அரியணையில் ஏறிய பொய்கள்,

அரியணையில் ஏறிய பொய்கள், எஸ்.ஆரோக்கியசாமி,  பக்.296, விலை ரூ.220. தற்போது காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நூலாசிரியர், அதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டிருக்கிறார். மின்வாரியத்தில் வேலை செய்திருக்கிறார். தொழிற்சங்க இயக்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறார். பொதுவாழ்க்கையில் நூலாசிரியருக்குக் கிடைத்த அரிய அனுபவங்கள் இந்நூலில் சுவையாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியலில் மிக உயர்வானவர்களாகக் கருதப்பட்டவர்கள், கருதப்படுகிறவர்களுடன் கிடைத்த அனுபவங்களை எந்தவிதத் தயக்கமும், அச்சமும் இல்லாமல் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். சில அரசியல் தலைவர்களைப் பற்றி அவர் கூறும் செய்திகள், ‘இவரா? இப்படி?’ 39, என்று நினைக்கும் […]

Read more

ஸ்ரீராமஜயம்

ஸ்ரீராமஜயம், அபூர்வ ராமாயணம், தொகுதி 3, திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், பக். 248, விலை 240ரூ. பலமுறை படித்தாலும் சலிக்காத- அலுக்காத- நூலாகத் திகழ்வது ராமாயணம் எனலாம். எத்தனை விதமான ராமாயணக் கதைகள் இருந்தாலும் அத்தனையும் கற்கண்டு தான். இந்நூலில், அபூர்வ ராமாயணத்திலிருந்து சில கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஊர்மிளை கேட்ட வரம் குறித்தும் (பக்.74), சீதைக்குப் பறவைகளின் மொழி தெரியும் என்பதும் (பக்.98), காக்கையாக வந்த ஜெயந்தன் செயலை நியாயப்படுத்துவதும் (பக்.102), ஊனமுற்றோரைக் கேலி செய்யக்கூடாது என்பதை, கபந்தன் நிகழ்ச்சி மூலம் […]

Read more

பெண்ணாகப் பிறந்தாலே

பெண்ணாகப் பிறந்தாலே, ச.அமுதா, இராசகுணா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130. இன்றைய நவீன யுகத்திலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வாழ முடியாமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி , இந்நிலையை எவ்வாறு மாற்றுவது என்ற நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பிறப்பதற்கு உரிமை வேண்டும்#39; என்ற முதல் கட்டுரை ‘பெண் சிசுக்கொலை‘39; நீண்டகாலமாக இருப்பதையும், இன்றும் அது தொடர்வதையும் விவரிக்கிறது. வளர் இளம் பருவத்தில் பெண்கள் சந்திக்க நேரும் பிரச்னைகள், அவர்கள் மீதான வன்கொடுமைகள், சமுதாயத்தில் பெண்களைக் கீழாக நினைக்கும் மதிப்பீடுகள், மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் பெண்கள் […]

Read more

தமிழ் திரைப்பட நூற்றாண்டு 2018

தமிழ் திரைப்பட நூற்றாண்டு 2018, பெ. வேல்முருகன், ஒளிக்கற்றை வெளியீட்டகம். திரைப்படங்களின் ஆதி சித்திரங்களைத் தொகுத்திருக்கும் நூல். இந்தியாவில் திரைப்படத்திற்கான முயற்சிகள் எவ்விதம் ஆரம்பித்தது, அதற்கான முயற்சிகள் பற்றி தெளிவாகவும் சுருக்கமாகவும், மிகையின்றியும் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் முதல் திரைப்படம், நடராஜ முதலியாரின் ‘கீச்சுவதம்’, முதலில் தமிழ் பேசிய திரைப்படம் என விரிவாகவும் கட்டுரைகள் உள்ளன. ஒன்றை முற்றாக அறிந்து தெரிந்துகொள்வதற்கு முன், அதன் அடிப்படை தெரிதல் அவசிமானது. அரிதான சில போஸ்டர்கள், நாம் பார்த்தறியாத விளம்பரங்களின் கவனம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. லூமியர் சகோதரர்களின் திரைப்படக்காட்சி […]

Read more

கேட்பவரே

கேட்பவரே, லக்ஷ்மி மணிவண்ணன், படிகம், விலை 320ரூ. வாழ்க்கையை விடவும் பெரிய வகைமாதிரியை உருவாக்குவதே கலையின் நோக்கம். தமிழ் கவிதையின் தரிசனங்களில் வெகு அரிதாகவே லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்களை காண முடிகிறது. அது அப்படித்தான். கலைஞனது சுயசரிதையில் எஞ்சிக் கிடக்கும் சுவாரஸ்யம்தான் என்ன? அவனது வாழ்க்கையா? ஒரு மனிதன், படைப்பாளனாகிற அந்தக் கணத்திலிருந்தே அவன் செல்லுகிற பாதை முன்கூட்டி நிச்சயக்கப்பட்டு விடுகிறது. மணிவண்ணன் சூதாட்டப் பலகையில் சுற்றி வருகிற எண்களைப் பார்க்கிற அதி தீவிர கவனத்திலேயே வாழ்க்கையைப் பார்க்கிறார். பிரதி செய்யவே முடியாத அவரது […]

