தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?, கி.வீரமணி, திராவிடர் கழகம், விலை: ரூ.180 திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எழுதியிருக்கும் ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற புத்தகம், 270 பக்கங்களில் 20 அத்தியாங்களில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்வியல் ஆகியவை மேம்பட பெரியார் செய்த மகத்தான பங்களிப்புகளைப் பேசுகிறது. தமிழ், தமிழர் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த ஓயாத அக்கறையையும், அதற்கு அவர் செலுத்திய அயராத உழைப்பையும் விவரிக்கிறது. பெரியாரின் உரைகள், ‘விடுதலை’, ‘குடிஅரசு’ இதழ்களில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் […]

Read more

தமிழக நாடார்கள்

தமிழக நாடார்கள், இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழில் எஸ்.டி.ஜெயபாண்டியன், மீள்பார்வை பக்தவத்சல பாரதி, வெளியீடு அடையாளம், விலை 480ரூ. நாடார்கள் அரச பரம்பரை சேர்ந்தவர்கள் என்று ஆங்காங்கே கூறப்பட்டு இருந்தாலும் இந்த ஆராய்ச்சி புத்தகத்தின் நோக்கம் அது அல்ல. தனது ஆராய்ச்சி பட்டத்துக்காக நாடார் சமுதாயத்தை பற்றி ஆய்வு மேற்கொண்ட ஆசிரியர் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நாடார்கள் பற்றிய ஆய்வை தொடங்கி இச்சமூகத்தின் முன்னேறத்தை அழகாக தொகுத்து வழங்கி உள்ளார். நாடார்ஸ் ஆப் தமிழ்நாடு த பொலிடிகல் கல்ச்சர் ஆப் எ கம்யூனிடி […]

Read more

நான் எப்படி எழுதுகிறேன்

நான் எப்படி எழுதுகிறேன், உம்பர்ட்டோ ஈகோ கட்டுரைகள், தமிழில்: க.பஞ்சாங்கம், அருட்செல்வர், பக்.128, விலை ரூ.125. உம்பர்ட்டோ ஈகோ இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். ஆசிரியப் பணி, ஊடகப் பணி, கட்டடக்கலைத் துறையில் பணி என பல பணிகளைச் செய்தவர். எனினும் குறியியலில் ஆர்வம் உள்ளவர். குறியியல் கோட்பாடு என்ற புத்தகத்தை எழுதியவர். இலக்கியம் சார்ந்து அவர் எழுதிய நூலில் உள்ள ஏழு கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூல்.கணினியுகத்திலும் இலக்கியத்தின் தாக்கம் இருக்க முடியும். இலக்கியம் மனிதமனங்களை, மனிதர்களின் செயல்களை உருவாக்கும். இலக்கியம் நம் சொந்தக் கதைகளைத்தான் […]

Read more

புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை

புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை, பத்மாவதி குமரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்,  பக்.168, விலை ரூ.250. இந்தியா மற்றும் இலங்கையில் அமைந்துள்ள சக்தி பீடங்கள், திருக்கோயில்களின் உன்னதமான தகவல்கள், (புகைப்படங்களுடன்) அடங்கிய அற்புதமான ஆன்மிகப் பயண நூல். சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாக விளங்குகின்றன. சதி தேவியின் மண்டை ஓடு விழுந்த இமாச்சலில் உள்ள சாமுண்டா தேவி கோயில் தொடங்கி, அம்மையின் திரு நாக்கு விழுந்த வஜ்ரேஸ்வரி (தாரா தேவி), ஜ்வாலாமுகி, பாதம் விழுந்த சிந்த்பூர்ணி […]

Read more

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல்

உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல், சாமுவேல் பி.ஹண்டிங்டன், அடையாளம், பக்.570. விலை ரூ.540. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மாறுதல்களை விளக்கும் நூல். ரஷியாவின் வீழ்ச்சிக்கு முன்பு உலகம் அமெரிக்கா, ரஷியா ஆகிய இருநாடுகளின் பின் அணி திரண்டது. கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் தனியுடமை, ஆளும் சக்திகளின் கருத்துகளுக்கும், பொதுஉடமை, உழைக்கும் மக்களின் கருத்துகளுக்கும் இடையிலேயே இருந்தன. சோவியத் ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இம்மாதிரியான கருத்தியல் முகங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத, இன, […]

