வியப்பூட்டும் வரலாற்று உண்மைகள்

வியப்பூட்டும் வரலாற்று உண்மைகள், ஞானபாரதி செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம், விலை 150ரூ. மாவீரர்களின் ஞானிகளின் தன்னலமற்ற தலைவர்களின் வரலாறுகளைப் படிப்பதன் மூலம் நாமும் அப்படி ஆக முடியும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் ஆழ விதைக்கிறது இந்நூல். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பொதி

பொதி, காஞ்சி சாந்தன், புதியவன் பப்ளிகேஷன்ஸ், விலை 140ரூ. இந்நூல் எனது அரை நூற்றாண்டு காலச் சேமிப்பு எனக் கூறும் நூலாசிரியர், கவிதைக்கான அடித்தளமாக அனுபவத்தை அழகியலாக்கிய, இருபதின் தொடக்கமும் அறுபதின் அடக்கமும் என்று நிஜம் சொல்கிறார். நன்றி: தமிழ் இந்து, 26/10/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள்

காவல் துறையினருக்கு வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள், அ.அமல்ராஜ் ஐ.பி.எஸ்., விஜயா பதிப்பகம், பக். 352, விலை 290ரூ. சவால்களும் பொறுப்புகளும் எல்லாத் துறைகளிலுமே உண்டு என்றாலும் காவல்துறையில் அவை மிகமிக அதிகம். நிர்வாகத்திற்ன் அதிகம் தேவைப்படும் அந்தத் துறையில் இருந்து கொண்டே வாழ்வின் மற்ற எல்லா நிலைகளையும் திறம்பட நிர்வகித்து வெற்றி காண்பதற்கான வழியினை எளிய முறையில் சொல்லும் நூல். புலம்பலோ மன அழுத்தமோ இல்லாமல், பணியிடம், குடும்பம், நட்பு வட்டாரம், வெளியிடம் என்று எல்லா இடங்களிலும் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட சின்னச் சின்ன […]

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு, மா.ராசமாணிக்கனார், ஜீவா பதிப்பகம், விலை 260ரூ. தமிழகத்தை 7 நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பல்லவ மன்னர்களின் பூர்வீகம் எது என்பதுஇன்னும் உறுதிப்படாத நிலையிலும், கி.பி.250ல் தொடங்கி, கி.பி.882 வரை நீடித்த பல்லவ மன்னர்களின் ஆட்சி பற்றிய அரிய செய்திகளின் தொகுப்பாக இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. பல்லவ மன்னர்கள் ஒவ்வொருவர் பற்றிய விவரம், அவர்களின் ஆட்சித் திறமை, அவர்கள் காலத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்று அனைத்து விவரங்களையும் அடக்கியுள்ள இந்த நூல், பல்லவ மன்னர்களின் வரலாற்றின் முழுமையான ஆவணமாகத் திகழ்கிறது. […]

Read more

இலக்கிய இணையர் படைப்புலகம்

இலக்கிய இணையர் படைப்புலகம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 175ரூ. கணவர், மனைவி இருவருமே இலக்கியவாதிகளாக இருந்து பல படைப்புகளை வழங்கி இருக்கிறார்கள் என்ற சிறப்பான தகவலை அறிந்து கொள்ள இந்த நூல் வகை செய்து இருக்கிறது. பேராசிரியர் இரா.மோகனும், அவரது மனைவி நிர்மலா மோகனும் ஆக்கிய சிறந்த பல நூல்களுக்கு கவிஞர் இரா.ரவி இணையங்களிலும், வலைப்பூ மற்றும் முகநூலிலும் மதிப்புரைகள் எழுதி இருக்கிறார். அந்த மதிப்புரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றைத் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இரா.மோகன், நிர்மலா மோகன் […]

Read more

வைகை நதிக் கரை முதல் வாடிவாசல் வரை

வைகை நதிக் கரை முதல் வாடிவாசல் வரை, எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 148, விலை 50ரூ. மதுரை மாநகரின் பெருமைக்குடி காரணமாக ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் அவற்றுள் தனிச்சிறப்பானது வைகை நதி. ஆற்றங்கரைகளில்தான் நாகரிகத்தின் வளர்ச்சியே ஏற்பட்டது என்பது வரலாறு.. அந்த வகையில் மதுரையில் அனனை மீனாட்சியின் ஆட்சிக் காலம் தொடங்கி, இன்றைய காலம் வரை நடந்த, நடக்கிற அத்தனை ஏற்றங்களும் மாற்றங்களையும் சொல்லும் நூல். சித்திரைத் திருவிழா முதல், சிலிர்ப்பான ஜல்லிக்கட்டு வரை ஒவ்வொன்றுக்கான விளக்கமும் பல்வேறு கோணத்தில் தரப்பட்டிருப்பது சிறப்பு. […]

