திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதிய உரை

திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதிய உரை, சுரேஜமீ, மணிமேகலைப் பிரசுரம், பக். 94, விலை 100ரூ. உலக மக்களால் உயர்த்திப் பார்க்கப்படுவது திருக்குறள். மக்களுக்குக் குறள் நெறிகளை எளிதாக உணர்த்தும் நோக்கில் உரை, வார்ப்புரை, சிறுகதைகள் எனப் பலவும் வந்த வண்ணமுள்ளன. செறிந்த செய்யுளின் கருத்தை அதன் பொருள் மாறாமல் வாசிப்புக்கு எளிமைப்படுத்தி வழக்கப்படுவது உரை. குறள்களுக்கான உரைக்கு அப்பாற்பட்டு புதுமைச் சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாறுபட்ட எண்ணத் தெறிப்புகள் பலவும் பயனுள்ள அறிவுரைகளாக விளங்குகின்றன. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனும் முப்பால் அடங்கிய திருக்குறளின் […]

Read more

வீணையடி நீ எனக்கு

வீணையடி நீ எனக்கு, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 220, விலை 240ரூ. நேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என்று சிறுபிள்ளையாய் கேட்கும் மாணவியிடம், அன்னை ராஜராஜேஸ்வரி சொல்லும் எளிமையான விளக்கம், நம்மை உருகச் செய்துவிடும். அன்பு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். கர்மக்கணக்கும் அந்த அன்புக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவிக்கும் என்பதுதான் கதையோட்டத்தின் சிறப்பு. வழக்கம்போல விறுவிறுப்பான எழுத்தோட்டத்தாலும், எளிமையான கதையின் ஓட்டத்தாலும் கதையோடு பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் […]

Read more

திருவாய்மொழி

திருவாய்மொழி, பி.கே.வெங்கடேசன், பாதுகா பவனம், பக். 287, விலை 150ரூ. ஆழ்வார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இயலாதோருக்குத் துணை நிற்பது திருவாய்மொழி. இதை அருளியவர் நம்மாழ்வார். இதில் 1,102 பாசுரங்கள் அடங்கியுள்ளன. திவ்யப் பிரபந்தத்திலிருந்து எடுத்து அனைவரும் படித்துப் பயன் பெறும்வகையில் மலிவு பதிப்பாக வெளிவந்துள்ள நூலாகும். இந்நூல், ‘எம்பெருமானால் சொல்லப்பட்ட எம்பெருமானின் புகழ் கூறும் நூல்’ என்று நம்மாழ்வாரால் கூறப்பட்ட பெருமை உடையது. ஓதுபவரது மனத்தை இறைவனிடம் சேர்ப்பிக்கும் அருமை உடையது. திருவாய்மொழியுடன், திவ்யப் பிரபந்தத்தில் ஓதுதற்கு அருமையுடைய […]

Read more

நுரையீரலை வலுப்படுத்தும் யோகா

நுரையீரலை வலுப்படுத்தும் யோகா, பி.கிருஷ்ண பாலாஜி, ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி யோகாலயம் டிரஸ்ட், பக். 48, விலை 100ரூ. நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எளிய யோக முறையை விளக்கும் நுால். கொரோனா போன்ற வைரஸ் நோய்களை தடுக்கும் வழிமுறை என அறிமுகமாகி உள்ளது. வண்ணப் படங்களுடன், யோகா, முத்திரை, தியானம், உணவு முறை என பல விளக்கங்கள் உள்ளன. பயம் களைந்து, வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் வகையில் பயிற்சி முறை பற்றி விளக்கம் தரப்பட்டு உள்ளது. நன்றி: தினமலர், 9/8/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

கீர்த்தன மாலை

கீர்த்தன மாலை, எஸ்.வி.ரமணி, மணிமேகலைப் பிரசுரம், பக். 124, விலை 100ரூ. பக்தியில் மனம் லயித்து எழுதப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நூல். 147 பாடல்கள் உள்ளன. எளிமையாக புரிந்துகொள்ளும் வடிவத்தில் உள்ளன. இசையுடன் பாடி உருக ஏற்றது. இந்த பாடல்களை எழுதிய ரமணி, ஆப்ரிக்க நாடான கென்யா, நைரேபி நகரில் வசிக்கிறார். நாடு கடந்தும், இறை எண்ணத்தில் ததும்பி துதிகளை இயற்றியுள்ளார். பக்தி பரவசத்தில் கனிந்துருகி பாட உதவும் கீதங்கள். நன்றி: தினமலர், 13/9/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

