யாசகம்

யாசகம், எம்.எம்.தீன், ஜீவா படைப்பகம், விலை: ரூ.200. ஓயாத யாசகக் குரல்கள் ஒவ்வொரு யாசகரின் வாழ்வும் எதிர்பாராத திருப்பத்தில் திசைமாறி, குடும்பம் விட்டு விலகி, தனிமையில் ஒண்டி, கடைசியில் எல்லோரும் ஒரே முகத்துக்கு மாறிவிடுகிறார்கள் என்று சொல்லும் எழுத்தாளர் தீன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சுற்றுப்புறத்தில் உள்ள யாசகர்களின் வாழ்வை இந்நாவலில் நுட்பமாகப் பதிவுசெய்திருக்கிறார். யாசகர்கள் உணவுக்காகப் பல தூரம் நடக்கிறார்கள். எல்லா நாட்களிலும் சாப்பாட்டுக்கு உத்தரவாதம் இல்லை. பல நாட்கள் கொலைப்பட்டினியாகவும் இருக்க நேரிடுகிறது. யாரோ ஒருவர் தனக்கான உணவுப் பொட்டணத்தைக் கொண்டுவந்து தருவார்கள் […]

Read more

வானொலி தமிழ் நாடக இலக்கியம்

வானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின், சாகித்திய அகாதெமி, பக். 192, விலை 180ரூ. வானொலியில் இடம்பெற்ற நாடகங்கள் பற்றிய செய்திகளையும், அவை நுாலாக ஆக்கப்பட்டு உள்ள குறிப்புகளையும் இந்நுால் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. நுாலின் இறுதிப்பகுதி நுாலாசிரியரால் எழுதப் பெற்ற, ‘செம்பியர் கோன்’ எனும் வானொலி நாடகத்தை முழுமையாகக் கொண்டு சுவை பயக்கிறது. வானொலி என்னும் ஊடகம் எவ்வாறு, எப்போது உருவாக்கப்பட்டது என்பதில் தொடங்கி, அதன் வளர்ச்சி நிலைகளை விளக்குவதாக நுாலின் அறிமுகப் பகுதி அமைகிறது. வானொலி நாடகம் என்பது வானொலிக் காகவே […]

Read more

பரதநாட்டியம்

பரதநாட்டியம், வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்ளிகேஷன்ஸ், பக்.264, விலை 1330ரூ. பரதநாட்டியம், இந்திய நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு நடனம். அதிலும், இதில் தமிழகத்துக்கு பெரும் சிறப்பு உள்ளது. பரதநாட்டிய கலைஞர்களை அதிகளவில் தநதுள்ளது தமிழகம் தான். பரதநாட்டியம் என்றால் என்ன? அதில் காட்டப்படும் பாவங்கள், முத்திரைகள் என, பரதநாட்டியத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார். பரதநாட்டியம் கற்பவர்கள், கற்றவர்கள், இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும். இந்த புத்தகம், அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். தமிழாக்கம் செய்து இதை வெளியிட்டால், […]

Read more

திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்

திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும், பால.இரத்தினவேலன், நர்மதா பதிப்பகம், பக். 256, விலை 150ரூ. நிறைமொழி மாந்தர் திருமூலர் இயற்றிய அற்புத நுால், மந்திரமாலையாகிய திருமந்திரம். அதில், ஒன்பதாம் தந்திர-த்தில் உள்ள, ‘சூனிய சம்பாசணை’ மறைபொருள் உரையாதலால், பாடல்கள் எழுபதும் பல்வேறு வகைகளில் பொருள் கொள்ள இடமளித்து நிற்கின்றன. இந்நுாலில் பாடல்கள் அனைத்தும் சித்தாந்த சைவத்தின் கோட்பாடுகளை புதிர்களாகக் காட்டி விளக்குவது அருமை. இந்நுாலை படிப்பதன் மூலம் சைவ மெய்யியல் தத்துவங்களை தெளிந்துணர முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற […]

Read more

விலைக்கு வந்த வாழ்வு

விலைக்கு வந்த வாழ்வு, அமரந்தா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 110ரூ. தெலுங்கு சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு இந்நுால். இதில், தலைசிறந்த கதையான, ‘கவுரவ ஒப்பந்தத்தில்’ பெண்கள் குறித்து எதிரெதிர் மனநிலை கொண்ட இரண்டு ஆடவரின் உளவியலைப் படம் பிடிக்கிறது. இந்நுாலில் இடம் பெற்றுள்ள பெண் பாத்திரங்கள் தைரியமிக்கவர்களாக, துணிந்து முடிவெடுப்பவர் களாக உள்ளனர். பிரியத்தையும் காமத்தையும் வேறுபடுத்தி பார்க்கத் தெரியாத ஆண்கள், அன்பிற்குரிய பெண்களைப் பாடாய் படுத்துவதே, ‘அப்பாவிப் பெண், காம விளையாட்டு’ போன்ற சிறுகதைகளைச் சொல்லலாம். நன்றி: தினமலர், 7/4/2019 இந்தப் […]

