புத்தரின் வரவேற்பறையில் காத்திருக்கிறேன்

புத்தரின் வரவேற்பறையில் காத்திருக்கிறேன், அ.கார்த்திகேயன், பச்சியம்மன் பதிப்பகம், விலை 50ரூ. ‘வேட்கை’ அ.கார்த்திகேயனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. மீறல்கள் குறித்து பேசவும் எழுதவும்தான் முடிகிறது கடைசியில் வட்டங்களுக்குள்தான் வாழவேண்டியிருக்கிறது/ என்பது போன்று எளிய வார்த்தைகளில் வாழ்வின் எதார்த்தங்களைக் கவிதைகளாக்கும் முயற்சி. நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தூரங்களின் பாடல்

தூரங்களின் பாடல், மணல் உரையாடல், இசாக், தமிழ் அலை வெளியீடு, விலை: ரூ.150 பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்து ஆயிரமாயிரம் இளைஞர்கள் சொந்த தேசத்தை விட்டு, தூர தேசம் சென்று உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வலி மிகு துயர வாழ்வை வார்த்தை வயல்களில் விதைத்திருக்கிறார் இசாக். துபாய் தேசத்துக்குச் சென்று நிமிடந்தோறும் நெஞ்சில் குடும்பத்தைச் சுமந்துகொண்டு, கண்ணின் நீருக்கு உள்ளுக்குள் தாழ்போட்டுக்கொள்ளும் நாட்களின் பாடல்தான் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கவிதைகள். ஏற்கெனவே வந்த ‘துணையிழந்தவளின் துயரம்’ சிற்சில மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. சம்பாத்தியம் புருஷ லட்சணம் […]

Read more

சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்ட்ரர்

சுதந்திரப் போராட்டத்தில் சௌராஷ்ட்ரர், வி.என்.சாமி, வி.என்.சாமி வெளியீடு, விலை ரூ.300 சௌராஷ்டிர சமூகத்தினர் தமிழகம் வந்த பிறகு எப்படி இங்கேயுள்ள சமூகப் பங்களிப்பில் தங்களைப் பிணைத்துக்கொண்டார்கள் என்பதைப் பேசும் புத்தகம் இது. மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்புராமன், குடந்தை கே.கே.ராமாச்சாரி, யோகாசன நிபுணர் வி.என்.குமாரசாமி, வெங்கட்ராமையா, அஷ்டாவதானி பத்மநாபய்யர், பாலாஜி சொர்ணம்மாள், சோலை பாக்கியலட்சுமி அம்மாள், தாயம்மாள் இன்னும் இந்நூலில் வரும் பலருடைய வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. ராஜாஜியின் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தைத் தினசரிக் குறிப்புகளாக எழுதிய டி.ஆர்.பத்மநாபன், அரிய வரலாற்றுப் பதிவுக்கு […]

Read more

எங்கே செல்கிறது இந்தியா

எங்கே செல்கிறது இந்தியா, டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ், எதிர் வெளியீடு, விலை: ரூ.350 இந்திய புள்ளியியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும், ஆர்ஐசிஇ அமைப்பின் நிர்வாக இயக்குநர்களுமான டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ் இருவரும் இணைந்து எழுதிய ‘எங்கே செல்கிறது இந்தியா: கைவிடப்பட்ட கழிப்பிடங்கள், தடைபட்ட வளர்ச்சிகள், சாதியத்தின் விலைகள்’ புத்தகத்தில், இந்தியாவின் தலையாய பிரச்சினைகளுள் ஒன்றான திறந்தவெளி மலம் கழித்தல் குறித்து மிக விரிவானதொரு ஆய்வுப் பார்வையை முன்வைத்திருக்கிறார்கள். இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தலும் அதைச் சார்ந்த பிற சிக்கல்களையும் காரணங்கள், விளைவுகள், […]

Read more

என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்

என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள், சி.கே.மாணிக்கவாசகம், நர்மதா பதிப்பகம், விலை 200ரூ. மிகச் சிறிய மாற்றங்களை நடைமுறையிலும் உணவிலும் கொண்டுவருவதன் மூலம் மிகப் பெரும் பயன்களைப் பெற முடியும் என்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து,9/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நான் கண்ட எம்.ஜி.ஆர்

