பா.ராகவனின் புத்தகங்கள்

அரசியல் 1. பாக். ஒரு புதிரின் சரிதம் 2. டாலர் தேசம் 3. நிலமெல்லாம் ரத்தம் 4. மாயவலை 5. அல் காயிதா: பயங்கரத்தின் முகவரி 6. ஹிஸ்புல்லா 7. ஓம் ஷின்ரிக்கியோ 8. ஈ.டி.ஏ. 9. ஜமா இஸ்லாமியா 10. தாலிபன் 11. கொலம்பிய போதை மாஃபியா 12. ஹிட்லர் 13. ஐ.எஸ்.ஐ: நிழல் அரசின் நிஜ முகம் 14. 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி 15. பர்வேஸ் முஷாரஃப் 16. மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும் 17. ஆர்.எஸ்.எஸ்: வரலாறும் அரசியலும் 18. […]

Read more

பெரிய புராணம் எளிய நடையில்

பெரிய புராணம் எளிய நடையில், பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ. சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம். சேக்கிழார், காவிய வடிவில் இந்தப் பெருநூலைப் பாடித் தந்தார். அதை எளிய உரைநடையில் தரும் முயற்சி நீண்ட காலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு உரைநடையில் பெரியபுராணத்தை வழங்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது இந்நூல். எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியச் சுவையுடன் இதை எழுதியுள்ள பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

இட்டாரிச் சீமை

இட்டாரிச் சீமை, தீபிகா முத்து, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. சொற்களைத் தேடிப் பிடித்து இழுத்து வந்து, இங்கேதான் உட்கார வேணடும் என்ற அதிகார மொழி இக்கவிதைகள்ல இல்லை. எல்லாம் இயல்பாய், வட்டார மொழியின் அசைக்க முடியாத மண்வாசனையாய் கவிதைகள் தடம் பதித்துள்ளன. இட்டாரிச் சீமை வழி ஒரு கிராமத்தில் வாழ்ந்து பார்த்த வாழ்க்கையைச் சுமந்து செல்லும் ஒவ்வொரு மனிதர்களையும் மனங்களையும் நமக்குத் துணையாக அனுப்பியுள்ளார் கவிதை வரிகளால். நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

தண்ணீர் யாத்திரை

தண்ணீர் யாத்திரை, எஸ். அருள்துரை, வைகறை வெளியீடு, பக். 104, விலை 50ரூ. எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினைகளால் இந்த சமுதாயம் என்ன விளைவுகளை சந்திக்கப் போகிறது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டும் நூல். மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீர் பிரச்சினையால்தான் வரும் என்பதை தண்ணீரின் வரலாற்றுப் பின்னணியுடன் கூறும் நூல். படிப்போர் மட்டுமல்ல, எதிர்கால சமூகம் முழுமைக்கும் சிந்திக்க வைக்கும் நூல். நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

நந்திபுரத்து நாயகன்

நந்திபுரத்து நாயகன், டி.கே. இரவீந்திரன்,  விகடன் பிரசுரம், விலை 330ரூ. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனை மையமாகக் கொண்டு இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தியன் கங்க மன்னனுடன் சேர்ந்து போர் நடத்தி, போர் தர்மத்தைப் புறந்தள்ளி நந்திவர்மனைத் தோற்கடித்தான். போர்க்களத்தில் தப்பிய நந்திவர்மன் இரண்டு ஆண்டுகள் கழித்து சாளுக்கியர்களுடன் போரிட்டு வென்று மீண்டும் ஆட்சி பீடம் ஏறினான். இந்தக் கருவை மையமாகக் கொண்டு நந்திவர்மனுடன் சில கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்து விறுவிறுப்பான நாவலைப் படைத்துள்ளார் டி.கே. இரவீந்திரன். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

