ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்கம், வானதி பதிப்பகம், பக். 496, விலை 400ரூ. இந்த கட்டுரைத் தொகுதியில், கவிஞர் தன்னைப் பற்றி பேசுகிறார். ஆனால், தன்னை மட்டும் முன் நிறுத்தாது, திரைக்கவி முன்னோடிகள் குறித்து நிறைய பேசுகிறார். பல சம்பவங்கள் குறித்துப் படித்து சிலிர்ப்பு அடைகிறோம். ஒரு படத்தில் டைட்டிலில் மருதகாசி, கண்ணதாசன், தஞ்சை ராமையா தாஸ் ஆகியோர் பெயருக்குக் கீழே, உடுமலை நாராயணகவி பெயரைப் போட்டனர். அப்போது ஒரு நண்பர், உடுமலையாரிடம் என்னய்யா, எவ்வளவு பெரிய சீனியர் நீங்கள், உங்களுக்குக் கீழே […]

Read more

ஓரம்போ

ஓரம்போ, மாடும் வண்டியும், முனைவர் த.ஜான்சி பால்ராஜ், என்சிபிஎச், விலை 130ரூ. மாட்டு வண்டியில் மண் வாசனையோடு பயணப்பட்ட நாட்களை நினைவூட்டுகிறது இந்நூல். நூலாசிரியர் மாட்டு வண்டியை அக்குஅக்காக ஆய்ந்து நூலை எழுதியிருக்கிறார். மாட்டு வண்டியின் அமைப்பு, வகைகள், வெவ்வேறு பயன்பாடுகள், ரேக்ளா வண்டிகள், தண்ணீர் கொண்டுவரும் நகரத்தார் பகுதி வண்டிகள், வண்டியின் முக்கிய பாகமான சக்கரங்களின் உராய்வைக் குறைக்கும் மை தயாரிப்பு, வண்டி மாடுகளின் வகைகள், அவற்றின் நோய்களுக்காகப் போடும் சூட்டின் அடையாளங்கள் வண்டிகளைத் தயாரிக்கும் மரத்தச்சர்கள், சக்கரங்களுக்கு இரும்பு வளையம் மாட்டும் […]

Read more

காற்றின் அலை வரிசை

காற்றின் அலை வரிசை, ஹாம் ரேடியோ ஓர் அறிமுகம், தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை 100ரூ. வானொலிகளின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்வதன் வாயிலாக ஒரு காலகட்டத்தையே நாம் அறிந்துகொள்ள முடியும். வானொலிகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ஜெய்.சக்திவேல் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், ஹாம் ரேடியோ குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. ஹாம் ரேடியோ என்பது என்ன, அதில் என்னென்ன வகைகள் இருக்கின்றன, ஹாம் ரேடியோவுக்கான உரிமைகளை எப்படிப் பெறுவது உள்ளிட்ட பல விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அரிதாக அறியப்பட்ட ஹாம் ரேடியோவானது தகவல்தொடர்பு, பொழுதுபோக்கோடு […]

Read more

மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்

மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்,  தமிழில் பா. இரவிக்குமார், ப. கல்பனா, பரிசல் வெளியீடு, விலை 150ரூ, கொரியக் கவிதைகள் உதிரும் இலைகளின் பாடல் என்ற சீன மொழிபெயர்ப்புக் கவிதை நூலின் மூலம் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமானவர் ப. கல்பனா. அவரும் கவிஞர் பா.இரவிக்குமாரும் சேர்ந்து கொரியக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள். பெரும்பாலான கவிதைகளின் தொனி மென்மையாகவும் சில கவிதைகள் வலியை உரக்கப் பேசுபவையாகவும் உள்ளன. இந்தக் கவிதைகளில் பனி திரும்பத் திரும்ப வருகிறது. நாம் அறியாத ஒரு நிலப்பரப்பை இந்தக் கவிதைகள் […]

Read more

சீன வானில் சிவப்பு நட்சத்திரம்

சீன வானில் சிவப்பு நட்சத்திரம், எட்கர் ஸ்நோ, அலைகள் வெளியீட்டகம். சீனப் புரட்சி: ஒரு பத்திரிகையாளனின் தீர்க்க தரிசனங்கள் அமெரிக்கப் பத்திரிகையாளரான எட்கர் ஸ்நோ 1928-லிருந்து தொடர்ந்து 15 ஆண்டுகள் சீனாவில் தங்கி பணிபுரிந்தவர். சீன மொழியைப் பயின்று அம்மொழியில் பேசும் திறமையையும் வளர்த்துக்கொண்டவர். அவரது செய்திக் கட்டுரைகளின் வாயிலாகவே மேலையுலகம் சீனப் புரட்சியின் வீரியத்தையும் விவேகத்தையும் அறிந்துகொண்டது. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பு ‘ரெட் ஸ்டார் ஓவர் சைனா’ என்ற தலைப்பில் 1937-ல் வெளிவந்தது. அடுத்தடுத்த பதிப்புகள் திருத்தங்களுடனும் கூடுதல் சேர்க்கைகளுடனும் வெளிவந்தன. 1971-ல் […]

