கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், முல்லை முத்தையா, முல்லை பதிப்பகம், விலைரூ.50 வ.உ.சிதம்பரனார் 150ம் பிறந்த நாளை ஒட்டி, சிறப்பு வெளியீடாக வந்துள்ள நுால். வ.உ.சி., பற்றி பல அறிஞர்களின் தொகுப்பு நுால். இந்த நுாலில், 22 தலைப்புகள் உள்ளன. கவிஞர் பாரதி உட்பட பல தமிழறிஞர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் கூறிய, எழுதிய ஆக்கங்கள் இதில் உள்ளன. அவரது உயர்ந்த உள்ளத்தையும், தியாகத்தையும் சுட்டுகின்றன. பாதுகாக்கத்தக்க ஆவணமாக உள்ளது. – வசந்தன் நன்றி: தினமலர், 24/10/22.. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள், பெ.பெரியார் மன்னன், விவேகா பதிப்பகம், விலைரூ.145. வித்தியாசமான 50 கோவில்கள் பற்றியும், அவற்றின் வழிபாட்டு முறை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்துள்ள இந்த நுாலில், அந்தச் சுவாமிகளின் படத்தையும் தெளிவான தகவல் கொண்ட நுால். இதில் இடம்பெற்றுள்ள கோவில்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாரத்தில் உள்ளவை. கல்வராயன் மலையில் ராமனைக் கரியராமன் என்று குறிப்பிடுகின்றனர். கல்வெட்டையும் கடவுளாக வணங்குகின்றனர். அந்தக் கல்வெட்டை வணங்கினால் நோய் தீர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையும் இந்தப் பகுதியில் நிலவுகிறது. ஓர் ஊரில் எட்டுக்கை அம்மன் சிலை 45 அடி […]

Read more

நுண்ணுயிர் எதிரி

நுண்ணுயிர் எதிரி, கே.நித்தியானந்தன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150. உலகையே ஆட்டி படைத்த கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக, அறிவியல், உளவியல் ரீதியாக தொகுக்கப்பட்ட நுால். வைரஸ் தொடர்பான செய்திகள், ஊடகங்களில் அதிகம் இடம் பிடித்தன. ஆனால், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் அதிகம் பரவின. இதனால், மக்கள் குழப்பம், பயம் அடைந்தனர். இவை, ஐந்து அத்தியாயங்கள் வழியாக விவரிக்கின்றன. வைரசின் தோற்றம், பரவல், உடல், மனநல பாதிப்புகள், தடுப்பு மருந்து உருவாக்கம், சர்வதேசம் சந்தித்த பிரச்னைகள், மக்களின் வாழ்வியல் சோதனைகள் போன்ற தொடர் […]

Read more

மனம் எனும் வனம்

மனம் எனும் வனம், மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.60. வனத்தின் வாசல் என்ற தலைப்பிலேயே உள்ள கவிதைகளின் தலைப்புகளை அறிமுகம் செய்த ஆசிரியரின் கவித்துவம் புலப்படுகிறது. எழுத்து இதழில் கவிதை பயணம் துவங்கிய மாலன், கதாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் காட்டி ஜெயித்தவர்; புதுக்கவிதைகளிலும் ஜெயித்து உள்ளார். கொரோனா பற்றி பாடுகிறார்; குறும்பு கொப்பளிக்கிறது. என் கவிதையைப் போல நீ எடை குறைவு எனினும் வீரியம் அதிகம்! கொரோனா மற்றும் கவிதைக்கும் எடை குறைவு தானாம். தாக்கும் சக்தி மிக அதிகமாம். […]

Read more

பழமிருக்க பயமேன்

பழமிருக்க பயமேன், டாக்டர் வி, விக்ரம்குமார், காக்கைக் கூடு, விலை 100ரூ. எண்ணிலடங்கா தாதுக்கள்… வைட்டமின்கள்… நார்ச்சத்து… ஆன்டி-ஆக்ஸிடன்ஸ்… என உணவாகக் கொள்ளப்படும் மருந்துகளே பழங்கள். மலக்கட்டு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் வல்லமை பழங்களுக்கு உண்டு. பழங்களைச் சாப்பிடும் முறை, உணவுக்கும் அவற்றுக்குமான தொடர்பு, அவற்றின் நோய் நீக்கும் குணநலன்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது. பழங்களின் வரலாறு, தனித்துவம், சுவை, ஊட்டம் போன்றவற்றைப் பற்றி ஆசிரியர் விவரித்துள்ள விதம் பழங்களைச் சாப்பிடும் ஆவலை அதிகரிக்கும். நன்றி: தமிழ் இந்து, 26/2/22. […]

