உத்தவ கீதை

உத்தவ கீதை, தொகுப்புரை: கே.எஸ்.சந்திரசேகரன், வி.மோகன்; சி.பி.ஆர்.பப்ளிகேஷன்ஸ், பக்.192, விலை ரூ.130.   வியாசர் தனது மனம் அமைதியடைய எழுதிய புராணம் ஸ்ரீமத் பாகவதம். இதில் பதினோராம் ஸ்கந்தத்தில் தனது பக்தரும் சிற்றப்பாவின் மகனுமாகிய உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசித்ததுதான் உத்தவ கீதை. அவதார நோக்கம்முடிந்து வைகுண்டம் திரும்புவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் தயாரான நிலையில் அவரை விட்டுப் பிரிய முடியாது கலங்கிய உத்தவருக்கு, பகவத்கீதையில் அர்ச்சுனனுக்கு தான் எடுத்துரைத்த கர்மயோகம், பக்தியோகம் உள்ளிட்ட அனைத்து யோகங்களின் தத்துவங்களையும் முதிர்ந்த அனுபவமிக்க அறிவுரைகளாக ஸ்ரீ கிருஷ்ணர் […]

Read more

கொரோனா வைரஸ் – கேள்விகளும் பதில்களும்

கொரோனா வைரஸ் – கேள்விகளும் பதில்களும், இரா. மகேந்திரன், ஜெ. பழனிவேல், காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. பெருந்தொற்றுக் காலத்தில் கரோனா வைரஸ், அதற்கான சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து அறிவியலுக்குப் புறம்பான தகவல்கள் காட்டுத்தீயைப் போலப் பரவின. தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் மக்களிடம் அவை ஏற்படுத்தின. இந்தச் சூழலில் அறிவியல் அடிப்படையிலான நம்பகமான தகவல்களின் மூலம் அறிவியலுக்கு வலுசேர்க்கும் விதமாகவும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. சாமானியர்களுக்குப் புரியும் வகையில் எளிய மொழியில் எழுதப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. நன்றி: […]

Read more

எங்க வாத்தியார்

எங்க வாத்தியார்,  கொற்றவன், வானதி பதிப்பகம், பக். 728, விலை ரூ.500. முதல்வர் எம்ஜிஆர் மறைந்து, 35 ஆண்டுகளாகியும் தமிழர்கள் மனதில் இன்றும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அவரைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தபோதிலும், எந்தப் புத்தகத்திலும் இல்லாத பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எம்ஜிஆரோடு நடித்த நடிகைகள், திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 29 பேரிடம் பேட்டி கண்டு, நூலாசிரியர் அதை பிரசுரம் செய்துள்ளார். கடையெழு வள்ளல்கள் இருந்திருப்பது நமக்குத் தெரியும். ஆனால், நம்காலத்தில் அவர்களுக்கு இணையாக வாழ்ந்த வள்ளலாக, […]

Read more

ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல்

ராஜீவ் காந்தி- அதிகாரம், ஆட்சி, அரசியல், ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், பக். 232, விலை ரூ. 250. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது. ராஜீவைப் பற்றி மட்டுமல்லாமல் அவரின் தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி காலத்தில் நிகழ்ந்தவை, அந்தக் காலத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள், நாட்டின் நிலை, மக்களின் எண்ணவோட்டங்கள், மாநிலங்களின் அரசியல் சூழல், சர்வதேச நிகழ்வுகள் என அனைத்தையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்திரா காந்தியின் படுகொலைக்கான காரணங்கள், அதற்குப் பிறகு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், […]

Read more

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875-2020)

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875-2020), த.முத்தமிழ்,  காவ்யா, பக்.418, விலை ரூ.420. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அக, புற, அற நூல்கள் உள்ளன. அவற்றில் அகம், புறம் சார்ந்த கார்நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, திணைமாலை நூற்றைம்பது ஆகிய ஏழு இலக்கியங்களின் பதிப்பு வரலாற்றை முழுமையாகத் தருகிறது இந்நூல். ஓர் இலக்கியத்தைக் கூறுவதற்கு முன்பாக, அவ்விலக்கியம் குறித்த பதிப்புகள், அவற்றை வெளியிட்ட பதிப்பகங்கள், அவ்விலக்கியத்திலுள்ள பாட பேதங்கள், குறிப்புரைகள், துறை விளக்கம், அட்டவணை, […]