Read more

காற்றில் கரையாத நினைவுகள்

காற்றில் கரையாத நினைவுகள், வெ.இறையன்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 160ரூ. இந்து தமிழ்’ நாளிதழில் வெ.இறையன்பு வாரந்தோறும் தொடராக எழுதி பெரும் வரவேற்பு பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. பயணங்கள், அனுபவங்கள் வழியாகத் தன்னை செழுமைப்படுத்திக்கொண்ட விஷயங்களை சுவாரசியமான நடையில் பகிர்ந்துகொள்கிறார் இறையன்பு. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் நமக்குள் பசுமையான கருப்பு – வெள்ளைக் காட்சிகளை ஓட்டிக் காண்பிக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 13/4/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

தி டாடாஸ்

தி டாடாஸ்: ஹவ் அ பேமிலி பில்ட் அ பிஸினஸ் அண்ட் அ நேஷன், கிரீஷ் குபேர்,ஹார்பெர்காலின்ஸ், விலை: ரூ.699 அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இந்தியா ஆட்பட்டிருந்த காலத்திலேயே இரும்பு உருக்காலை என்ற கனரகத் தொழிலைத் தொடங்கிய நிறுவனம் டாடா. ஜாம்ஷெட்பூர் என்ற புதியதொரு தொழில் நகரத்தையே உருவாக்கிய ஜாம்சேட்ஜி டாடாவின் கண்களிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்பு தெறித்த தொழில் முனைவு என்ற ஆர்வத் தீப்பொறி பற்றிப் பரவி, சாதாரண மக்களின் காரான ‘நானோ’வை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடா வரை டாடா குழுமத்தைச் சிறியதொரு […]

Read more

காலமெல்லாம் கண்ணதாசன்

காலமெல்லாம் கண்ணதாசன், ஆர்.சி.மதிராஜ், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.130 ‘இந்து தமிழ்’ குழுமத்தின் அங்கமான ‘காமதேனு’ இணையதளத்தில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே கண்ணதாசனின் பாடல்கள் இருந்திருக்கின்றன. அவரது வரிகளில் மயங்கித் திளைத்தவர்களுள் ஒருவரான மதிராஜ், இந்தப் புத்தகத்தில் கண்ணதாசனைக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார். நன்றி: தமிழ் இந்து, 13/4/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027960.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

ஒவ்வொரு கணமும்

ஒவ்வொரு கணமும், சுகதேவ், நோஷன் பிரஸ்,விலை: ரூ.170 மூத்த பத்திரிகையாளரும் தூதரக ஊடக ஆலோசகருமான சுகதேவின் முதல் கவிதைத் தொகுப்பு. எளிமையான சொற்களில் ஆழமான கருத்தை நிறுவ முடியும் என்ற அவரது நம்பிக்கை, கட்டுரைகளைப் போலவே கவிதைகளிலும் சாத்தியப்பட்டிருக்கிறது. பொழுதுகள் மாறிக் கிடக்கும் நவீன வாழ்க்கைக்கு இரவில் கரையும் காகங்களை உருவகமாக்கியிருப்பது சிறப்பு. ‘வரலாறு என்பது உண்மையில் யாருக்கும் தெரியாத ரகசியம்’ என்பது போன்ற ஒற்றை வரித் தெறிப்புகள் நிறைய எதிர்ப்படுகின்றன. சமகாலக் கவிதை, கவிஞர்கள் குறித்த ஆழமான விமர்சனமாக அமைந்திருக்கிறது இத்தொகுப்பின் முன்னுரை. […]

Read more

குறள் இனிது கதை இனிது

குறள் இனிது கதை இனிது, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், விலை 200ரூ. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பாலில் இருந்து 108 குறள்களைத் தேர்ந்தெடுத்த அவற்றின் பொருளை விளக்கும் வண்ணம் ஒரு பக்க கதைகளாக எழுதி இருக்கிறார் காவல்துறை அதிகாரியான ஆசிரியர். புராண இதிகாசம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரையிலான பல நிகழ்வுகளைப் படம்பிடித்து அவற்றை திருக்குறளுடன் ஒப்பிட்டு கதைகளை பின்னி இருப்பது படிக்க சுவாரசியமாகவும், பயன் அளிக்கும் வகையிலும் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more
1 2 3 4 5 6 8