்நூலில், 18 அத்தியாயங்களும் தெளிவுரையாக விளக்கம் தரப்பட்டுள்ளன. சுலோகங்களே இல்லாமல் கருத்துக்களைத் தொகுத்துள்ளார். அன்றாட […]

Read more

பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீ பாலகங்கை பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 90ரூ. ‘பகவத் கீதை’ என்பது கிருஷ்ணன் அர்சுனனுக்கு கூறிய அறிவுரையாக மட்டுமல்ல… சாதாரண வாழ்க்கையைச் சிறப்பாக வாழ நினைப்பவர்களுக்கும், உயர் வாழ்க்கையைத் தேடுபவர்களுக்கும் காலங்காலமாக வழிகாட்டியாக இருந்து வந்துள்ளது என்பதை எளிய முறையில் விளக்கிச் செல்வதாகும் என்பதை எடுத்துக்காட்டும் நூல். -இரா.மணிகண்டன். நன்றி: குமுதம், 11/1/2017.

Read more

பகவத் கீதை

பகவத் கீதை, புலவர் கோ. அருளாளன், ஸ்ரீபாலகங்கை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. மகாபாரதத்தில் முக்கியமான பகுதி பகவத்கீதை. போர்க்களத்தில், “உறவினர்களை கொன்று குவிப்பதா?” என்று சோர்வு அடையும் அர்ச்சுனனுக்கு கண்ணன் செய்யும் உபதேசமே பகவத்கீதை. இதில், மனிதர்களின் கடமை, நீதி – அநீதி பற்றிய விளக்கம், மனித குலம் அறிய வேண்டிய உண்மைகள் யாவும் அடங்கியுள்ளன. பகவத் கீதையை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம், எளிய – இனிய நடையில் எழுதியுள்ளார், புலவர் கோ. அருளாளன். நன்றி: தினத்தந்தி, 4/1/2017.

Read more

தஞ்சைப் பெரியகோயில்

தஞ்சைப் பெரியகோயில், முனைவர் வி.அ. இளவழகன், பூங்கொடித் தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 160ரூ. மழைநீர் சேமிப்பில் முன்னோடியாகத் திகழ்கிறது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எடுப்பிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில். இந்த ஆலயம் அமைந்துள்ள 3,32,000 சதுர அடி நிலப்பரப்பில் மாதம் மும்மாரி பொழிந்த தண்ணீரெல்லாம் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு நான்கு நீர்த்தாரைகளின் வழியே சென்று ஆலயத்தின் வடபுறம் உள்ள சிவகங்கைக் குளத்தை சென்றடையுமாம். இது சிவபெருமானின் திருமுடிமீது பொழியும் கங்கை நீராகக் கருதப்பட்டதாம். இப்படிச் சேகரிக்கப்பட்ட தூய மழைநீர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரைகூடத் தஞ்சாவூரின் […]

Read more

சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக அருகில், விஸ்வபாரதி, காவ்யா, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-221-8.html இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. பன்னிரெண்டு சிறுகதைகள். வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களைக் கதைக் களமாக வைத்து, எழுதப்பட்டவை. புத்தகத்தின் தலைப்பாகத் தேர்வு செய்துள்ள கதையில், வீடு தேடும் இன்றைய மத்திய வர்க்க மக்களின் ஆர்வமும், தேடலும் மிக நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கடைசிக் கதை வடக்கத்தி பையன், நம்மை யோசிக்க வைக்கிறது. கதைகளின் வரிசைப்படி பொருளடக்கம் இல்லை. புத்தகத் தயாரிப்பில் இது அவசியமல்லவா? -ஜனகன். நன்றி: […]

Read more