சிற்றில்

சிற்றில், பா.வெ. அருணா பதிப்பகம், விலை 50ரூ. இந்நுாலை படிக்கும் அனைவரும், தங்களது குழந்தைப் பருவத்திலிருந்து தற்போதைய நிலை வரை பயணப்பட்டதை வார்த்தைகளில் வடித்துள்ளார், ஆசிரியர் பா.வெ.பெற்றோரால் வரமாக வழங்கப்பட்ட, ‘பால்யம்’ எனும் சுதந்திரக் காற்று, நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அக்கறை எனும் பெயரில் சாபமாக நம்மால் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை விதையாய் விதைக்கிறது, ‘பால்யம் எனும் வரம்!’ இந்த குற்ற உணர்ச்சி நம்மை சற்றே உறுத்திக் கொண்டிருக்க அதற்கு தீர்வாய் அமைகிறது, ‘சில புரிதல்கள்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நுாலின் கடைசி அத்தியாயம். […]

Read more

எளிய வடிவில் கம்பராமாயணம்

எளிய வடிவில் கம்பராமாயணம், கே.மாரியப்பன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.260 கம்பரின் ராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும், கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு.‘ராமன் தன் கதை அடைவுடன் கேட்பவர் அமர் ஆவரே’ ராமாயணம் இந்த மண்ணின் கதை, இதைப் படிப்பவர்கள் மனத்தில் ராமன் கூறிய நெறிகள் வேர்விட இறையருள் கிட்டும். எளிய வடிவில் கம்பராமாயணம் என்ற நுாலில் பூமியின் அழகுக் காட்சி என்ற பகுதியில் பூமியின் அழகை மிகவும் சிறப்பாக வர்ணனை செய்துள்ளார். இந்த இன்பமயமான பூமியின் காட்சியே கடவுளின் தோற்றம், துன்பத்தை நீக்கி இன்பத்தை […]

Read more

தாய்

தாய், தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. இருநுாறு முறைக்கு மேல் மறு பதிப்பும், உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதுமான மாக்சீம் கார்க்கியின், ‘தாய்’ உலகின் மிகச் சிறந்த செல்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ரஷ்யக் கலைஞன் கார்க்கி. ரஷ்ய இலக்கியத்தின் ‘பொற்கால’த்தின் கடைசிப் பிரதிநிதி கார்க்கி. ‘அலக்வி மாக்ஸிமோவிச் பெஷ்கோவ்’ என்னும் பெயர் பூண்ட கார்க்கி பிறந்தது, 1869ல்; இறந்தது, 1936ல். கார்க்கியின் வாழ்க்கையை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 1892 முதல், 1899 வரை அவன் எழுதிய […]

Read more

நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 12 தொகுதிகள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் 12 தொகுதிகள்,  பள்ளத்துார் பழ.பழனியப்பன், திருவரசு புத்தக நிலையம், விலைரூ.3880 மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்களால் கூறப்பட்ட நாலாயிரம் பாசுரங்களுக்கும் உரை எழுதுவது என்பது மிகப்பெரிய சாதனையாகும். இன்றைய மக்கள் எளிதில் படித்து மகிழும் வண்ணம், பழகு தமிழில் உரை எழுதியுள்ளார் பழனியப்பன். பெரியவாச்சான் பிள்ளை நாலாயிரத்திற்கு முன்பு உரை எழுதியிருந்தாலும், அவை மணிப்பிரவாள நடையில் (வடமொழியுடன்கூடிய தமிழ்ச்சொற்கள்) இருப்பதால், இக்காலத்தவர் படிக்கையில், அயர்ச்சியே ஏற்படும். அதைத் தவிர்க்க இப்பெரும் முயற்சி எனலாம். ‘சொட்டுச்சொட்டென்ன’ என்ற சொல்லுக்கு, ‘வியர்வைத்துளி’ […]

Read more

தமிழ் அறிஞர்கள்

தமிழ் அறிஞர்கள், ஜனனி ரமேஷ்,  கிழக்கு பதிப்பகம்,  விலைரூ.500 உயர்தனிச் செம்மொழிகள் ஆறினுள், தமிழ் முதன்மையானது எனலாம். தொல்காப்பியமே, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனில், தமிழ் மொழியின் தொன்மைக் கால வரையறைக்குள் கொண்டு வருவது கடினமாகும். தமிழின் எழுத்து வடிவமும் பல மாற்றம் பெற்று வந்துள்ளது.ல இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சிடப்பட்டு, பலரும் படிக்கும் நிலையில் இருக்கிறது. இத்தகு பல முன்னேற்றங்களை தமிழ் மொழி பெற, தமிழ் அறிஞர்கள் பலர், தம் வாழ்நாள் முழுவதும் ஓடி உழைத்துள்ளனர். அவர்களில் சிலரின் வரலாறு கூறுவதே இந்நுாலின் […]

