நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், பாகம் ஒன்று, ஓஷோ, தமிழில் சிவதர்ஷிணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 356, விலை 210ரூ. உலகில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகமும் கிரேக்க அறிஞர் பிதாகோரஸ் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. அதற்கான எளிய காரணம், வழக்கமான வகையைச் சேர்ந்த கல்வியாளராக அவர் இருக்கவில்லை. அவர் நிஜமான தேடல் கொண்டிருந்தார். தன் வாழ்நாள் முழுவதையும் பயணத்திலேயே கழித்தார். ஞானத்தின் ஒளிக்கீற்று எங்காவது ஒரு மனிதரிடம் சற்றே தென்பட்டாலும் அங்கு சென்று அவரிடம் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும் என்று எண்ணினார். […]

Read more

செந்தமிழில் சமண நூல்கள்

தமிழுக்கு சமணர் அளித்த கொடை செந்தமிழில் சமண நூல்கள், கரந்தை அ. சுகுமாரன், பக். 284, விலை 100ரூ. சமண சமயத்தினர் தமிழுக்களித்த நூற்கொடைகள் பல. காப்பியங்கள், இலக்கணங்கள், உரைகள், இலக்கியங்கள், நிகண்டுகள் ஆகிய வகைமைகளில் சமணப் புலவர்களின் படைப்புகள் பலவாகும். சிற்றிலக்கிய வகையிலும் சமணப் புலவர்களின் பங்களிப்பும் பெரிதே என இந்நூல் மெய்ப்பிக்கிறது. சமண சமயத் திங்களிதழ் ஒன்றில் இவ்வாசிரியர் எழுதிய, 120 கட்டுரைகளில் முதல், 60 கட்டுரைகள், ‘ஜைன நூல்களை அறிவோம்’ என்னும் தலைப்பில் முன்னதாக வெளிவந்துள்ளது. எஞ்சிய, 60 கட்டுரைகள் […]

Read more

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள், சல்மான் ருஷ்தீ, தமிழில் சா. தேவதாஸ், எதிர் வெளியீடு, பக். 352, விலை 320ரூ. நம் உலகம் அறிவற்றதின் காலத்திற்குள்ளே மூழ்கி இருந்துள்ளதை இந்த நூல் விவரிக்கிறது. பல அடுக்குகள் மிக்கதும், வசீகரமானதாயும் உள்ள நாவல் இதுவாகும். மிகச் சிறந்த நாவல். ஆசிரியர் சல்மான் ருஷ்தீயின் சாதனைப் படைப்பாகும். ருஷ்தீ நம் காலத்தின் மகத்தான கதை சொல்லி என்று, ‘நியூயார்க் டைம்ஸ்’ பாராட்டியுள்ளது. ஆங்கிலத்தில் எழுதிய நாவலை சா.தேவதாஸ் மிகச் சிறந்த முறையில் தமிழில் வெளியிட்டுள்ளார். […]

Read more

மாணவர்களுக்கான தமிழ்

மாணவர்களுக்கான தமிழ், என்.சொக்கன்,  கிழக்கு பதிப்பகம், பக்.232, விலை ரூ.200. ஆங்கிலவழியில் பயில்வது இன்று அதிகமாகிவிட்டதால், தமிழில் எழுதும்போது பல ஐயங்கள் தோன்றுவது இயல்பானதே. அதிலும் இன்று நாம் பயன்படுத்துகிற பல சொற்களைத் தவறாகவே எழுதிக் கொண்டிருக்கிறோம். அவற்றைச் சரியென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்நூல் அப்படிப்பட்ட ஐயங்களைத் தீர்த்து வைக்கிறது. தேநீர், தேனீர் இவற்றில் எது சரி? எண்ணெய் சரியா? எண்ணை சரியா? ஐம்பத்து ஏழு என்று குறிப்பிடுவது சரியா? ஐம்பத்தி ஏழு என்பது சரியா? சென்னை பட்டணம், நாகப்பட்டினம் என்று சொல்கிறார்களே… பட்டணத்துக்கும் பட்டினத்துக்கும் […]

Read more

பாகுபலி தொடக்கத்திற்கு முன் – சிவகாமி பர்வம்

பாகுபலி தொடக்கத்திற்கு முன் – சிவகாமி பர்வம், ஆனந்த நீலகண்டன், தமிழாக்கம் மீரா ரவிசங்கர், விலை 299ரூ. பாகுபலி தொடக்கத்திற்கு முன் டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில், “பாகுபலி 2” வெளிவந்து, வசூலில் புரட்சி செய்து வருகிறது. ரூ. 500 கோடியில் தயாரித்த படத்திற்கு, ஒரே வாரத்தில் ரூ.1000 கோடி வசூல். இந்தப்படத்தில் சிவகாமி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். சிவகாமியின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதத்தில் “சிவகாமி பர்வம்” என்ற இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சிவகாமிக்கு ஐந்து வயதாகும்போது அவளுடைய தந்தை […]

