கலைஞரின் நகைச்சுவை நயம்

கலைஞரின் நகைச்சுவை நயம், கவிஞர் தெய்வச்சிலை, நக்கீரன், பக். 224, விலை 150ரூ. மேடைப் பேச்சிலும், இயல்பான உரையாடல்களிலும் கலைஞரின் நகைச்சுவை நாடறிந்தது; நானிலம் அறிந்தது. முகவைக் கவிஞர் தெய்வச்சிலை கேட்ட மேடைப் பேச்சுகள், கவியரங்குகள், மாநாடுகள், அன்றாட நிகழ்வுகள் என எண்ணற்றவற்றில், 100 அளவில் நகைச்சுவை பகுதிகளைத் தொகுத்து, இந்நுாலைப் படைத்துள்ளார். ரு நிகழ்வு, நடிகர் விஜயகாந்த் தயாரித்த தமிழ்செல்வன் என்ற படத்தின் பெயரில் (தமிழ்ச்செல்வன்) ‘ச்’ இல்லையே, அது பிழையல்லவா என்று முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன் சொன்னபோது, அருகிலிருந்த கலைஞர், சற்றும் […]

Read more

அழகிய வாழ்வுக்கு1330

அழகிய வாழ்வுக்கு1330, மெய்ஞானி பிரபாகர், குறளகம், விலை 170ரூ. பொய்யாமொழி புலவர் இயற்றிய மறை நுால் அதிகார வரிசையே இந்நுாலிலும் பின்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும் மூலக் குறளுடன் பொருந்தும் பொன்மொழியே தரப்பட்டுள்ளது. திருக்குறளின் அந்தந்த அதிகாரங்கள் மற்றும் குறள்களோடு பொருந்திப் படிக்க உதவும் பொக்கிஷம், ‘குறள்நெறி சார்ந்த பொன்மொழி கள்’ அடங்கிய நுால் என்று சொல்லலாம். நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

திருமாலின் பெயர்கள் 1000

திருமாலின் பெயர்கள் 1000, வரத நம்பி இளநகர் காஞ்சிநாதன், ஜெயதாரிணி அறக்கட்டளை, விலை 330ரூ. பீஷ்மரால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தின் பொருளை அனைவரும் அறிந்து பயனடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழில் தொகுக்கப்பட்டு உள்ளது. இதில் புதைந்துள்ள அர்த்த விசேஷங்கள் எளிய நடையில் எடுத்துக் கூறப்பட்டு உள்ளது. பகவானின் ஆயிரம் நாமங்களையும் அணுஅணுவாக அலசி ஆராய்ந்துஒவ்வொரு திருநாமத்தின் உட்பொருளை நூலாசிரியர் உலகமறியவைத்துள்ளார். அனைவராலும் பாட படிக்க புரிந்துகொள்ளக்கூடிய பழகு தமிழில் கவிதை வடிவில் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை […]

Read more

கிரிவலப் பாதையிலே

கிரிவலப் பாதையிலே, வே.மகாதேவன், அருள் பதிப்பகம், விலை 80ரூ. திருவண்ணாமலை கிரிவலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், எந்தெந்த நாட்களில் செல்லும் கிரிவலத்துக்கு என்னென்ன சிறப்பு, கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து தெய்வங்கள் மற்றும் தீர்த்தங்களின் சிறப்பு ஆகியவை இந்த நூலில் விவரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழகத்தில் முஸ்லிம்கள்

தமிழகத்தில் முஸ்லிம்கள், எஸ்.எம்.கமால், அடையாளம் பதிப்பகம், பக். 180, விலை150ரூ. வரலாற்று ஆய்வாளரான இந்நூலாசிரியர், தாம் ஆற்றிய வரலாற்றுப் பணிகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தவிர விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், மாவீரர் மருது பாண்டியர், ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், உள்ளிட்ட 18 நூல்களை இயற்றியவர். அந்த வகையில் தமிழக முஸ்லிம்களைப் பற்றி வரலாறு, இலக்கியம், செப்பேடு போன்ற தளங்களிலிருந்து அரிய தகவல்களைத் திரட்டி இந்நூலை இயற்றியுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கும் அரபு நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகத்தொடர்புகள், அதற்குப் […]