Read more

மேக்சிமம் சிட்டி

மேக்சிமம் சிட்டி: பாம்பே லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட், சுகேது மேத்தா, பெங்க்வின் புக்ஸ் இந்தியா, விலை: ரூ.399 இந்தியப் பொருளாதாரத்தின் தலைநகரமான மும்பை இன்றைய ஆஸ்திரேலியாவைவிட அதிகமான மக்கள் வசிக்கும் ஒரு பெருநகரமும்கூட. பலதரப்பட்ட மக்கள் பின்னிப் பிணைந்து வாழும் நகரம். அத்தகைய நகரத்தில் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, பின்னர் பதின்பருவத்தில் அங்கிருந்து வெளியேறி உலகின் தலைசிறந்த நகரங்கள் பலவற்றிலும் வாழ்ந்து 21 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிவந்த ஓர் இளைஞனின் பார்வையில், மும்பை நகரமும் அதன் உயிரோட்டமும் எவ்வித […]

Read more

சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா

சங்கீத சிகரம் செங்கோட்டை எஸ்.ஜி.கிட்டப்பா, செ.திவான், அட்சரம் பதிப்பகம், விலை: ரூ.130, கந்தர்வ கான கிட்டப்பா கிராமபோன் இசைத்தட்டுகள் வெளிவந்த காலத்தில் இசை ரசிகர்களிடம் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் கிட்டப்பா. சங்கரதாஸ் சுவாமிகளிடம் இசைப் பயிற்சி பெற்று இசைநாடக மேடைகளில் கதாநாயகனாக உலாவந்தவர், உச்ச ஸ்தாயியில் பாடுவதில் வல்லவர், கதர் உடுத்தி தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர், கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாளை இசையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு. நெல்லையைச் சேர்ந்த வரலாற்றறிஞர் செ.திவான், தன் மண்ணில் பிறந்த மாபெரும் இசைக்கலைஞருக்குச் […]

Read more

நகைச்சுவை குதிரையில் என் சிந்தனைப் பயணம்

நகைச்சுவை குதிரையில் என் சிந்தனைப் பயணம், திண்டுக்கல் ஐ. லியோனி, அசசி பதிப்பகம், பக். 204, விலை 180ரூ. வாழ்வியல் குறித்த சிந்தனைகள்: பட்டிமன்றங்களில் நகைச்சுவையால் பலரையும் ஈர்த்து வரும் லியோனி எழுதிய, கட்டுரைகள் அடங்கிய இந்நுால் அவரது முதல் நுால். பல எடுத்துக்காட்டுகள், வழித் தீட்டப்பட்ட கட்டுரைகள் படிப்போருக்கு நல்ல விருந்து. பேச்சுக் கலை பற்றிக் குறிப்பிடும்போது, ‘நல்லதைப் பேசுவோம்; நன்றாகப் பேசுவோம்’ என்ற அடிப்படையில் எழுந்த அக்கட்டுரை, சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு ஒருவர் பேச வேண்டும் என்பதைப் பல உதாரணங்களோடு விளக்குகிறது. […]

Read more

டிஜிட்டல் மாஃபியா

டிஜிட்டல் மாஃபியா, வினோத்குமார் ஆறுமுகம், வி கேன் புக்ஸ், பக். 132, விலை 120ரூ. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பின்னால் ஒரு ரகசிய உலகம் இயங்கி வருகிறது. அவற்றை வெளியில் சொல்ல முடியாமல் தவித்த காலங்கள் சென்று, புதுப்புது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரத்தை வைத்து, சாமானியர் பலரும் சமூக வலைதளங்களைக் கொண்டாடுகின்றனர். ஆனால், பதிவிடப்படும் அரிய தகவல்கள் முதல், அந்தரங்க பதிவுகள் வரை, அனைத்தும் ரகசியமாகக் கூகுளின் கழுகுப்பார்வையால் கண்காணிக்கப்படுகின்றன. இலவசச் செயலி என்றதும் இறக்கி எடுத்துக் கொள்வதும், ஆசை வார்த்தைக்கெல்லாம், ‘ஆமாம்’ […]

Read more

க.நா.சு. கவிதைகள்

க.நா.சு. கவிதைகள், பதிப்பாசிரியர்: இளையபாரதி, விலை: ரூ.165 புதுக்கவிதையின் தந்தையாக ந.பிச்சமூர்த்தி பொதுவில் அறியப்படுகிறார்; பாரதிக்குப் பிறகு வசனகவிதையை முயன்ற கு.ப.ராவும் புதுமைப்பித்தனும் முன்னோடிகள். ஆனால், புதுக்கவிதை என்ற பெயரை அந்த வடிவத்துக்குப் புனைந்ததோடு மட்டுமின்றி புதுக்கவிதைக்கு, இருபதாம் நூற்றாண்டு இந்திய, தமிழ் வாழ்க்கையின் நவீனத்தையும் லட்சணங்களையும் அழகியலையும் ஏற்றியவர் க.நா.சுப்ரமணியம். புதுக்கவிதை தன்னை நிறுவிக்கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பெற்ற உருவம் புதுக்கவிதை. ஒரு உயிர் […]

Read more
1 3 4 5 6 7 8