Read more

வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ‘மேலும்’ சிவசு, சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.240. மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் இடம் பெற்றுள்ள கல்யாணி சிறுகதையில் வரும் இளம் பெண் கல்யாணி தன் வீட்டருகே உள்ள இளைஞர்களைக் கவர முயற்சிக்கிறாள். அரசுப் பணியில் இருக்கும் காசிநாதனுடன் திருமணம் நடக்கிறது. பிரிவும் நேர்கிறது. தந்தை வீட்டுக்குத் திரும்பும் கல்யாணி, மீண்டும் தன் வீட்டருகே உள்ள இளைஞர்களைக் கவர நினைக்கிறாள். ‘மலருக்கு மலர் தாவும் வண்டுகள் ஆண்கள் என்று குற்றம் […]

Read more

கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம், பக். 352, விலை ரூ. 500. திராவிட இயக்கத்தின் முக்கியமான ஆளுமையாக, திமுக தலைவராக, மாநில முதல்வராக, திரைத்துறையில் சிறந்த வசனகர்த்தாவாக அறியப்படும் மு.கருணாநிதி, ஒரு மனிதராக எதிர்கொண்ட சவால்களையும், ஓயாத உழைப்பையும் பல்வேறு கட்டுரைகள், பேட்டிகள் மூலம் இந்நூல் விளக்குகிறது . சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக புரட்சி பேசி, தமிழ்த் திரைப்படங்களின் திசையை மாற்றிய “பராசக்தி’ படம் குறித்து அனைவருக்கும் தெரியும் என்றாலும், 1952-ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியாகும் முன்னர் சந்தித்த பிரச்னைகள், […]

Read more

திருத்தலங்களைத் தேடி

திருத்தலங்களைத் தேடி, வனஜா இளங்கோவன், மைதிலி வைத்தியநாதன், பத்மா பதிப்பகம், பக்.416, விலை ரூ.320. பாரத நாட்டை ஆன்மிகத்திலிருந்து விலக்கி நிறுத்த இயலாது. நாடு முழுவதும் கோயில்கள் நிறைந்திருக்கின்றன. கோயில்களுக்குச் சென்று வழிபடுவோருக்கு கோயில்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை இந்நூல் தொகுத்து வழங்குகிறது. இந்நூலின் ஆசிரியர்கள், பல சிறப்புகள் வாய்ந்த ஆலயங்களைத் தரிசித்து, ஒவ்வொரு திருக்கோயிலின் அமைவிடம், செல்லும் வழி, அமைப்பு, சிறப்பு, அதனுடன் தொடர்புடைய தொன்மச் செய்திகள், ஸ்தல விருட்சம் என கோயில் தொடர்புடைய பல தகவல்களைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.  ஒரு கோயிலுக்குச் […]

Read more

மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை

மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை, ம.திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், பக்.400, விலை ரூ.350. மதுரைக்காஞ்சி நூலை ஆய்வு நோக்கில் எழுதியுள்ள நூலாசிரியர், தமிழரின் தொன்மை வாழ்க்கை முறைகளையும் இன்றைய நவீன வாழ்க்கையையும் ஒப்பிட்டும் எடுத்துக்கூறியுள்ளார். அதற்காகவே மனித இன வரலாற்றையும் நூலின் முதல் கட்டுரையான மதுரைக்காஞ்சி- நகர்மயமாதலின் பனுவலில் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளார். அன்றைய காலத்திலிருந்த மதுரையின் அமைப்பு, நகரில் வாழ்ந்த மக்களின் தொழில், அற வாழ்க்கைக்கு ஆலோசனை கூறும் அவை, நகரின் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை புலவர்களின் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார் மதுரை […]

Read more

செவ்விலக்கியச் சொல்லாய்வுகள்

செவ்விலக்கியச் சொல்லாய்வுகள், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக்.144, விலை ரூ.150. பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில சொற்கள் குறித்த விரிவான ஆய்வு நூல் இது. தொல்காப்பிய முதல் அதிகாரத்தின் முதல் இயலான நூன்மரபு என்பது சரியா? நூல் மரபு என்று அதைப் புரிந்து கொண்டால் என்ன பொருள் தரும்? என்பன போன்ற வினாக்களுக்கு ஆய்வு நோக்கில் இந்நூல் விடையளிக்கிறது, ‘தொல்காப்பிய முதல் இயல் நூன்மரபு அன்று. நூல் மரபே’ என்ற முதல் கட்டுரை. கேண்மியா, சென்மியா என்று பழந்தமிழ் இலக்கியங்களில் […]

Read more
1 2 3 4 5 8