சா

சா, கு.ஜெயபிரகாஷ், ஆதி பதிப்பகம், பவித்திரம், விலை: ரூ.120. சாவை அழைத்துவரும் மலர் நம்பிக்கையாக இருந்த ஒருவன் இறந்துவிட, அவனைச் சார்ந்தோர் அந்த இழப்பைக் குறித்து மனம் தளர்ந்து இரங்கலாகப் பாடுவது ‘கையறுநிலை’. தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை உள்ளிட்ட இலக்கண நூல்கள் இது குறித்துப் பேசியுள்ளன. தமிழ்க் கவிதை வரலாற்றில், சக மனிதர்களின் இழப்பின் துயரத்தை வெளிப்படுத்தும் கையறுநிலைப் பாடல்களுக்கு எப்போதும் ஒரு மதிப்புமிக்க இடம் உண்டு. பெரும்பாலும் போரில் இறந்துபோன மன்னர்கள் குறித்தோ, வீரர்கள் குறித்தோதான் இவ்வகைப் பாடல்கள் அதிகமும் பாடப்பட்டன. கு.ஜெயபிரகாஷ் […]

Read more

பத்து இரவுகளின் கனவுகள்

பத்து இரவுகளின் கனவுகள், நாட்சுமே சொசெகி, தமிழில்: கே.கணேஷ்ராம், நூல்வனம் வெளியீடு, விலை: ரூ.150. நாட்சுமே சொசெகி: கனவுகளைத் தியானிக்கும் எழுத்து கனவின் மாயத்துடன் புனைவுகளை உருவாக்குவதில் வெற்றிபெற்ற வெகு சிலரில் போர்ஹேஸும் ஒருவர். ‘நீங்கள் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை, முந்தைய கனவொன்றில் விழித்திருக்கிறீர்கள், அந்தக் கனவு இன்னொரு கனவுக்குள் இருக்கிறது, அது இன்னொரு கனவுக்குள், இப்படியே முடிவற்றுப் போய்க்கொண்டிருக்கிறது…’ என்று ‘கடவுளின் எழுத்து’ கதையில் எழுதியிருப்பார். கனவை இலக்கியமாக்குவதில் போர்ஹேஸுக்கும் முன்னோடி ஜப்பானின் மிக முக்கியமான நவீனப் படைப்பாளிகளுள் ஒருவரான நாட்சுமே சொசெகி (1867-1916). […]

Read more

விடுபட்டவர்கள்

விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான், இனியன், நாடற்றோர் பதிப்பகம், விலை: ரூ.100. குழந்தைகள் நலனில் அக்கறையோடு இருக்கிறோமா?, பாரம்பரிய விளையாட்டுகளை அதன் வரலாற்றுடன் குழந்தைகளிடம் கொண்டுசேர்ப்பதையே வாழ்நாள் பணியாகச் செய்துவருபவர், குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர் இனியன். அது தொடர்பான கள அனுபவங்களை அப்படியே எழுத்தில் வடித்துள்ளார். குழந்தைகளுக்காகவே வாழ்கிறோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பெற்றோர்கள் அவர்கள் நலனில், உரிமையில், பாதுகாப்பில் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என்ற உண்மையானது அப்பட்டமாகவும் ஆதங்கத்துடனும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சமூகத்தில் மாற்றுத்திறன், ஆட்டிசம் மற்றும் ஹைப்பர்டென்ஷன், பார்வைக் குறைபாடு, காது […]

Read more

என்ன படிக்கலாம் வாங்க

என்ன படிக்கலாம் வாங்க, க.ம.ராஜேஷ் கந்தன், ஆர்த்தி ராஜேஷ் கந்தன், தென்றல் பதிப்பகம், பக்.600, விலை ரூ.380. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு அடுத்து என்ன படிக்கலாம்? என்று கேட்பவர்களுக்கு வழிகாட்டும்விதமாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியல், தொல்லியல்துறை, புள்ளியியல்துறை, லாஜிஸ்டிக், பேஷன் டிசைனிங், அனிமேஷன், மல்ட்டி மீடியா, வனத்துறை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் என விரிந்து கொண்டே செல்லும் பல்வேறு துறைகளில் ஒருவர் பணியாற்ற எதைப் படிக்க வேண்டும் என்பதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட படிப்பு எதைச் சார்ந்தது, […]

Read more

மனிதனைப் படைப்பது யார்?