Read more

கர்ப்ப வித்யா

கர்ப்ப வித்யா, ஆண்டாள் பாஸ்கர், ஆண்டாள்ஸ் லக்ஷ்மி ஃபெர்டிலிட்டி ரிசர்ச், பக்.192, விலை ரூ.250. குழந்தைகள் பிறந்தவுடன்தான் அவர்களுக்கு அறிவு, மனவளர்ச்சி ஏற்படும் என்பதில்லை, அவர்கள் கருவிலிருக்கும்போதே அவற்றைப் பெறுகிறார்கள் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வயிற்றில் உள்ள குழந்தையுடன் தாய் பேசுவதால், அது குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, கர்ப்பிணி பெண்ணின் உடல், மனம், புலன்கள், உணர்வுகள் ஆகிய நான்கையும் சமநிலையில் வைக்க முடியும் என்று கூறும் நூலாசிரியர், கருவிலிருக்கும் குழந்தையுடன் தாய் எவ்வாறு பேச வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார். கருவிலிருக்கும் […]

Read more

பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி

பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி,  சமர் யாஸ்பெக், தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, பக்.344, விலை ரூ.320 சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நூலாசிரியர் தற்போது வசிப்பது பாரிஸ் நகரில். எனினும் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் தாய்நாடான சிரியாவுக்கு யாருக்கும் தெரியாமல் துணிச்சலுடன் நான்கு முறை எல்லைத் தாண்டிச் சென்று, சிரியா மக்களின் இன்றைய அவல வாழ்க்கையை இந்நூலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார். சொந்த மக்களின் மீதே வெடிகுண்டுகளை வீசுகிற அரசுக்கும், மரண வெறி கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அல்லல்படும் […]

Read more

நிழல் படம் நிஜப் படம்

நிழல் படம் நிஜப் படம்,  யுகன்,  நற்றிணை பதிப்பகம், பக். 167, விலை ரூ. 300. திரைப்பட ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட அரசியல் படங்களில் (கட்சி அரசியல் அல்ல) இருபத்தேழு படங்களைத் தேர்ந்தெடுத்து அவை பற்றி விரிவாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இத்தொகுப்பில் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களும், சில இந்திப் படங்களும், மிகக் குறைவான மலையாளப் படங்களும் இடம்பெற்றுள்ளன. (தமிழில் ஒன்றுகூடவா இல்லை?) தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகப் போராடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த நெல்சன் மண்டேலாவைப் பற்றிய ‘மண்டேலா – லாங் […]

Read more

யாதும் ஊரே

யாதும் ஊரே – 2ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்; பதிப்பாசிரியர்கள்: ப.முத்துக்குமார சுவாமி, கிருங்கை சேதுபதி, சொ.அருணன்; தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், பக்.800. விலை ரூ.1000. தமிழகம், அயலகம் எனும் இரு பகுப்புகளை உடையதாக இம்மலர் மலர்ந்துள்ளது. தமிழர்க்கு, மொழி வளர்ச்சி, இலக்கணம், வரலாறு, கலை, இலக்கியம், சமயம், அறிவியல், அயலகம் ஆகிய ஒன்பது பெருந் தலைப்புகளில் இம் மாநாட்டு மலர் கட்டமைக்கப்பட்டுள்ளது. தொல் தமிழின் மாண்புகள், தமிழரின் தொல் மரபு தொடங்கி அறிவியல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் தற்போது கணினித் […]

Read more

விடுதலை வேந்தன் விஸ்வநாத தாஸ்

விடுதலை வேந்தன் விஸ்வநாத தாஸ், முனைவர் ப. பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக். 136, விலை 75ரூ. இந்திய விடுதலை போராட்ட வீரர்களுள் குறிப்பிடத்தக்கவர் விசுவநாத தாஸ். தன் நடிப்பாலும், மேடை நாடகப் பாடல்களாலும் மக்களிடத்தில் சுதந்திர உணர்வை ஊட்டியவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்று துன்புற்றவர். வறுமையில் துன்புற்ற போது, ஆங்கிலேய கவர்னர் பொருளாதார உதவி செய்ய முற்பட்ட போது, மறுத்துவிட்டு வறுமை யில் வாடியவர் விஸ்வநாத தாஸ். அண்ணல் காந்திஜி, நேருஜி, வ.உ.சி., பசும்பொன் முத்துராமலிங்கம் முதலானோர் இவருடைய பாடல்களை […]

Read more
1 4 5 6 7 8 9