சங்கிலிப் பூதத்தான்

சங்கிலிப் பூதத்தான், நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகம், விலைரூ.145 மொத்தம், 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் இடம்பிடித்துள்ள கதைகள், ஆனந்த விகடன் இதழில் அவ்வப்போது வெளியாகி, வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றவை. ஒவ்வொரு சிறுகதையும், எளிய மக்களின் வாழ்க்கை போராட்டத்தை வலி(மை)யாக எடுத்துக் காட்டுகிறது. நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000026410_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திரைக்கவித் திலகம் 100

திரைக்கவித் திலகம் 100, வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், பரணி பதிப்பகம், விலைரூ.250 கலைமாமணி அறிஞர் அ.மருதகாசி திரைக்கதைப் பாடல்களில் முத்திரை பதித்தவர். அவரைப்பற்றிய இந்த நுாலை வானொலி அண்ணா ஞானப்பிரகாசம், நுாற்றாண்டு விழாவைக் கருதி படைத்திருக்கிறார். அவர் எழுதிய எளிய தத்துவப்பாடல்கள் காலத்தில் நின்று நிற்பவை. மொழி அறிவும் இசை அறிவும் கொண்ட அவர், ‘மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் முதன்மையானவர்’ என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். ‘கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்… அறிவை நம்பு உள்ளம் தெளிவாகும்’ என்ற பாடல் நினைத்ததை முடிப்பவன் படத்திற்கு […]

Read more

மதுரையின் அரசியல் வரலாறு 1868

மதுரையின் அரசியல் வரலாறு 1868, ஜே.எச்.நெல்சன், தமிழில்: ச.சரவணன், சந்தியா பதிப்பகம், விலை: ரூ.360 தமிழக நகரங்களில் நீண்ட காலம் தலைநகரமாக விளங்கிய சரித்திரப் பெருமை மதுரைக்கு உண்டு. மதுரை என்பது நிலமும் மக்களும் சார்ந்த வெறும் நகரம் மட்டுமல்ல; கடல் கொண்ட முதலாம் தமிழ்ச் சங்கக் காலத்தை இன்னமும் நினைவுறுத்திக்கொண்டிருக்கும் தொன்மமும்கூட. மதுரையைப் பற்றிய வரலாற்று நூல்களுள் ஜேம்ஸ் ஹென்ரி நெல்சனின் ‘மதுரா கன்ட்ரி மானுவல்’ குறிப்பிடத்தக்க ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உதவும் நோக்கில், மாவட்ட விவரச்சுவடிகள் […]

Read more

வாசிப்பது எப்படி?

வாசிப்பது எப்படி?, பாலை நிலப் பயணம், செல்வேந்திரன், எழுத்து பிரசுரம் வெளியீடு, விலை: ரூ.220. (இரண்டும் சேர்த்து) மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் வாசிப்பை ஊக்குவிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் செல்வேந்திரன், இந்த கரோனா காலத்தில் இரண்டு புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறார். ஒன்று, ‘வாசிப்பது எப்படி?’ எனும் வழிகாட்டி நூல். ‘ஹவ் டு ரீட்?’ என்ற பெயரில் இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும், வாசிப்பதால் கிடைக்கும் அனுகூலங்கள் என்ன, என்னென்ன வாசிக்கலாம், வாசிக்காதவர்களின் இழப்புகள் எனப் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது. வாசிப்புப் […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை,  இறையன்பு, கற்பகம் புத்தகாலயம்,  பக்.232, விலை ரூ.200. நூலாசிரியர் இந்திய ஆட்சிப்பணியின்போது தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு 10 தலைப்புகளில் கட்டுரைகளாக வடித்து நூலாகத் தந்துள்ளார். பெருக்கெடுக்கும் வார்த்தை பிரவாகம், பள்ளி மாணவர்களும் புரிந்து கொள்ளும் அளவு எளிமையான நடை நம்மைக் கவர்கிறது. பணியில் சிறக்க' என்ற தலைப்பில், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பற்றிய ஒப்பீடு, நிறுவனத்தின் வளர்ச்சி, நிறுவனம் சிறக்க ஊழியர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள், கடும் உழைப்புத் திறன் ஆகியவை குறித்து விளக்கமாகத் தெரிவித்துள்ளார். […]

