லைஃப் இன் மெடஃபார்ஸ் போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் கிரிஷ் சாசரவல்லி

லைஃப் இன் மெடஃபார்ஸ் போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் கிரிஷ் சாசரவல்லி, தொகுப்பு ஓ.பி.ஸ்ரீவத்சவா, ரீலிசம் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீடு, விலை 395ரூ. கன்னட சினிமாவின் புதுயுக விற்பன்னர்களில் தலைசிறந்தவரான கிரிஷ் காசரவல்லி திரைப்படங்கள் வழியாகத் தனித்துவம் மிக்க சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்திய விதம் குறித்துப் பேசும் புத்தகம் இது. 1975-ல் தொடங்கி 2015 வரை சுமார் 40 ஆண்டுகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் என மொத்தம் 18 படைப்புகளை மட்டுமே வழங்கியிருந்தபோதிலும், காசரவல்லியின் படைப்புகள் காலத்தால் அழியாத திரைக்காவியங்களாக இன்றும் நீடிப்பவை. சரவல்லி கன்னட இலக்கியத்தின் ஆழத்தை, […]

Read more

ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர் வெளியீடு, விலை 190ரூ. பாவனையற்ற கதைகள் ஜி.கார்ல் மார்க்ஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ராக்கெட் தாதா’விலுள்ள கதைகளை, சிறுநகரம் சார்ந்த மத்திய வர்க்கத்தின் உணர்வுத் தருணங்களை மையப்படுத்தும் கதைகளாக அடையாளப்படுத்தலாம். கார்ல் மார்க்ஸ் தான் கையாளும் வாழ்க்கையைப் பாவனையின்றி அணுகுகிறார். இந்தக் கதைகள் சமூக நிகழ்வுகளுக்குப் புதிய அர்த்தங்களை கொடுக்கக்கூடியவை அல்ல; மாறாக, அந்நிகழ்வுகளின் உணர்வுப் பரிமாணங்களை மீள்உருவாக்கம் செய்வதாக அமைகிறது. தலைப்புக் கதையான ‘ராக்கெட் தாதா’ முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றி எழுதப்பட்ட கதைகளில் சிறந்த […]

Read more

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம், ஜெ.பிரான்சிஸ் கிருபா, படிகம் வெளியீடு, விலை 150ரூ. ரசனை முள் அங்கியை அவிழ்த்தெறிந்துவிட்டு நிர்வாணமாகி துண்டுத் துண்டாகி கொதிக்கும் சாம்பாரில் குதித்து கும்மாளமிட்ட கிழங்குகள் விளைந்த வயல்களிலிருந்து இமெயில்கள் வந்தவண்ணமிருக்கின்றன நடனம் எப்படி இருந்தது எனக் கேட்டு விருந்துண்டு பசியாறிய விருந்தாளிகள் பதிலனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் மிக மிக ருசியாக இருந்ததென்று. கவிதையில் கற்பனாவாதத்தின் யுகம் முடிந்துவிட்டதென்று சொல்லும்போது அது மீண்டும் தலையைச் சிலுப்பி ஒரு சிறகுள்ள குதிரையாக எழுந்து படபடக்கிறது. பழைய கற்பனாவாதக் கவிதையின் அத்தனை கருவிகளையும் கொண்டு வில்லின் […]

Read more

ரெய்கி எனும் மருந்தில்லா மருத்துவம்

ரெய்கி எனும் மருந்தில்லா மருத்துவம், எஸ்.ஜி.ஜெயராமன், பக்.196, விலை ரூ.195. படைப்பு ஆற்றல்களாக விளங்கும் குண்டலினி, ஜீவசக்தி, பிராண சக்தி ஆகிய மூன்றும் ஒன்று கூடி மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான ஆதார ஆற்றல்களாக விளங்குகின்றன. இந்த மூன்று ஆற்றல்களும் மனித உடலில் முறையாகச் செயற்படும்போது மனிதர்களை நோய்கள் நெருங்குவதில்லை. ஆனால் இந்த ஆற்றல்கள் மனிதர்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை என்றால் நோய் வாய்ப்படுவார்கள். அப்போது  பிரபஞ்சத்தில் உள்ள உயிராற்றல்களை மனித உடல் தன்னுள் ஈர்த்துக் கொண்டால், நோய்களிலிருந்து விடுபட முடியும். இதற்கான வழிகளை புத்தரின் கடைசிப் […]

Read more

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்தி பெற்ற திருத்தலங்களும்

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்தி பெற்ற திருத்தலங்களும் (ஒரு சுற்றுலா வழிகாட்டி),  எஸ்.எல்.எஸ். பழனியப்பன், எஸ்.எல்.எஸ். பதிப்பகம், பக்.88. விலைரூ.60. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்த 96 கிராமங்களுக்கு செட்டிநாடு என்ற பொதுப்பெயர் உண்டு.செட்டி நாடு என்று சொன்னால்  ஒரு தெரு முதல் மறு தெரு வரை நீண்டிருக்கும் செட்டிநாடு பங்களாக்கள்தாம் நினைவுக்கு வரும். கானாடு காத்தான், காரைக்குடி, ஆத்தங்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கடியாபட்டி உள்ளிட்ட 76 ஊர்களில் அத்தகைய கட்டடங்கள் இருக்கின்றன. செட்டி நாடு பகுதியில் உள்ள இளையாத்தங்குடி, இரணியூர், பிள்ளையார் பட்டி, வைரவன் […]