Read more

திருக்குறள்களே கவிதையாய்

திருக்குறள்களே கவிதையாய், கோவூர் தணிகை, மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏராளமானவர்கள் உரைநடையில் விளக்கம் எழுதி இருக்கும் நிலையில், இந்த நூலில் ஆசிரியர், திருக்குறளுக்கு கவிதை வடிவில் விளக்கம் அளித்து இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. திருக்குறளின் 133 அத்தியாயங்களில், அத்தியாயத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் 133 குறள்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு எளிமையான அதே சமயம் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வண்ணம் கவிதைகளில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துக் கவிதைகளும் திருக்குறளின் பரிணாமத்தை மேலும் விரிவுபடுத்தி இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 4/9/19. இந்தப் […]

Read more

மதிப்பிற்குரிய மழலைகள்

மதிப்பிற்குரிய மழலைகள், வெற்றிச்செல்வி, ஸ்ரீ ஜோதி நியூ மீடியா, விலை 100ரூ. கி.ஆ.பெ. விசுவநாதத்தின் பேத்தியும், மனநல ஆலோசகருமான வெற்றிச்செல்வி, குழந்தைகளுக்காக எழுதி இருக்கும் இந்த நூல், குழந்தைகளுக்கு மட்டும் இன்றி, குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பெற்றோருக்கும் மிக்க பயன் உள்ளதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. தவறு செய்யும் குழந்தைகளை எவ்வாறு திருத்துவது? கதைகளை சொல்லி வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் போன்ற நல்ல தகவல்களும் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன. குழந்தைகளும் படிக்கும் வகையில் […]

Read more

நமக்குள் சில கேள்விகள்

நமக்குள் சில கேள்விகள், வெ.இறையன்பு, தினத்தந்தி பதிப்பகம், விலை 160ரூ. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வார, மாத இதழ்களில் கேள்வி பதில் பகுதி இடம் பெறுகிறது. அந்த இதழின் ஆசிரியரோ அல்லது பிரபலமானவர்களோ வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள். இது வாசகர்களின் சிந்தை கவர்ந்த பகுதியாகவே திகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் கேள்வி வாசகர்களால்தான் கேட்கப்படுகிறது. ஆனால் இதற்கு மாறாக ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், பேச்சளாருமான வெ.இறையன்பு கேள்விகளை தானே உருவாக்கி அதற்குத் தக்க பதில்களை அளித்து வந்தார். ராணி வார இதழில் 100 வாரங்கள் […]

Read more

நேர்மையின் குரல்

நேர்மையின் குரல், தொகுப்பு ஆசிரியர் ராசப்பா, மேலக்காடு பதிப்பகம், விலை 100ரூ. பொதுவாழ்வில் லஞ்சத்துக்கு எதிராகத் துணிந்து குரல் எழுப்பிய தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தின் உள்ளத்தில் உள்ள அத்தனை நல்ல கருத்துக்களையும் தொகுத்து, அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் தந்து இருக்கிறார் ஆசிரியர். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் எவ்வாறு நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறது இந்த நூல். இடையிடையே சகாயம் அளித்த பேட்டிகளையும் தந்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 4/9/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

மாடும் வண்டியும்

மாடும் வண்டியும் (பொருள்சார் பண்பாட்டு ஆய்வு), த.ஜான்சி பால்ராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.126, விலை ரூ.130. டிராக்டர்கள் வந்த பின் நிலத்தை உழ மாடுகள் தேவையில்லாமற் போய்விட்டன. அதுமட்டுமல்ல, விளைவித்த பொருள்களைக் கொண்டு செல்ல பயன்பட்ட மாட்டுவண்டிக்கான தேவையும் இல்லாமல் போய்விட்டது. மனிதர்கள் பயணம் செய்ய மாட்டு வண்டிகள் கூண்டு வண்டிகளாக மாறின. ஆடம்பரமான வில் வண்டிகளும் வந்தன. நவீன வாகனங்கள் அவற்றை இல்லாமற் செய்துவிட்டன. இந்நூல் மாட்டு வண்டிகளின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும்? மாட்டுவண்டிகளின் பாகங்கள் […]

Read more
1 187 188 189 190 191 505