Read more

கற்றுக்கொடுக்கிறது மரம்

கற்றுக்கொடுக்கிறது மரம், ஜெயபாஸ்கரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ: 150 ஹைக்கூ விளக்கம் தமிழில் குறிப்பிடத்தக்க ஹைக்கூ கவிஞராக அறியப்படுகிற லிங்குசாமியின் 15 ஹைக்கூ கவிதைகளை எடுத்துக்கொண்டு, அக்கவிதைகளின் அகவெளிப் பரிமாணங்களைப் பதிவுசெய்திருக்கிறார் ஜெயபாஸ்கரன். வாசகருக்குள் ஒரு கவிதை ஏற்படுத்துகிற அதிர்வுகள் அந்தந்த வாசகருக்குரிய உள்வாங்கும் சக்தியையும் ரசனையையும் உள்ளடக்கியதாக அமையும். இந்த நுட்பத்தைக் கைக்கொண்டு விஸ்தரித்துச் சொல்லப்படுகிற விளக்கம்தான் இந்நூல். ‘கூழாங்கல்லில் தெரிகிறது/ நீரின் கூர்மை’ என்கிற லிங்குசாமியின் கவிதையைப் பற்றி கூறும்போது ‘காண்பதற்குக் கண்கள் இல்லாமல், வடிமைக்க உளியும் சுத்தியலும் இல்லாமல், அவற்றைப் பற்றிப் […]

Read more

21 லெசன்ஸ் ஃபார் தி ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி

21 லெசன்ஸ் ஃபார் தி ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி, யுவால் நோவா ஹராரி, பெங்க்வின் ராண்டம் ஹவுஸ், விலை: ரூ.799 குரங்கினத்திலிருந்து உருவான மனித இனம் பற்றிப் பேசிய ‘சேப்பியன்ஸ்’, கூரறிவு வாய்ந்த மனிதனின் எதிர்காலம் பற்றிப் பேசிய ‘ஹோமோ டூஸ்’ ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து வரலாற்றறிஞர் யுவால் எழுதியுள்ள இந்நூல் இன்றைய உலகின் சவால்களை அலசுகிறது. இன்றைய உலகின் அறிவுத் திறனோடு கூடவே அதன் மூடத்தனங்களையும் விரிவாக இந்நூலில் அலசுகிறார். தினமும் கண்விழித்த நேரத்திலிருந்து உறங்கச் செல்லும் நேரம் வரை நம்மை ஆட்டுவிக்கும் தொழில்நுட்பங்கள், பேதங்கள் […]

Read more

1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி

1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி,  நூற்றுக்கணக்கான ஜாதிகள் மற்றும் தீண்டாமையினால் – சி.கண்ணன்; நோஷன் பிரஸ், பக்.146, விலை ரூ.150. எந்த விஷயத்தையும் ஒரு புதிய கோணத்தில் பார்த்து, மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது. உதாரணமாக ஜாதி குறித்த நூலாசிரியரின் பார்வையைக் கூறலாம். வர்ணமும் ஜாதிகளும் வட இந்தியாவில் ஏற்படாமல் இருந்திருந்தால், வட இந்தியாவில் முஸ்லீம் படையெடுப்புகள் தோல்வியில்தான் முடிந்திருக்கும். ஐரோப்பாவில் சுமார் 30 கோடி மக்களும், சைனாவில் சுமார் 140 கோடி மக்களும், அமெரிக்காவில் சுமார்30 கோடி மக்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஜாதி […]

Read more

நோய் அரங்கம்

நோய் அரங்கம், கு.கணேசன், சூரியன் பதிப்பகம், விலை: ரூ.275 மருத்துவம் மிகப் பெரும் வியாபாரமாக உருக்கொண்டிருப்பதற்கு மக்களின் விழிப்புணர்வின்மையும் மிகமுக்கிய மூலதனம். பல்வேறு ஊடகங்களிலும் தொடர்ந்து நோய்கள் குறித்தும், அதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எளிமையாக எழுதிவருபவர் டாக்டர் கு.கணேசன். தலைவலி, மூட்டுவலி, சீதபேதி தொடங்கி எபோலா, டெங்கு என ஜிகா வைரஸ் வரை இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசுகிறார். பற்கள், நகங்களைப் பாதுகாக்கும் விஷயங்களும் இப்புத்தகத்தில் உள்ளன. வெறுமனே நோய் அறிகுறிகளையும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மட்டும் இவர் பேசுவதில்லை. […]

Read more

சத்சங்கம்

சத்சங்கம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.160,  விலை ரூ.150. குருவுக்கும் சீடனுக்கும் இடையில் நிகழும் உரையாடல் வடிவில் ஆன்மிகம் குறித்த தெளிவான புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. ஆன்மிகம் என்பது வழிபாடு என்கிற செயல்முறையோடு நின்றுவிடுவதில்லை.யார் அச்சத்திலிருந்து விடுபடத் தொடங்குகிறார்களோ அவர்களே ஆன்மிகத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்று பொருள். அவர்கள் எதிர்காலம் குறித்துப் பயப்படமாட்டார்கள்.மகிழ்ச்சியால் ஆன்மிகமே தவிர, மகிழ்ச்சிக்காக ஆன்மிகம் இல்லை.ஆன்மிகம் என்பதே அன்பு. எதிரி என்று யாரும் இல்லாத நிலையே ஆன்மிகம். நம்மைப் பார்த்து யாரும் பொறாமைப்படாதவாறு வாழ்வதே சிறந்த […]

Read more
1 176 177 178 179 180 505