Read more

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், மு.அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், பக்.144, விலை ரூ.110 வருமானம் என்றால் என்ன?  வருமான வரி விலக்கு எவற்றுக்கெல்லாம் உள்ளது? என்பதை மிக விரிவாக, துல்லியமாக விளக்கும் நூல். மாதச் சம்பளம் பெறும் ஒருவருக்குத் தரப்படும் விடுப்புப் பயணச் சலுகை, வீட்டு வாடகைப்படி, கல்வி உதவித்தொகை, அவ்வப்போது தரப்படும் பரிசுகள், வெகுமதிகள் போன்றவற்றுக்கு வருமான வரிச் சலுகைகள் உண்டா? பணியிலிருந்து விலகிய ஒருவர் பெறும் கிராஜுவிட்டி, ஈட்டிய விடுப்பு நாள்களுக்குப் பெறும் தொகை, ஆள்குறைப்பின் காரணமாக வேலையிலிருந்து விலகியிருந்தால் அதற்காக வழங்கப்படும் […]

Read more

மருந்தில்லா சிகிச்சை முறைகள்

மருந்தில்லா சிகிச்சை முறைகள், ஜி.லாவண்யா, நர்மதா பதிப்பகம், பக்.160, விலை ரூ.100. மருந்தில்லாத மருத்துவமுறைகள் என்று சொன்னவுடன் தொடுசிகிச்சை, வர்ம சிகிச்சை போன்றவைதாம் நினைவுக்கு வரும். ஆனால் இந்நூலில் உணவு சிகிச்சை, சூரியக்குளியல், நீர் சிகிச்சை, மண் சிகிச்சை,பிரபஞ்ச சக்தி சிகிச்சை, யோகாசன சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நறுமண திரவ சிகிச்சை, இசை சிகிச்சை ஆகிய மருந்தில்லாத சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நாடி பரிசோதனை மூலமாக ஒருவருடைய உடல்நிலையைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார் நூலாசிரியர். அறுசுவை உணவுகளைப் பற்றியும், […]

Read more

குறள் காட்டும் விலங்கு பறவைகள்

குறள் காட்டும் விலங்கு பறவைகள், பீ.ஜோசி அபர்ணா, திருவள்ளுவர் புத்தக நிலையம். திருக்குறளைப் பலரும் பலவித மாக ஆராய்ந்து இருக்கின்றனர். ஆனால், இந்த நுாலின் ஆசிரியரான பள்ளி மாணவி, ஜோசி அபர்ணா, வித்தியாச மான கோணத்தில் திருக்குறளைப் பார்த்திருக்கிறார் என்றால், அது மிகையாகாது. திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து தேடிப் பிடித்து, இந்த நுாலை எழுதியிருக்கிறார். வெறுமனே விலங்குகள், பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பட்டியல் மட்டும் தராமல், அவற்றின் குணநலன்கள், மனிதனுக்கு அவை எப்படி பொருந்துகிறது என்பதையும் விளக்கி இருக்கிறார்.நுாலின் பிற்பகுதியில், […]

Read more

செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக்.172, விலை ரூ.120. தொன்மை, தனித்தன்மை, பலமொழிகளுக்கும் தாயாக அமைந்த தன்மை, நாகரிகம் மேம்பாடு அடைந்த ஓர் இனத்தின் பண்பாடு, கலை, அனுபவ உணர்வுகளின் முழுவெளிப்பாடாக அமைந்த இலக்கியங்களைப் பெற்றிருத்தல், தனித்து இயங்கும் ஆற்றல், தனித்தன்மை வாய்ந்த உயர்ந்த கலை, இலக்கிய வெளிப்பாடுகள், தனிச்சிறப்பான மொழிக் கோட்பாடுகள் கொண்டிருக்கும் ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்படும். தமிழுக்கு அந்தத் தன்மைகள் எல்லாம் எவ்வாறு இருக்கின்றன என்பதை இந்நூல் விளக்குகிறது. வெறும் இலக்கியமொழியாக மட்டுமல்லாமல், நாட்டுப்புற இலக்கிய […]

Read more

பச்சைப்புடவைக்காரி

பச்சைப்புடவைக்காரி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 328, விலை 300ரூ. பக்தர்களின் பக்தியை அளவிடுகிறாள் பச்சைப்புடவைக்காரியாக வலம் வரும் மதுரை அன்னை மீனாட்சி. அவளின் தராசில் கடமைகளும், பொறுப்புகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அளவுகோல் இருக்கிறது. அதை எப்படித் தெரிந்து கொள்வது என வழிகாட்டுகிறார் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. மனித முயற்சியால் முடிந்த அளவு செய்துவிட்டு பின், அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடுவதே சரியான பக்தி. இத்தகைய பக்தியை தான் அன்னை மீனாட்சி விரும்புவதாக ஆசிரியர் தன் பக்கங்களில் தன்னம்பிக்கை விதையை விதைத்துக் […]

Read more
1 183 184 185 186 187 505