Read more

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் – கேள்விகளும் பதில்களும், இரா. மகேந்திரன், ஜெ. பழனிவேல், காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. பெருந்தொற்றுக் காலத்தில் கரோனா வைரஸ், அதற்கான சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து அறிவியலுக்குப் புறம்பான தகவல்கள் காட்டுத்தீயைப் போலப் பரவின. தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் மக்களிடம் அவை ஏற்படுத்தின. இந்தச் சூழலில் அறிவியல் அடிப்படையிலான நம்பகமான தகவல்களின் மூலம் அறிவியலுக்கு வலுசேர்க்கும் விதமாகவும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. சாமானியர்களுக்குப் புரியும் வகையில் எளிய மொழியில் எழுதப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. நன்றி: […]

Read more

ஒளரங்கசீப்

ஒளரங்கசீப், ஆங்கிலத்தில்: ஆட்ரே ட்ரஷ்கெ, தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.158, விலை  ரூ.200. முகலாயப் பேரரசர்களில் மிகக் கொடூரமானவராகச் சித்திரிக்கப்பட்டவர் ஒளரங்கசீப். உண்மையில் ஒளரங்கசீப் கொடூரமானவரா என்பதை இந்நூல் ஆராய்கிறது. அமெரிக்க வரலாற்றாசிரியரான ஆட்ரே ட்ரஷ்கே, இது குறித்து பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், ஒளரங்கசீப் பற்றி கூறப்படும் பல குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற முடிவுக்கு வருகிறார். ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன என்று கூறுவது உண்மையல்ல என்று கூறும் நூலாசிரியர், அவருடைய ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களின் எண்ணிக்கை பத்து […]

Read more

திருப்பாவை நாச்சியார் திருமொழி

திருப்பாவை நாச்சியார் திருமொழி, வே.சாய் சத்தியவதி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.120. சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் நோன்பிருந்து பாடிக் கொடுத்த திருப்பாவை முப்பது பாடல்களையும் புரிந்துகொள்ளும்படி, எளிய நடையில் விளக்க உரை கொடுக்கப்பட்டுள்ள நுால். அதுமட்டுமல்ல, நாச்சியார் திருமொழி பதினான்கையும் சந்தி பிரித்து தந்துள்ளது மிக அருமை. இதில் ஆறாம் பத்து பாடல்கள் கண்ணபிரான் தன்னை மணம் செய்த கனவைச் சொல்லும் பாடல்கள். அம்மி மிதிக்கக் கனாக் கண்டால் திருமணம் கைகூடுமே! – சீத்தலைச்சாத்தன் நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம், காஞ்சி பாலச்சந்திரன், பானு பாலா பதிப்பகம், விலைரூ.250. இரு நாவல்களை உள்ளடக்கிய நுால். படிப்பவர்களின் மனதில் தத்ரூபமாக காட்சிகளை கொண்டு சேர்க்கின்றன. முழுதும் படித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு கதைகள் அமைந்துள்ளன. கேசவன், கமலா, மஞ்சரி என்னும் கதாபாத்திரங்கள், காலங்களில் அவள் வசந்தம் என்னும் நாவலின் உயிரோட்டமாக அமைந்துள்ளன. இரண்டாம் நாவலான, ‘பூர்ணிமா’வில் பெண்ணின் வாழ்க்கை கதையும், ஏன் சிறைக்கு சென்றாள் என்பதையும் எடுத்துரைக்கிறது. – வி.விஷ்வா நன்றி: தினமலர்.24/10/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

பாடி, ஆடு பாப்பா

பாடி, ஆடு பாப்பா, கவிஞர் சபா.அருள்சுப்பிரமணியம், மணிமேகலை பிரசுரம், விலை 400ரூ. குழந்தைகள் முதல், சிறுவர்கள் வரை பாடி மகிழ ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நுால். பாலர் பாடல்கள், சிறுவர் பாடல்கள், கதைப்பாடல்கள், மாணவர் பாடல்கள், தமிழ் மரபுத் திங்கள் பாடல்கள், தமிழ்மலர் பாடல்கள், பாடி ஆடு பாப்பா, தங்கக் கலசம், பாடலும் ஆடலும், பாச்செண்டு ஆகிய தலைப்புகளின் கீழ் சந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. மிக எளிமையாக, இசையுடன் பாடத்தக்க வகையில் சொற்களைக் கோர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. மழலையருக்கு, மொழி கற்பிக்கும் வகையில் […]

Read more
1 3 4 5 6 7 8