Read more

கருத்துக் குவியல்

கருத்துக் குவியல், டாக்டர் நீதியரசர் ஏ.ஆர்.லெட்சுமணன், முல்லை பதிப்பகம், பக். 168, விலை 150ரூ. நீதித்துறையில் தனி முத்திரை பதித்த நீதியரசரின் சொல்லோவியங்களும் எழுத்தோவியங்களும் அடங்கிய நுல். பல்வேறு சமயங்களில், சட்டம், ஆன்மிகம், இலக்கியம், பெண் உரிமை, பொது நலம், சுற்றுச் சுழல் போன்ற தலைப்புகளில் நீதியரசர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. சட்டத் துறையில் மட்டுமன்றி தான் தொட்ட துறைகள் எல்லாவற்றிலும் அரசராக விளங்குவதை படிக்கப்படிக்க உணர முடிகிறது. உதாரணமாக, குழல், யாழ், முழவு இம்மூன்றும், தமிழின் தனிச் சிறப்பான இசைக்கருவிகள். காரணம், தமிழின் […]

Read more

சொல்லித்தந்த வானம்

சொல்லித்தந்த வானம், அருள்செல்வன், புதிய தமிழ் புத்தகம், பக். 256, விலை 230ரூ. திரை உலகில் தடம் மாற்றி யோசித்து, தடுமாறமல் நடைபோட்டு, தனக்கென்று தனி இடம் பிடித்தவர் இயக்குநர் மகேந்திரன். அவரது சிந்தனையும் செயலும் ரசிகர்களை மட்டுமல்லாமல் சினிமா உலகினரையே வியக்கச் செய்தவை. மாற்றி யோசித்து மகத்தான கலைச்சேவை செய்த அவரைப்பற்றி மறக்க முடியாத தங்கள் நினைவுகளை திரை உலகைச் சார்ந்த சாராத பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த நூலில். மகேந்திரனின் எண்ணங்களைப் போலவே இதுவும் வித்தியாசமாக மணக்கிறது.. நன்றி: குமுதம், 23/10/19 […]

Read more

பழி வாங்கும் பாவை

பழி வாங்கும் பாவை, மேக்ஸி லயன் காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. நிறவெறியின் உச்சத்தில இருக்கும் அமெரிக்க ராணுவத்தின் கர்னல் அர்லிங்டன், அப்பாவி செவ்விந்திய கிராம மக்களை யுத்த தர்மத்தை மீறிக் கொன்று தீர்க்கிறார். நியாயத்தின் பக்கமே எப்போதும் நிற்கும் டெக்ஸ் வில்லர், செவ்விந்தியர்களுக்குத் துணையாக இருந்து, அமெரிக்க ராணுவக் கோட்டையைத் தகர்க்க வழி சொல்கிறார். செவ்விந்தியத் தலைவன் ப்ளாக் புல்லின் மனைவியோ கர்னலைப் பழிவாங்கத் துடிக்கிறாள். திகல், திருப்பம், திட்டமிடல் என்று மிரட்டலாக வண்ணச் சித்திரங்களுடன் கண்முன் காட்சியாக நகர்கிறது கதை. […]

Read more

நமக்குள் சில கேள்விகள்

நமக்குள் சில கேள்விகள், வெ. இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், பக். 224, விலை 160ரூ. அறிவு உள்ள யாவரும் கேள்விகள் கேட்கலாம். ஆனால் எத்தகைய கேள்வி கேட்கிறோம் என்பதுதான் ஒவ்வொருவரையும் தனிப்படுத்திக் காட்டுகிறது. பயனுள்ள பதிலுக்கான கேள்வியைக் கேட்பவரது அறிவு முதிர்ச்சி அடைகிறது. அத்தகைய நூற்றுக்கணக்கான கேள்விகளை தமக்குத் தாமே கேட்டு, அதற்கான விடைகளையும் தாமே தேடியும் சிந்தித்தும் தொகுத்திருக்கிறார் இறையன்பு. வாசிக்க வாசிக்க நமக்குள் எழும் பல கேள்வி முடிச்சுகள் சிக்கல் பிரிந்து அவிழ்கிறது. அதன் விளைவாக அறிவில் மலர்ச்சி முகிழ்கிறது. பல […]

Read more
1 174 175 176 177 178 505