Read more

பத்துப்பாட்டு யாப்பியல்

பத்துப்பாட்டு யாப்பியல், மு.கஸ்தூரி, சந்தியா பதிப்பகம், பக்.584, ரூ.500. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல் ஆகிய இலக்கண வகைகளுள் யாப்பிலக்கணமும் ஒன்று. செய்யுள் இயற்ற இன்றியமையாதது யாப்பிலக்கணம். தொல்காப்பிய செய்யுளியலில் தொடங்கி, காலந்தோறும் பா வடிவங்களிலும், உறுப்புகளிலும் பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது யாப்பிலக்கணம். பாக்களின் வடிவ அமைப்பு, ஒலிநலக் கூறுகள் முதலியவற்றை ஆராயும் இலக்கணத் துறை இது. யாப்பியல் குறித்து ஆய்வு செய்வோர் அருகி வரும் இந்நாளில், முனைவர் பட்ட ஆய்வுக்கு யாப்பியலைத் துணிச்சலும் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆய்வாளர். மேலும், குமரகுருபரரின் […]

Read more

வேடிக்கை மனிதரா? சாதிக்கும் மனிதரா?

வேடிக்கை மனிதரா? சாதிக்கும் மனிதரா?, கலைமாமணி டாக்டர் ஆர்.பி.என்., சமாஜ சேவா டிரஸ்ட், பக். 184, விலை 100ரூ. வாழ்வில் முதன்மை நிலையை அடைய விரும்புபவர்களுக்கு இந்நூல் உந்துதலைத் தரக்கூடியது. அதாவது வாழ்வில் வெற்றிபெறும் நோக்குடன் செயல்படும் எவருக்கும் இந்நூல் வழிகாட்டும். வாழ்ந்து சாதித்துக் காட்டியவர்களின் அறிவுரைகளையும், வரலாறு படைத்தவர்களின் அனுபவங்களையும் படிப்போருக்கு நல் உதாரணமாகத் தந்து உயரச் செய்கிறார் நுலாசிரியர். நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமாரன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 232, விலை 200ரூ. “பிரமிக்காதே பூமியில் தானிருக்கிறது மலையின் உச்சி” மலைமேல் ஏற, மலை உச்சியிலிருந்து பயணத்தைத் தொடங்கச் சொல்லும், அனுபூதி உத்தி இக்கவிதைத் தொகுப்பில் அதிகம். படிமத்தின் ஆட்சியில் சொல்ல வரும் கருத்துக்களை காட்சிப்படுத்திவிடுகிறார் கவிஞர். சமூகம், காதல், நடப்பியல் ஆன்மிகம், எள்ளல், பிரபஞ்சத் தேடல்கள் என்று அடர்த்திமிக்க கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப்

உருது கஸல் அரசர் மிர்ஸா காலிப், சி.எஸ். தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. மிர்சா அசதுல்லா கான்காலிப் இந்தியாவில் வாழ்ந்த உருதுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரது கஸல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. காதலும் மனிதமும் உள்ளவரை காலிப்பின் கவிதைகளும் உயிர்த்திருக்கும். இந்தியாவிற்குப் பெருமை தரக்கூடிய இப்பிரபஞ்சக் கவிஞரின் வாழ்வையும் அவரது படைப்புகளையும் தமிழில் கொண்டு வந்திருப்பது தமிழுக்கும் பெருமை. நன்றி: குமுதம், 31/5/2017.

Read more

மகாத்மாவின் வாழ்வில் மணியான நிகழ்ச்சிகள்

மகாத்மாவின் வாழ்வில் மணியான நிகழ்ச்சிகள், வடுவூர் சிவ. முரளி, மீனாட்சி பிரசுரம், பக். 200, விலை 150ரூ. இந்நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதி வருபவர். இவரது ‘குறளமுதக் கதைகள்’ என்ற நூலை ஆய்வு செய்த ஒருவர், எம்.ஃ.பில். பட்டமும் பெற்றுள்ளார். இந்நூலில் காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை அவரது ‘சத்திய சோதனை’ உள்பட பல நூல்களில் இருந்து திரட்டி தொகுத்துள்ளார். இந்நூலைப் படிக்கும்போது சிறுவயதில் காந்திஜி செய்த சேட்டைகள், குற்றங்கள், குறைகளையெல்லாம் படிக்கும் நமக்கு, இவரா பிறகு உலகம் […]

Read more
1 5 6 7 8 9