விடுதலைப் போரில் பழங்குடி மக்கள்

விடுதலைப் போரில் பழங்குடி மக்கள், வி.என்.சாமி, விலை 120ரூ. காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் பூர்வ குடிமக்களான பழங்குடி இனத்தவர்கள், இந்திய வரலாற்றில் கவனிக்காமல் விடுபட்ட நிலையிலும், அவர்கள் இந்திய விடுதலைக்காகப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்பதை இந்த நூல் விளக்கி இருக்கிறது. சாந்தல்கள் என்னும் பழங்குடி இன மக்கள் வில் அம்புகளை மட்டுமே ஆயுதங்களாக வைத்துக் கொண்டு நான்கு ஆண்டு காலம் ஆங்கிலேய படைகளை எதிர்த்துப் போராடினார்கள் என்ற வியப்பான தகவலை இந்த நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டம், […]

Read more

மலர்க் கிரீடம்

மலர்க் கிரீடம், கண்மணி பதிப்பகம், விலை 70ரூ. எழுத்தாளரும், சினிமா கதை வசனகர்த்தாவுமாகிய கண்மணி ராஜா முகமது எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு, முழுக்க முழுக்க காதலைப் பற்றியே பாடுகிறார். “தூங்கும்போது கனவில் விழித்திருக்கையில் நினைவில் எப்படித்தான் இவர்கள் நம்மைப் பிரிப்பார்களோ? ஒரு வண்ண மயிலை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்கள் என மேனகா காந்திக்கு மெயில் அனுப்ப வேண்டும் நீரின்றி அமையாது உலகு குறள் நீயின்றி அமையாது உலகு என் குரல் என்பன போன்ற கவிதைகள் நெஞ்சைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, நவம்பர், 2019. இந்தப் […]

Read more

மண் மக்கள் தெய்வங்கள்

மண் மக்கள் தெய்வங்கள், வெ.நீலகண்டன், விகடன் பிரசுரம், விலை 185ரூ. கிராமப்புற மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து இன்றைக்கும் காலம் தவறாமல் கொண்டாடப்படும் கிராம தெய்வ வழிபாட்டை, உளவியல் பூர்வமாக இந்த நூல் அணுகி இருக்கிறது. இருளர்கள், கோத்தர்கள், பளியர்கள், காடர்கள் போன்ற தமிழகப் பழங்குடி மக்களின் வழிபாடுகள், திருநங்கைகளின் மாதா வழிபாடு, திருவள்ளுவருக்கு அருகே 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் அபூர்வமான வழிபாடு ஆகியவை பற்றியும் இந்த நூலில் விரிவான தகவல்கள் உள்ளன. சில கோவில்களில் நடைபெற்ற அமானுஷ்யமான சம்பவங்கள் […]

Read more

ஈசனை உணரலாம் வாங்க

ஈசனை உணரலாம் வாங்க, ஆ.ஞானகுரு, தமிழ்வனம், விலை 110ரூ. மதுரை அருகே உள்ள புனிதத் தலமான சதுரகிரிக்குச் செல்பவர்களுக்குப் பயன் தரும் வழிகாட்டிப் புத்தகம் போல இந்த நூல் அமைந்து இருக்கிறது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கு குழந்தை வரம் அருளிய வல்லப சித்தர் என்பவரின் வாழ்க்கை விவரத்துடன் தொடங்கும் இந்த நூலில், சதுரகிரியில் எந்த எந்த சித்தர்கள் எங்கே வாழ்ந்தார்கள்? அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள், அந்தச் சித்தர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் செல்வது எப்படி? என்ற அனைத்து விவரங்களும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. சதுரகிரியில் […]

Read more

தேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்

தேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும், தோப்பில் முகம்மது மீரான், இர.பிரபா, எதிர் வெளியீடு, பக். 118, விலை 130ரூ. பிரபஞ்சன் எனும் ஆளுமைக்கு, புதுச்சேரி அரசு மரியாதை செலுத்தியது. தமிழக அரசோ, மத்திய அரசோ ஒரு மலர் வளையத்தைக் கூட எந்த எழுத்தாளருக்கும் வைப்பதில்லை’ (பக்., 11) என்று நியாயமாக ஆதங்கப்படும் நுாலாசிரியர், அன்பின் பெருங்கடலாய் தோப்பில் முகமது மீரானை ஆராதித்து, அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் உரையாடிய நேர்காணல்களையும், மீரானின் படைப்புகளான தேங்காய்ப் பட்டணம், மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களையும் இதில் […]