பன்முக நோக்கில் தொல்காப்பியம்

பன்முக நோக்கில் தொல்காப்பியம், வா.மு.சே. ஆண்டவர், லாவண்யா பதிப்பகம், விலை 140ரூ. தமிழில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். இதுபற்றி, பல்வேறு தமிழறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார், முனைவர் வா.மு.சே. ஆண்டவர். தமிழின் அருமை, பெருமை பற்றி இந்நூலில் வா.மு.சே. ஆண்டவர் எழுதியிருப்பதாவது “உலகத்தின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர், 90 வயது ஆகியும் மொழியியல் ஆராய்ச்சியில் கொடிகட்டிப் பறக்கும் நேர்ம்ச்ம்ஸ்கி என்ற அமெரிக்க அறிஞர், உலகின் பழமையான மொழிகள் இரண்டு என்றும், அதில் ஒன்று தென் ஆப்பிரிக்காவில் […]

Read more

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 165ரூ. தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுவது, ஜல்லிக்கட்டு. உழவுத்தொழிலுக்கு அடிப்படையானவை காளைகள். அத்தகைய காளைகளை தெய்வமாக மதித்து அதனோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள்தான் ஜல்லிக்கட்டு. அதைப் பற்றி இந்த நூலில் எழுத்தாளர் குன்றில் குமார் விரிவாகவும், சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார். விலங்குகளுக்காகப் போராடுகிறோம் என்று சொல்லி, ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்திய ‘பீட்டா’ அமைப்பு பற்றியும், அவர்களின் போலித்தனமான செயல்பாடுகள் குறித்தும் அவர் இந்த நூலில் எடுத்துரைக்கிறார். நமது பாரம்பரியங்கள் அனைத்தும் வெளிநாட்டவர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்ற மனக்குமுறலை இந்த […]

Read more

கிள்ளை மொழி

கிள்ளை மொழி, தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 95ரூ. கவிஞர் பெ. பெரியார் மன்னன் எழுதிய 79 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு. அணில், கரும்பு, முயல் போன்ற தலைப்புகளில் குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ‘எங்க வீட்டு மீன் தொட்டி வந்து பாருங்கோ! கண்ணாடிப் பெட்டிக்குள்ளே கடலைப் பாருங்கோ” , “ஒற்றுமையாய் வாழ்வதுவே ஒருமைப்பாடு! உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் திகழ்ந்திடும் நாடு” என்பன போன்ற இனிய பாடல்கள். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

ஆன்மிக முத்துக்கள்(அறுநூறு)

ஆன்மிக முத்துக்கள்(அறுநூறு), ஆரூர் ஆர்.சுப்பிரமணியன், சஞ்சீவியார் பதிப்பகம், விலை 180ரூ. இந்து மதம் குறித்த ஆன்மிகம் தொடர்பாக அறுநூறு கேள்விகளுக்கு இந்த நூலில் ஆரூர் ஆர்.சுப்பிரமணியன் பதில்களைத் தருகிறார். ஆன்மிகம் சம்பந்தமாக ஒவ்வொருவருக்கும் எழக்கூடிய சந்தேகங்களை அவர் தீர்த்து வைக்கிறார். இந்துக்களின் பூஜை முறைகள், பண்டிகை முறைகள், நல்ல புண்ணிய திதிகள், கோவில்களின் கட்டமைப்பு, புராண, வரலாற்றுப் பின்னணிகள் என எல்லாக் கேள்விகளுக்கும் சிறப்பான விளக்கமான பதில்கள், நம்மை வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more

பெரிய புராணம் எளிய நடையில்

பெரிய புராணம் எளிய நடையில், பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ. சிவனடியார்களின் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம். சேக்கிழார், காவிய வடிவில் இந்தப் பெருநூலைப் பாடித் தந்தார். அதை எளிய உரைநடையில் தரும் முயற்சி நீண்ட காலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு உரைநடையில் பெரியபுராணத்தை வழங்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது இந்நூல். எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியச் சுவையுடன் இதை எழுதியுள்ள பேராசிரியர் புலவர் அ.கி. அழகர்சாமி பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more
1 6 7 8 9