Read more

நான் செய்வதைச் செய்கிறேன்

நான் செய்வதைச் செய்கிறேன், ரகுராம் ஜி.ராஜன், தமிழில்: ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, பக்.408, விலை ரூ.399. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2013 முதல் 2016 வரை பணியாற்றிய நூலாசிரியர், தான் பணியாற்றிய காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், சந்தித்த பிரச்னைகள் பற்றி இந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நீண்டநாள் பயன்கள் இருக்கக் கூடும் என்றாலும், குறுகிய கால பொருளாதார இழப்புகள் அவற்றை மிஞ்சிவிடும் என்ற கருத்து நூலாசிரியருக்கு இருந்திருக்கிறது. பணவீக்கத்தை மேலாண்மை செய்வது, வாராக் கடன்கள் பிரச்னையைத் தீர்ப்பது, […]

Read more

கவி காளிதாசரின் மகா காவியங்கள்

கவி காளிதாசரின் மகா காவியங்கள், சி.எஸ். தேவநாதன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 496, விலை 350ரூ. வால்மீகி ராமாயணம், மகாபாரதம், திருமந்திரம், உபநிடதம் பேசும் உண்மை போன்ற குறிப்பிடத்தக்க நூல்களை எளிய உரைநடையில் அளித்த இந்நூலாசிரியர், இதுவரை 300 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவற்றில் ‘நம் தேசத்தின் கதை’ என்ற நூல் 2013 ல் தமிழக அரசின் விருதைப் பெற்றது. அந்த வகையில் இந்நூலில் கவி காளிதாசர் இயற்றிய உலகப் புகழ்பெற்ற மகா காவியங்களான மேகதூதம், குமார சம்பவம், ரகுவம்சம், அபிஞான சாகுந்தலம் […]

Read more

பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்

பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம், மெலின்டா கேட்ஸ்; தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.344, விலை ரூ.399. மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில் கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ், தனது கணவருடன் சேர்ந்து 2000 ஆம் ஆண்டில் பில் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கினார். உலகெங்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவர்களை அதிலிருந்து விடுவிப்பதே இந்த அறக்கட்டளையின் நோக்கம். இந்த அறக்கட்டளைப் பணிக்காக மெலின்டா கேஸ் உலகில் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பெண்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்த அனுபவங்களை […]

Read more

சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா

சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, கே.ஜீவபாரதி, அன்னம் (பி) லிட், பக்.118, விலை 100ரூ. ஆழியின் சீற்றத்தால் அழிந்த தமிழ் நுால்களை விட, அறியாமையாலும் கவனக்குறைவாலும் மறைந்து போன நுால்களும், அறிஞர்களும் ஏராளம். ‘இலக்கியத்தில் புதிய எதார்த்தவாதம்’ என்ற தலைப்பில் ஜீவா, ‘தாமரை’ இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். இந்நுாலைப் பயில்வதன் மூலம் மனிதகுல வளர்ச்சிக்கு இலக்கியத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும், சோவியத் வளர்ச்சிக்கு வித்திட்ட கார்க்கி மற்றும் மாயக்கோவ்ஸ்கி வரலாற்று நாயகர்களின் இலக்கிய ஆளுமைகளையும், மார்க்ஸ், லெனின்,  போன்ற […]

Read more

தம்மம் தந்தவன்

தம்மம் தந்தவன், விலாஸ் சாரங், தமிழில்: காளிப்ரஸாத், நற்றிணை பதிப்பகம், பக்.208, விலை ரூ.260. புத்தர் எல்லாவற்றையும் துறந்தவர். வாழ்வின் பொருளை அவருக்கேயுரிய பார்வையில் விளக்கியவர். எதுவுமே இல்லாமல் ஏற்கெனவே வறுமையில் உழன்று கொண்டு இருப்பவர்கள் துறவியாவது எளிது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம். ஆனால் மன்னரின் மகனாகப் பிறந்த சித்தார்த்தன் எல்லாவற்றையும் துறந்தது எப்படி? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்த நாவல் மிக அற்புதமாக விவரிக்கிறது. புத்தர் தனது இளமைக்காலத்தில் வெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்டது, அரண்மனைக்குள் சிறை வைக்கப்பட்டவராக இருந்தது, அதையும் […]

Read more
1 185 186 187 188 189 505