மனிதனைப் படைப்பது யார்?, ஏ.கே. ராஜ், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150. மனித படைப்பை, அறிவியல் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது இந்நுால். மனித படைப்புக்கு காரணம், விரும்பியபடி வாழ முடியுமா போன்ற சாதாரண கேள்விகளுக்கான மர்ம முடிச்சுகளை ஆராய்கிறது.மனிதன் உருவான விதம், ஆற்றல், சக்தி, நிலம், நெருப்பு, நீர், சூரியன், கோள்கள் குறித்து, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. மனித மூளையின் செயல்பாடுகள், மனிதனின் தன்மைகள், பண்புகள் எப்படி வெளிப்படுகிறது என்பதையும் விவரிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், கணித மேதைகளின் ஆற்றல், படைப்புகள், அதற்காக அவர்கள் பட்ட கஷ்டங்கள், ஆட்சியாளர்களின் நுட்பமான […]

Read more

தொல்குடித் தழும்புகள்

தொல்குடித் தழும்புகள், செம்பேன் உஸ்மான், தமிழில்: லிங்கராஜா வெங்கடேஷ், கலப்பை வெளியீடு, விலை: ரூ.180. ஆப்பிரிக்காவின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகப் பார்க்கப்படும் செம்பேன் உஸ்மானின் வாழ்க்கையே ஒரு நாவலைப் போல சுவாரயஸ்மானது. எழுத்தறிவற்ற தம் மக்களிடம் இலக்கியம் வழியாக நெருங்க முடியாததுதான் அவரை சினிமாவை நோக்கித் தள்ளியது. அது அவரை ஆப்பிரிக்க சினிமாவின் தந்தை எனும் அளவுக்கு இட்டுச்சென்றது. சினிமாவுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே அவருடைய மூன்று நாவல்களும், ‘தொல்குடித் தழும்புகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வந்திருந்தன. பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட இந்தச் சிறுகதைத் […]

Read more

சங்கத்தமிழ் களஞ்சியம்

சங்கத்தமிழ் களஞ்சியம், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 316, விலை ரூ.200; தமிழின் தொன்மையை விளக்கும் ஆவணங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். சங்கத்தமிழ் நூல்களை தொல்காப்பியம் முதல் பக்தி இலக்கியம் வரை 21 கட்டுரைகளாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வு எப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது முதல் பக்தி இலக்கியங்களின் பண்பாட்டுக்கூறுகள் வரை தற்காலத் தமிழ் ஆர்வலர்களுக்குப் புரியும் வகையில் நூலில் கருத்துகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் பெண்பாற் புலவர்களின் முக்கியத்துவத்தை ஒளவையார் முதல் ஒக்கூர் மாசாத்தியார் உள்ளிட்டோர் வரை எந்தவகையில் […]

Read more

கொரோனாவா? முதலாளித்துவமா?

கொரோனாவா? முதலாளித்துவமா?, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.55. கொடியது கொரோனா; உலகையே முடக்கிப் போட்டுள்ளது. முதலாளித்துவம் செய்து வருகிற கொடுஞ்செயல்களைப் பற்றியும், தேசங்களுக்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் மோதலை ஏற்படுத்தும் மரண வியாபாரிகளின் தந்திரங்களைப் பற்றியும் விவாதிக்கிறது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, 200 ஆண்டுகளாக வணிகச் சுழற்சியாக வந்து கொண்டுள்ளது. வறுமை, பசி, பட்டினியால் வாடும் மனிதரை, கொரோனா நச்சுக் கிருமியும் தாக்கத் துவங்கி விட்டது. பயங்கரவாதம் போன்றே கொரோனாவும் மனித குலத்தின் பொது எதிரி […]

Read more

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர்

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர், எஸ்.சேகு ஜமாலுதீன், வானதி பதிப்பகம், விலை: ரூ.175. அரிதான ஆளுமைகளைக்கூட உரிய வகையில் அங்கீகரிக்கவும் கொண்டாடவும் வரலாற்றில் அவர்களை ஆவணப்படுத்தவும் தவறும் சமூகம் என்ற பெயர் தமிழ் முஸ்லிம் சமூகத்துக்கு உண்டு. இந்த அவப்பெயரைத் துடைத்தெறிய மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாக ‘ஆலிம் முகம்மது சாலிஹ் கல்விக் குழும’த்தின் செயலர் எஸ்.சேகு ஜமாலுதீன் படைத்திருக்கும் நூலைக் குறிப்பிடலாம். அவரைக் கவர்ந்த பதினாறு இஸ்லாமியப் படைப்பாளிகளை வரிசைப்படுத்திக் கொண்டாடும் இந்நூல் நல்ல ஆவணமாகவும் வந்திருக்கிறது. சீறாப்புராணக் காப்பியச் சுவைச் கொண்டு, […]

Read more

எங்கெங்கும் மாசுகளாய்…

எங்கெங்கும் மாசுகளாய்…, மண் முதல் விண் வரை (சூழலியல் கட்டுரைகள்), ப.திருமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை ரூ.110. சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது; ஆனால், மனிதர்கள் இதனை மறந்து இயற்கைக்கு எதிரான செயல்களில் கட்டுப்பாடின்றி ஈடுபடுவதால் கடுமையான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என அழுத்தமாக உரைக்கிறது நூல். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பாரீஸ் பருவநிலை மாநாட்டின் தீர்மானங்களை எத்தனை […]

Read more
1 5 6 7 8 9