Read more

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும், கவிஞர் சி.விநாயகமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், பக். 268, விலை 200ரூ. கபிலர் மலைநிலமான குறிஞ்சி நிலத்தை பாடுவதில் வல்லவர். சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் பாடியவர்களுள் இவரும் ஒருவர். பாரியின் நண்பராக இருந்து பறம்பு மலையை பலவாறு பாடியவர். கவிஞர் விநாயகமூர்த்தி, பதினாறு தலைப்புகளில் கபிலரின் பாடல்களிலிருந்து பல்வேறு கருத்துகளை இந்நுாலில் அழகுறத் தொகுத்திருக்கிறார். கபிலருக்கும், பாரிக்கும் இருந்த நட்புறவு, கபிலர் பதிற்றுப்பத்தில் பாடிய ஏழாம் பத்து, இன்னா நாற்பது பாடிய கபிலர் முதலியவற்றை முதற்பகுதியில் […]

Read more

சித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு

சித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு, முனைவர் சு.சசிகலா, காவ்யா, பக். 272, விலை 280ரூ. இப்பிரபஞ்ச இயக்கத்தின் சூட்சுமத்தை உணர்ந்தவர்களாக வாழ்ந்த சித்தர்கள், இறைவன் உன்னுள்ளே உள்ளான் என்ற அகவழிபாட்டு நெறியை, சமயம் கடந்த நிலையில் விளக்கியுள்ளனர். அண்டம் அனைத்தும் பரவியிருக்கும் பரம்பொருள் மனித உடலுக்குள்ளும் இருக்கிறது என்பதையே, ‘அண்டத்துள் உள்ளது பிண்டத்துள் உள்ளது’ என்று சித்தர்கள் கூறுகின்றனர். இவர்கள் தமிழில் யோகம், மருத்துவம், ஞானம், ரசவாதம் போன்றவற்றை நுட்பமாக விளக்கியுள்ளனர். பதினெண் சித்தர்கள், உரோம ரிஷி, கருவூரார் வரலாற்றையும், அவர் தம் படைப்புகளையும், […]

Read more

காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்

காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள், சிங்கம்பட்டி பெ.மாடசாமி, மணிமேகலை பிரசுரம், பக். 200, விலை 125ரூ. காவல்துறை பணி ஒரு சவால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை. காவல்துறையினர் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதை பலரும் சினிமாவில் தான் பார்த்திருப்போம். ஒரு கொலை, திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கின்றனர் என்பதை நேரடியாக கேட்பது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. அந்த வகையில், போலீஸ் அதிகாரி மாடசாமி, தான் சந்தித்த வித்தியாசமான வழக்குகள், மற்ற போலீசார் கண்டுபிடித்த குற்றங்களை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் தந்துள்ளார். இந்த புத்தகத்தை […]

Read more

வாழ்க்கை வாழத்தான்

வாழ்க்கை வாழத்தான், எஸ்.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், பக்.120, விலை 90ரூ. வாழ்தல் – நம், ‘கை’யில் இருப்பதால் தான் அதற்கு, வாழ்க்கை’ என்று பெயர் வைக்கப்படுகிறது என்பார் ஏர்வாடியார். ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே’ என்கிற பாரதி, ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று கூறி அசையாது நிற்பான். அப்பர் சுவாமிகள், ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்பார். இவர்களைப் போல் அஞ்சாது, வாழ்க்கையை எதிர்கொண்டால், வாழ்க்கை நமக்கு வசப்படும். பழி எண்ணம் மறக்கிற போது, பகை மாறி நட்பு மலரும் என்று பேசும் ஏர்வாடியார் – கவிஞர் அப்துல் […]

Read more

நக்கீரன் இயர்புக் 2019

நக்கீரன் இயர்புக் 2019, நக்கீரன் பதிப்பகம், விலை 160ரூ. சமூக அர்ப்பணிப்பு உணர்வு மட்டுமல்லாமல், அறிவுக் கடலில் முத்தெடுக்கும் இதழாக மலர்ந்து மணம் வீசும் நக்கீரனுக்கு, சிகரத்தைத் தொடுமளவிற்கு சிறப்பு சேர்க்கிறது இந்நுால். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பது போல தற்கால நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், விருதுகள், விளையாட்டுகள், உலகச் செய்திகள் உள்ளிட்ட அரிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. பொது அறிவு உலகமாகிய இந்நுால், எக்காலத்திலும் மாணவச் செல்வங்களுக்கு பயன் தரும் வகையில் வாழையடி வாழையாக அமைந்துள்ள […]

Read more
1 171 172 173 174 175 505