மனிதர்களைப் படியுங்கள்

மனிதர்களைப் படியுங்கள், த்தலைச் சாத்தன், ஒப்பில்லாள் பதிப்பகம், பக். 76, விலை 85ரூ. ஒவ்வொரு மனிதனிடமும் தனித்த வரலாறு உண்டு. அந்த வரலாறுகளால் இந்தச் சமுதாயத்திற்குப் பயன் ஏற்படலாம். வங்கித் துறையில் பணியாற்றியவர், ஓய்வுக்கு பின் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.நிதி நிறுவனம், பங்குச் சந்தை, ஆலயப் பணி, பத்திரிகைப் பணி என துவங்கி, அவற்றில் பார்த்த ஏற்றத்தையும், இறக்கத்தையும் உள்ளது உள்ளபடி தந்துள்ளார். மொழியையும் சிக்கனமாகப் பயன்படுத்தியுள்ளார். – முகிலை ராசபாண்டியன் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம்

திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம், கமலா கந்தசாமி, அருணா பப்ளிகேஷன்ஸ், பக் 104, விலை 40ரூ. திரைப்படப் பாடலுக்கு என, நிறைய ரசிகர்கள் உண்டு. எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், காலத்தை வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாடல்கள் சிலவே. சுய முன்னேற்ற சிந்தனை தரும் பாடல்கள், கருத்தாழம் மிக்க வரிகள் கொண்ட தத்துவப் பாடல்கள் வழிகாட்டியாக இருந்து வருகின்றன. அத்தகைய பாடல்களை, 45 அத்தியாயங்களாக தொகுத்து, உட்கருத்தை விளக்கி, அதன் சுவையை அறிய வைக்கிறார். நன்றி: தினமலர், 13/9/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், கே.மகாலிங்கம்,  மூன்றெழுத்து பதிப்பகம், விலைரூ.400. மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என, புகழப்படும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் வாழ்க்கை சம்பவங்களின் தொகுப்பு.தி.மு.க.,விலிருந்து நீக்கம், மனதை மாற்றிய மூதாட்டிகள், இடைத் தேர்தலும் இரட்டை இலை சின்னமும் உள்ளிட்ட தலைப்புகள், அவரது அரசியல் வாழ்வை படம் பிடிக்கின்றன. அறையில் மது பாட்டில்கள், விரும்பிக் கேட்ட சுறா மீன் குழம்பு, மறக்க முடியாத நகைச்சுவை, பூரியும் பாஸந்தியும், உதவியாளராக ஆசைப்பட்ட தமிழாசிரியர் போன்ற தலைப்புகள் சுவாரசியம் மிக்கவை. அரசியல், சினிமா […]

Read more

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு

பெரியாழ்வார் போற்றும் பெருவாழ்வு, பேராசிரியர் தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், விலைரூ.120. பன்னிரு ஆழ்வார்களில், எம்பெருமானுக்குப் பொங்கும் பரிவு கொண்டு, பல்லாண்டு பாடியதால் விஷ்ணு சித்தர் – பெரியாழ்வார் என்று போற்றப்படுகிறார். ஆழ்வார்கள் இறைவனைத் தாயாகப் பாவித்து காக்க வேண்டி பாசுரங்கள் பாடினர்; ஆனால், பெரியாழ்வார் இறைவனுக்குத் தாமே தாயெனப் பாவித்து பாசுரங்கள் பாடினார் என்று கூறி, அவரின் ஆன்மிக சிந்தனைகளை விளக்கும் நுால். அறிவின் திறனுக்குச் சான்றுகளாக உள்ளன. செவ்விலக்கியம் படைப்போர் வழக்கு சொற்களையும், கொச்சை சொற்களையும் பயன்படுத்த மாட்டர் என்று கூறும் நுாலாசிரியர், […]

Read more

சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல்

சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல், டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, பக். 1560, விலை 1500ரூ. மருத்துவத் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு உதவும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். கேள்வி – பதில் தொகுப்பாக உள்ளது. மத்திய, மாநில அரசு பணிகளில் சேர தேர்வு எழுதுவோருக்கும் உதவும். சுலபமாக பயன்படுத்த வசதியாக மூன்று புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்ந்த மருத்துவக் குழு தயாரித்துள்ளது. சித்த மருத்துவம் தொடர்பான துல்லிய விபரங்கள், கேள்வி – பதில் வடிவில் உள்ளது. தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் […]

Read more
1 124 125 126 127 128 505