Read more

ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017

ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017, முத்தாலங்குறிச்சி காமராசு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.260 அகழாய்வு என்றதும் கடந்த தலைமுறை வரை அறிந்தது சிந்துச் சமவெளி நாகரிகத்தை வெளிக்காட்டிய மொஹஞ்சதாரோ, ஹரப்பாதான். வேறெதுவும் அறியாத இந்தத் தலைமுறையினருக்குக் ‘கீழடி’யும் அங்கே நடைபெற்றுவரும் அகழாய்வுகளும் அறிமுகம். ‘தொன்மையான நதிகளின் கரைகளில் மனிதர் வாழ்ந்து மறைந்த வரலாற்றின் சுவடுகள் இருந்தே தீரும்’ என்பது மரபு. அப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அகழாய்வுகள்கூட ஏன் மறைக்கப்பட்டன என்ற கேள்விக்கு இன்று வரை வெளிப்படையான பதிலில்லை. […]

Read more

மரக்குட்டி

மரக்குட்டி, கி.ரவிக்குமார், பாவைமதி வெளியீடு, விலைரூ.90 வாழ்வை விசாரித்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். 12 கதைகளைக் கொண்டுள்ளது. நவரசங்களை எழுத்தில் வடித்துள்ளார்.கதாபாத்திரங்களுடன், மரம், பறவைகள் குறித்தும் எழுதியுள்ளார். வியக்கும் வகையில் ஒப்பீடுகள் உள்ளன. கதைகளில் சமூக சிந்தனை பரவலாக உள்ளது. நன்றி: தினமலர், 17/5/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தலைநகர் தில்லி தமிழும் தமிழரும்

தலைநகர் தில்லி தமிழும் தமிழரும், ச.சீனிவாசன்;  காவ்யா, பக்.586; விலை ரூ.600.  இந்திய நகரங்களுக்குள் நீண்ட வாழ்வியலும், பாரம்பரியமும் உள்ள நகரம் தில்லி. தில்லி தமிழர்கள் பலரும் அவரவர்கள் பார்வையில் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தில்லி தமிழர்கள் பற்றிய விசாலமான பார்வையையும் இந்த நூல் தருகிறது. தமிழர்கள் இடம்பெயர்ந்தாலும், புலம்பெயர்ந்தாலும் தங்களது கலை, கலாசாரம் ஆகியவற்றைப் பேணுவதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள் என்பதை கட்டுரைகள் எடுத்துச் சொல்லுகின்றன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே தமிழர்கள் தில்லிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தங்களது மொழி, கலாசாரம், இலக்கியம் போன்றவற்றை […]

Read more

நல்லுறவே நம் உயர்வு

நல்லுறவே நம் உயர்வு, லேனா தமிழ்வாணன்; மணிமேகலைப் பிரசுரம், பக்.188;  விலை ரூ.160; நம் வாழ்வின் பார்வைகள் மாறினால், நம் அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டால் ஏற்படக் கூடிய நன்மைகள் எவை என்பதை பல்வேறு வெற்றிக் கதைகள், நிகழ்ச்சிகள், சுவாரஸ்யமான தகவல்களுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர். மனிதர்கள், தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட சறுக்கல்களுக்கும், சங்கடங்களுக்கும் பிரச்னைகளுக்குமான காரணங்களைப் பிறர் மீது சுமத்துவதைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், ‘ மற்றவர்கள் மாற வேண்டும்; என்னைச் சுற்றியிருப்பவர்கள் திருந்த வேண்டும்; பிறகு என்னை மாற்றிக் கொள்கிறேன் என எண்ணும் மனப்போக்கு நமக்குள் […]

Read more

முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள்

முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள், இரண்டாம் பாகம், தொகுப்பாசிரியர்:கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளியீடு, விலை: ரூ.100 முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களான காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் தொடங்கி லால்பேட்டை எம்.ஏ.அபுசாலிஹ் வரையிலான ஒன்பது பேர்களின் பேருரைகள் ஏற்கெனவே முதல் பாகமாக வெளியாகியிருந்தன. இப்போது எம்.ஏ.லத்தீப், ஏ.ஷாகுல் ஹமீத், ஆ.கா.அ.அம்துல் சமத், வி.எஸ்.டி.சம்சுல் ஆலம் ஆகியோரின் பேருரைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாகியிருக்கின்றன. முக்கியமானதொரு அரசியல் ஆவணம் இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 7/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more
1 108 109 110 111 112 505