நான் கண்ட எம்.ஜி.ஆர், இரா.தங்கத்துரை, கருத்துக்களம், விலை: ரூ.175 பிம்பச் சிறையல்ல எம்ஜிஆர்! , நடப்புப் பொருளாதாரத்தை வெகுநுட்பமாக ஆராயும் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவரும் ‘கருத்துக்களம்’ காலாண்டிதழின் ஆசிரியர் இரா.தங்கத்துரை, எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி எழுதி வெளியிட்டிருக்கும் நூல் இது. மக்களவைத் துணை சபாநாயகரின் சிறப்பு உதவியாளராகவும், தமிழக அமைச்சர்களின் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இரா.தங்கத்துரை. நடிகராகவும் தலைவராகவும் புகழ்பெற்ற எம்ஜிஆரின் நிர்வாக ஆளுமையை விவரிக்கும்வகையில் அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத் திட்டங்களையும், பொருளாதார வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் அவர் காட்டிய அக்கறையையும் ஆதாரங்களோடு […]

Read more

ஐம்பெருங்காப்பியங்களில் அறக்கோட்பாடு

ஐம்பெருங்காப்பியங்களில் அறக்கோட்பாடு, த. சிவக்குமார், அய்யா நிலையம், பக். 224, விலை ரூ.220. அறவழிப்பட்ட சமுதாயமோ, சமூகமோதான் சிறப்பானதாகக் கருதப்படும். ஆகவேதான், ஐம்பெருங்காப்பியங்களை இயற்றிய ஆசிரியர்கள் அவரவர் சார்ந்த சமயம், மதம் குறித்த அறக்கோட்பாடுகளை தங்கள் காப்பியங்களில் இடம்பெறச் செய்து மக்களை நல்வழிப்படுத்தினர். காப்பியங்களில் உள்ள அறக்கூறுகளை, ஐம்பெருங் காப்பியங்களின் அமைப்பும் நோக்கமும் சமூக அறங்கள், சமய அறங்கள், அறக்கோட்பாடுகளும் தீர்வும் ஆகிய நான்கு இயல்களின் மூலம் இந்நூல் எடுத்துரைக்கிறது. ஐம்பெருங் காப்பியங்களில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நால்வகை உறுதிப் பொருள்களும் […]

Read more

சங்ககால வானிலை

சங்ககால வானிலை, முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன், முக்கூடல், பக். 272, விலை 300ரூ. வானிலையும் காலநிலையும்தான் மனிதன் முதல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வரை அத்தனையும் தோன்றக் காரணம். வானிலை குறித்து சங்ககாலத்திலேயே ஆய்வு செய்திருக்கிறார்கள். அதனை உணர்த்தும் வகையில் சங்க இலக்கிய நூல்களில் கோள்களின் இயக்கம் முதல், மேகம், மழை, இடி, மின்னல், வெப்பசலனம் என்று வானிலை சார்ந்த அத்தனை விஷயங்களும் இடம் பெற்றிருப்பதை உதாரணங்களுடன் விளக்கும் நூல். நம் முன்னோரின் வானிலை அறிவு(வியல்) நுட்பம் ஆச்சரியப்படவைக்கிறது. நன்றி: குமுதம், 6/11/19 . இந்தப் […]

Read more

முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள், நாகூர் சா.அப்துர் ரஹீம், அறிவு நாற்றங்கால், பக். 142, விலை 120ரூ. உடல்நலம் முதல், மனித நேயம் வரை அவசியமானது எது? அவசர உலகில் முக்கியம் என்று நினைத்து நாம் செய்து கொண்டிருக்கும் முட்டாள்தனங்கள் என்னென்ன என்பதை புரியும் வகையில் எளிய நடையில் சொல்லியிருக்கும் புத்தகம். சிறியவர் முதல் பெரியவர் வரை எந்தப் பாகுபாடும் இன்றி அத்தனைபேரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய இஸ்லாத்தின் அடிப்படையில் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: குமுதம், 6/11/19 . இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சங்கீத நினைவலைகள்

சங்கீத நினைவலைகள், வாதூலன், ஜெனரல் பப்ளிஷர்ஸ், பக். 224, விலை 140ரூ. இசை… பெயருக்கு ஏற்ப எல்லோருக்கும் இசைந்து செல்வது, அனைவரையும் இசையச் செய்வது. ஸ்வர, தாள, பாவங்களோடு கர்நாடக சங்கீதமாக உருவெடுக்கும் அதனை ராகமாக அடையாளம் காண்பது எப்படி? என்பதில் தொடங்கிய தனது சங்கீத வேட்(கை)டையில் படிப்படியாக உயர்ந்து, கச்சேரிகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு முன்னேறியுது? செம்மங்குடி முதல் ஜேசுதாஸ் வரையானவர்களைப் பற்றிய தமது நினைவலைகள் என்று அனைத்தையும் சுவைபடப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் வாதூலன். வாசிக்க வாசிக்க வயலின் இசையாய் வசீகரிக்கிறது. நன்றி: […]

Read more
1 173 174 175 176 177 505